திங்கள், 4 பிப்ரவரி, 2019

முட்டாள்கள் ராஜ்யத்தை அகற்றுவோம் !

முட்டாள்கள் ராஜ்யத்தை அகற்றுவோம் !

உலகம் முழுவதும் முட்டாள்கள் ராஜ்யமாக மாறிவிட்டது.

காரணம்....
முட்டாள்கள் முட்டாள்களை தேர்வு செய்கிறார்கள்.

அரசியலிலும் பொய்யானவர்கள் ஆட்சி செய்கிறார்கள்..ஆன்மீகத்திலும் பொய்யான கடவுள்கள் ஆட்சி செய்வதாக படைத்துள்ளார்கள்..

அரசியலிலும் தப்பானவர்கள்.குற்றவாளிகள்.
திருடர்கள்.நயவஞ்சகர்கள்.சுயநலவாதிகள்.அன்பு.தயவு.கருணை இல்லாதவர்கள்.ஆட்சியில் அமர்ந்து கொண்டு .ஆடம்பரமான  வாழ்க்கை வாழ்ந்து தானும் அழிந்து மற்றவர்களையும் அழித்துக் கொண்டு உள்ளார்கள்.

பொய்யான கடவுள்கள் இருக்கும் வரை பொய்யான ஆட்சியாளர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.

முதலில் பொய்யான ஆன்மீகவாதிகள் பொய்யான கடவுள்களைத் தேர்வு செய்தார்கள்.அந்த பொய்யானக் கடவுள்களால் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா ? என்றால் எக்காலத்திலும் நன்மை செய்யமுடியாது.

பொய்யானக் கடவுள்களுக்கு ஆடம்பரமான கட்டிடங்கள் உயர்ந்த கோபுரங்கள்.ஆடம்பரமான.வைரம்.தங்கம் போன்ற நகைகள் ஆடம்பரமான அபிஷேகம் ஆராதனைகள்.ஆடம்பரமான வழிபாட்டு முறைகளை எல்லாம் வைத்து வழிபாடு நடத்தி வருகிறார்கள்...இதெல்லாம் உண்மையான கடவுள் கேட்பாரா ?

உண்மையான கடவுளாக இருந்தால் இந்த அநாகரியமான செயலை ஏற்றுக் கொள்வாரா ? மக்கள் கொஞ்சம் கூட சிந்திப்பதே இல்லை..அந்த அளவிற்கு மக்களின் அறிவு .அறியாமை.அஞ்ஞானம் என்னும்.மாயா திரைகளால் மறைக்கப்பட்டு விட்டது..

படித்தவன்.படிக்காதவன்.அறிவியல் யாளர்கள்.ஆராய்ச்சி யாளர்கள்..ஆட்சியாளர்கள் அனைவருமே உண்மைஅறியாமல் பொய்யான வழிபாட்டு முறையை பின்பற்றி வருகிறார்கள்...கேட்டால் அவரவர் விருப்பம் என்கிறார்கள்

சமய மத துவேசம் செய்யக்கூடாது என்கிறார்கள்.

உண்மையான கடவுளும் இல்லை. உண்மையான மனிதர்களும் இல்லை.உண்மையான அரசியல் வாதிகளும் இல்லை..

இந்த உலக மக்களை காப்பாற்ற வழியே இல்லையா ?

மக்களையும் ஆட்சியையும. எல்லா உயிர்களையும்.காப்பாற்றத்தான் உண்மையான இறைவன்...  **அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்** என்பவரால் 5-10-1823 ஆம் நாள் வள்ளல் பெருமானை இந்த உலகிற்கு அனுப்பி வைத்துள்ளார்...

இப்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே. வள்ளலார் உடம்பிலே கலந்து கொண்டு அருள் ஆட்சி செய்து கொண்டு உள்ளார்...

இனி மக்கள் பொய்யான பொம்மை விளையாட்டு விளையாட முடியாது..

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல்சமயக் கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்.

கள்ளம் உறும் அக்கலைகள் காட்டிய பல்கதியும் காட்சிகளும் காட்சிதரும் கடவுளரும் எல்லாம்

பிள்ளை விளையாட்டென நன்கு அறிவித்து இங்கு எனையே பிள்ளை எனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே

தள்ளரிய மெய்யடியார் போற்ற மணிமன்றில் தனிநடம் செய் அரசே என் சாற்றும் அணிந்தருளே !

மேலும் சொல்லுகிறார் !

நால்வருணம் ஆசிரம்ம் ஆசாரம் முதலா நவின்ற கலைச் சரிதம் எல்லாம் பிள்ளை விளையாட்டே

மேல்வருணம் தோல்வருணம் கண்டரிவார் இலை நீ விழித்துப்பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே

கால்வருணங் கலையாதே வீணில் அலையாதே காண்பன எல்லாம் எனக்குக் காட்டிய மெய்ப்பொருளே

மால் வருணம் கடந்தவரை மேல்வருணம் தேற்ற வயங்கு நடத்தரசே என்மாலை அணிந்தருளே !

என்றும் வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்..இனி அறிவில்லாத ஆன்மீக வாதிகளின். குழந்தை விளையாட்டுகளை எல்லாம் ஒழித்து விட்டு ஞானம் விளையும் விளையாட்டை ஆரம்பித்து விட்டேன் என்கிறார்...

வள்ளலார் பாடல் !

இருளான மலம் அறுத்து இகம் பரம் கண்டே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ

மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம் வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்

தெருளான சுத்த சன்மார்க்கம் ஒன்றே சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும்

அருளான வீதியில் ஆடச் செய்தீரே அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் நீரே !

மேலே கண்ட  பாடல்களை பொறுமையாக ஊன்றி படித்தால் உண்மை விளங்கும்...

இனி சாதி.சமயம்.மத்த்தை அழித்து.உண்மை மார்க்கமான சுத்த சன்மார்க்கத்தை உலக எங்கும் கொண்டு செல்வது தான் என்னுடைய முதல் பணி என்கிறார் வள்ளலார்...

வள்ளலார் பாடல் !

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி என் உளத்தே

நீதியில் கலந்து நிறைந்த்து நானும் நித்தியன் ஆயினேன் உலகீர்

சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்திச் சுத்த சன்மார்க்க

வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்மினோ விரைந்தே !

என்கிறார் ....

இவற்றை எல்லாம் அழித்து நிறுவ ..ஐந்தொழில் வல்லப்பத்தையும்.இயற்கை உண்மை இறைவன் அருட்பெருஞ்சோதி யிடம் பெற்றுக் கொண்டார் ....

ஆண்டவரே சொல்கிறார்...

அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம் ஆடுக நீ வேண்டியவாறு
ஆடுக !
இவ்வுலகில் என்று ஆணையிடுகிறார்.. அதுமட்டும் அல்ல.. சுதந்தரம் முழுவதும் உனக்கே கொடுக்கின்றேன் என்கின்றார்...

சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது தூய நல் உடம்பினில் புகுந்தோம்

இதந்தரும் உளத்தில் இருந்தனம் இடையே இன்புறக் கலந்தனம் அழியா

பதந்தனில் வாழ்க அருட்பெருஞ்சோதிப் பரிசு பெற்றிடுக பொற்சபையும்

சிதந்தரு சபையும் போற்றுக என்றாய் தெய்வமே வாழ்க நின் சீரே !

இந்த உலகத்தில் பொய்யான சாதி சமய மதங்களும் அழிக்கப்படும்...பொய்யான ஆட்சியாளர்களையும் அகற்றப்படும் காலம் நெருங்கிக் கொண்டே வருகின்றன..

எனவே மக்களை திருவருளால் காப்பாற்றப்படும்..

மக்கள் என்ன செய்ய வேண்டும். ?

இனி காலம் தாழ்த்தாது ஆன்ம லாபம் பெறுவதற்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

வள்ளலார் சொல்லியுள்ள ஜீவகாருண்ய  ஒழுக்க நெறிகளை பின்பற்றி...வாழ்வதற்கு வழிவகை செய்து  கொள்ள வேண்டும்..

உண்மைக் கடவுளான அருட்பெருஞ்சோதியைத் தவிர வேறு கடவுள்கள் இல்லை என்பதை உணர்ந்து ஒளியையே வணங்கி வழிபட வேண்டும்.

மனித தேகம் உயர்ந்த அறிவுள்ள தேகம்.தாழ்ந்த அறிவைப் பின்பற்றுவதால் தான்.துன்பம்.துயரம்.அச்சம் பயம்.மரணம் வந்து அழிந்து கொண்டே உள்ளோம்...

வள்ளலார் உயர்ந்த உண்மை கடவுளைக்  கண்டுபிடித்தார் அவருக்கு அருட்பெருஞ்சோதி என்று பெயர் வைத்து அறிமுகப்படுத்தி உள்ளார்.

அருட்பெருஞ்சோதி ஆண்டவரால் அருள் பெற்று தானும் வாழ்ந்து மரணத்தை வென்று இறைவனோடு கலந்து ஐந்தொழில் வல்லபத்தை பெற்று ஆட்சி செய்து கொண்டு உள்ளார்.

உலகில் உள்ள எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டியது தன்னுடைய கடமையாக...இறைவன் ஆணையாக...ஆன்மநேய உரிமையாக வள்ளலார் ஏற்றுக் கொண்டு உள்ளார்...

வள்ளலார் பாடல் !

எல்லா உலகமும் என் வசம் ஆயின

எல்லா உயிர்களும் என் உயிர் ஆயின

எல்லா ஞானமும் என் ஞானம் ஆயின

எல்லா வித்தையும் என் வித்தை ஆயின

எல்லாப் போகமும் என் போகமும் ஆயின

எல்லா இன்பமும் என் இன்பம் ஆயின

எல்லாம் வல்ல சிற்றம்பத்து என் அப்பர்

எல்லாம் நல்கி என் உள்ளத்துள் உள்ளாரே !

என்னும் பாடல்களிலே தெளிவான உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளார்.

நாம் இதுவரை இருந்த்து போல் இனியும் வீண்காலம் கழிக்காமல் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிட்த்து வாழ்வாங்கு வாழ்வோம்...

வள்ளலார் பாடல் !


என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்தி உள்ளார் வள்ளலார்...

அறிவைக் கொண்டு அறிவைத் தெரிந்து கொள்வதே அறிவுள்ள மனிதனின் செயலாக இருக்க வேண்டும்.

மூட நம்பிக்கைக் கொண்டு பின்பற்றுவதாலோ .விதண்டா வாதம் செய்வதாலோ எந்த பயனும் இல்லை.எந்த லாபமும் இல்லை..

நாம் பெற வேண்டுவது ஆன்ம லாபம் மட்டுமே ! ஆன்மலாபம் பெறாமல் எந்த லாபமும் பெற முடியாது..

நல்லதை அறிவோம் நல்லாட்சியை அமைப்போம்.நலமுடன் வாழ்வொம்.!

முட்டாள்கள் ஆட்சியை அகற்றுவோம் !

விரிக்கில் பெருகிக் கொண்டே இருக்கும....தொடரும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு