திங்கள், 14 ஜூன், 2010

அருட் பெரும் ஜோதி பாகம் ;-2

      அருட்பெரும்ஜோதி யாகிய ஒருவரே உண்மைக்கடவுள் என்பதை

உணர்ந்து ,நாம் அனைவரும் அறிந்து அன்பு செய்து அருளை அடைந்து
அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வை ப்பெற்று வாழாமல்
 ,
பல்வேறு கற்பனைகளால்

பல்வேறு சமயங்களிலும் ,பல்வேறு மதங்களிலும் ,பல்வேறு மார்க்கங் 
களிலும் ,பல்வேறு ல்ஷ்சயங்களிலும்,நெடுங்காலம் பிறந்து பிறந்து
அவத்தை வசத்தர்களாகி,சிறிய அறிவும்  இன்றி,விரைந்து விரைந்து
பல்வேறு ஆபத்து களினால்,துன்பத்தில் அழிந்து இறந்து, இறந்து,
 வீண் போய்விட்டோம் ,வீண் போகின்றோம்,


ஆதலால் இனிமேலும் ஜீவர்கலாகிய நாம் வீண்போகாமல்,உண்மை
அன்பு, உண்மைஇரக்கம்,முதலிய் சுபகுணங்களைப்பெற்று
நற்செய்கை
உடையவர்களாய்,எல்லா மதங்களுக்கும் ,எல்லா மார்க்கங்களுக்கும்
உண்மைப் பொது நெறியாகி விளங்கும்

சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெரு வாழ்வில்
 பெரும்
சுகத்தையும் பெருங்களிப்பையும்,அடைந்து வாழும
பொறுட்டு,மேற்குறித்த

உண்மைக்கடவுள் தாமே திருஉலங்கொண்டு ,சுத்தசன்மார்க்கதின் முக்கிய
ல்ஷ்சயமாகிய உண்மை விளக்கம் செய்கின்ற ஓர் ஞானசபையை
சித்தி விளாகம் என்னும் சன்னிதானத்திற்கு அடுத்த ,உத்தரஞான 

சித்தி புறம் என்று குறிக்கப்படுகின்ற,வடலூர் என்னும் பார்வதிபுரத்தில்

தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து ,இக்காலம் தொடங்கி

அளவு குறிக்கப்டாதநெடுங்காலம் ,அற்புத சித்திகள எல்லாம் விளங்க


யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருளுகின்றோம்

என்னும் திருக்குறிப்பைஇவ்விடத்தே தாயினும் சிறந்த பெரும்


 தயவுஉடைய
நமது கருணையாம் கடலாராகிய அருமைத் தந்தையார்

திரு அருட்பிரகாசவள்ளலார் முன்னிலையில் ,அருட்பெரும்ஜோதி

ஆண்டவர் தெரியப் படுத்தியுள்ளார் ஆதலால் நாம் அனைவரும்


வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பாதையில் சென்று


 ,உண்மைக்கடவுள்


அருட்பெரும்ஜோதி ஒருவரே என்பதை உணர்ந்து ,சமய ,மதங்களை
 தவிர்த்து 
நலமுடன் வாழ்ந்து வழிகாட்டுவோம்

நன்றி ;--மீண்டும் பூக்கும், 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு