சனி, 30 அக்டோபர், 2021

அழிஉடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர்!

 *அழியுடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர்*! 


வள்ளலார் பாடல்!


எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்

எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று


கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்

கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்


ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்

*அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்*


உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.! 


*மேலே கண்ட பாடல் ரொம்பவும் முக்கியமான பாடல் எளியதமிழில் பதிவு செய்துள்ளார் அதிலே தெளிவான விளக்கம் உள்ளன அப்பாடலை ஊன்றி கவனித்து படித்து தெரிந்துகொண்டு மனிதன் வாழ்க்கையில் கடைபிடித்தால்  கடை தேறலாம்*


*உலகம் தோன்றி  மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே இன்றுவரை உலகத்தைப் படைத்த கடவுளை எவரும் அகக்கண்களிலும் காணவில்லை புறக்கண்களிலும் காணவில்லை*.

அவருடைய உண்மையான நாம ரூப சொரூபம் என்னவென்றும் எவரும் தெரிந்துகொள்ளவில்லை*.


*வள்ளலார் ஒருவர்தான் கடவுளைக் கண்டேன் களித்தேன் களிப்புற்றேன் கலந்துகொண்டேன் என்கிறார்* 


*சமய மதவாதிகள்*


*கடவுளைப்பற்றி சொல்லவந்த அருளாளர்கள் யாவரும் சமய மதவாதிகளாகவே ஆதிக்கம் செலுத்தி வந்து உள்ளார்கள். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சாதி சமய மதங்களின் பொய்யான வகை வகையான சாத்திரங்கள் தோத்திரங்கள் சம்பிரதாயங்கள் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் போன்ற உலகாச்சார விஷயங்களை  எடுத்து எடுத்து உரைத்து உரைத்து ஒவ்வொரு மதங்களுக்கும் ஒவ்வொரு விதமான கடவுள்களை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். மேலும் அக் கடவுள்களுக்குண்டான  சாத்திரங்கள் மற்றும் சடங்குகளைப் படைத்துள்ளார்கள்*


மேலும் *கடவுள்களைப் பிரித்ததுபோல் கடவுள் இருக்கும் இடங்களையும் பிரித்து வைத்துள்ளார்கள் ஆலயங்கள் கோயில்கள் சர்ச்சுக்கள் மசூதிகள் போன்ற பலப்பல முக்கியமான நம்பகத்தன்மையான இடங்களைப் தோற்றுவித்து அங்கு மட்டுமே கடவுள் இருப்பதாக சொல்லி மக்களை நம்ப வைத்துவிட்டார்கள் மேலும் அக்கடவுளின் பெயரில்  நம்பிக்கையை உண்டாக்கி சாதி சமயம் மதங்களின் பெயரால் மக்களையும் பிரித்து ஊர் ஊராக  தெருத் தெருவாக அலைய வைத்து விட்டார்கள்*. 


*இந்த உண்மை அறிந்தவர் எவரோ அவரே சுத்த சன்மார்க்கி*


*இந்த உண்மையை அறிவு தெளிவுடன் தெரிந்து அறிந்து புரிந்து அந்த சாதி சமய மதங்களின் சாத்திரக் குப்பைக்குழியில் இருந்து தப்பித்து மேலே ஏறி வெளியே வந்து மேலும் அச்சிக்கலில் இருந்து விடுபட தெரிந்தவர் எவரோ அவரே சுத்த சன்மார்க்கத்தின் தரத்திற்கு ஒத்தவராகும்* *அவரே உண்மை அன்பால் கடவுளைத் தொடர்புகொள்ள தகுதிபெற்றவராகும்*


*வள்ளலார் பாடல்*


சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த

சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே


ஆதியில் என் உளத்திருந்தே அறிவித்த படியே

அன்பால் இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்


ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்

உற்றேன் சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்


சோதிநடத் தரசை என்றன் உயிர்க்குயிராம் பதியைச்

சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.! 


மேலே கண்ட பாடலில் உண்மை நிலை உணர்ந்து மக்களுக்கு உண்மையைத் உணர்த்துகின்றேன் என்கிறார் வள்ளலார்.


*நானும் உங்களைப்போன்றுதான் இருந்தேன் இப்போது என்னை ஆண்டவர் ஏறாநிலைமிசை ஏற்றியுள்ளார்*.

ஏதனால் என்றால் ? எல்லாவற்றையும் விட்டுவிட்டதினால் வந்த லாபமாகும்.

நீங்களும் என்னைப்போன்று விட்டுவிட்டீர்களானால் பெறவேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம் ஆகையினால் மேலே ஏறி வாருங்கள்  என்கின்றார்


*இந்த உலக மக்களுக்கு தெய்வம் ஒன்றுதான் என்று புரியவைக்க தெரியாமல் பல தெய்வங்கள் உண்டு என்பதை குருடன் யானையைத் தொட்டுபார்த்து சொன்ன கதைப்போல் உளரிக் கொட்டி உள்ளார்கள் முன்பு உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டு கொண்டவர்கள் என்கிறார் வள்ளலார்*.


*உலகில் வாழும் மக்கள் மீது எந்த குற்றமும் இல்லை அவர்கள் எல்லாம் ஒன்றும் தெரியாத அறியாமையில் வாழும் அப்பாவிகள். மக்களை திசை திருப்பியவர்கள் உண்மைக்கு புறம்பான மோசமான கற்பனை கதைகளைச் சொல்லி வழிகாட்டியவர்கள். அவர்கள்தான் சாதி சமய மதங்களை தோற்றுவித்த அருளாளர்கள் என்னும் ஞானிகளாகும்*


*உண்மை தெரியாதவர்கள்*


*மனித தேகம் எடுத்தவர்கள் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத்  தொடர்புகொண்டு அருள் பெற்று  எக்காலத்தும்  அழியாமல் வாழும் வாழ்க்கையைப் பெறவேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி சட்டமாகும்.*


*ஆனால் முன்பு வழிகாட்டியவர்கள் பிறப்பு இறப்பு என்பது இயற்கை என்றும் இறந்தால் பாவ புண்ணியத்திற்கு தகுந்தாற்போல் ஆன்மாக்கள் சொர்க்கம் நரகம் கைலாயம் வைகுண்டம் பரலோகம் சத்தியலோகம் போன்ற இடங்களுக்கு சென்றுவிடும் என்றும் உடம்பு அழிந்துவிடும் ஆன்மா அழியாது என்றும் சொல்லிவைத்து அதற்குத் தகுந்தாற்போல் பொய்யான கதைகளையும் எழுதிவைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்*


*கலையுரைத்த கற்பனைக் கதைகளை  வள்ளலார் ஏற்றுக்கொள்ளவில்லை*.


*மக்களுக்கு உண்மையான கடவுளைக்காட்டி உண்மையைத் தெளிவாக எடுத்து சொல்லி புரியவைத்து சாகாக்கல்வி என்னும் புதிய கல்வி முறையை கற்றுகொடுத்து மரணத்தை வெல்லும் வழியைக் காட்டவேண்டியே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவர்தான் வள்ளலார் என்பதை நாம் தெரிந்து கொள்ள. வேண்டும்.*


*உண்மை சொல்ல வந்தேன் என்று உண்மைசொல்ல புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை என மிகவும் வேதனைப்படுகிறார்.* 


*ஏன் என்றால் சன்மார்க்கத்தில் உள்ளவர்களே இன்னும் சாதி சமய மதங்களை விடமுடியாமல் தவித்துக்கண்டு உள்ளார்கள்.அந்த அளவு அவர்கள் ஆன்மாவை அறியாமை என்னும் திரைகள்  மறைத்துக்கொண்டுள்ளது. திரைகள் விலகினால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியும். தொடர்பு கொண்டு அருள் பெற்றால் மட்டுமே அழியுடம்பை அழியாமல் ஆக்கும் வகையைத் தெரிந்து கொள்ள முடியும்.*


*சாதி சமய மதக் கொள்கைகளை விடாமல் அவரவர்கள் விருப்பம்போல் திருஅருட்பா பாராயணம் செய்தாலும் வடலூர் சென்று ஜோதிதரிசனம் கண்டாலும் புறவழிபாடு செய்தாலும் மற்றும் எதைச்செய்தாலும் மேலும் மற்றவர்கள் பாராட்டவேண்டும் என்பதற்காக  விளம்பரத்திற்காக போட்டிபோட்டுக்கொண்டு  இடைவிடாது ஜீவகாருண்யம் செய்தாலும் மரணத்தை வெல்லுவது கடினம் சிரமம் என்பதை உணர்ந்து தங்களை மாற்றிக் கொண்டால் வெற்றி நிச்சயம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் துணையாக இருந்து காப்பாற்றுவார்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு