புதன், 1 ஏப்ரல், 2015

மரணத்தை வெல்ல முடியுமா ? முடியும் !

மரணத்தை வெல்ல முடியுமா ? முடியும் !

திரு அருட்பிரகாச வள்ளலார்

உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே மனிதன் இறந்து கொண்டேதான் உள்ளான் ஆதலால் மரணம் என்பது இயற்கை என்றும்,ஆறிலும் சாவு,
நூரிலும் சாவு என்றும், மனிதன் பிறக்கும் போதே மரணம் நிச்சயக்கப் பட்டது என்றும்,,பிறந்தவன் ஒருநாள் இறந்தே ஆக வேண்டும் என்றும்.மக்கள் மத்தியிலே தீர்க்க முடியாத,உணர்ந்து கொள்ள முடியாத,தெரிந்து கொள்ள முடியாத  விஷ விதையை  விதைத்து விட்டார்கள் .

மக்களுக்கு நல்வழியைக் காட்டவந்த அருளாளர்கள், உண்மை என்னவென்று தெரியாமல் யாரும் திறக்க முடியாத ஒரு பொய்யானப் பூட்டைப் போட்டு பூட்டி விட்டார்கள் .அந்த பூட்டைத் திறந்து பூட்டையும் உடைத்து குழி தோண்டிப் புதைத்து விட்டார் நமது வள்ளல்பெருமான் அவர்கள். 

மனிதன் மரணத்தை வெல்ல முடியுமா ?முடியாதா? என்ற வினா மக்களிடையே பல்லாண்டு காலமாக உள்ள சந்தேகங்களாகும் .இதற்கு பதில்;- ஆன்மீக வாதிகளாலும் ,அறிவியல் வல்லுநர்களாலும் அணுக்களை ஆராய்ச்சி செய்யும்,அணு ஆராய்ச்சி யாளர்களாலும் ,விஞஞான ஆராய்ச்சி யாளர்களாலும் ,மற்றும் உள்ள பகுத்தறிவு வாதிகளாலும் ,பொது சிந்தனை யாளர்களாலும் இன்றுவரை {வள்ளலாரைத் தவிர }வேறு  யாராலும் பதில் சொல்ல,பதில் காண முடியாமல் விழிக்கிறார்கள் .

ஒரு சிலர் உலகில் தோன்றியது எல்லாம் அழிந்து கொண்டேதான் இருக்கும் என்கிறார்கள்.ஒருசிலர் எல்லா உயிர்களும் பிறந்து பிறந்து இறந்து இறந்து கொண்டேதான் இருக்கும்,அதுவே இறைவனுடைய திருவிளையாடல் என்கிறார்கள்.ஒருசிலர் உலகில் படைக்கப் பட்ட அனைத்தும் மனிதர்களுக் காகத்தான் ஆதலால் அனைத்தையும் அழித்து தின்று ஏப்பம் போட்டுவிட்டு மனிதனும் அழிந்துவிட வேண்டியது தான் என்கிறார்கள்.ஒருசிலர் மனிதன் ஒழுக்க முள்ளவனாக வாழ்ந்து சொர்க்கம் ,கைலாயம்,சிவலோகம் ,வைகுண்டம் என்னும் இடத்திற்குச் சென்று மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்றும் எழுதி வைத்துள்ளார்கள் ..

ஒருசிலர் உடம்போடு சமாதி நிலை அடைந்து இறை நிலையை அடையலாம் என்கிறார்கள்,ஒருசிலர் காசி, ராமேஸ்வரம் ,இமயமலை,கைலாயமலை ,போன்ற புண்ணிய தீர்த்தங்களை தரிசித்து ஆலய வழிபாடு போன்ற கர்மங்கள் செய்வதால் கர்மம் தொலைந்து,புண்ணியம் பெற்று  இறை நிலையை அடையலாம் என்கிறார்கள் .

ஒருசிலர் உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் தோற்றமும மாற்றமும், அழிவும்  இயற்கை என்கின்றார்கள்  .ஒருசிலர்,, கடவுள் என்பது ஒன்றும் இல்லை எல்லாம் அணுக்களின் கூட்டு சேர்க்கையாகும் என்கிறார்கள் .ஒருசிலர் வேதம் ஆகமம் புராணங்கள் இதிகாசம் சாத்திரம்  போன்றவைகளைப்  படித்து அதன்படி வாழ்ந்து வருபவகள் மட்டும்தான் இறைவனையே அடைய முடியும் என்கிறார்கள்,ஒருசிலர் உயிர்களுக்கு தொண்டு செய்தால்போதும்,பிற உயிர்களை வதைக்காமல் இருந்தால் போதும்,இறை நிலையை அடையலாம் என்கிறார்கள். 

இப்படிச் சமய,மதத் தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனைக் கண்ணை மூடிக்கொண்டு அதன்படி வேதம் ,ஆகமம்,புராணம்,இதிகாசம் போன்ற வர்ணம் ஆசிரமம் ஆசாரங்கள் போன்ற சங்கற்ப விகற்பங்களை செய்து இறை நிலையை அடையலாம் என்கிறார்கள்.இப்படி எண்ணற்ற வழிமுறைகள் ,என்பனப் போன்ற கருத்துக்கள் மனித வாழ்க்கைக்கு பலபேர் பல வழிகளில் வகுத்து வைத்துள்ளார்கள் 

ஒரு சிலர் எல்லா வற்றிற்கும் ஆசைதான் காரணம் ஆசையை அழித்தால் இறை நிலையை அடையலாம் என்கிறார்கள் ஒரு சிலர் துறந்தார்க்கும், துறவா தார்க்கும்,, இறந்தார்க்கும் ,,இல் வாழ்வான் துணை என்கிறார்கள் அவர்களே இறைவனை அடையமுடியும் என்கிறார்கள். 

எதைப் பற்றியும் கவலைப் படாமல் பணம் கிடைத்தால் போதும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் பணம், பெண், பொன் இருந்தால் போதும் என்று எண்ணி மக்களின் உழைப்பை சுரண்டி, பகல் கொள்ளை அடித்து,இதுதான் வாழ்க்கை என்று  வாழ்ந்து கொண்டு உள்ளவர்களும் உள்ளார்கள்.இப்படியே  மக்களின்  மனநிலையை, பல ஆன்மீக வாதிகள் தவறான வழிகளைக் காட்டி குழைப்பி வைத்துள்ள நிலையில் மக்கள் உண்மை என்னவென்று தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கிறார்கள் .எவை உண்மையானது  ,எவை பொய்யானது  என்பது தெரியாமல், மலத்தில் புழுத்த புழுக்களைப் போல் மக்கள் தவித்துக் கொண்டு உள்ளார்கள்.

வருவிக்க உற்ற வள்ளலார் !

இவற்றுக் கெல்லாம் ஒரு முடிவு கட்ட,இறைவனால் இந்த உலகிற்கு வருவிக்கப் பட்டவர்தான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

மனித பிறப்பு, மனித வாழ்க்கை என்பது என்ன?

மனித பிறப்பு என்பது எல்லாப் பிறப்பு களிலும் உயர்ந்த பிறப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும் ..மனிதப்  பிறப்பு என்பது இந்த பஞ்ச பூத மாயை உலகில் ''அறம்,பொருள் இன்பம்,வீடுபேறு'',என்ற நான்கையும் அனுபவித்து பின் பற்று அற விட்டு ,இறைவன் அருளைப் பெற்று இறை நிலையை அடைவதுதான் {அதாவது நாம் வந்த இடம் தெரிந்து செல்வது } உண்மையான மனித வாழ்க்கையாகும் ,அதுதான் பேரின்பமாகும்.அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பவையாகும் .மற்றவை அனைத்தும் அழிந்து போகும் உலக போக சிற்றின்பமாகும்.

ஆனால் மனித பிறப்பு எடுத்த எந்த மனிதர்களும் எந்த ஞானிகளும் அந்த நிலையை அடையவில்லை.அப்படி அடைந்ததாக சொல்வதெல்லாம் சுத்த பொய்யாகும்.

இம்மை இன்ப வாழ்வு ,..மறுமை இன்பவாழ்வு ..வாழ்ந்து ஆயுளை நீட்டி உள்ளார்கள்.மறுபடியும் அவர்கள் இறந்து, பிறந்து பேரின்ப நிலையை அடையவேண்டும்.

கடவுள் நிலை அறிந்து அம்மயமாவதறகு,ஊன  உடம்புடன் செல்ல முடியுமா ? உடம்பை அழித்து விட்டு செல்லமுடியுமா ? மரணம் வந்து விட்டால் செல்ல முடியுமா? சாமாதி நிலையில் இருந்தால் செல்ல முடியுமா ? என்றால் அப்படி எதனாலும் செல்ல முடியாது .இதற்கு இறைவன் அனுமதியும் கிடையாது .இதற்கு வள்ளலார் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம் ,

கல்வி இரண்டு வகைப்படும் !

ஒன்று சாகும் கல்வி! ,மற்றொன்று சாகாக் கல்வி!

சாகும் கல்வி என்பது மாயையால் உண்டாக்கிய ஐம்பூதப் பொருள்களை பலவழிகளில் சம்பாதித்து அனுபவித்து அதனால் வரும் இன்ப துன்பங்களான ,பசி,பிணி,கொலை,தாகம்,இச்சை,எளிமை, பயம்,போன்ற இல் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களினால் ,அதாவது பருவ மாற்றங்களான கர்ப்பகாலம், குழைந்தை,இளமை,வாலிபம் ,வயோதிகம், பின் முதிர்ச்சி,உடல் தளர்ச்சி, பிணி,போன்ற துயரம், துன்பம் அடைந்து பின் மரணம் அடைவது சாகும் கல்வியாகும்.

உலகில் உள்ள அனைத்துக் கல்விகளும் பொருள் ஈட்டுவதற்கு பயன் படும் கல்வியாகும்.இதனால் என்ன பயன் என்றால் ,நம் உடம்பில் உள்ள கண்,காது,மூக்கு,வாய்,மெய் என்னும் உடம்பு,போன்ற இந்திரியங்களும்.மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,என்னும் கரணங்களும் மட்டும் தான் மகிழ்ச்சி அடைகின்றன,ஜீவன்  என்னும் உயிரும் ,ஆன்மா என்னும் உள்ஒளியும் மகிழ்ச்சி அடைவதில்லை.இதற்கு வள்ளலார் சொல்லும் பாடல் வருமாறு --

கரணம் மிகக் களிப்புறவே கடல் உலகும் வானும்
கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவீர்
மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ
மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே
திரணமும் ஓர் ஐந்தொழிலைச் செய்ய ஒளி வழங்கும்
சித்திபுரம் என ஓங்கும் உத்தம சிற்சபையில்
சரணம் எனக்கு அளித்து எனையும் தானாக்க எனது
தனித் தந்தை வருகின்ற தருணம் இது தானே .

என விளக்கம் அளிக்கிறார் .

பெருங் கடலையும் ,உலகையும்,வானத்தையும், நாட்டையும் ஆளும் அதிபதிகளாக இருந்தாலும்,உங்களுக்கு வரும் மரணத்தைத் தவிர்த்துக் கொள்ள முடியுமா ? மரணத்தை தவிர்த்துக் கொள்ள முடியாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?என்று கேட்கிறார் வள்ளலார் .அப்படி வாழ்வதால் என்ன பயன் அடைந்து உள்ளீர்கள்.?உங்கள் வாழ்க்கையில் புறப்புறம் என்னும் இந்திரியங்களும் ,புறம் என்னும் கரணங்கள் மட்டுமே  மகிழ்ச்சி அடைகின்றன ,ஜீவனோ ,ஆன்மாவோ மகிழ்ச்சி அடைவதில்லை ,ஜீவனும் ஆன்மாவும் மகிழ்ச்சி அடையாத வாழ்க்கை மிருக வாழ்க்கையாகும் மிருகங்களும் உண்ணுகின்றன உறங்குகின்றன பின் இறந்து விடுகின்றன ,அவைப்  போலத்தான் மனிதனின் வாழ்க்கையும் உள்ளது.

மனிதன் உயர்ந்த அறிவு படைத்தவன் இல்லையா ? மனிதன் அறிவு உள் நோக்கிச் செல்லும் வல்லமையை இறைவன் கொடுத்துள்ளார் ,மற்ற உயிர் இனங்களுக்கு உள் நோக்கிச் செல்லும் அறிவு கிடையாது .இவற்றை மனிதன் சிந்திக்க வேண்டாமா ? உணரவேண்டாமா? மனதை அடக்கத் தெரிந்தவன் மனிதன்,.. மனதை அடக்கி உள் நோக்கிச்சென்று உயர்ந்த நிலையை அடையவேண்டும் மனிதப் பிறப்பு உயர்ந்த பிறப்பு என்பது எல்லாம் ,பொய்யா ? உள்ளே இருக்கும் ஆன்மாவைத் தொடர்பு கொண்டு ,உண்மையான அருள் அறிவைப் பயன் படுத்தி அருளைப் பெறவேண்டும், அந்த அருளினால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.அதுவே மனிதப்  பண்பு என்பதாகும். அதுவே சாகாக் கல்வியாகும்.

சாகும் கல்வி !  

உண்ணுவதும் உறங்குவதும் பின் இறப்பதும் சாகும் கல்வியாகும்.நாம் உண்ணுகின்ற உணவு இரைப்பையில் சென்று ஐந்து நாழிகையில் பால் போன்று அரைத்து பிரித்து ஊட்டவேண்டிய அனைத்து உறுப்புகளுக்கும்,வாதம்,பித்தம்,சிலேத்துமம் என்னும்  நரம்புகளின் வழியாக,எலும்புகளின் வழியாக,தசைகளின் வழியாக  அனுப்பி வைக்கப் படுகிறது,அதனால்  எழுபத்தி இரண்டாயிரம் நாடியும் அக்கிரம மின்றி நிலை பெறுகின்ற படியால் உடல் இயங்கிக் கொண்டு இருக்கிறது .இதை விரிக்கில் பெருகும் .

நாம் உண்ணுகின்ற உணவைப் பிராண சக்தியைக் கொண்டு அரைத்து ,ஆட்டி அதில்  உள்ள சத்தை பிரித்து ரசாயன மாற்றம் போல் ,ரத்தமாகவும் அதில் இருந்து சத்தை பிரித்து, ''விந்து '' வாகவும்  மாற்றம் செய்து குண்டலினிப் பைக்குள் அனுப்பிவைக்கிறது .இவை பதினாறு வயதுக்கு மேல் அதன் வேலையை தொடங்குகிறது .இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான முறையில் செயல்படும் செயல்களாகும், விந்து என்பது  நாம் உண்ணும் உணவுக்கு தகுந்தாற் போல் சுரக்கும் சக்தியாகும். .விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்பது பழமொழி யாகும்,

விந்துவின் ஆதிக்கத்தால்,அதன் செய்கையால் ,அதன் தன்மையால்  இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் ,துணிவையும் உணர்வையும் ,ஊக்கத்தையும் கொடுப்பது பூத விந்து என்னும் திரவம்தான், இந்த உலகில் நமக்கு உண்டாகும் நல்லது கெட்டது அனைத்திற்கும் காரண காரியமாக உள்ளது மனிதனின் விந்து விளக்கமே யாகும்.

இந்த பூத விந்துதான் எல்லா வற்றிற்கும் காரண காரியமாகும் இதைத்தான் குண்டலினி சத்தி என்பதாகும்.இதுதான் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை போன்ற ஆசைகளை உருவாக்குவதாகும்.இந்த மூன்று ஆசைகளினால் மனிதன் அழிந்து விடுகிறான்,

ஒரு சிலர் விந்தைக் கட்டுபடுத்தி வெளியே விடாமல் இருந்தால் அருள் கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் உணவைக் குறைத்து வாழத் தொடங்கினார்கள் ---இதுவே மரணத்திற்கு காரணம் என நினைத்தார்கள். இதை அறிந்தவர்கள் ஆசையைத் துறக்க வேண்டும் என்றார்கள் ஆசையே எல்லா வற்றுக்கும் காரணம் என்றார்கள்.ஆனால் ஆசையைத் துறந்தாலும் பசியைத் துறக்க முடியவில்லை--பசியைத் துறந்த துறவிகள், சந்நியாசிகள் ,சித்தர்கள் யோகிகள் ,ஞானிகள் எல்லாம் காடு ,மலை,வனம்,குகைபோன்ற  தனிமையான இடங்களுக்குச் சென்று கடுமையான தவம் செய்து சமாதி நிலையை அடைந்தார்கள்.

இன்று உலகம் முழுவதும் உள்ள மலைகள் எல்லாம் சித்தர்கள் சமாதி அடைந்த இடங்களாகும்.

மேலே கண்டவர்கள் சரியை கிரியை யோகம ஞானம் என்னும் பதினாறு  படி நிலைகளில் இருந்து இறைவனை அடையலாம் என்று ஒவ்வொருவரும் ஒரு ஒரு வழியைக் கடைபிடித்து வாழ்ந்து வந்துள்ளார்கள் .அவர்கள் முயற்சிக்கு  தகுந்தாற் போல் சில,பல சித்துக்கள் கிடைத்து இருக்கிறது .அதனால் அவர்கள் அந்த சித்தை வைத்துக் கொண்டு, எல்லாம் கிடைத்து விட்டது போல் இறுமாப்பு அடைந்து,நீண்ட நாள் வாழ்ந்து, மரணத்தை வெல்ல முடியாமல் அழிந்து போய் விட்டார்கள். மரணத்தை வென்றால்தான் இறைவனை அடைய முடியும் என்ற ரகசியத்தை எவராலும் கண்டுப்  பிடிக்க முடியவில்லை .

ஏன் என்றால்;-- மரணம் என்பது இயற்கை என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள் ,உடம்பு அழிந்து விடும்,உயிர் அழிந்துவிடும், ஆன்மா அழியாதது .உடம்போடு உயிர் அழிந்துவிடும் அதனால் உடம்பு இல்லாமல் உயிர் இல்லாமல் இறைவனை அடையலாம்,என்பது ஆன்மீகவாதிகளின்  கொள்கைகளாகும்,அவை முற்றிலும் தவறான கொள்கை களாகும் என்கிறார் வள்ளலார் .

ஆதலால் ஆசைதான் எல்லா வற்றுக்கும் காரணம் ஆசையை ஒழித்து விட்டால்,இறைவன் அருளைக் கொடுத்து விடுவார், இறை நிலையை அடைந்து விடலாம், என்பது சமய மதக் கொள்கைகளின் கோட்பாடுகளாகும்.இவை முற்றிலும் தவறானது என்பதை வள்ளலார் விளக்குகிறார் ,

உடம்பின் ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் ,கண்டதே காட்சி ,கொண்டதே கோலம் என்று வாழ்ந்து,கதைகளாகவும்,கற்பனைகளாகவும்,தத்துவங்களை உண்மை போல் அமைத்து வைத்து தாங்களும் குழம்பி மக்களையும் குழம்ப வைத்து விட்டுப் போய் விட்டார்கள்.அதனால் இன்றுவரை மக்கள் உண்மை என்ன வென்று தெரியாமல்,பொய்யையே உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் .

ஆகாரம்,..மைத்துனம்,..தூக்கம்,..பயம் இவைகளால் மரணம் வருகின்றது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளார் வள்ளலார் .அதன் விளக்கம் அருட்பாவில் பார்த்துக் கொள்ளுங்கள்.

மரணம் என்பது இயற்கை அல்ல ! அவை நாம் வாழும் வாழ்க்கை முறையால் நாம் செய்யும் தவறுகளால் மரணம் வருகின்றது.ஆதலால் மரணம் செயற்கை என்பதை வள்ளலார் ,;;தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்'' என்பார் இவை இன்று நேற்று அல்ல !  என்றும் உள்ளதால் இந்த நோவை நீக்க வேண்டும் என்கிறார் அவர் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு,

சாவதென்றும் பிறப்பதென்றும்  சாற்றுகின்ற பெரும் பாவம் தன்னை எண்ணி நோவது இன்று புதியது அன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி
ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே யாகும் மற்றை இறைவராலே
ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இச்சிறியே னால்ஆவது என்னே !

என்னும் பாடல் வாயிலாக  உயிர்கள் அனைத்தும் சாவதும் பிறப்பதுமாய் தொடர் கதையாகவே உள்ளது என்பதைத் தெரியப் படுத்தி உள்ளார் .மரணம் என்பது பெரும் பிணி என்கின்றார்.பெரும் பாவம் என்கின்றார். அந்த பிணியை அதாவது நோயை  நீக்குவது எந்த மருந்தாலும் எந்த கடவுளாலும் நீக்க முடியாது.என்கின்றார் அந்த தீர்க்கமுடியாத நோய் நம்மை எப்படிபிடித்துக் கொண்டுள்ளது .அந்த தீர்க்க முடியாத பெரும் பிணியை ,நீக்குவதற்கு எந்த மருந்து தேவைப்படுகின்றது.அவை  எங்கே கிடைக்கின்றது ? யார் ? இடம் இருந்து பெற்றுக் கொள்வது என்பதை மனிதன் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் உடம்பு வந்த வழியும், உயிர் வந்த வழியும்,மரணம் என்னும் பிணி, (நோய்) பற்றிக் கொண்ட வழியும் தெரியாமல் ,அதன் ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் மரணத்தை வெல்ல முடியாது ,அதற்கு வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு ;--

உடம்பு வருவகை அறியீர் உயிர் வகையை அறியீர்
உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம் புகு பேய் மனத்தாலே மயங்கு கின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்று அறியீர்
இடம் பெறும் பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே
நடம்புரி என் தனித் தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியம் சார்வீரே !

மனம் என்பது உலக போகத்திலே இட்டுச்செலவது ,அது பேய் குரங்குப் போன்றது அதை வசப்படுத்த தெரியாமல் ,வழி துறை தெரியாமல் பொய்யான பொருள் வாழ்க்கை வாழ்ந்து இன்பம் துன்பம் என்ற இகவாழ்க்கை என்ற அற்ப செயல்களால் அனுபவித்து பின் எண்ணி எண்ணி இளைத்துக் கொண்டு உள்ளீர்கள் , மரணத்தை வெல்லமுடியாமல் வாழும் ,உலகில் உள்ள அனைவரும் ஏழைகள் தான் ,ஒருவரும் பணக்காரன் அல்ல ,

மேலும் வள்ளலார் பாடலைப் பாருங்கள் !

இறந்தவரை எடுத்திடும் போது அரற்று கின்றீர் உலகீர்
இறவாத பெருவரம் நீர் ஏன் அடைய மாட்டீர்
மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ உமக்கு
மறந்தும் இதை நினைக்கின் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர்
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம்
சேராமற் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்மின் இங்கே
பிறந்த பிறப்பில் இதில் தானே நித்திய மெய் வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே !

இறந்தவரைப் பார்த்து இருக்கின்றவர்கள் அழுகிறீர்கள் .இறவாமல் வாழும் வழி ஒன்று இருக்கின்றது நான் கற்றுத் தருகிறேன் வாருங்கள் என்று வள்ளலார் அழைக்கின்றார் .நான் காட்டிய உண்மை நெறியான சன்மார்க்க நெறியைக் கடைபிடித்து வாழ்ந்தால் இந்த பிறவியிலே மரணத்தை வென்று பேரின்ப சித்தி நித்திய மெய்வாழ்வு வாழலாம் என்பதை சொல்லி மக்களை அழைக்கின்றார் .என்னே அவரின் பெருங்கருணை .

மரணம் என்னும் நோயை நீக்குவதற்கு,உண்மைக் கடவுளான அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் தொடர்பு கொண்டு,  பூரண அருளைப் பெற்று மரணத்தை வெல்லுகிறவன் எவனோ அவனே பணக்காரன்,அவனே மனித பிறப்பின் ரகசியத்தை அறிந்து கொண்டவன்.அவனே உண்மை தெரிந்த வல்லவன்   என்பதை வள்ளலார் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ,

நாடு ,மொழி,இனம்,கடவுள்,மதம்,சமயம்,ஜாதி,ஆண்,பெண், போன்ற பேதம் இல்லாமலும் மற்றும் இறைவன் படைத்த அணைத்து உயிர்களும் ஒரேத் தன்மை உடையது.என்பதை அறிவால் அறிந்து,'ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை'' என்னும ஒருமையை அறிந்து உணர்ந்து கொண்டால் மட்டுமே உண்மை என்னும் அருள் அறிவு தன்னைத்தானே விளங்கும் என்கின்றார் நமது வள்ளல்பெருமான் .

உலக போகப் பொருள்கள் மீது ,எந்தப் பற்றும் இன்றி ,உயிர்களின் உண்மையை அறிந்தும்  உயிரை உண்டாக்கும் ஆன்மாவை,அறிந்தும் ,இந்த உலகத்திற்கு ஆன்மாவை அனுப்பிய ஆண்டவர் யார் ? என்பதையும் அறிந்து அந்த உண்மைக் கடவுளின் தொடர்பு கொண்டால் மட்டுமே ,நம்முடைய வாழ்க்கையின் ரகசியங்கள் தெரிந்து கொள்ள முடியும்.--

அந்த உண்மையைத் தெரிந்து கொள்ள எது தடையாக இருக்கின்றது என்பதை நமக்கு தெளிவாக விளக்கி உள்ளார்கள்

நம்மைப் படைத்த இறைவன் யார் ? என்பதை நம்முடைய ஆன்ம அறிவைக் கொண்டு,''கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ்ஜோதியர்! என்னும் அருள் அறிவை  அறிந்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும்,''ஒருமை'' வந்தால் அன்றி ,அறிவு விளக்கமும்,அருள் விளக்கமும்  வெளிப் படாது என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார் வள்ளல்பெருமான்

உலகப்  பற்றை ஒழித்தால் மட்டும் போதாது. ,தியானம்,யோகம,தவம்,
முக்தி,முத்தி,குண்டலணி சக்தி எழுப்புதல், காயகல்பம், ரசவாதம், நவபாஷாணம்,சமாதி போன்ற  சித்துவிளையாட்டு,  செயல்களால் அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியாது, பின் எப்படி பெற முடியும்.அதற்கு வள்ளலார் சொல்லிக் கொடுக்கும் சாகாக் கல்வியைக்  கற்க வேண்டும்.

சாகாக் கல்வி !

மரணத்தை வெல்ல முடியும் ! முடியும் !அதற்கு சாகாக் கல்வி என்று பெயர் வைத்துள்ளார் வள்ளல்ளார்!.

சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்
தான் என அறிந்த அறிவே
தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே
தனித்த பூரண வல்லபம்
வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும்
விளைய விளைவித்த தொழிலே
மெய்த் தொழில தாகும் இந் நான்கையும் ஒருங்கே
வியந்து அடைந்து உலகம் எல்லாம்
மாகாதல் உற எல்லாம் வல்ல சித்தாகி நிறை
வான வரமே இன்பமாகும்
மன்னுமிது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின்
மரபு என்று உரைத்த குருவே
தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்
தேற்றி அருள் செய்த சிவமே
சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே
தெய்வ நடராஜ பதியே !

சாகாத கல்வி என்பது ஒன்று உண்டு என்பதை முதன் முதலில் கண்டு பிடித்து உலகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் வள்ளலார் ,சாகாக் கல்வி என்பது மரணத்தை வெல்லும் வழியைக் கற்றுக் கொள்வதே சாகாக் கல்வி என்பதாகும் கல்வியின் முதல் பாடம் .

முதலில் கடவுள் ஒருவர் என்பதை அறிந்து கொள்வதே ஆரம்பக் கல்வியாகும் அதுவே உண்மை அறிவாகும்,

ஐந்து மலமான,ஆணவம்,மாயை,கன்மம்,மாமாயை,பெருமாயை என்னும், ஐந்து பூதங்களின் தொடர்பு இல்லாமல் அவற்றை வெல்வதற்கு அருளைப் பெற்று வாழ்வதே பூரண வல்லபம் என்பதாகும்.

பிராணவாயு என்னும்  சுவாசம் இல்லாமல் வாழும் வாழ்க்கை.. வேகாக்கால், ...உயிர்போகாமல் வாழும் சாகாத் தலை,...ஆன்மா மீண்டும் உடம்பு,உயிர் எடுக்காமல் அருளைப் பெற்று வாழ்வதே போகப் புனல் என்பதை தெரிந்து கொண்டு வாழ வேண்டும்.

ஆன்மதேகம் என்னும் ஒளி உடம்பைப் பெற்று, என்றும் அழியாமல் வாழ்ந்து அனைத்துப் பொருள்களையும் அருளைக்  கொண்டு உருவாக்கும் தொழிலே உண்மையான தொழிலாகும்.அதாவது உதாரணம் ;--இறந்தவரை உயிர் பெற்று எழுப்பும் தொழிலாகும்,

கல்வி,அறிவு,வல்லபம் ,தொழில் போன்ற நான்கையும் கற்று என்றும் அழிவில்லாத செயல்களை செய்யும் ஆற்றல் பெற்றதே என்றும் அழியாத இன்பமாகும்.

மனிதனாக பிறந்து இந்த உலகத்தில் மேலே கண்ட செயல்களை கண்டு பிடித்து அதன்படி வாழ்ந்து வழிகாட்டியவர் வள்ளலார் ஒருவர்தான் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் .

எப்படி கண்டு பிடித்தார் ? என்பதைப் பார்ப்போம்.!

இவ்வுலகில் உள்ள அனைத்தும்,உயிர்கள் வாழ்வதற்காக, இறைவனால் படைக்கப் பட்டதாகும்.படைக்கப் பட்ட எந்த பொருளையும் உயிர் வாழ்வதற்காக அனுபவிக்கலாம் ,அழிக்கக் கூடாது, சேர்த்து வைக்க கூடாது,அளவுக்கு அதிகமாக அனுபவிக்கக் கூடாது .எங்கும் எடுத்து செல்லக் கூடாது!,எடுத்து செல்லவும் முடியாது !என்பதை அறிந்த வள்ளலார் .அதற்கு மேல் இந்த உடம்பு ஏன் வந்தது ?உயிர் எப்படி வந்தது என்பதை அறிய தொடங்குகிறார்.அப்படி அறியும் போது ,உயிர்களுக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்கு மூன்று சுதந்திரம்,இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்கிறார் ,

அந்த சுதந்திரத்தை மனிதன் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் ,அந்த சுதந்திரத்தை பயன் படுத்தி வாழும் வாழ்க்கையில் இன்பம் துன்பம் தொடர்ந்து கொண்டே வரும் என்பதை உணர்கிறார்.நல்லது செய்தால் நல்வினையாகவும்,தீயவை செய்தால் தீவினை யாகவும் ஆன்மாவில் பதிவாகிக் கொண்டே இருக்கிறது, இதுவே பிறப்பு இறப்புக்கு காரண காரியமாக இருந்து கொண்டு உள்ளது என்பதை அறிந்த வள்ளலார் இந்த உலகத்தில் உள்ள எதையும் அனுபவிக்காமல் வாழ்வது எப்படி என்பதை நினைந்து நினைந்து ,உணர்ந்து உணர்ந்து ,அவருடைய அருள் அறிவுக்கு அதிகமான வேலைக் கொடுக்கிறார் ,

அறிவை அறிவாலே அறிகின்ற போது உண்மையான அறிவு பதில் சொல்கிறது..அதற்கு வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு.

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவ மாகின்றது என்னடித் தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே.

அருளாலே அருள் இறை அருள் கின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திரு நட இன்பம் என்று அறியாயோ மகளே.!

என்ற பாடல் நமக்கு அறிவை விளக்கும் ,ஆற்றலைக் கொடுக்கும் உண்மையை உணர்த்தும் பாடல்களாகும் .

அருளைப் பெற்றால் மரணத்தை வெல்ல முடியும் என்பதை அறிந்த வள்ளலார் ,அருளைப் பெறுவதற்கு எவை தடையாக இருக்கிறது என்றால் ,இறைவன் நமக்குக் கொடுத்த சுதந்தரத்தை ,நாம் உபயோகப் படுத்தக் கூடாது, எனக்கு இவைகள் வேண்டாம் என்று திருப்பித் தந்து விடவேண்டும் என்பதை வள்ளலார் அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் எப்படி விண்ணப்பம் செய்கிறார் என்பதை அனைவரும் பார்ப்போம் .

ஆறாம் திருமுறையில் முதல் விண்ணப்பம் "'சத்திய விண்ணப்பம் "

எல்லாம் வல்ல தனித் தலைமைக் கடவுளாகிய
அருட்பெரும்ஜோதி ஆண்டவரே !

தேவரீர் திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளுகின்ற சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்;--

இவ்வுலகத்தின் இடத்தே உயர்ந்த ஆறறிவுள்ள உயர்வு உடைத்ததாகிய தேகத்தைப் பெற்ற யான் ,இத்தேகத்திற்கு இடைக்கு இடை நேருகின்ற மரணம்,பிணி,மூப்பு ,பயம்,துன்பம் முதலிய அவத்தைக்கள் எல்லா வற்றையும் நிவர்த்தி செய்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொண்டு,எக்காலத்தும் ,எவ்விடத்தும்,எவ்விதத்தும்,எத்துணையும்,தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.

எனது விருப்ப முயற்ச்சி இங்கனமாக ,அவத்தைகள் எல்லா வற்றையும் நீக்கி,இத்தேகத்தையே  நித்திய தேகமாக்கி,எக்காலத்தும் ,அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல்,எதனால் பெறுதல் கூடும் என்று அறியத் தொடங்கிய தருனத்தே;--

வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது,எல்லாம் உடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடும் என்று தேவரீர் திருவளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன் ,

பின்னர் திருவருட் சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து.;--

எனது யான் என்னும்,தேக சுதந்தரம்,போக சுதந்தரம்,ஜீவ சுதந்தரம் .என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கிய விடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.ஆதலில்,

எனது சுதந்தரமாகக் கொண்டு இருந்த தேக சுதந்தரத்தையும்,போக சுதந்தரத்தையும்,ஜீவ சுதந்தரத்தையும்,தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன் ,கொடுத்த தருணத்தே,இத்தேகமும் ,ஜீவனும்,போகப் பொருள்களும்,சர்வ சுதந்தரராகிய கடவுள் பெருங் கருணையால் கொடுக்கப் பெற்றன மன்றி ,நமது சுதந்தரத்தால் பெற்றன அல்ல என்னும் உண்மையை அறிந்து கொண்டேன் .

இனி,இத்தேகத்தின்  இடத்தும்,ஜீவன் இடத்தும் ,போகப் பொருள்கள் இடத்தும்.தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்ற மாட்டாது.

தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்து அருளி,மரணம்,பிணி,மூப்பு,பயம்,துன்பம் முதலிய அவத்தைகள் எல்லா வற்றையும் தவிர்த்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கி,எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல்.வேண்டும்.

இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர் களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து அவரவர்களையும் .உரிமை உடையவர்கள் ஆக்கி வாழ்வித்தல் வேண்டும்.

தேவரீர் பெருங் கருணை ஆட்சிக்கு வந்தனம் !வந்தனம் !

நித்தியதேகம் !

நித்திய தேகம் என்று சொல்லுவதை நாம் கவனிக்க வேண்டும்,நித்திய தேகம் என்பது உடம்பு இல்லாத ஒளி தேகமாகும்.உடம்பு கடவுள் கொடுத்த தேகம் அல்ல !.மாயையினால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடாகும்.பஞ்ச பூதங்களான மண்,நீர்,அக்கினி,காற்று,ஆகாயம் போன்ற கருவிகளைக் கொண்டு ஆன்மாவுக்கு,மாயையினால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு என்னும் தேகமாகும் .ஆதலால்  நம் உடம்பு செயற்கை உடம்பாகும்  ,

நித்திய தேகம் என்பது இயற்கை உடம்பாகும்..அதனால்தான் வள்ளலார் செயற்கை உடம்பு வேண்டாம்--இயற்கை உடம்பான நித்திய தேகம் வேண்டும் என இறைவனிடம் கேட்கிறார்.மரணம் அடைந்தால் இயற்கை என்னும் நித்திய தேகம் கிடைக்காது...மரணம் அடையாமல் இத்தேகத்தையே நித்திய தேகமாக மாற்ற வேண்டும்.அதாவது ஒளி உடம்பாக மாற்ற வேண்டும்.ஒளி உடம்பு என்பது ''உயிர் இல்லாதஉடம்பு'' அதைத்தான் மரணம் இல்லாத பெருவாழ்வு என்கிறார் வள்ளலார்.

மரணத்தை வெல்லுவதற்கு இதைவிட வேறு சாத்தியக் கூறுகள் உண்டா ?தேவையா?சிந்தித்துப் பார்க்க வேண்டும்.வள்ளலாரைப் போல் வாழ்ந்தால் நிச்சயம் மரணத்தை வெல்ல முடியும்.அதை விடுத்து ,எல்லா பற்றுகளையும் விடாமல் வைத்துக் கொண்டு மரணத்தை வெல்ல முடியுமா ?சத்தியமாக முடியாது. பற்றிய பற்று அத்தனையும் பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறவீரே என்பார் வள்ளலார் .

அருள் !

இந்த உலகம் பொருளினால் உண்டாக்கப் பட்டது,பொருளை வைத்துக் கொண்டு அருளைத் தேடமுடியாது ,அப்படி தேடினாலும் கிடைக்காது..''பொருளை அருளாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும்'' அதுவே ''ஜீவ காருண்யம் என்பதாகும்''  அருளைத் தேடுவதற்கு தடையாக இருப்பது என்ன என்பதை வள்ளலார் விளக்குகிறார் நாம் இதுவரையில் அருளைத் தேடாமல் பொருள் மீது பற்று வைத்து இருந்ததற்கு காரணம் என்ன ?,

நாம் இதுவரையில் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம் ,ஏன் என்றால் அவைகளின் ஒன்றிலாவது தெய்வத்தை இன்னபடி என்றும்,தெய்வத்தின் உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.அணு மாத்திரமேனும் தெரிவிக்காமல் பிண்ட லட்சணத்தை ஆண்டத்தில் காட்டினார்கள்.யாதெனில், கைலாசபதி என்றும்,வைகுண்டபதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும் பெயரிட்டு இடம்,வாகனம்,ஆயுதம் வடிவம்,ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

தெய்வத்துக்குக் கை,கால் முதலியன இருக்குமா ? என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும் (ஆதி சங்கரர்,ராமானுஜர்,சங்கராச்சாரியார் மற்றும் உள்ள பெரியவர்கள்)  ,உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கிறார்கள்,ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் (வியாசர்,மற்றும் வால்மீகி ),அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை ,

அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை,இதுவரைக்கும் அப்படிப் பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லி இருக்கின்றார்கள் ,அதற்காக அவற்றில் லஷியம் வைத்தால் ஆண்டவர் இடத்தில் வைத்துக் கொண்டு இருக்கிற லஷியம் போய் விடும் அவைகளில் லஷியம் வைக்காமல் ஆண்டவர் இடத்திலே லஷியம் வைக்க வேண்டியது நமது விருப்ப முயற்சியாக இருக்க வேண்டும் ,

மரணத்தை வெல்லவும்,-அதாவது ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றும், அருளைக் கொடுக்க கூடியவர், இயற்கை  உண்மைக்  கடவுளான ''அருட்பெரும்ஜோதி ஆண்டவர்'' ஒருவரால்தான் முடியும் .அதற்கு சாட்சி  நானே இருக்கிறேன் ,நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டு இருந்தது இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது அந்த லட்சியம் எப்படிப் போய் விட்டது பார்த்தீர்களா ?நான் பாடி இருக்கிற திருஅருட்பாவில் அடங்கி இருக்கிற பாடலையும் மற்றவர்கள் பாடலையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாட்சி  சொல்லிவிடும்.ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் ,அப்போது எனக்கு அவ்வளவு அற்ப அறிவாக இருந்தது.என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் .

காரணம் என்ன ? அவைகள் பக்தி மார்க்கம்,''வள்ளலார் கண்டது அருளைப் பெரும் ஞான மார்க்கம்'' .அதாவது ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய மார்க்கமாகும்'' ஞானம் என்பது ஒன்றும் இல்லாதது.ஒன்றும் இல்லாமல்{எதிலும் தொடர்பு இல்லாமல் } இருந்தால்தான் அருள் என்னும் ஞானம்{அருள்அறிவு } கிடைக்கும்.மேலும் வள்ளலார் சொல்லியது.

இப்போது அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் .இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது.ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ?என்றால் பெற்றுக் கொள்ளவில்லை.என்னை மேலே ஏற்றிவிட்டது யாதெனில்.

உண்மை பெருநெறி ஒழுக்கமும் --''கருணை'' தான் என்னை மேலே  ஏற்றிவிட்டது உண்மை பெருநெறி ஒழுக்கம் யாதெனில்,''கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக '' என்றது தான் என்னை ஏறா நிலைமிசை ஏற்றிவிட்டது .அது யாதெனில் உயிர்களின் மேல் தயவு,.. கடவுளின் மீது  அன்பு,...  தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது .அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும் அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும் தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.இப்போது என்னுடைய அறிவு அண்டம் அண்டங்களுக்கும் அப்பாலும் கடந்து இருக்கின்றது .அது அந்த ஒருமையினால் தான் வந்தது நீங்களும் என்னைப் போல் ஒருமையுடன் இருங்கள் ,அருள் தானே கிடைக்கும்.அருள் கிடைத்தால் மரணத்தை வெல்லலாம்.நித்திய தேகம் பெறலாம் .

அருள் என்பது என்ன ?

அருள் என்பது அருட்பெருமஞ்ஜோதி ஆண்டவரால் எல்லா ஆன்மாக்களிலும் வைக்கப் பட்டுள்ள மாபெரும் பொக்கிஷமாகும்.அவை ஆண்டவருடைய கருணையால் தான் சுரக்கும் .அதை தாங்கும் அளவிற்கு நாம் நம்முடைய உடம்பை தயார் படுத்த வேண்டும் .அருளைத் தாங்கும் அளவிற்க்கு தகுதி உடையவர் யார் என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகிறார் .

நிந்தை இலார் நெஞ்சகத்தே நிறைந்த பெருந் தகையை
நிலை அனைத்தும் காட்டி அருள் நிலை அளித்த குருவை
எந்தையை என் தனித்தாயை என் இரு கண்மணியை
என்னுயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை
சிந்தையிலே தனித்து இனிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
செய்ய வல்ல தனித் தலைமைச் சிவபதியை உலகீர்
முந்தை மல இருட்டு ஒழிய முன்னுமினோ கரண
முடுக்கு ஒழித்துக் கடை மரண நடுக்கு ஒழித்து முயன்றே !

இந்திரியம் கரணம் என்னும் கருவிகள் செயல்படாமல் இருந்தால் -- ஜீவன் என்னும் உயிர், ஆன்மாவில் அடங்கும் போதுதான் அருள் என்னும் அமுதம் சுரக்கும் .{அதாவது ஆபரேஷன் செய்யும் போது வலி தெரியாமல்இருக்க ,மயக்க மருந்து கொடுத்து மயக்க நிலையில் இருப்பது போன்று } அமுதம் சுரக்கும் போது உடம்பின் மாற்றங்கள் என்னவாக மாற்றம் அடையும் என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகிறார் ,ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றுவதுதான் மரணத்தை வெல்லும் வழியாகும் .அதாவது வேதியல் மாற்றம் போல் .

உடம்பு மாற்றம் அடைவதைப் பற்றி வள்ளலார் சொல்லுவதைக் கவனிப்போம்!

தோல் எலாம் குழைந்திடச் சூழ் நரம்பு அனைத்தும்
மேல் எலாம்  கட்டவை விட்டு விட்டு இயங்கிட
என்பு எலாம் நெக்கு நெக்கி இயல் இடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசை எலாம் மெய்யுறத் தளர்ந்திட
இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம்
உரைத்திட பந்தித் தொரு திரளாயிட
மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம்
உடல் எலாம ஊற்று எடுத்து ஓடிநிரம்பிட
ஒண்ணுதல் வியர்த்திட ஒளிமுகம் மலர்ந்திடத்
தண்ணிய உயிர்ப்பினிற் சாந்தம் ததும்பிட
உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்து ஓடிட

வாய் துடித்து அலறிட வளர் செவித் துணைகளில்
கூயிசைப் பொறி எலாங் கும்மெனக் கொட்டிட
மெய் எலாம்  குளிர்ந்திட மென் மார்பு அசைந்திடக்
கை எலாம் குவிந்திடக் கால் லெலாஞ் சுலவிட
மனங் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட
இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட
அகங்காரம் ஆங்காங்கு  அதிகரிப்பு அமைந்திடச்
சகங் காண உள்ளம தழைத்து மலர்ந்திட
அறிவுருவு அனைத்தும் ஆனந்தம் மாயிடப்
பொறியுறும்  மான் மதற் போதமும் போயிடத்

தத்துவம் அனைத்தும் தாமொருங்கு ஒழிந்திடச்
சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட
உலகம் எலாம் விடயமும் உளவு எலாம மறைந்திட
அலகிலா அருளின் ஆசை மேற் பொங்கிட
என்னுளத்து  எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட
என்னுளத்து  ஓங்கிய என் தனி அன்பே !

பொன்னடி கண்டு அருள் புத்தமுத உணவே
என்னுளத்து  எழுந்த என்னுடைய அன்பே
தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால்
என்னை வேதித்த என் தனி அன்பே !

அருள் என்னும் அமுதம் சுரக்கும் போது உடம்பு எப்படி வேதியல் மாற்றம் உண்டாகிறது என்பதை மிகத் தெளிவாக வள்ளலார் தெரியப் படுத்தி உள்ளார். இந்த உலகத்தில் யாராவது என்னைப் போல்,மரணம் இல்லாப் பெருவாழ்வு  பெற்று இருக்கிறார்களா என்பதை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடத்தில் கேட்கிறார்.

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் மெஞ்ஞான்றும்
சாகா வரம் எனைப் போற் சார்ந்தவரும் --தேவா நின்
பேர் அருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் நீ சற்றே யறை !

மரணத்தை வென்ற மாபெரும் மகான் நமது வள்ளல்பெருமான் அவர்கள்,அருட்பெரும்ஜோதி ஆண்டவரைப் பார்த்து கேட்கும் கேள்விக்கு ஆண்டவர் என்ன பதில் சொல்கிறார் என்பதைப் பார்ப்போம் .

துன்பெலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச்
சூழ்ந்த அருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே
சுதந்தரம் ஆனது உலகில்
வன்பெலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய்
வாழ் வெலாம் பெற்று மிகவும்
மன்னுயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன்
மனம் நினைப்பின் படிக்கே
அன்ப நீ பெருக உலவாது நீடுழி விளை
யாடுக அருட்ஜோதியாம்
ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்
ஆணை நம் ஆணை என்றே
இன்புறத் திருவாக்களித்து என் உள்ளே கலந்து
இசைவுடன் இருந்த குருவே
எல்லாஞ் செய் வல்ல சித்தாகி மணி மனிறில்
இலங்கு நடராஜ பதியே !

என்ற பாடல் மூலமாக விளக்கம் அளிக்கிறார்.

 வள்ளலார் இடம் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சொல்லியது !.

உலகம் இதுவரையில் உண்மை அறியாமல் இருந்தது ,ஆதலால் எனக்கு துன்பம் இருந்தது ,அந்த துன்பங்கள் யாவும் உன்னால் தீர்ந்து விட்டது,நீ ஒருவன் தான் என்னுடைய செல்லப் பிள்ளை,நல்லப் பிள்ளை ,தாவரங்கள் முதல் எல்லா உயிர் இனங்களும்,துன்பம் இல்லாமல் வாழ வேண்டும் என்று வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய உனக்கு ,உன் மன நினைப்பின் படிக்கே அன்பையும் அருளையும் பெற்று ,நீடுழி காலம் விளையாடி மகிழ வேண்டும். ஆதலால் என்னுடைய ஆட்சியை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று,அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வள்ளலார் வசம் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறார் ,உன்னை என்றும் கைவிடாமல் உன்னுடனே இருப்பேன் இது நம் இருவருடைய ஆணையாகும் என்று மகிழ்ச்சியுடன் வாக்களித்து உள்ளார் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் .

இதைவிட பெரிய பேறு உலகத்தில் யாருக்காவது கிடைத்தது உண்டா ?மரணத்தை வென்றால் மட்டும் போதாது அதற்கு உண்டான தகுதியும் வேண்டும் .''அருளாட்சி பெறும்'' அந்த தகுதியை வள்ளல் பெருமானுக்கு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் கொடுத்துள்ளார்..

நமது உடம்பு தாயின் கருப்பையில் அணுக்களின் கூட்டு சேர்க்கையால் அசுத்த  பூத காரிய அமுதத்தினால் {அணுவை ஒட்டும் பசையால்} பின்னப் பட்டதாகும் ,அந்த உடம்பை அருளைக் கொண்டு பிரிக்க வேண்டும்,வேறு எதைக் கொண்டும் பிரிக்க முடியாது .அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ,நம் ஆன்மாவில் உள்ள அமுதத்தை எப்போது வெளிப் படுத்துகிறாரோ அப்போதுதான்,அந்த அருள் அமுதத்தால் ---பூத காரிய அமுதத்தால் பின்னப்பட்ட அணுக்களை தனித்தனியாகப் பிரிக்க முடியும்,அப்போது ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறும் .இதுவே மரணத்தை வெல்லும் வழியாகும் ,இன்னும் விரிக்கில் பெருகும் என்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன் .

மரணத்தை வெல்ல முடியும் இதில் எந்தவித சந்தேகமும் தேவை இல்லை .மனிதர்களாக பிறந்தவர்கள் மரணத்தை வென்று இறைவனை அடைவது தான் மனிதர்களின் இறுதி நிலையாகும் .அதைத்தான் வள்ளலார் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பார்! ,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பார்! ,பேரின்ப பெருவாழ்வு என்பார் ! பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பார் ! மனிதர்களால மட்டுமே மரணத்தை வெல்ல முடியும் .

மரணத்தை வென்றவர்களை எதனாலும் அழிக்க முடியாது என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள் படியுங்கள் !

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எந்தனக்கே \
ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர்
என் தந்தை அருட்பெருஞ்சோதி இறைவனைச் சார்வீரே !

உலகில் உள்ள மண் ,நீர்,அக்கினி,காற்று ,ஆகாயம் போன்ற சக்திகளாலும்,பிணி என்னும் நோயாலும்,கொலைக்கருவியாலும்,கோள்கள் என்னும் கிரகங்களாலும்,பிறர்  இயற்றும் கொடுமையான மந்திரம் ,தந்திரம் போன்ற செயல்களாலும்,வேறு ஏதாவது அறிவியல் விஞ்ஞானத்தினால்  கண்டுபிடிக்கும் அணு ஆயுத அழிவுகளால், வெடித்து சிதறும் அணுக்களாலும்,எக்காலத்தும் அழிக்க முடியாத மெய் {உடம்பு }அளிக்க வேண்டும் என்றேன்,--கால தாமதம் செய்யாமல் விரைந்து அளித்தான் --யார் ?--அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்னும் பேர் ஒளியாகும் .என்கிறார் வள்ளலார் .

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் கருணையால் மரணத்தை வென்று வாழ்ந்து வழி காட்டியுள்ளார்

இதை நினைத்து சந்தேகப் படாதீர்கள் ! இழிவாக நினைக்காதீர்கள்.! இயற்கை உண்மையான இறைவனை தொடர்பு கொள்ளுங்கள்,உயிர்களின் மேல் அன்பு,தயவு, கருணையை இடைவிடாது கடைபிடியுங்கள்    சத்தியமாக மரணத்தை வெல்லமுடியும்.எல்லாம் உண்மையாக நடக்கும் ,மனிதனாக பிறப்பு எடுத்த அனைவருக்கும் கிடைக்கும் 

முதலில் மனிதனாக வாழ்ந்து பின் அருளைப் பெற்று மரணத்தை வெல்வோம்

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேல்
கைபேசி ;--9865939896 ...


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு