ஞாயிறு, 31 மே, 2020

ஐந்தொழில் வல்லபம் !


நாம் வாழும் உலகத்தில் ஐந்து தொழில்கள் செயல்பாட்டில் உள்ளன.

அவைகள்தான் மண்.நீர்.அக்கினி.காற்று ஆகாயம் என்பதாகும்.

ஐந்து தொழிலுக்கும் ஐந்து இலாக்கக்கள்.அவற்றை நிர்வாகம் செய்ய  ஐந்து (மந்திரிகள்) நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

அவர்கள்..பிரம்மா.விஷ்ணு.சங்கரன்.மகேஸ்வரன்.சதாசிவம் என்னும் ஐவர்கள் ஆகும்.

இவைகள்  யாவும் ஐந்து பூதங்களின்  உடம்பின் செயற்கை உபகாரக்கருவிகளின் தத்துவங்களாகும்.

இவற்றைக் கொண்டே வேதவியாசர் மகாபாரதம் என்ற கற்பனை கதையை இயற்றினார் .

ஐந்து பூதங்கள் அடங்கிய உடம்பே.பஞ்ச பாண்டவர்களாகும்.அதாவது தருமன்.பீமன்.அர்ஜூனன். நகுலன.சகாதேவன்.என்பவர்களாகும்.

ஐந்து பூதங்கள் அடங்கிய உடம்பை இயக்க உயிர் வேண்டும்.அந்த உயிரை திரவுபதி என்னும் பெண்ணாக காட்டினார்கள்.

உடம்பை உயிரை இயக்க ஆன்மா வேண்டும் .அந்த ஆன்மாவை கிருஷ்ணர் என்றும் பரமாத்மா என்றும் பெயர் வைத்தார்கள். 

உடம்பையும் உயிரையும் காப்பாற்றுவது எவ்வாறு.அழிக்கப்படுவது எவ்வாறு என்பதை மக்களுக்கு போதிக்க படைத்ததுதான்.வேதவியாசர் எழுதிய மகாபாரதமாகும்..

இதேபோல்தான் வால்மீகி எழுதிய இராமாயணம்..சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் போன்ற நிறைய கற்பனைக் கதைகள் உலகில் படைக்கப்பட்டன.

உடம்பில் உள்ள 96 தத்துவங்களையும்.64 கலைகளையும் .உயிர்.ஆன்மாவையும் அவற்றை இயக்கும்
கற்பனைக் கடவுள்களை வைத்து.பலர் பலவிதமாகப் பின்னப்பட்ட கற்பனைக் கதைகள்தான் உலகம் முழுவதும் நிரம்பி உள்ளன.

இஸ்லாம்.கிருத்துவம் .பவுத்தம் போன்ற வரலாறுகளும் கற்பனைகளே !.

உண்மை உரைக்க வந்த வள்ளலார்!

இவற்றை எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும்பதியாகிய இயற்கை உண்மை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு பூரண அருளைப்பெற்று.உடம்பையும்.உயிரையும் அழிக்காமல் மரணத்தை வென்று.உண்மை அறிந்து வெளிப்படையாக மக்களுக்கு போதித்த ஒரே அருளாளர் வள்ளலார் மட்டுமே.

வள்ளலார் பாடல் ! 



மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார்..

வேதம் ஆகமம்.புராணம் இதிகாசம் சாத்திரம் எல்லாமே பொய்தான் என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !



மேலே கண்ட பாடல்கள் போல் நூற்றுக்கணக்கான பாடல்களில் வெளிச்சம் போட்டுத் தெரிவிக்கின்றார்.

மேலும்...
கற்பனைக் கதைகளை உண்மைபோல் சொல்லி கற்பித்து மக்களை நம்ப வைத்து விட்டார்கள்..மேலும் பேருபதேசத்தில் தெளிவாக விளக்கி உள்ளார்.

இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.

 ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். 

அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு,

 இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். 

*தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?* என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். 

ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். ( மறைத்த வல்லவன் வேதவியாசர்)

அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளையடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். 

அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது. மிகவும் அவசியம்.

இப்பொழுது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பொய்யான சாதி சமய மதங்களால் தோற்றுவித்த ஐந்தொழில் கர்த்தாக்களை அகற்றி.அருள் பெற்று ஒளி தேகம் அடைந்து.கடவுள் நிலைஅறிந்து அம்மயமாகியுள்ள வள்ளல்பெருமான் ஆன்மாவில் அமர்ந்து ஐந்தொழில் வல்லபத்தை கொடுத்து எல்லா உலகங்களையும் இயக்கிக் கொண்டுள்ளார்.

வள்ளலார் பாடல் ! 

ஐந்தொழில் செய்யும் 
ஆற்றலான அருள் வல்லபத்தை வள்ளல்பெருமானிடம் வழங்கி.இந்த செய்தியை என்றும் அழியாத.அழிக்கமுடியாத தமிழ்மொழியில் தான் உலக மக்களுக்கு தெரிவிக்கின்றார்.

ஏன் என்றால் ? தமிழ்மொழி இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட செம்மொழியாகும். சாகாக்கல்வியைத் தமிழ்மொழி தெரிந்தால் மட்டுமே மரணத்தை வெல்லும் உளவைத் தெரிந்து கொள்ளமுடியும்.   

வள்ளலார் கொள்கையைப் பின்பற்றும் சுத்த சன்மார்க்கிகள் உண்மை உணர்ந்து அறிந்து தெரிந்து எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே துணையாகப் பற்றி  வாழ்க்கை அமைத்துக் கொண்டால் அருள் பெரும் வாய்ப்புக்கள் அதிகம்.மரணத்தை வெல்லும் வாய்ப்புக்கள் அதிகம்.

எனவே இதுவரை இருந்த்தது போல் இனியும் வீண்காலம் கழிக்காமல்.ஐந்தொழில் வல்லபம் பெற்ற.வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க உண்மை ஒழுக்கங்களை கடைபிடித்து மேலே ஏறுவோம்.

எனவே பொய்யான கடவுள்களைப் பின்பற்றாமல் உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளவும்.

எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து! 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு