திங்கள், 25 ஆகஸ்ட், 2014

வரலாறை படித்து என்ன பயன் ? !

வரலாறை படித்து என்ன பயன் ? !
வரலாறுகளைப் படித்து என்ன செய்யப்போகிறோம். .வரலாறுகள் தான் மக்களை அழித்து கொண்டு உள்ளன ,வரலாறுகள் தான் மக்களை பிரித்து உள்ளன .வரலாறுகள் தான் மக்களை முட்டாள்களாக மாற்றி உள்ளன.வரலாறுகள் தான் கொலை கொள்ளை கற்பழிப்பு ,போன்ற செயல்களுக்கு வழிகாட்டி உள்ளன .
மேலும் உயர்ந்தவன் தாழ்ந்தவன்,ஏழை பணக்காரன் போன்ற கொடூரமான பிரிவை உருவாக்கி உள்ளது.
சாதி,சமயம்,மதம் போன்ற பொய்யான கற்பனைக் கதைகளை காட்டி நாட்டை கெடுத்து நாசமாக்கி வைத்துள்ளது.எந்த வரலாறுகளும் மனிதனை மனிதனாக வாழ வைக்கவில்லை.
மனிதன் உயர்ந்த அறிவு படைத்தவன் .அவனுடைய அறிவுக்கு வேலைக் கொடுக்காமல்.மாற்றான் அறிவை காப்பி அடித்து தன்னுடைய அறிவை மழுங்க வைத்து விடாதீர்கள்
சுய சிந்தனையும் சுய அறிவையும் பயன் படுத்துங்கள் அதில் அளவிடமுடியாத பொக்கிஷங்கள் அடங்கி இருககின்றன
வரலாறுகள் நம்முடைய அறிவை மறைத்து கொண்டு இருக்கும் திரைகள்
திரையை அகற்றி ஆன்ம அறிவை பயன் படுத்துங்கள் .வரலாற்றை மாற்றி விடுவீர்கள் .
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு