செவ்வாய், 25 ஜூலை, 2023

சுத்த சன்மார்க்கம்!

 *சுத்த சன்மார்க்கம்!*


*அருட்பெருஞ்ஜோதி* 

*அருட்பெருஞ்ஜோதி* 

*தனிப்பெருங்கருணை* 

*அருட்பெருஞ்ஜோதி* 


*உலகில் உள்ள சமய மதங்களில் அனைத்திலும் சன்மார்க்கம் என்பது பொதுவான வார்த்தையாகப் பயன் படுத்தி உள்ளார்கள்*


*சன்மார்க்கம் என்றால் உயர்ந்தது என்று பொருள்படும்,எல்லாவற்றுக்கும் உயர்ந்தது வள்ளலார் வெளிப்படுத்தியமார்க்கம் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" என்னும் பொது மார்க்கமாகும் அவற்றை சுருக்கி சுத்த சன்மார்க்கம் என்று சொல்லப்பட்டு வருகிறது.*


*சுத்த சன்மார்க்கத்திற்கு என தனிக் கொள்கைகளை வகுத்து தந்துள்ளார் வள்ளல்பெருமான்*


*சுத்த சன்மார்க்க கொள்கைகள்!*


1,கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! அவரை உண்மை அன்பால் ஒளி(ஜோதி) வடிவில் வழிபட வேண்டும் !


2, சிறு தெய்வ வழிபாடு கூடாது!


3, தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி செய்யக் கூடாது! 


4, புலால் உண்ணல் ஆகாது !


5, சாதி,சமயம் முதலிய எவ்வகை வேறுபாடுகளும் கூடாது !


6,எவ்வுயிரையும்  தம் உயிர்போல் எண்ணும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கைகொள்ளல் வேண்டும்! 


 7, ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய சீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் !


8,வேதம்,ஆகமம்,புராணங்களும்,இதிகாசங்களும், சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டாது !


9, இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது ! 


10,கருமாதி,திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டாம்!


11, கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம் ! 


11, மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம்! 


12, அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு, ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு !( உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு ) 


13,எவ்வகையிலும்  உயிர்கொலை செய்யக் கூடாது ! புலால் உண்ணல் ஆகாது !


14, எதிலும் பொது நோக்கம்  வேண்டும்!


*முதலியவை சுத்த்சன்மார்க்க கொள்கைகள்*

**வள்ளலார் உரைநடைப் பகுதியில் சுத்த சன்மார்க்கம் பற்றி தெளிவாகப் பதிவு செய்துள்ளார்*!


*சுத்த சன்மார்க்கப் பெரு நெறி ஒழுக்கம் நான்கு வகைப்படும் அவை*


1,இந்திரிய ஒழுக்கம் 

2,கரண ஒழுக்கம்

3,ஜீவ ஒழுக்கம்

4, ஆன்ம ஒழுக்கம்

என்பதாகும்*


*இந்த ஒழுக்கத்தினால் நாம பெறும் புருஷார்த்தங்கள் நான்கு வகைப்படும்*


இந்திரிய ஒழுக்கத்தால் சாகாக்கல்வி கற்க வேண்டும்!


கரண ஒழுக்கத்தால் தத்துவங்களை நிக்கிரகம் செய்ய வேண்டும்!


ஜீவ ஒழுக்கத்தால் ஏமசித்தி பெற வேண்டும் ! 


ஆன்ம ஒழுக்கத்தால்  கடவுள் நிலை அறிந்து அம்மயதால்  வேண்டும் !


*இந்திரிய,கரண,ஜீவ, ஆன்ம ஒழுக்கத்தை முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே இறைவன் பூரண அருளைப் பெற முடியும்,*  *அருளைப் பெற்றால் மட்டுமே பஞ்ச பூதகாரிய உடம்பானது அருளினால்  கரைந்து கரைந்து ஒளி உடம்பாக மாற்றம் அடையும்* 


*ஒளி உடம்பு பெற்றவர்கள் மட்டுமே மரணத்தை வென்று  கடவுள் நிலை அறிந்து அம்மயமாவார்கள் என்பதுவே,வள்ளல்பெருமான் வகுத்து தந்த சுத்த சன்மார்க்கத்தின் அழுத்தமான கொள்கையாகும்*


*வள்ளலார் பாடல்!*


ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க

ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்

பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்

அருட்பெருஞ் சோதி அது.! 


என்கிறார் மேலும்....


ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித்


தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே


நானே அழியா வாழ்வுடையேன் 

நானே நின்பால் வளர்கின்றேன்


தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.! 


*மேலே கண்ட பாடலில் தான் அனுபவித்த அனுபவத்தை வெளிப்படுத்துகின்றார்*


*நித்திய தேகம் என்னும் அருள் தேக வாழ்வே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்*

 

*சமய மதங்களில் சொல்லிய கடவுள் கொள்கைகள் யாவும் பிறப்பு அறுக்கும் நிலையேயாகும்,வள்ளலார் அவற்றை மறுக்கின்றார்.இறப்பை ஒழித்தால்தான் பிறப்பை ஒழிக்க முடியும்,*


*வள்ளலார் சொல்லிய சுத்தசன்மார்க்க கொள்கை  ஒன்றே பிறப்பு இறப்பு என்னும் தொடர் சங்கிலியை துண்டித்து  நித்திய சத்திய பேரின்ப சித்திப் பெருவாழ்வே மரணமிலாப் பெருவாழ்வு என்னும் சாத்திய நிலையாகும்*

  


 *திருஅருட்பா உரைநடைப் பகுதி,* 


 *சுத்தசன்மார்க்கம் என்பது யாதெனில் ?* 


*சுத்தம் என்பது ஒன்றும் அல்லாதது.*


 *சுத்தம் என்ற வார்த்தை சன்மார்க்கம் என்பதிற்கு பூர்வம் (முன்பு) வந்ததால்,* 


 *எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவு நூலாகிய வேதம் கூறுகின்ற* 

*தாசமார்க்கம்,* 

*சற்புத்திர மார்க்கம்,* 

*சகமார்க்கம்,* 

*சன்மார்க்கம்* என்ற சமய

 மத மார்க்கங்களில் ,* *நான்காவது மார்க்கத்தின் அனுபவமாகிய சன்மார்க்கத்திற்கு முன்னர் சுத்தம் என்பது சேர்ந்து சுத்த சன்மார்க்கம் என்று வந்ததினால் ,* 

*மேற்கூறிய சமயமத சன்மார்க்கங்களின் அனுபவங்களைக் கடந்தது சுத்தசன்மார்க்கம் என்பதாகும்.*


 *ஆகலில் இதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்னும் மார்க்கம் என்பதாகும்*   


 *சத் என்றால் அனேக தாத்பரியங்களை(உட்பொருள்)கொண்ட ஒரு குழூஉக்குறிப் பெயராகும்* .


*மார்க்கம் என்பது துவாரம் அல்லது வழியென்பதாகும்.*ஆகலில்,* 

 *சத்மார்க்கம் என்பது ,* *சத்தென்னும் மெய்ப்பொருளின் உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம் என்பதாகும்.* 


 *ஆகையால்,* *எவ்வகையிலும் சுத்தசன்மார்க்கமே உயர்வுடையதாகும்.* 


 *திருவருட்பா உரைநடை பக்கம்,* 

     *பரிபாஷையும் சுத்தசன்மார்க்கமும்*!

 

*சமயமதங்களின் பரிபாஷைகளாகிய அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி,  ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாயநம, சிவோகம் ,சோகம்  முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாச்சிய வசன அசஷர தத்துவ பவுதிக முதலிய யாவுமே பரிபாஷைகளேயாகும்.* 


 *மேற்குறித்த வண்ணம் ஜபம்செய்தும், தியானம் செய்தும், அர்ச்சனை செய்தும், உபாசனை செய்தும், சமாதி செய்தும், சுவாசத்தை அடக்கியும்,* *விரதமிருந்தும் இவை போன்ற வேறுவகையில் தொழிற்பட்டும் பிரயாசையெடுப்பது (முயற்சி மேற்கொள்வது) வியர்த்தமாகும்.(பயனற்றதும் பொருளற்றதுமாகும்).* 


*ஆகலில் எவ்வகையிலும் சுத்தசன்மார்க்கமே சிறந்ததாகும்.* 

 *பாவனாதீதாதீதம்,* *குணாதீதாதீதம்,* *வாச்சியாதீதாதீதம்,* *லட்சியாதீதாதீதம் ஆகிய சுத்தசன்மார்க்கப் பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் இதனது உண்மைகள் இனிவரும் சுத்தசன்மார்க்க காலத்தில் திருவருளால் வெளிப்படும்* 

     

*சமய மத மார்க்கங்கள் எல்லாம் சுத்தசன்மார்க்கத்திற்கு  கீழ்படிகள்*     

            


 *சாத்திய நிலை!* 

 

*சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கைகூடும்.* 

 *என்றும் சாகாத நிலையைப் பெற்று எல்லாவற்றையும் செய்யவல்ல சர்வ சித்தி வல்லபத்தையும் பெறக்கூடும்* 


 *இப்பொழுது நீங்கள் பிடித்துள்ள மற்றையச் சமய மத மார்க்கங்களெல்லாம் மேலான சுத்தசன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்படிகளாதலால் ,* *அவற்றில் ஐக்கியம் என்பதே இல்லை (ஒருமை என்பதே இல்லை);* 


 *தாயுமானவர் முதலானவர்கூட சுத்தசன்மார்க்கிகள் அல்லர்;* 

 *மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு கூறலாம் என்கின்றார் வள்ளலார்* 


 *ஏனென்றால் சமய மத சன்மார்க்கத்தில் நித்தியதேகம் கிடையாது . ஏமசித்தியும் தேகசித்தியும் மட்டுமே கைகூடும்,ஞானசித்தி கைகூடாது.* 

 

*ஆகவே, இது சாதகத்திற்குரிய மார்க்கமேயன்றிச் சாத்தியத்திற்குரிய மார்க்கம் அல்ல என்று தெளிவாகச் சொல்லுகின்றார்* 


 *நாளை சுத்தசன்மார்க்கம் வழங்கும்போது இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீண்டும் வருவார்கள் .முன்பு இருந்த அளவைக் காட்டிலும் விசேஷ ஞானத்தோடு சுத்தசன்மார்க்கத்திற்கு உரியவர்களாய் வருவார்கள்.* 

 

*அப்பொழுது சாத்தியர்களாய் இறைவனுடன் இரண்டறக் கலப்பார்கள*   *என்கின்றார் , வள்ளற் பெருமான் ,*


*சமய மத சன்மார்க்கங்களின் அனுபவநிலைகள் யாவும், சுத்தசன்மார்க்கத்தின் அனுபவ நிலைகளுக்கு  கீழ்படிகளே ஆகும்,* 

 *அவற்றில் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மை நிலை அறியாமையால் அவற்றில்  ஐக்கியம் என்பது இல்லாமல் போயிற்று.*


*சமய மதங்களில் தத்துவக் கடவுள்களையே  வழிப்பட்டு பின்பற்றி வாழ்ந்து வருவதால் உண்மை அறிவு விளக்கம் தோன்றாமல் மறைக்கப்பட்டு விட்டது* 


*வள்ளலார் பாடல்!*


தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்

தத்துவா தீதமேல் நிலையில்


சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்

சிவநிலை தெரிந்திடச் சென்றேம்


ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்

ஒருங்குறக் கரைந்துபோ யினம் என்று


அத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.!


என்றும் மேலும்...


தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்


சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா


சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே


ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ்வருளே.! 


என்னும் பாடல் வரிகள் வழியாகச் சொல்கின்றார்


 *தத்துவம் கடந்த இயற்கை உண்மைக் கடவுளைக் கண்டு வெளிப்படுத்தியது  சுத்தசன்மார்க்கம் ஒன்றிற்கே சாத்தியமாகும்* 


 *ஆகலில் சமய மதங்களை முறிறிலும் கைவிட்டு, சுத்தசன்மார்க்க நெறி ஒன்றையே கடைபிடித்து அதில்கூறியுள்ளவாறு ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்து வாழ்ந்து நித்தியதேக அனுபவத்தைப் பெறுவதே சுத்தசன்மார்க்க கொள்கையாகும்* 


*என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்றே வள்ளலார் தெளிவுபட சொல்லி உள்ளார்*


*சுத்த சன்மார்க்க ஒன்றே சாதி சமயம்,மதங்கள் அற்ற சமுதாயத்தை உருவாக்கும் வல்லமை பெற்றதாகும்*


*வள்ளலார் பாடல்ல்!*


ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே

ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்


பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்

பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்


அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி

அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே


இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி

என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.!


தொடரும்...


அன்புடன் ஆன்மநேயன்

முனைவர் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

1 கருத்துகள்:

4 செப்டம்பர், 2023 அன்று 9:10 PM க்கு, Blogger World News கூறியது…

வள்ளலார் பாடல்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு