சனி, 8 ஜூலை, 2023

வள்ளலார் அகவல்!

 *வள்ளலார் அகவல்!*


*சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில்  உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி!* 


*இதற்குமேல் வருங்காலத்திலாவது பொய்யான ஜாதி சமயம் மதம் என்ற வெறி பிடித்த *பைத்தியக் காரர்கள் கொஞ்சமாவது *திருந்துவார்களா ? திருந்தியே ஆக வேண்டும், இது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சம்மதம்* 



 *மதுக் கடைகளில் தண்ணி அடிக்கும் போது ஜாதி பார்ப்பதில்லை !*


*வாய் பேசாத அப்பாவித்தனமான பாபபட்ட உயிர்களை கொன்று உண்பதில் சாதி பார்ப்பதில்லை !*

 *விலைமாதர்களிடம் தொடர்பு கொள்ளும் போது ஜாதி பார்ப்பதில்லை! மாற்றான் மனைவியை அடையும்போது சாதி பார்ப்பதில்லை !,கன்னிப்பெண்களைக் கற்பழிக்கும் போது சாதி பார்ப்பதில்லை!* 


*காதலிப்பதில் சாதி பார்ப்பதில்லை!*



 *ரத்தம் தேவைப்படும்போது ஜாதி பார்ப்பதில்லை* 


*மருத்துவத் துறையில் சாதி பார்ப்பதில்லை!* 


*சினிமாத் துறையில் சாதி பார்ப்பதில்லை!*


*உணவுப் பொருள்களில் சாதி பார்ப்பதில்லை !* 


*உணவுப்பொருள் கொடுப்பதில் வாங்குவதில் சாதி பார்ப்பதில்லை ,!*



 *பணம் தங்கம் வெள்ளி வைரம் போன்ற பொருள்களில்  ஜாதி பார்ப்பதில்லை!* 


*மண்ணாசை பெண்ணாசை பொன் ஆசை யில் சாதி பார்ப்பதில்லை!*


*வேறுபட்ட கடவுள் கொள்கையில் மட்டும் பொய்யான ஆச்சார சங்கற்ப விகற்பங்களில் மட்டும் சாதி சமயம் மதங்களில் வேறுபட்ட பேதம் பார்ப்பது ஏன்?மேலும் பொய்யான வேதம்,ஆகமம்,புராணம் இதிகாசம்,சாத்திரம்,வருணம் ஆசிரமம் போன்றவற்றில் மட்டும் சாதி வேறுபாடு பார்ப்பது ஏன்!*


*ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உண்மை அறிந்து தெரிந்து புரிந்து உணர்ந்தால் சாதி சமயம் மதம் என்ற பொய்யான, கொடூரமான பைத்தியக்காரத் தனமான வேறுபாடுகள் ஒழிந்துவிடும்*

 *இனிமேலாவது உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் போலியான, பொய்யான வாழ்க்கை வாழாமல் இந்த உலகத்தின் தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவோம் எல்லா உயிர்களையும் ஒன்றுபோல் நேசிப்போம். ஜாதி சமயம் மதம் என்ற பெயரால் செல்லரித்துக் கொண்டிருக்கும் இந்தக் *கரையான்கள் விரைவாக அழிந்துவிடும்,அழித்து விடும் காலம் நெருங்கி கொண்டு இருக்கின்றது!* 


*இனி வருங்கால தலைமுறையினர்களின் தெளிவான அறிவால்,தெளிவான சிந்தனையால், ஜீவகாருண்ய ஒழுக்கத்தால்,பொய்யான சாதி சமயம் மதங்கள் யாவும் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து மறைந்து விடு்ம்* 


*வள்ளலாரின் உண்மைக் கொள்கையான சமரச சுத்த சன்மார்க்க சத்திய கொள்கை ஒன்றே,,பொய்யான சாதி சமயம் மதங்களை இருக்கும் இடம் தெரியாமல் ஒழிக்கும் அழிக்கும் வல்லமை உடையதாகும்*


*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!* 


*எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் பல் வேறுபட்ட வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், சாத்திரம் போன்வற்றின் பல்வகை வேறுபட்ட மூட நம்பிக்கைகளின் கடவுள் கொள்கையே காரண காரியமாகும்!*


*மேலே கண்ட உண்மையை அறிந்து,தெரிந்து உணர்ந்து வாழ்ந்தால் மக்களைத் தொற்றி கொண்டு இருக்கும் சாதிவெறி, சமயவெறி, மதவெறி இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடும்*


*மக்கள் ஏற்றத் தாழ்வு அற்ற ஒத்தாரும் உயர்ந்தாரும்,தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்தும் காலம் வந்தே தீரும்,*


*வள்ளலார் பாடல்!*


ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை

நாடாதீர் *பொய்உலகை நம்பாதீர்* - 


வாடாதீர்

*சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்து* இனி இங்கு

என் மார்க்கமும் *ஒன்றாமே !*


*பொய்யை ஒழித்து புறப்பட்டேன் மன்றில் ஆடும் ஐயரைக் கண்டேன்* என்கிறார் வள்ளலார்...


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு