புதன், 3 செப்டம்பர், 2014

மருத்துவர் லலிதா வீரய்யா வாழ்த்துக்கள் !


மருத்துவர் லலிதா வீரய்யா வாழ்த்துக்கள் !

உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை சுத்த சன்மார்க்க மாநாட்டில் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் .

மலேசியாவில் நடைபெறும் ''ஏழாவது ''சுத்த சன்மார்க்க மாநாட்டில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் .வள்ளல்பெருமானும் தலைமை ஏற்று நடத்தும் இம் மாநாட்டிற்கு வருகைதரும் உங்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேகிறேன்.

உலகில் இன்றைக்கு நடை பெற்றுக் கொண்டு இருக்கும் ,சாதி, சமய மதக் கொள்கையினால் மக்கள் ஒன்றுபடாமல் வேறு வேறாக பிரிந்து அவதிப் பட்டுக் கொண்டுள்ளார்கள் .அவர்களை ஒன்று படுத்தி நல்வாழ்வில் வாழ வைக்க வேண்டும் என்ற பெரும் கருணையோடு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமானை இந்த பூவுலகில் வருவிக்க உற்றார் .

வள்ளல்பெருமான் காட்டிய கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டுள்ள நான் !அவர் காட்டிய ஒழுக்க நெறிகளை கடைபிடித்து , மக்கள் அனைவரும்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் இருந்து அருளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற பேராசையினால் மலேசிய நாட்டில் சுத்த சன்மார்க்க மாநாட்டை நடத்தி வருகிறேன்.அதுவே எனக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் வள்ளல்பெருமானும்  இட்ட கட்டளையாகக் கருதுகிறேன் .

அதேபோல் இம் மாநாட்டிற்கு சொற்பொழிவு ஆற்ற வரும் ஆன்மீக சான்றோர்களையும்,இசைக் கலைஞர்களையும்,சிறப்பு விருந்தினர்களையும் அதை பார்க்க கேட்க வரும் பொது மக்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்பதில் பெரு மகிழ்சசி அடைகிறேன்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் இம் மாநாட்டின் முத்தாய்ப்பாக ஈரோடு செ,கதிர்வேல் ஐயா எழுதிய அருள் நூல்கள் வெளியிடப் படுகிறது.இந்த மாநாட்டில் ''வள்ளலார் அருளிய வழிபாடும் ஒழுக்க நெறிகளும் '' என்ற தலைப்பில் வெளியிடப் படுகின்றது . அதைக் கேட்டு வாங்கி படித்து பயன் பெருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.புத்தகம் எப்போதும் எங்களிடம் கிடைக்கும் .

நன்றி வாழ்த்துக்கள் .

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே வழிபாடு !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அருட்பெருஞ் ஜோதி !


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு