வெள்ளி, 11 ஜூன், 2010

பஞ்ச பூதங்கள் தொன்றியவிதம் பாகம் ;--4

      முன்பு , பஞ்ச்பூதங்கள்;தொன்றிய்விதம் பற்றி பார்த்தோம் ;வள்ளலார் பஞ்ச
பூதங்கள்;தோன்றியதை .அருட்பா அகவலில் பதிவு செய்துள்ளதை பாப்போம் ;

வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
ஆனர வகுத்த அருட்பெரும்ஜோதி ;

1 -----விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்
          அண்ணி வயங்கும் அருட்பெரும்ஜோதி ;
           விண உறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்
           அண்ணி வயங்கும் அருட்பெரும்ஜோதி ;

2 ;------காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
            ஆற்றலின் ஓங்கும் அருட்பெரும்ஜோதி ;
            காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றும்
            ஆற்ற விளங்கும் அருட்பெரும்ஜோதி ;

3 ;------அனலினுள் அனலாய் அனல்னடுஅனலாய்
            அனல் உற விளங்கும் அருட்பெரும்ஜோதி ;
            அனல் உறும் அனலாய் அனல் நிலை அனலாய்
            அனல் உற வயங்கும் அருட்பெருஜோதி ;

4 -------புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
           அனைஎன வயங்கும் அருட்பெரும்ஜோதி ;
           புனலுறு புனலாய்ப் புனல் நிலைப் புனலாய்
           அனை எனப் பெருகும் அருட்பெருஜோதி ;

5 ;-----புவியின் உட்புவியாய்ப் புவிநடுப் புவியாய்ப்
           அவைதர வயங்கும் அருட்பெரும்ஜோதி ;
           புவியுறு புவியாய்ப் புவிநிலைப் பூவியாய்
           அவை கொல விரிந்த அருட்பெரும்ஜோதி ;

;--------ஐந்தொழில் ஆதிசெய் ஐவர் ஆதிகளை;
           ஐந்தொழில் ஆதி செய் அருட்பெரும்ஜோதி,

மேல கண்ட அகவலில் பஞ்ச பூத தோற்றகளின் விளக்கத்தை தெளிவுபபடுத்தி
உள்ளார்
இந்த பஞ்ச பூதங்க்கள் தோற்ருவித்ததின் நோக்கம் ;ஆன்மாக்கள் வந்து வாழ்வதற்கு ,
ஆன்மாக்களுக்கு கட்டி கொடுத்த விடாகும், இதற்க்கு அண்டம் என்றும் ;உலகம்
என்றும் ;பிரபஞ்சம் என்றும் ;பஞ்சபூத் அனுக்கூட்டம்;என்றும் பெயர் வைக்கப்பட்டு
உள்ளது ;
நன்றி ;---------மீண்டும் பூக்கும் .      

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு