ஞாயிறு, 28 மே, 2023

வடலூர் வந்து நல்ல வரம் பெற்றீர்கள்!

 *வடலூர் வந்தீர்கள் நல்ல வரம் பெற்றீர்கள் !*  


*அருட்பெருஞ்ஜோதி!*

*அருட்பெருஞ்ஜோதி!*

*தனிப்பெருங்கருணை!*

*அருட்பெருஞ்ஜோதி!*


*உலக வரலாற்றில் முதன் முதலாக ஏழைகளின் பசிப்பிணியைப் போக்குவதற்காக 23-05-1867 ஆம் ஆண்டு அதாவது பிரபவ வருடம் வைகாசி மாதம் 11 ஆம் நாளில் கடலூர் மாவட்டம் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச் சாலை என்ற பெயரில், உலக மக்களின் நலன் கருதி வள்ளல்பெருமான் அவர்கள்  தருமச்சாலை நிறுவினார்கள்.*


*24-05-2023 அன்று மாதப் பூசம், 25-05-2023 வியாழன் அன்று 157 ஆவது தருமச்சாலை துவங்கிய நாள் ,மூன்றுநாட்கள் திருஅருட்பா இசை நிகழ்ச்சிகள் முன்னிட்டும்.*


 *வடலூரில் எங்கள் திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் குழுக்களின் முக்கிய  நிர்வாகிகள்*


*நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஜீவகாருண்ய தயவாளார் உயர்திரு,கந்தசாமி அவர்களின் தலைமையில் திருவாளர் இராமலிங்கம் அவர்கள்,திருவாளர் தனபால் அவர்கள் திருவாளர் வெங்கடாசலம் அவர்கள்,*


*ஈரோடு மாவட்டம் ஜீவகாருண்ய தயவாளர் உயர்திரு போகர் இராசமாணிக்கம் அவர்களின் குழுக்கள்.*


*சேலம் மாவட்டம் ஜீவகாருண்ய தயவாளர் உயர்திரு, சுகுமார் அவர்களின் குழுக்கள்  ஆகிய அனைவரின் ஒத்துழைப்புடன் மற்றும் சன்மார்க்க அன்பர்களின் ஒத்துழைப்புடன்.*


*மூன்று நாட்கள் தொடர்ந்து உயர்தர சிறப்பு அன்னதானம்,மேலும் திருஅருட்பா இசைக் கச்சேரிக்கு வருகைத் தந்த அன்பர்கள் அனைவருக்கும் வெய்யிலுக்கு சுவையான நீரமோர்.ஜிக்கிரிதந்தா குளிர்பானம்,இஞ்சி டீ, காப்பி மற்றும் தயிர்சாதம்,*

*தக்காளிசாதம்,பருப்புசாதம்வழங்கப்பட்டது.*


*வள்ளலார் பாடல்!*


காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே

களிப்பே என் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே


மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்

மேவுகின்ற பெரும்பயனாம் விளைவை எலாம் தருமச்


சாலையிலே ஒருபகலில் தந்த தனிப் பதியே

சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே


மாலையிலே சிறந்த மொழி மாலைஅணிந் தாடும்

மாநடத்தென் அரசே என் மாலையும் ஏற் 

யதநடறருளே.! 


*மேலே கண்ட பாடலில் தருமச்சாலையின் உண்மையை, அதனால் கிடைக்கும் அருளின் (நன்மையை) தன்மையைப் பற்றி தெளிவான விளக்கத்தை எளிய முறையில் வள்ளல்பெருமான் அவர்கள் வழங்கி உள்ளார்*


*அதுசமயம் வடலூரில் நமது திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாகவும் சன்மார்க்க அன்பர்களின் கூட்டு முயற்சியாலும்,24-05-2023  மாதப்பூசத்தன்றும் 25-05-2023 தருமச்சாலை துவங்கிய நாளை முன்னிட்டும்,திருஅருட்பா இசைவிழாவை முன்னிட்டும் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும்,*


*நமது திருஅருட்பா ஆராய்ச்சி மைய இல்லத்தில் சன்மார்க்க ஆன்மீக சத்விசாரம் மற்றும் சிறப்பு சொற்பொழிவும் சிறப்பாக நடைபெற்றது.*


*முக்கிய சிறப்பு விருந்தினர்!*


*மலேசிய நாட்டில் அருட் பேரொளி சபை நிறுவனரும், ஆதரவு அற்ற குழந்தைகளின் காப்பாளரும், ஒவ்வொரு வருடமும் சன்மார்க்க சிறப்பு மாநாடு நடத்திக் கொண்டு வருகின்றவரும்,வருகின்ற செப்டம்பர் மாதம் 09-09-2023 to 10-09-2023 வரை   வள்ளலார் 200 வது ஆண்டு திருஅருட்பிரகாச வள்ளலார் வருவிக்க உற்ற நாளை முன்னிட்டு இரண்டுநாள் பிரமாண்ட மாநாடு மலேசியாவில் நடத்துகின்ற ஆன்மநேய அன்புள்ளம் கொண்ட ஜீவகாருண்ய திலகம் "அருள்திரு இந்துபாபா அவர்கள்" நமது இல்லத்தில் மூன்று நாட்கள் தங்கி இருந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது மிகவும் சிறப்புடையதாகும்,அவர்களுக்கு நமது மையத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொள்கிறோம்.*


*அனைவரும்  ஆன்மநேய உரிமையுடன் அன்புடன், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆன்மலாபம் பெற்று சென்றார்கள் என்பதை அக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்* 

 *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்  அருள் பெறும் வரமான நல்ல வரத்தை பெற்றுக் கொண்டு செல்வதற்கு வாருங்கள் வடலூர் பெருவெளிக்கே வந்தால் பெறலாம் நல்ல வரம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு