திங்கள், 30 மார்ச், 2015

வல்லவன் பூட்டிய பூட்டை உடைத்து எறிந்தார் !

வல்லவன் பூட்டிய பூட்டை உடைத்து எறிந்தார் !
இந்த உலகத்தில் சாதி,சமயம்,மதம் என்ற பொய்யான கற்பனை கலைகளை கதைகளாகக் கற்பித்து,மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி பொய்யான கற்பனைக் கடவுள்களை அறிமுகப்படுத்தி யாராலும் திறக்கமுடியாத பூட்டை போட்டு மறைத்து வைத்து விட்டார்கள் .
அந்த வல்லவன் பூட்டிய பூட்டை திறக்க முடியாமல் திணறிக் கொண்டு இருந்தார்கள் .
வள்ளல்பெருமான் வந்து கருணை என்னும் கருவியைக் கொண்டு அந்த பூட்டை உடைத்து எரிந்து விட்டு,அன்பு ,தயவு,கருணை என்னும் பூட்டை போட்டுள்ளார் .
ஒழுக்கம், அன்பு ,தயவு,கருணைக் கொண்டு,அருளைப் பெற்று யார் வேண்டுமானாலும் அந்த பூட்டை திறந்து உள்ளே போகலாம் என்று உலக மக்களுக்கு அனுமதி வழங்கி உள்ளார் .
இவை உலக மக்களுக்கு கிடைத்து உள்ள ஆன்ம சுதந்திரமாகும்.
இந்த மாயை உலகில் கொடுத்துள்ள தேக சுதந்திரம்,போக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம் ,போன்ற மூவகை சுதந்திரங்களையும், தூக்கி எரிந்து விட்டு.கருணை நன் முயற்சியால் ஆன்ம சுதந்திரம் பெற்று .
மெய்ப்பொருளான இறைவனை மறைத்துள்ள அருள் கோட்டையின் கதவைத் திறந்துக் கொண்டு ,நமது தந்தை அருட்பெருஞ்ஜோதியின் இல்லத்திற்கு செல்வோம் .
இனிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல எந்த தடைகளும் இல்லை .
கருணை ஒன்றினால் மட்டுமே கதவை திறந்து உள்ளே போக முடியும் என்ற உண்மையை உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார் நமது வள்ளல்பெருமான் அவர்கள்.
தடையற்ற சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியை கடைபிடித்து செல்வோம் வெல்வோம் .
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு