வியாழன், 13 ஜூலை, 2023

மாநாட்டு வாழ்த்து மடல் !

 *அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி பக்தி நெறி மாநாட்டு வாழ்த்து மடல்!*


*ஆன்மநேய அன்புடையீர் வந்தனம்..*


*மலேசியா நாட்டில் 09-09-2023 முதல் 10-09-2023 வரை இரண்டு நாட்கள், திருஅருட்பிரகாச வள்ளலார் வருவிக்க உற்ற 200 வது ஆண்டை முன்னிட்டு முதலாவது உலக அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி பக்திநெறி மாநாடு, "மலாயா பல்கலைக்கழக துங்கு வேந்தர் மண்டபத்தில்" மிகவும் சீரும் சிறப்புடனும் நடை பெற உள்ளது* 


*இந்த மாபெரும் மாநாடு சிறப்புடன் நடைபெறுவதற்காக ஒரு வருட காலமாக இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து வருபவர் மாநாட்டுத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அருள்திரு இந்துபாபா அவர்களுக்கும்,அவருக்கு உற்ற துணையாக எல்லா வகையிலும் பெரிய அளவில் பொறுப்பு ஏற்று மகிழ்ச்சியோடு கடினமாக உழைத்து வருபவர்,உலக மாநாட்டு ஏற்பாட்டுக் குழு செயலாளர், அன்பு சகோதரி அருள்திரு திருமதி ,வனிதா திருமலை அவர்களையும்,மற்றும் மாநாட்டுக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் நெஞ்சார்ந்த உளமார்ந்த அக மகிழ்ச்சியுடன் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்*


*குறிப்பு..இந்து பாபா அவர்கள் திருஅருட்பிரகாச வள்ளலார் கொள்கையில் மிகுந்த அளவற்ற ஈடுபாடு கொண்டவர், 2008 ஆம் ஆண்டு தொடங்கி 2023 வரை தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகளும் ஆண்டு விழாக்களும், ஜீவகாருண்ய தொண்டும் இடைவிடாது மிகச் சிறப்புடன் பணியாற்றி செய்து நடத்தி வருகிறார்கள்* 


*மேலும் "அருட்பெருஞ்ஜோதி குழந்தைகள் கருணை இல்லம்" என்ற பெயரில் ஆதரவு அற்ற ஏழை குழந்தைகளை தங்கள் பெற்ற குழந்தைகள் போல் பாவித்து  பாதுகாத்து படிக்கவைத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியும் மற்றும்  திருமணம் காலங்களில் திருமணம் செய்து வைத்தும்,அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் வகையில் "புத்தோங்,ஈப்போ பேராக் மலேசியா" என்னும் இடத்தில் கருணை இல்லத்தை அருள்திரு இந்து பாபா அவர்கள் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள்,அவர்களுக்கு உற்ற துணையாக அருள்திருமதி வனிதா திருமலை அவர்கள் பொருளாலும் உழைப்பாலும் தொண்டு செய்து வருகிறார்கள்*


*அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை !*


*மலேசிய நாட்டில்,"பெக்கான் கர்ணி(சிம்பாங் தீகா) சித்தியவான் பேராக்",என்னும் இடத்தில் பல் கோடி செலவில் மிகவும் அழகிய தோற்றத்தில் பிரமாண்டமான "அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி சபை" தோற்றுவித்தள்ளார்கள்*


*14-12-2019 முதல் 15-12-2019 ஆகிய இருநாட்களில் சபை நன்நீராட்டு விழாவும் சன்மார்க்க சான்றோர்களின் சொற்பொழிவும் மற்றும் திருஅருட்பா இசை நிகழ்ச்சி,நாடகம் நாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் ஜீவகாருண்ய தொண்டும் மிகச் சிறப்பாக செய்து சபை திறப்பு விழா  நடைபெற்றது, அந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் *ஈரோடு கதிர்வேல் ஆகிய அடியேனும்  கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்றியது மகிழ்ச்சியான தருணமாகும்*


*உலக நாடுகள் அனைத்தும் பாராட்டி போற்றும் அளவிற்கு *அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி பக்திநெறி மாநாடு* *வெற்றிபெற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்புரிவார். மாநாடு சிறப்புடன் நடைபெற வாழ்த்தி வணங்குகின்றோம்*


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு