ஞாயிறு, 16 ஜனவரி, 2011

தைப்பூச தரிசனம்

 தைப்பூச தரிசனம்.----------ஆன்ம்நேய அன்புடையீர் வணக்கம்.வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டச் சொல்லவில்லை.நம் அகத்தில் இருக்கும் ஆன்மாவான உயிர் ஒளியை அறிந்து தெரிந்து கொள்வதற்கு அடையாளக்குறிப்பாக அமைத்த்துதான் ஞானசபையாகும்.அகத்தில் உள்ள ஒளியைத் தெரிந்து கொள்ளவேண்டுமானால்.ஜீவகாருண்யத்தால் மட்டுமே தெரிந்து கொள்ள் முடியும் என்பதை திரு அருட்பாவில் தெளிவாக எழுதி வைத்துள்ளார் வள்ளலார்.ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்,.ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடாகும்.ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற் அனைத்தும் மாயாஜாலங்களாகும்.கடவுளைக் காண வேண்டுமானால்,வெளியில் கடவுள் இல்லை,எல்லா உயிர்களிடத்தும் கடவுள் உயிர் ஒளியாக உள்ளார்,ஆதாலால் உயிர்களின் துன்பத்தை ,அறிந்து அத்துன்பத்தைப் போக்கினால் கடவுளின் அருள் நமக்கு தானே வந்து சேர்ந்துவிடும்.எல்லா உயிர்களையும் தம் சகோதரர்கள் என்று உண்மை உணர்வோடு உணர்ந்து.எத்துணையும் பேதமுறாது தொண்டு புறிய வேண்டும்.அதுவேகடவுள் வழிபாடாகும் வடலூரில் வரும் அன்பர்களுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு உணவு வழங்க வேண்டும் அவர்களின் பசியாற்றவேண்டும்.அதுவே கடவுள் வழிபாடாகும் .வடலூரில் காட்டும் ஜோதியை மட்டும் பார்த்தால் அருள் வந்து விடாது.கடவுள் அருள் வேண்டுமானால் ஜீவகாருண்யம் வேண்டும் என்பதால்தான் தருமச்சாலையை அமைத்தார்.தருமச்சாலை ஏழைகளின் பசியை மட்டும் தீர்க்காமல் அனைத்து உயிர்களின் பசியைப் போக்கிக் கொண்டு இருககவேண்டும் என்பதுதான் வள்ளலாரின் சுத்த சன்மர்க்க கொள்கைகளாகும்.அதை உணர்ந்து செயல்பட்டால் அனைத்தும் நன்மைகளாகும் அதுவே அருளைத்தரும் வழியாகும் .கொல்லாநெறியே குவலயம் ஓங்குக.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.அன்புடன் --கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு