வியாழன், 26 மார்ச், 2015

வள்ளலார் சிற்றம்பலக் கல்வி கற்றது !

வள்ளலார் சிற்றம்பலக் கல்வி கற்றது !

உலகில் சாகாக் கல்வி,சாகாக் கலை ,சாகாத்தலை ,என்றெல்லாம் உள்ள சொல் வழக்கு சித்தர்கள் காலத்திலே இருந்து தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வருகின்றது.

அனால் இதை எல்லாம் மீறி வள்ளலாருக்கு ஆண்டவர் சிற்றம்பலக் கல்வி  என்றொரு கல்வியைக் காட்டி கற்றுக் கொடுத்து உள்ளார்.

அந்தச் சிற்றம்பலக் கல்வியில் மட்டும் தான் இயற்கை உண்மையின் அடிப்படையாகிய கருணை என்பது உள்ளது.அதுவே கடவுள் மயமானது.தன்னைப் போலவே வள்ளலாரையும் ஆக்க நினைத்த ஆண்டவர் அவருக்குச் சிற்றம்பலக் கல்வியைக் கற்பித்தார் .

இதுவரை தோன்றிய ஞானிகள் யாரும் இயற்கை உண்மைக் கருணையை,அதன் விரிவை ,அனகத்தை,விளக்கத்தைக் கூறி இயற்கையில் உள்ள கருணையே ஆண்டவர் என்று அறிந்து கொள்ளவில்லை.என்பது அறிவைக் கொண்டு தெரிந்து கொள்ளவேண்டும்.

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி !

என்ற அகவலில் இதற்கு சரியான சான்றாகும்.

அந்தச் சிற்றம்பலக் கல்வியுள் கருணை மட்டும் அல்ல ,ஐந்து பெரிய நிலைகள் உள்ளன.அவை வருமாறு ;--

1,சிற்றம்பலக் கல்வியைக் கற்றது.
2,அதனுள் இருந்தே ஒரே நிலையாகிய கருணை நெறியையே தன்னதாகப்
   பெற்றது.
3,எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம் பெற்றது .
4,யாராலும் அடைய முடியாத உயர் நிலையைப் பெற்றது .
5,உலகில் பிற நிலையைப் பற்றாது ,சிவானாந்தப் பற்றையே பற்றாகப்      பற்றியது.

என இவ்வைந்தையும் சிற்றம்பலக் கல்வியுள் இருந்து வள்ளலார் பெற்றார் .பெற்றுக் கொள்ளும்படி ஆண்டவர் சிற்றம்பலக் கல்வியைக் கற்பித்தார் .

பாடலைப் பாருங்கள் .

கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணை நெறி
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம்
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்று எனப் பற்றினனே !

இதுபோல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யாருக்காவது சிற்றம்பலக் கல்வியைக் கற்பித்து அதனுள் உள்ள ஆற்றல்களைப் பெறுமாறு  பெற்றுக் கொண்டால் வள்ளலார் போல் நாமும் மரணத்தை வெல்லலாம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.


  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு