புதன், 3 செப்டம்பர், 2014

ஈரோடு செ,கதிர்வேல் வாழ்த்துக்கள் !

ஈரோடு செ,கதிர்வேல் வாழ்த்துக்கள் !

மலேசிய நாட்டில் நடைபெறும் சுத்த சன்மார்க்க மாநாட்டில் இரண்டு ஆண்டுகளாக கலந்து கொண்டு அருள் பேருரை ஆற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

மருத்துவர் லலிதா வீரய்யா அவர்கள் எனக்கு மூன்று ஆண்டுகளாகத் தெரியும். நான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீதும் வள்ளல்பெருமான் மீதும் கொண்டுள்ள பற்றுதலையும்,சுத்த சன்மார்க்க சொற் பொழிவுகளையும்  கேட்டு அறிந்து தொடர்பு கொண்டார்கள்

அவசியம் எங்கள் மலேசிய நாட்டில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்டு சொற்பொழிவு செய்ய வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார்கள்  அதற்கு மேல் நீங்கள் ஒரு புத்தகம் எழுதி மாநாட்டில் வெளியிட வேண்டும் என்ற அன்பு கட்டளையும் இட்டார்கள் .அவர் அன்பின் வெளிப்பாடாக சென்ற ஆறாவது ஆண்டு  மாநாட்டில்,''வள்ளலாரின் அருள் மொழிகள் ''என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு  மேலும் மாநாட்டில் கலந்து கொண்டு சொற்பொழிவு நிகழ்த்தியதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

அதேபோல் இந்த ஆண்டும் ஏழாவது மாநாட்டில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றுவதோடு புத்தகமும் வெளியிட வேண்டும் என்ற அன்பு கட்டளை இட்டார்கள் ,அதை சிரமேற் கொண்டு .இந்த ஆண்டும்  .''வள்ளலார் அருளிய வழிபாடும் ஒழுக்க நெறிகளும்'' என்ற தலைப்பில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .

மறுத்தவர் லலிதா வீரய்யா அவர்கள் ஒரு சிறந்த சிந்தனை உடையவர் .அவர் எப்போதும் எறும்பு போல் சுறுசுறுப்பாகவே இருப்பார்,இடைவிடாது  உழைத்துக் கொண்டே இருப்பார் .அது மட்டும் அல்ல அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீதும் வள்ளல்பெருமான் மீதும்,தீராத காதல் (அன்பு ) கொண்டவர்.

வள்ளல்பெருமான் கொளகைகளை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்,தெரிந்து கொள்ளவேண்டும் அதன்படி மக்கள் வாழ்ந்து இறைவன் அருளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்  என்ற ஆவல் கொண்டுள்ளார் .அதற்காக இடைவிடாது செயல்பட்டுக் கொண்டே உள்ளார் .அதற்காக தன்னையே அர்பணிப்பு செய்து கொண்டுள்ளார் என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது .

அவருடைய எண்ணமும் சொல்லும் செயலும்  உலகம் எல்லாம் பரவ வேண்டும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று
மக்கள் மகிழ்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் .

மருத்துவர் லலிதா வீரய்யா அவர்கள்  நீண்ட ஆயுள் ,நிறைந்த செல்வம் அழியாப்புகழ் பெற்று என்றும் நீடுழி  வாழ்வதற்கு அருள் புரிய வேண்டும் என்று ,எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிக் கொள்கிறேன்.

லலிதா வீரய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த உளமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என்றும் நலமுடன் வாழ்க !

ஆன்மநேயன்
ஈரோடு செ,கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
108,C, நந்தா இல்லம்
வய்யாபுரி நகர்
வள்ளலார் வீதி
46,புதூர் அஞ்சல்
ஈரோடு தமிழ்நாடு .638002,
SELL ..9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு