வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

சாதி சமய மதங்களை சாடுவது ஏன் ?

சாதி சமய மதங்களை சாடுவது ஏன் ?

சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உரைத்த அருட்பெருஞ்ஜோதி !

ஒரே கடவுள் கொள்கையை பல கடவுள்களாக  மாற்றியது !

உண்மைக் கடவுளை வெளிப்படையாக காட்டாமல் மண்ணைப்பொட்டு மறைத்து விட்டது !

பொய்யான பல கடவுள்களை உருவாக்கியது !

இந்து மதம் மட்டும் அல்ல. எல்லா மதங்களுமே பொய்தான் சொல்லி உள்ளன !

 எல்லா மதங்களுமே உலக ஒற்றுமையை குலைத்தது !

மனித நேயத்தை சீர் குலைத்தது !

வேற்றுமையை உருவாக்கி உலகத்தை போர்களமாக மாற்றியது !

எல்லைகளை வகுத்து பிரிவினையை உருவாக்கி.எல்லை பாதுகாப்பு என்ற பெயரில் விரோத்த்தை உருவாக்கியது !

உயிர்களை கொலை செய்ய வழிவகை செய்து கொடுத்தது
 !
மனிதர்களுக்காகவே மற்ற உயிர்கள் படைக்கப்பட்டன என்று உயிர்களை கொன்று திண்பதற்கு அதிகாரமும்.ஆதரவும் அளித்தது.!

ஜீவ காருண்யமும்.உயிர் இரக்கமும் இல்லாமல் மனிதனை  கடின மனம் உள்ளவனாக மாற்றியது.!

 சமத்துவம் சமாதானம்.ஒற்றுமை சகோதர உரிமை யாவும் இல்லாமல் வேரோடு சாய்த்தது !

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேற்றுமையை உண்டாக்கியது !

மனிதனை மனிதனே பிரித்து வைத்து வேற்றுமையை உண்டாக்கியது !

சாதியால்.சமயத்தால்.மதத்தால் மனிதனை மனிதன் பிரித்து வைத்து தீண்டாமையை உண்டாக்கியது.

உயர்ந்த சாதி.தாழ்ந்த சாதி  என்ற வேற்றுமையை உண்டாக்கியது.!

பொருளாதார ஏற்றதாழ்வை உண்டாக்கியது !

குலக் கல்வியை கொண்டு வந்த்து !

சாகும் கல்வியை போதித்தது !

சாகாக் கல்வியை மறைத்தது !

ஆன்மீக அறிவை மழுங்க வைத்தது !

அருள் அறிவை குழிதோண்டி புதைத்துவிட்டது !

தெய்வங்கள் பெயரால் உயிர்களை பலி கொடுக்க வைத்தது !

ஆணுக்கு ஒரு நீதி.பெண்ணுக்கு ஒரு நீதி என்ற பேத்த்தை உண்டாக்கியது !

பொய்யான தியானம்.தவம்.யோகம்.யாகம் போன்றவைகளை  சொல்லி மனிதனை படு குழியில் தள்ளியது !

கணவன் இறந்தால் மனைவியை தாலி வாங்க வைத்தது !

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வைத்தது !

கணவன் இறந்தால் மனைவியை உயிரோடு எரிப்பது !

பெண்களின் கற்பை சூரையாடுவது !

ஆண்களுக்கு மட்டும் யோகம் முதலிய சாதனங்களை பயிற்றுவித்து.பெண்களை புறம் தள்ளுவது !

கடவுளுக்கு மனைவி.குழந்தைகள் இருப்பதாக சொல்லி .கடவுளை அசிங்கப்பட செய்ய வைத்தது !

கடவுளுக்கு மனிதன் திருமணம் செய்வது ! முதல் இரவிற்கு கடவுளை அனுப்புவது !

சட்டங்களை சுய நலத்திற்காக .சாதி்சமய மதங்களுக்காக பொது நலம் இல்லாமல் இயற்றியது !

வேதம் ஆகம்ம் புராணம்.இதிகாசம்.சாத்திரம் என்ற பொய்யான கலைகளை மக்கள் மனங்களில் தினித்தது !

தெய்வங்கள் பெயரால் சில சமுதாயங்கள் கொள்ளை அடித்து வாழ்வதற்கு வழி வகுத்து தந்த்து !

 எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்று சொல்லி மனிதனின் உயர்ந்த அறிவை தெளிவு அடையாமல் மழுங்க வைத்தது.!

கடவுளின் பெயரால் இயற்கை வளங்களை அழித்தது.!

கடவுளின்் பெயரால் பொது சொத்துக்களை இயற்கை வளங்களை கையகப்படுத்தியது.

 பேசும் தெய்வங்களை பசி.பட்டினி.வறுமையில் தள்ளிவிட்டு.பேசாத தெய்வங்களுக்கு உணவு படைத்து  வழிபாடு செய்வது !

 சொர்க்கம்.நரகம். கைலாயம்.வைகுண்டம்.சத்தியலோகம்.பிரம்மலோகம் போன்ற லோகங்கள் இருப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றம் அடைய செய்ய வைத்தது !

தன்னுள் இருந்து இயங்கும்  கடவுளை அறிந்து கொள்ளாமல்.ஆலயங்களில் கடவுள் இருப்பதாக சொல்லி மக்களை வெளியே அலையவிட்டது !

அருள் அறிவை பெற வேண்டிய மனிதனை பொருள் அறிவுக்குத் தள்ளியது !

மரணம் அடையாமல் வாழும் வழியைத் தெரிந்து கொள்ளாமல்.மனிதனை மரணம் அடைய வழிவகையை சொல்லிக் கொடுத்தது !

மரணம் என்பதை இயற்கை அல்ல .செயற்கை என்பதை அறியாமல் இருந்த்து..!

ஆறிலும்  சாவு.நூறிலும் சாவு என்ற பொய்யான தகவலை மக்கள் மனதில் பதிய வைத்தது !

அருள் தரும் கடவுளைக் காட்டாமல் பொய்யான கற்பனைக் கடவுள்களைக் காட்டி மக்களை நம்ப வைத்தத்து !

சித்தி பெறும் மனிதனை.முத்தியோடு நிறுத்தியது !

உயர்ந்த கடவுளின் அருள் அறிவை பெற வேண்டிய மனிதனை தாழ்ந்த மருள் அறிவுக்கு தள்ளியது !

இப்படி பலவகையான பொய்களைச் சொல்லி மனித இனத்தை படுகுழியில் தள்ளியதால் .சாதி.சமய.மதங்களை வள்ளலார் சாடுகின்றார்...

அந்த உண்மையை நான் வெளியிடுகிறேன்.அவ்வளவுதான்.

இன்று கடவுளின் பெயரால் ஏற்படுத்திய சட்ட திட்டங்கள் தான் மனிதனை அழித்துக் கொண்டு உள்ளன !

யார் மீதும் விருப்பமமோ.வெறுப்போ எனக்கு இல்லை...

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் .அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற பெருங்கருணையுடன் என் பதிவுகள் இருக்கும்....

இந்த பிறவியில் மனிதன் அடைய வேண்டிய ஆன்ம லாபத்தை காலம் உள்ளபோதே பெற்று.இம்மை இன்பலாபம்.மறுமை இன்பலாபம்.பேரின்ப லாபம் பெற்று மரணத்தை வென்று

என்றும் அழியாத முத்தேக சித்தியை பெற்று சுத்த பிரணவ ஞான தேகத்தை பெற்று இறைவனுடன் ஒன்றி கலந்து வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதே...

வள்ளல் பெருமானின் பேராசை பெருங்கருணையாகும்....
அதுவே என் விருப்பமும்

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மையை உள்வாங்கி ..என்றும் இடைவிடாது தொடர்பு கொண்டு.

அருளைப் பெறுவோம்.ஆன்மலாபம் அடைவோம் !

இன்னும் விரிக்கில் பெருகும்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு