சனி, 4 டிசம்பர், 2010

சமயங்களும் மதங்களும் --வள்ளலாரும்

  மனிதனை மனிதன் பிரித்து வைத்தது சாதிகளும் ,சமயங்களும் ,மதங்களும் என்பதில் எந்தவித  சந்தேகமும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும் .

     வள்ளலார் கூறும் உண்மைகள் .
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் சாதி ,மதம், சமயம் போன்ற பிரிவுகளால் பிளவுப்பட்டு விட்டார்கள், .பிரித்து வைத்து விட்டார்கள். .அவரவர்கள் கருத்து வேறுபாட்டால் பல மாறுபட்ட கொள்கைகள்,செயல்பாடுகளால் பிரிவினைகள் தோன்ற காரண காரிய மாகிவிட்டன ,சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகம்முழுவதும இந்துமதம்,புத்தமதம்,கிருத்துவமதம்,முஸ்லீம்மதம் போன்றவைகளும், இன்னும் பல சிற்சில மதங்களும் தோன்றின அவைகளை பின்பற்றி
மக்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள் .அம்ம்தங்களின் உட பிரிவுகளாக சமயங்கள் சாதிகள் விரிவடைந்து வாழ்ந்து வருகிறார்கள் .
  
     மக்கள் வாழ்க்கைக்கு பல தொழில்கள் தேவைப்பட்டன,தொழில் தேவைக்காக இன்ன இன்ன தொழில்கள் இவர்.இவர், செய்யவேண்டும் என பிரித்து வைத்தார்கள்..அவரவர்  தொழிலுக்கு தகுந்த பெயர் வைத்தார்கள்,தொழில் வளர்ச்சியடைந்து, வளர்ந்து கொண்டே வந்தது, மக்கள் தொழில் மூலமாக அவரவர் தேவைகளை பூர்த்தி செய்து நலமுடன் வாழ்ந்து வந்து கொண்டு இருந்தார்கள்.பணடமாற்று முறையாக தொழிலுக்கு தொழில் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டார்கள் .

    பொருளாதாரம்
     மக்கள் கூட்டம்அதிகரிக்க அதிகரிக்க  தொழில்வளர்ச்சி யடைய ஆரம்பித்து பிறகு தொழிலுக்கு தொழில் செய்து கொடுப்பதை மாற்றி, பண்டம்மாற்றும் முறையைப் போல்  கையாண்டார்கள்,மறுபடியும் மக்கள் கூட்டம்அதிகரித்து இடம்விட்டு இடம் சென்று தொழில் செய்ய ஆரம்பித்தார்கள்.அதன் பிறகு  பல சிந்தனையாளர்கள் பொதுவான தொரு  முடிவெடுத்தார்கள்.அவரவர்கள் செய்யும் தொழிலுக்கு தகுந்த பொருளைக்  கொடுத்து வேலையை வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவு எடுத்துள்ளார்கள். .அதற்க்கு பொருள் என்ன கொடுப்பது,பொருளை எப்படி தயார் செய்வது , என்ற முடிவுக்கு வந்த  பிறகு,எல்லாருக்கும் பொதுவான நாணயத்தை உருவாக்கினார்கள்.அந்த நாணயத்திற்கு
மதிப்பு, கணக்கு தேவையைப்   பொறுத்து பெயர்வைத்தார்கள் .அந்த பெயர்தான் பொன்
(அதாவது )தங்கம் என்னும் நாணயம்  என்ற பெயராகும் ...
\
      .தொழில் வளர்ச்சி

அவரவர்கள் செய்யும் தொழில் ஒவ்வொருவகையில் வளர்ச்சி பெற,அவரவர்களுக்கு தகுந்த பொருள் வளர்ச்சி பெருகியது. பொருள்வளர்ச்சி பெற்றதும் ,தொழிலுக்கு தகுந்த பெயர்வைத்தார்கள் அவைகள்தான் சாதிகளாயின்,விவசாயி ,வணிகம்,கணக்கர்,நெசவு ,தைய்ல்,ஆசாரி,குயவன்,பொற்கொல்லன்,தோட்டி,தலையாரி,பிராமணன்,போன்ற பல தொழில் களுக்கு தகுந்த பெயர்கள் வைத்தார்கள் .அவை சாதிகளாக வளர்ச்சி யடைந்து பல உட்பிரிவு சாதிகளாக பெருகி வளர்ந்தன.

     சாதி வளர்ந்து ,தொழில் வளர்ந்து,பொருள் வளர்ந்தது, .பொருள் யாரிடம் அதிகரிக்க ஆரம்பித்ததோ அவர்கள் உயர்ந்த சாதிகளாயினர்..பொருள் இல்லாதவர்கள் தாழ்ந்த சாதிகளாயின்.அப்படியே முறைப்படுத்தி வைத்து விட்டார்கள் .பொருள் உள்ளவர்கள்  உயர்ந்த குலம் என்றும் பொருள் இல்லாதவர்கள் தாழ்ந்த குலம் என்றும் வகுத்து வைத்து விட்டார்கள்.பொருளாதார அடிப்படையில் மக்களை பிரித்து வைத்து விட்டார்கள் என்பது ஏற்க முடியாத குற்றம் என வள்ளலார் வருந்துகிறார் .பொருள் வளர்ச்சியினால் மனிதனுக்கு ஆசைகள் அதிகமானது.ஆண்டவன் படைத்த பூமியை தனக்கென சொந்தம்ஆக்கி மண்ணாசையை பெருக்கிக் கொண்டார்கள் .மண்ணாசை அதிகமானதால் அதை அனுபவிகக் தனக்கு வாரிசுகள் வேண்டுமென எண்ணி பெண்ணாசையில் ஆர்வம் கொண்டார்கள். ஒரு மனைவி போதாதென்று பல மனைவிகளை சொந்தமாக்கிக் கொண்டார்கள் ஆதலால் பெண்ணாசை பெருகி வந்த்து.மண்ணாசையும்,பெண்ணாசையும் வளர்ந்தபின் அதை காப்பாற்ற பொருள் தேவைப்பட்டதன் காரணமாக பொருள் (அதாவது பணம் )மேல் ஆசை ஏற்பட்டது,பொருள் காரணமாக மற்றவர்களை அழித்து பொருள் ஈட்ட துனிவுகொண்டார்கள்.இப்படியே மண்ணாசை ,பெண்ணாசை ,பொன்னாசை மனிதனைப் பற்றிக் கொண்டன ,என்பது வரலாற்று உண்மையாகும் .    

  சாதி,  சமயம் ,மதம்
     மனிதன் செய்யத்தகாத குற்றங்கள் அதிகமானதால் அதை சமாளிக்க முடியாமல் பலவிதமான துன்பங்களும் துயரங்களும் பெருகி வந்தன,அதை கட்டுப்படுத்த மனிதனை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது, அதை கடவுளாக கருதினார்கள்..கடவுள் எங்கே இருக்கிறார் அவர் எப்படி செயல் படுகிறார் என்பதை தெரியாத பெரியவர்கள்,மனிதனின் உடல் இயக்கத்திற்கு காரண காரியம் எது என்பதை உணர்ந்த சித்தர்கள், உயிருக்கு ஆன்மா என்று பெயர் வைத்தார்கள் அதை இயக்குவது கடவுள்தான் எனபதை உணர்ந்தார்கள் ஆன்மாவை ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மாயா சக்திகள் பற்றிக் கொண்டது அதிலிருந்து விடுபட்டால்தான் வீடு பேறு அடையமுடியும் என்ற கொள்கையை வெளிப்படுத்தினார்கள்.அதை வெளிப்படுத்த, ஆலயங்களை கட்டினார்கள்.அந்த ஆலயங்கள் மனித உருவ அமைப்பை கொண்டதாக அமைத்தார்கள்.      
    கடவுள் பெயரால் சமயங்களும் ,மதங்களும் தோன்றின .அம மதங்களின் பெயரால் மக்கள் பிரிவு பட்டார்கள்.மதங்களின் உட்பிரிவு களாக சமயங்கள் தோன்றின .மதங்களினாலும் சமயங்களினாலும் சாதிகள் வலுவடைந்தன,மக்களும் விரிவடைந்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
      இதுபோல் உலக நாடுகள் அனைத்திலும் மதங்களும், சமயங்களும், சாதிகளும் அதிகரித்து மனித நேய மில்லாமல், அன்பு இல்லாமல் சுய நலம் அதிகரித்து,மனிதனை மனிதன், அடித்து உதைத்து போரிட்டு அழித்து அழிந்து கொண்டு வருகிறார்கள் .கடவுள் கொள்கைகளில் சாதிக்கு ஒருகடவுள்,மதத்திற்கு பல கடவுள்கள்,சமயத்திற்கு பல கடவுள் என பிரித்து வைத்து, அறியாமையில் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் .கடவுளையும் பிரித்து வைத்து கோவில்களையும் பிரித்து வைத்து, மக்களை பிரித்து வைத்து விட்டார்கள் .கோவில்களையும் பிரித்து வைத்ததோடு அல்லாமல், வணங்கும் மக்களையும் பிரித்து வைத்து விட்டார்கள் .இன்றும் அதே நிலைமை நீடித்து வருகிறது .என்பதும் அனைவரும் அறிந்ததே.
       இவைகளைப் பற்றி சிந்தனை செய்தவர்கள் மிகவும் சிலரே,மக்கள் சாதி, மத, சமய பேதங்களால் மாறுபட்ட கருத்துகளால் ஏற்றத் தாழ்வு மனப்பான்மைக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள் .என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.மக்கள் மாறுபட்ட கருத்துக்களால் .மக்களுக்குள் சண்டைகள் ஏற்பட்டு அதுவே தலைவிரித்தாடும் நிலையும் ஏற்பட்டுவிட்டன. இப்படியே தொடர்ந்து உள்நாட்டு சாதிக் கலவரம், உலகளவில் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன .உலக நாடுகளில் உள்ள பெரிய அறிவாளிகளும் அறிஞ்ஞ்ர் பெருமக்களும் எவ்வளவோ சொல்லியும் போராடியும் பார்த்தார்கள் எதுவும் நடைபெறவில்லை,அந்த அளவிற்க்கு சாதி மத சமயக் கருத்துக்கள் மக்கள் மனதில் வேரூன்றி விட்டது .மூடநம்பிக்கையும் அறியாமையும் மக்கள் அறிவை கொள்ளை கொண்டு விட்டது .படித்தவர் முதல் பாமரர் வரை,அறிவிருந்தும் அறியாமையில் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் என்பது உலகம் தெரிந்த உண்மை ஆகும்.இந்த சாதி சமய மத, விஷத்தை விதைத்தவர்களை அடையாளம் தெரிந்து கொள்ள எவ்வளவோ முயற்ச்சி செய்தும் யாராலும் கண்டு பிடிக்க முடிய வில்லை.
     திருவள்ளுவர்
    பல நுற்றாண்டுகளுக்கு முன் நம் நாட்டில் தமிழகத்தில் பிறந்து வாழ்ந்துள தெயவப்புலவர் திருவள்ளுவர் அவர்கள் சாதி மத சமய பேதமற்றசமுதாயம் உருவாக வேண்டும் என்று குறள் கொடுத்துள்ளார்கள் 1330 திருக்குறளும் 133 அதிகாரங்களும் மிகத்தெளிவாக எழுதிவைத்துள்ளார்கள்.மக்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டிய நூலாகவும்.ஆட்சியாளர்களுக்கு அறிவு நூலாகவும்,.ஆட்சியாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும், என்று தெளிவுபடுத்தியுள்ளார் .இன்றுவரை யாரும் கடை பிடிக்கவில்லை.மக்களை காப்பாற்ற வேண்டிய ஆட்சியாளர்களே, தவறு செய்து கொண்டு இருக்கிறார்கள் பொருள் மீது ஆவல் கொண்டு பண்ணாத தீமைகள் எல்லாம் பண்ணி கொண்டு இருக்கிறார்கள்.வேலியே பயிரை மேய்ந்தால் பயிர் எப்படி நன்றாக வளரும்.சாதி மத சமயங்களுக்குஆதரவு கொடுத்து கொண்டு மக்களை சுரண்டி வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் இந்த உலகை காப்பாற்ற வேண்டியது எப்படி? யார் காப்பாற்ற போகிறார் என்ற கேள்வி அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் எழுந்துள்ளன .
           பாரதியார்                       
   சாதிகள் இல்லையடி பாப்பா, காக்கை குருவி எங்கள் சாதி என்று புரட்சி குறள் கொடுத்தும் புரட்சிக்கவி பாரதியாரும் பாடியும் எழுதியும் வைத்து உள்ளார், .யார் எதை சொன்னாலும் இன்றுவரையில் சாதி சமய மத வேறுபாடுகள் ஒழிந்த பாடு இல்லை. நம் நாட்டில் நாம் அடிமைப் பிடியில் இருந்து விலகி சுதந்திரம் அடைந்த பின்னும் எவையும் மாறவில்லை.   
சாதி மத சமய பேதமற்ற அரசு என்று பிரகடனப்படுத்தியும் உள்ளது. .ஆனால் இன்றுவரை கடைபிடிக்க வில்லை.குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதில் இருந்து பிழைக்க வேலை தேடுவது வரையில்,சாதி மத சான்று வேண்டும்.என்று, இன்றுவரை செயல்பட்டுக் கொண்டே வருகின்றது ..
       இவைகளை எல்லாம் மாற்ற வேண்டும்என்றால் வள்ளலார் கூறிய அருள் நயந்த நன்மார்க்கர்களாகிய சுத்த சன்மார்க்கர் ஆளும் ஆட்சி வரவேண்டும்.அப்பொழுதுதான் சாதி சமயம்  மதமற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது சத்தியமான உண்மையாகும்.
     உலகம் முழுவதும் மதங்கள் தான் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது.மதவெறியர்கள் தான் ஆட்சியில் அமருகிறார்கள் .நம் இந்திய நாட்டில் சாதிக்கு ஒரு  கட்சியும் சமயத்திற்கு ஒரு கட்சியும்,.மதத்திற்கு ஒரு கட்சியும் என பல பிரிவுகள் புற்று ஈசல் போல் தோன்றிக் கொண்டு இருக்கின்றன .அவைகளுக்கு மக்களும் ஆதரவு தந்து கொண்டு வருகிறார்கள் .மக்களையும் பிரிவுபடுத்திக் கொண்டு வருகிறார்கள் மக்கள் அவர்களை உண்மையானவர்கள் என்று நம்பி ஏமாந்து கொண்டு வருகிறார்கள் .
    அடுத்து பொய்யான கடவுள்களையும் கோவில்களையும் போலி சாமியார்களையும் நம்பி ஏமாந்து கொண்டு வருகிறார்கள் அதனால் மக்கள் பிளவுப்பட்டு, பிரிவுப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள் .சாதி, சமயம், மதம், சாத்திரம்,வேதம்.ஆகமம்,புராணம் இதிகாசம்,வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் கலாந்தம் நாதாந்தம் யோகாந்தம்,போன்ற அந்தங்கள் என்ற பெயரில் பொய்யான கடவுள் கொள்கைகளை சொல்லி, மக்களை ஏமாற்றி பிளவுப்படுத்தி விட்டார்கள் .மூட பழக்க.வழக்கங்களை சொல்லி மக்கள் மனதில் பதிய வைத்து  முட்டாளாக்கி விட்டார்கள் .
       பொருளாதாரத்தில் உயர்ந்த மக்களை உயர்ந்த சாதி என்றும்,பொருள் இல்லாதவர்களை தாழ்ந்த சாதி மக்கள் என்றும் கடவுளின் பெயரால் பிரித்து வைத்து விட்டார்கள்,அதற்க்கு விதியின் விளையாட்டு என்றும். கடவுள் தண்டனை என்றும்,கடவுள் பெயரைச சொல்லி அடக்கி வைத்து விட்டார்கள்,பணம்  இல்லாத ஏழைகளின் உழைப்பையும், இரத்த்ததையும் உறிஞ்சி, அவரவர்கள் வாழ்வை உயர்த்திக் கொண்டார்கள்.உயர்ந்த சாதி என்று தங்களை உயர்த்திக் கொண்டார்கள் .இதை தட்டிக் கேட்க உண்மையை எடுத்து சொல்ல, இந்த உலகில் பல சிந்தனை யாளர்கள் வந்தும் பயன் இல்லாமல் போயிற்றே. .
வடலூர் வள்ளலார்
      பத்தொன்பதாம் நுற்றாண்டில் இந்திய திரு நாட்டிலுள்ள நம் தமிழகத்தில் சிதம்பரத்திற்குஅருகில் உள்ள மருதூரில் அவதரித்த வள்ளலார் அவர்கள், இவைகளைப் பார்த்தும் கேட்டும் மனம் வருந்தியும் வேதனை அடைந்தார்கள்.வேதனையுடன் அவர் சாடுவதை பாருங்கள் .
   சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
   சாத்திரச சந்தடிகளிலே கோத்திரச சண்டையிலே
  ஆதியிலே யபிமாநித்து அலைகின்ற உலகீர்
  அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழக்லவே
பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்களே இது நியாமா?, உங்களுக்கே அழகா இருக்கிறதா?.இப்படியே இருந்தால் நீங்கள் வீணாக அழிந்து விடுவீர்களே,அழிந்து விட்ட பிறகு என்ன செய்யப் போகிறீர்கள் என்று சொல்லி வேதனைப்படுகிறார் வள்ளலார் .
      உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே இனம் ஒரே குலம், அனைவருக்கும் ஒரே கடவுள் எனபதை தெளிவுபடுத்துகிறார்.சாதி மதம் சமயம் எல்லாம் பொய்யானது.சுய நல மனிதர்களால் தோற்றுவிக்கப் பட்டதாகும் .கடவுளால் தோற்றுவிக்கப் பட்டதல்ல,கடவுள் பெயரைச சொல்லி மக்களை ஏமாற்றி விட்டார்கள் .ஆதலால் மனிதர்களால் தோற்றுவிக்கப் பட்ட எந்த கடவுளையும் வணங்க வேண்டாம்,வழிபடவேண்டாம்,நம்ப வேண்டாம் என்கிறார் வள்ளலார் .
   அறிவில்லாதவர்கள்
     கடவுளை கர்ப்பித்தவன் முட்டாள் அறிவில்லாதவன், உண்மை தெரியாமல் உளறிவிட்டார்கள் உண்மையான கடவுள் யார் என்பது தெரியாமல் கதையாகவும் கற்பனையாகவும் மூட நம்பிக்கையை விதைத்து விட்டார்கள் .ஆதலால் எவற்றையும் நம்பி ஏமாந்து போகாதீர்கள் என்று அருடபாடலில் தெளிவுபடுத்துகிறார் .
    தெய்வங்கள் பல பல சிந்தைசெய்வாரும்
    சேர்கதி பலபல செப்புகின்றாரும்
    பொய்வந்த கலைபல புகன்றிடுவாரும்
    பொய்ச சமயாதியை மெச்சுகின்றாரும்
    மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார்
    மேல்விளைவு  அறிகிலர் வீண் கழிக்கின்றார்
    எய்வந்த துன்பொழித்து அவருக்கு அறிவு அருள்வீர்
    எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே
என்கிறார் வள்ளலார் எனக்கு கொடுத்த அறிவை அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று இறைவினிடம் விண்ணப்பம் செய்கிறார் அறிவில்லாமலும் தெளிவில்லாமலும் மக்களை அல்லல் பட வைத்து விட்டார்கள் இனிமேலாவது அவர்கள் சொல்லியதை நம்பி ஏமாறாமல் உண்மையை உணர்ந்து, அறிவு விளக்கம் பெற்று, அறிவுவிளக்கத்தோடு வாழ வழி காணுங்கள் என்கிறார் .
    வள்ளலாருக்கு முன் வாழ்ந்த ஜானிகள்,யோகிகள்,தபசிகள் சித்தர்கள்,நாயன்மார்கள்,வியாசர்,வாலமீகி,போன்ற பெரியவர்கள் அடுத்து வந்த புத்தர்,
ஏசுபிரான்,நபிகள்.போன்ற பெரியவர்களும், அனண்வரும் முழுமையான உண்மையை தெரிவிக்காமல் ஒன்று கிடக்க ஒன்று உளறிவிட்டார்கள் ,எவர்களுமே உயிர் இரக்கத்தைப் பற்றியும் உயிர்களின் உண்மைப் பற்றியும்,உயிர்களின் நேசத்தைப் பற்றியும்,உயிர்களைக் காப்பாற்றும் வழியைப் பற்றியும் முழுமையாக முறையாக சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள் .
     அடுத்து உண்மையான கடவுள் யார் என்பதை தெரியாமல்,அவரவர்களுக்கு தெரிந்த கற்பனைக் கடவுள்களை படைத்து விட்டுப் போய்விட்டார்கள்.அவர்கள் சொல்லியது உண்மை என்று நம்பி மக்கள் ஏமாந்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள்.இந்த உலகத்திற்கு அவரவர்களுக்கு ஒரு கடவுள் என்று சொன்னால் இந்த உலகத்திற்கு எத்தனை கடவுள்கள்! .அறிவுள்ளவர்கள் சிந்திக்க மாட்டார்களா! இப்படியுமா போதிப்பது அவர்களுக்கு அறிவு இருந்தால் இப்படி செய்திருப்பார்களா? இவர்களை கடவுள் அருளைப் பெற்றவர்கள் என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்!.அவர்களை வள்ளலார் எப்படி பட்டவர்கள் என்பதை விளக்கும் பாடல் .
  கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல சமயக்
  கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
  கள்ளமுறு அக் கலைகள் காட்டிய பல கதியுங்
  காட்சிகளுங் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
  பிள்ளை யாட்டென நன்கறிவித்திங் எனையே
  பிள்ளை எனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே
  தள்ளரிய மெய்யடியார் போற்ற மணி மன்றில்
  தனி நடஞ் செய் யரசே என் சாற்றும் அணிந்தருளே .

என்று சாடுகிறார் .சாதி சமயம் மதத்தை போதித்தவர்கள் கொள்ளைக் கூட்டம்என்றும் அவர்கள் காட்டிய கடவுள் எல்லாம் குழ்ந்தைகள் விளையாடும் பொம்மைகள் போல்,மண் கல்லு,மரம்,செம்பு,பித்தளை,வெள்ளி,தங்கம்,போன்றஅசையாத,உயிர் இல்லாத ஜடப் பொருள்களை உருவங்களாக வைத்து கடவுள் என்று சொல்லி, மக்களை ஏமாற்றி வைத்து விட்டார்கள்..அந்த ஜடப்பொருள்களுக்கு பல பல பெயர்களை வைத்து போற்றியும் புகழ்ந்தும் வாழ்த்தியும் வைத்து விட்டார்கள்.அநதசடப்பொருள்கள் பேசுமா என்றால்பேசாது,மக்களும் உண்மை என்று நம்பி பொம்மைகளை வழிபட்டும் வணங்கியும் வருகிறார்கள்.இவைகளை எல்லாம் அழித்து உண்மையை விளக்கி புதிய மாற்றத்தை கொண்டு வந்தவர்தான் வள்ளலார் என்பவராகும்
     முன்னாடி வந்த அருளாளர்கள் எவரும் சிந்திக்காமல் செயல்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகின்றன.சாதி சமய மத வேறுபாடுகளை வைத்தே மக்கள் மனதில் மாறுபட்டக் கருத்துக்களை பதிய வைத்து உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்று பாகுபடுத்தி,மக்கள் வாழும் இடத்தைக்கூட பிரிவினை செய்து வைத்து விட்டார்கள்.இந்த கொடுமையை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்!.இதையே கடவுள் வழிபாட்டிலும் வைத்து மக்களை பிரித்து விட்டார்கள்.நம்பவும் செய்துவிட்டார்கள்.
   இவைகள் அத்தனையும் பொய்யானது இவைகளை ஒரு சதிகாரக் கூட்டத்தினர் மக்கள் மனதில் பதிய வைத்துள்ளது.இவைகளைப் பார்த்து வள்ளலார் வேதனை அடைந்து
சாதியம் மதமும் சமயமும் பொய், அவைகளை நம்பவேண்டாம் இவைகளை ஆதியிலே மறைத்தவன் மாபெரும் வல்லவன் அவன் பூட்டிய பூட்டை யாராலும் திறக்க முடியவில்லை,யாராலும் உடைக்கமுடியவில்லை என்று கூறிவிட்டு அத்தனையும் திறந்துவிட்டேன் உடைத்து விட்டேன் இனிமேல் யாரும் கவலைப் படவேண்டாம்,முந்தையஎதையும் நம்பவேண்டாம் என்று மக்களை அழைக்கிறார் வள்ளலார் அவர்கள்.   .

கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும்ஜோதியர் !

    இந்த உலகம் பஞ்ச பூதங்க்ளான.மண்,நீர்,அக்கினி,காற்று.ஆகாயம் என்னும் ஐந்து பொருள்களால் அதாவது அணுக்களால், அமைக்கப் பட்டுள்ளது.அதனுள் சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள் போன்ற ஒளிகளும்இயங்கிக் கொண்டு இருக்கின்றன.இவைகள் எல்லாம் எதற்காக என்றால் அனைத்து உயிர்களும்  வாழ்வதற்காக் அமைக்கப்பட்டதாகும்.உயிர்கள் வாழ்வதற்கு அணைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டியது மேலே உள்ள பஞ்சபூத கருவிகளும்,காலங்களை கொடுத்து இரவு பகல் உயிர்களின் செயல்பாடுகள் அனைத்திற்கும் காரண காரியமாக செயல்படுத்தும் உரிமையை சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள் போன்ற ஒளி, ஓலி கிரகங்கள் அமைக்கபட்டவைகளாகும்.
     உயிர்களின் வாழ்க்கை முறைகளில் ஏற்படும் இன்பம் துன்பம் மரணம் முதலியகாரிய  காரணங்கள் உண்டாவதற்கு கடவுள்தான் காரணம் என்று பொய்யான கடவுள்களை படைத்தார்கள்.அந்த கடவுள்கள் மனித உடம்பின் செயல்பாட்டு கருவிகளின் உருவங்களாகும்.அதற்கு தத்துவங்கள் என்று பெயர் வைத்தார்கள்,அந்த தத்துவங்கள் அழியக் கூடியதாகும்.அழியக் கூடியது எப்படி கடவுள்களாகும்.அதற்கு சாத்திரங்கள் என்று பெயர் வைத்து இன்ன இன்ன நேரத்தில் இது இது நடந்தால் அதற்கு பரிகாரம் செய்தால் நிவர்த்தி செய்து கொள்ளலாம் தவிர்த்து கொள்ளலாம் என்று பொய்யான சாத்திரங்களையும் படைத்து விட்டார்கள்..அதையும் உண்மை என்று நம்பி மக்கள் அறிவிழந்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள்.அதை பொறுக்கமுடியாமல் வள்ளலார் அருட்பாவில் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு .
   எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச சாத்திரங்கள்
   எடுத்துரைத்தே எமது தெய்வம் எமதுதெய்வம் என்று
   கைவகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர்
   கரிப்பிடித்துக் கலகமிட்டப் பெரியரினும் பெரியீர்
   ஐவகைய பூத உடம்பு அழிந்திடில் என்புரிவீர்
   அழி உடம்பை அழியாமை யாக்கும் வகை யறியீர்
    உய்வகை என்தனித்தந்தை வருகின்ற தருணம்
    உற்றதிவன் உற்றுடுவீர் பெற்றிடுவீர் உவப்பே .
உண்மையை தெரிந்து கொள்ளும் காலம் வந்து விட்டது.இனிமேல் யாரும் ஏமாற்ற முடியாது, இந்தியா மட்டும் அல்ல.அனனிய உலகிலுள்ளவர்களும் தெரிந்து கொள்வார்கள்.அவர்களும் கிருத்துவமதம்,இஸ்லாம் மதம்,ப்வுத்தமதம் என்று பல,பல  மதங்களை தோற்றுவித்து கண்மூடித்தனமாக மக்களை மதமாற்றம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்களுக்கும் கடவுள் யார் என்பது தெரியாது உளறிக் கொண்டுஇருக்கிறார்கள்.அவர்களுக்கும் வள்ளலார் பதில் சொல்லுகிறார் .                     அன்னிய மதவாதிகள்
    நண்ணிய மதநெறி பலபல அவையே
    நன்றற நின்றன சென்றன சிலவே
   அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள்
   அலைதருகின்றனர் அலைவற மகனே
   புண்ணிய முறுதிரு அருள்நெறி இதுவே
   பொதுநெறி யெனஅறிவுற முயலுதி நீ
   தண்ணிய அமுது உண்ணத் தந்தனம் என்றாய்
   தனி நடராஜ வென் சற்குரு மணியே
அடுத்த பாடல்
   பன்னெறிச சமயங்கள் மதங்கள் என்றிடுமோர்
   பவநெறி இதுவரை பரவியது அதனால்
   சென்னெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்
   செறியிருள்அடைந்தனர் ஆதலால் இனி நீ
   புன்னெறி தவிர்த்து ஒரு பொதுநெறி யெனும்வான்
. .புத்தமுது அருள்கின்ற சுத்தசன்மார்க்கத்
   தன்னெறி செலுத்துக வென்ற வேன்னரசே
   தனி நடராஜ வென் சற்குரு மணியே .
என்று அனைத்துலக மதங்களையும்,மதங்களை தோற்றுவித்த பெரியவர்களையும் பொய்யானவர்கள் என்று சாடுகிறார் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளும் படியான ஒரு பொது நெறியையும்.உண்மைக் கடவுள் யார் என்பதையும் தெரியப்படுத்துகிறார் அந்த
உண்மைக் கடவுள் யார் ?பொது நெறி எது என்பதைப் பார்ப்போம் . .                

    உண்மைக்கடவுள் அருட்பெரும்ஜோதி
நாம் வாழும் இந்த உலகம் ஒரு அண்டம் இது போல் பல கோடிஅண்டங்கள் இருக்கின்றன்.இந்த அண்டங்கள் யாவும் தன்னைத்தானே இயங்கிக் கொண்டு இருக்கின்றன.ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.இவைகள் யாவும் எந்த சக்தியை கொண்டு.எந்த ஆற்றலைக் கொண்டு,இயங்கிக் கொண்டு இருக்கின்றன..அதை கடவுள் என்று சொல்லுவதா!,அருள் என்று சொல்லுவதா!அணு ஆற்றல் என்று சொல்லுவதா!,அன்பு என்று சொல்லுவதா!தயவு என்று சொல்லுவதா!,கருணை என்று சொல்லுவதா?  தனிப்பெரும் கருணை என்று சொல்லுவதா?
     இந்த சக்தி வாய்ந்த மெய்ப் பொருள் எங்கே இருந்து இயங்கிக் கொண்டு இருக்கிறது .அதன் தன்மை என்ன என்பதை வள்ளலார் அருட்பாவில் பதிவு செய்துள்ளார் .

     கடவுள் இருக்கும் இடம் 
   ஒரு பிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
   உன்ன முடியா தவற்றின்
    ஓராயிரம் கோடி மால்அண்டம் அரன்அண்டம்
    உற்ற கோடா கோடியே
   திருகலறு பலகோடி யீசன்அண்டம் சதா
   சிவஅண்டம் மெண்ணிறந்த
   திகழ்கின்ற மற்றைப் பெருஞ் சத்தி சத்தர்தஞ்
   சீரண்டம் மென் புகலுவேன்
   உருவுறு இவ் வண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில்
   உறுசிறு வணுக்களாக
   ஊடசைய அவ வெளியின் நடு நின்று நடனமிடும்
   ஒரு பெருங் கருணை யரசே
   மருவி எனை யாட்க்கொண்டு மகனாக்கி யழியா
   வரந்தந்த மெய்த் தந்தையே
   மணி மன்றின் நடுநின்ற வொரு தெய்வமே யெல்லாம்
   வல்ல நடராஜ பதியே.

என்பதை தெளிவாக்கியுள்ளார் வள்ளலார் அவர்கள் .கடவுள் உருவமாக இல்லை அவை  ஒளியாக உள்ளது  அந்த ஒளி அருள் நிறைந்த தனிப்பெரும் கருணையாக உள்ளது.பல கோடி அண்டங்களையும் இயக்கிக் கொண்டு இருக்கும் ஆற்றல் பெற்றது.பல கோடி அண்டங்களுக்கும் நடுவில் இருந்து இயக்கிக் கொண்டு இருக்கிறது.,அதற்க்கு வள்ளலார் பெயர் வைக்கிறார்.
 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி
 தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
என்று பெயர் வைக்கிறார்.அடுத்து அந்த ஒளி,இயற்கைஉண்மை,இயற்கை
விளக்கம்,இயற்கைஇன்பம்,போன்ற தன்மையாக இயங்கிக் கொண்டு இருக்கிறன்றன என்கிறார்.
      உலகில் உள்ள மத வாதிகள் சொன்ன ஒளி ஒளியல்ல. இந்த ஒளியை கண்டவர்கள் யாரும் இல்லையே! எனினும் வள்ளலார் ஒருவ்ரேதான் உண்மை ஒளியை கண்டுள்ளார், ஏன்என்றால் தன் ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றியவர்களால் தான்அந்த ஒளியை காணமுடியும்..மரணம் அடைந்தவர்களால் காணமுடியாது.கடவுள் நிலை என்னவோ அந்த நிலைக்கு தன் உடம்பை மாற்றினால்தான் அந்த மெய்ப் பொருளை காண முடியும்.ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றுவது எப்படி என்பதை திருஅருட்பாவில் தெளிவாக எழுதி வைத்துள்ளார்.திருஅருட்பாவை படித்து அதில் உள்ளபடி வாழ்ந்தால் அனைவரும் அந்த நிலைக்கு வரலாம் என்கிறார் வள்ளலார் அவர்கள்.இதை தெரியாமல் மத சமய வாதிகள் கண்டபடி கடவுளைப்பற்றி கற்பனைகளாக கதை விட்டு இருக்கிறார்கள்,ஆதலால் அவற்றை நம்ப வேண்டாம் என்கிறார் .
அருட்பெரும்ஜோதியைப்பற்றி வள்ளலார் எழுதி வைத்துள்ளது.
     இயற்கையில் தானே விளங்க்குகின்றவரா யுள்ளவர்ரென்றும்                                                               
.   இயற்கையில் தானே யுள்ளவராய் விளங்குகின்றவரென்றும் .
    இரண்டுபடாத் பூரண இன்பமானவரென்றும்
         எல்லா அண்டங்களையும்,எல்லா உலங்க்க்ளையும். எல்லாப்  பதங்களையும்,எல்லாச சத்திகளையும்,எல்லாச சத்தர்களையும்,எல்லாக் கலைகளையும்,எல்லாப் பொருள்களையும்,எல்லாத் தத்துவங்களையும்,எல்லாத் தத்துவிகளையும்,எல்லா உயிர்களையும்,எல்லாச  செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும்,எல்லா பயன்களையும்,எல்லா அனுபவங்களையும்,மற்றெல்லாவற்றையும்,
     தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல்,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல்,பக்குவம் வருவித்தல்,விளக்கஞ்  செய்வித்தல்,முதலிய பெருங்கருணைப் பெருந்தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,சர்வ காருண்யரென்றும,சரவ வல்லப ரென்றும்,எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்புயர்வில்லாத் தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ் ஜோதியர்என்றும்,
              உண்மைக்கடவுள்
    சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த் மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.
      அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்பு செய்து,அருளையடைந்து, அழிவில்லாத சத்திய சுகப் பூரணப்பெருவாழ்வை பெற்று வாழாமல்,பல்வேறு கற்பனைகளால் பல்வேறு சமயங்களிலும்,பலவேறு மதங்களிலும் பல்வேறு லஷ்சயங்க்களைக் கொண்டு,நெடுங்காலமும் பிறந்து பிறந்து,அவத்தை வசத்தர்களாகிச சிற்றறிவு மின்றி,விரைந்து விரைந்து,பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து,வீண் போகின்றார்கள்.
       இனி இசசீவர்கள்விரைந்து விரைந்து,இறந்து இறந்து,வீண் போகாமல் உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம்,முதலிய,சுப குணங்களைப் பெற்று,நற்செய்கை உடையவராய்,எல்லா சமயங்களுக்கும்,எல்லாமதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும் ,உண்மைப் பொது நெறியாகி விளங்குஞ் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று,பெருஞ் சகத்தையும்,பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு,மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுளங் கொண்டு,சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞான சபையை (வடலூரில்)இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து ''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப் படாத நெடுங்காலம்,அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம்''என்னும் திருக்குறிப்பைவெளிப்படுத்தி,அருட்பெருஞ்ஜோதியராய்
வீற்றிஇருக்கின்றார்.
      ஆதலின்,அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து த்ரிசிக்கப் பெறுவீர் களாகிற்
கருதிய வண்ணம் பெற்றுக் பெருங்களிப்படைவதும் அன்றி,இறந்தவர் உயிர்ப் பெற்று எழுதல்,மூபபினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பையும் அடைவீர்கள் .என்று தான எழுதிய திரு அருட்பாவில் பொதுவான கடவுள் வழிபாட்டு முறையை வெளிப்படுத்தியுள்ளார் வள்ளலார் அவர்கள் .
       வள்ளலார் காட்டிய கடவுள்

     வள்ளலார் காட்டிய கடவுள் மற்ற சமயங்கள் மதங்கள் வழிபடும் கடவுள்கள் அல்ல.
பலகோடி அண்டங்களை இயக்கிக் கொண்டு இருக்கும்,அருட்பெரும்ஜோதி என்னும் அருள் ஒளியாகும்.அதற்கு உருவங்கள் கிடையாது,.குடும்பங்கள் கிடையாது.பாசங்கள் கிடையாது,பந்தங்கள் கிடையாது,மனிதர்களால் தோற்றுவித்த கடவுள் கிடையாது.தத்துவங்கள் கிடையாது,கற்பனைக்  கடவுள்கிடையாது,என்பதை வள்ளலார்
திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளதைப் பார்ப்போம்.
     இயற்கையிலே பாசங்கள் ஒன்றுமிளார் குணங்கள்
    ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
    செயற்கையில்லார் பிறப்பு இல்லார் இறப்புஇல்லார்
    திரிபு இல்லார் கலங்கமில்ளார் தீமை ஒன்றுமில்லார்
    வியப்புற வேண்டுதல் இல்லார் வேண்டாமையில்லார்
    மெய்யே மெய்யாகி யெங்கும்விளங்கி இன்பமயமாய்
    உயத்த்குமோர் சுத்த சிவானந்த சபைதனிலே
    ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.
அடுத்த பாடலில் தெரிவிக்கிறார் வல்ளலார்

    ஒன்றுமலார் இரண்டுமலார் ஒன்றும் இரண்டுமானார்
    உருவுமலார் அருவுமலார் உருவருவுமானார்
    அனறுமுளார் இன்றுமுளார் என்றுமுளார் தமக்கோர்
    ஆதியிலார் அந்தமிலார் அருட்பெரும்ஜோதியினார்
    என்று கனல் மதி யகத்தும் புறத்தும் விளங்கிடுவார்
    யாவுமிலார் யாவுமுளார் யாவுமலார் யாவும்
    ஒன்றுறு தாமாகிநின்றார் திருசசிற்றம் பலத்தே
   ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்

என்பதை தெளிவாக விளக்கி யுள்ளார்
          உலகில் தோன்றிய பெரியவர்கள் எல்லாம், மாயையில் சிக்குண்டவர்களாகும்,சாத்தானின் வேதங்களாகும்.சைத்தானின் வேதங்களாகும்.அவர்களுக்கு மெய்ப் பொருளின் உண்மைகள் தெரியாது.ஆதலால்
அவர்கள் கற்பனைகளாக கதைகளை சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள், அவர்களுக்கு பின்வந்த பெரியவர்களும்,உண்மை அறியாது உளறிக்கொண்டு இருக்கிறார்கள்.மக்களும் அதை உண்மை என்று நம்பி அழிந்து கொண்டு இருக்கிறார்கள்.
     வள்ளலார் அறிவுறுத்தும் வாக்கியங்கள் .

  இதுவரைக்கும் இருந்ததுபோல் இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள்,இதற்கு மேற்பட
நாம் நாமும், பார்த்தும்,கேட்டும் லஷ்யம் வைத்துக் கொண்டிருந்த வேதம்,ஆகமம்,
புராணம்,இதிகாசம்,முதலிய கலைகள் எதனினும் லஷ்யம் வைக்க வேண்டாம்.
ஏனென்றால் அவைகளின் ஒன்றிலாவது குழு உக்குறி யன்னியில் தெய்வத்தை இன்னபடி என்றும்,தெய்வத்தினுடைய உண்மை இன்ன தென்றும்,கொஞ்ச மேனும் புறங்கவியச சொல்லாமல் மண்ணைப் போடட்டு மறைத்துவிட்டார்கள்.
அனுமாத்திரமேனும் தெரிவிக்காமல் பிண்ட லஷ்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள்.
யாதெனில் ;---கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும்,
பெயரிட்டு,இடம்,வாகனம்,ஆயுதம்,ரூபம்,முதலியவையும்,ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து,உண்மையாக இருப்பதாகச சொல்லியிருக்கிறார்கள். ;;தெயவத்திற்குக்
கை ,கால்,கண்ணு ,மூக்கு,வாய்,வயிறு,உடம்பு,முதலியன இருக்குமா?''என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத்தெரியாது விழிக்கின்றார்கள்.இவை உண்மையாக இருப்பதாகவே,--முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும்,உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு
உளறியிருக்கிறார்கள்.
     ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன்.அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை,அவன் பூட்டிய அந்த பூட்டைஒருவரும்
திறக்கவில்லை,இது வரைக்கும் அப்படிப் பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும்  வரவில்லை,அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச சொல்லியிருகின்றார்கள்,அதற்காக ஒவ்வொரு சித்துக்கும் பத்துவருடம்,எட்டுவருடம்,பிரயாசை எடுத்துக் கொண்டால்,அற்ப சித்திகளை அடையளாம்.
     அதற்காக அவற்றில் லஷ்யம் வைத்தால் .ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டு இருக்கிற லஷ்யம் போய விடும்.ஆண்டவரிடத்தில் வைத்த லஷ்யம்
போய விட்டால் நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போயவிடும்.ஆதலால் அவற்றில் பற்றுகள் வைக்க வேண்டாம் என்கிறார் வள்ளலார்
    உலகமும் உயிர்களும் மனிதர்களும் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் போய்விட்டன,
இது வரையில் எல்லோருக்கும் பொதுவான நெறியோ பொதுவான கடவுளையோ,நாம்
கண்டுள்ளோமா?இல்லை என்ற பதில் தான் வருகிறது .அனைத்து மக்களுக்கும்,மக்கள்
ஏற்றுக் கொள்ளும் அளவிற்க்கு,ஒத்துக் கொள்ளும் அளவிற்க்கு,''பொது நெறி ''அந்த சுத்த சன்மார்க்க மெய் நெறியை கண்டு வெளிப்படுத்தியவர் வள்ளலார் ஒருவர்தான் என்பது
உலகம் அறியும்.
     அனைத்துலக அன்பர்களே
   வள்ளலாரின் தனிக்கொள்கை கண்டு பிடித்ததின் முக்கிய அம்சம் ,சிறப்பு அம்சம் யாதெனில்.
    நம் உலகில் தோன்றிய அருலாளர்கள் அனைவரும் தயவு அன்பு,கருணை ஒழுக்கம் பற்றிவெளிப்படுத்தி இருந்தாலும் வள்ளலார் ஒருவர்தான் அன்பு,தயவு கருணை,ஒழுக்கத்தைப் பற்றி தெளிவுபடுத்தியுள்ளார்.கடவுளை அடைவதற்கு கருணை ஒன்றுதான் முக்கியமானதாகும்என்கிறார்.கடவுள் கருணையுள்ளவர்.அந்தக் கடவுளை அடைய வேண்டுமானால் கருணையால்தான் அடையமுடியும் என்கிறார்.ஆதலால் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு ,தயவு ,கருணை செலுத்த வேண்டும் என்கிறார்.
     சாதி சமயம் மதம் .
     உயிர்களிடம் அன்பு தயவு கருணை செலுத்து வதற்கு தடையாக இருப்பது,சாதி சமயம் மதம் போன்ற கட்டுப்பாட்டு ஆசாரங்கள் ஆகும் அவையாவன ,
     சாதி ஆசாரம்,குல ஆசாரம்,ஆசிரம ஆசாரம்,லோகாசாரம்,தேசாசாரம்,கிரியாசாரம்,சமயா ஆசாரம்,மத ஆசாரம்,மரபாசாரம்,கலாசாரம்,சாதனா ஆசாரம்,அந்தா ஆசாரம் ,சாஸ்த்திர ஆசாரம்,முதலிய ஆசாரங்கள் அனைத்தும் தடையாக இருக்கின்றன.அனைத்து ஆசாரங்கள் ஒழிந்து,உண்மையான சமரச சுத்த சன்மார்க்கசத்திய ஞான ஆசாரத்தை கடைபிடித்து வந்தால்,போது நோக்கம் உண்டாகும்.ஜீவ காருண்யம் விருத்தியாகும்.ஜீவகாருணயம் விருத்தியானால்.அனைத்து உயிர்களிடத்தும் ஒற்றுமை உண்டாகும்.உற்றுமை உண்டானால் உலகம் அமைதி ஏற்ப்படும்,உலகம் அமைதி ஏற்ப்பட்டால்,அனைத்து நலமும் அனைவரும் பெற்று நலமுடன் வாழலாம்,
     மேலும் இவைகளுக்கு ஏதாவது சாதனம் வேண்டுமா என்றால்,எவ்வித சாதனமும் வேண்டாம்.சாதனம் ஒன்றும் வேண்டாம்.
     அனைத்து உயிர்களையும் தன் உயிர்போல் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ள வேண்டும் அதுவே சாதனமாகும் .அதுவே பொது நெறியாகும்.வள்ளலார் காட்டிய மார்க்கம்
     அறிவு மார்க்கம் .

    வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பது அறிவு மார்க்கம் .
ஆகும்,இங்கு அக அனுபவமே முக்கியமாகும்.அதற்க்கு ஒழுக்கம் முக்கிய மாகும்,அந்த
ஒழுக்கம் என்ன வென்றால்
    இந்திரிய ஒழுக்கம்
    கரண ஒழுக்கம்
    ஜீவ ஒழுக்கம்
   ஆன்ம ஒழுக்கம்
என்பதாகும் இந்த நான்கு ஒழுக்கங்களையும் கடைப்பிடித்து வாழ்கின்றவர்கள்,எல்லா உண்மை களையும் தெரிந்து கொள்வார்கள்.நமது திருவள்ளுவர் ஒழுக்கத்தைப் பற்றி இரண்டு அதிகாரங்கள் திருக்குறளில் இருபது குறள்கள் எழுதி வைத்துள்ளார்கள் அவைகளை பார்த்தால் உண்மை வெளிப்படும் திரு வள்ளுவர் ஒழுக்கத்தைப் பற்றி எழுதி வைத்துள்ளார் நமது வள்ளலார் அவர்கள் அந்த ஒழுக்கத்தின்படி வாழ்ந்து காட்டியுள்ளார் .
   திருக்குறள் --திரு அருட்பா !
   உலகம் அனைத்திற்கும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளும் வள்ளலார் எழுதிய
திருஅருட்பா !இந்த இரண்டு நுல்கள்  போதுமானதாகும்,இதைப் படித்தாலே அணைத்து
உண்மைகளையும் தெரிந்து கொள்ளலாம்

   இனி நாம் அனைவரும் சாதி ,சமயம் ,மதம் போன்ற பொய்யான மார்க்கங்களில் இருந்து விலகி,வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க, மெய நெறியை
கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து,ஒளியான கடவுளாகிய  அருட்பெரும்ஜோதி
ஆண்டவரை தொடர்பு கொண்டு,எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரையும் தம் உயிர்போல் பாவித்து,ஒத்து உரிமை உடையவர்களாகி உண்மையுடன் வாழ்வோம் .

உங்கள் அன்புள்ள உயிர்களின் நேயமுடைய
உயிர் நேயன் -அன்புடன் கதிர்வேலு.
மேலும் பூக்கும்                   
                        
   .                
 .
    
                  
                              
                      

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு