செவ்வாய், 16 செப்டம்பர், 2014

அமுதம் சுரக்கும் போது உண்டாகும் மாற்றங்கள் !

அமுதம் சுரக்கும் போது உண்டாகும் மாற்றங்கள் !


வள்ளல்பெருமான் மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் என்பதை அறிந்து ,உணர்ந்து அதன்படி வாழ்ந்து காட்டி, உலக மக்களை அன்புடன் அழைக்கின்றார் .ஆனால் அப்போது வள்ளலாரிடம் இருந்த அணுக்கத் தொண்டர்களுக்கு ,வள்ளலார் சொன்ன மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது எவருக்கும் தெரிந்ததாக தோன்றவில்லை.

உடம்பும் உயிரும் ஆன்மாவும்.!

உடம்பை விட்டு உயிர் பிரிந்தால் அதற்குப் பெயர் மரணம் .உடம்பை விட்டு உயிர் பிரிந்து வேறு ஒரு தேகம் எடுத்துக் கொள்ளும்..ஆனால் எந்த தேகம் கொடுக்கப்படும் என்பது வெளியில் யாருக்கும் தெரியாது .

ஒரு மனிதனின் உடம்பை விட்டு உயிர் பிரிய போவதற்கு முன் வாய் அடைத்து பேசமுடியாமல் செய்து ,உயிர்போகும் தருவாயில் அவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்த போது செய்த செயல்பாடுகளான நல்லது கெட்டது அனைத்தும் அவர்களுக்கு டிவி திரையில் போட்டு காட்டுவது போல் காட்டப்படும் .அவர்களுக்கு அடுத்த பிறவி என்ன என்பதும் தெரிவித்த பின்தான் உடம்பை விட்டு உயிர் பிரியும்.

நாம் செய்த நல்வினை தீவினைக்கு தகுந்தாற் போல் பிறவிகள் கொடுத்துக் கொண்டே இருக்கும் .

பிறப்பை நிறுத்தும் வழி !

வள்ளல்பெருமான் பிறப்பு இல்லாமல் ,இறப்பும் இல்லாமல் வாழும் வழியைக் கண்டு பிடித்தார் .சமய வாதிகள் மீண்டும் பிறப்பு இல்லாமல் வாழும் வழியை இறைவனிடம் கேட்டார்கள்...வள்ளல்பெருமான் அவர்கள் இறப்பு வந்தால் பிறப்பு உண்டு என்பதை அறிந்து கொண்டார் ,ஆதலால் எனக்கு இறப்பு வராமல்.பிறப்பும் வராமல் வாழும் வழியைக் காட்டவேண்டும் .அந்த ரகசியத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்ட வள்ளலார் .யாரிடம் கேட்டால் இவை கிடைக்கும்,எந்தக் கடவுள் இதற்கு தகுதியானவர் .இவற்றை கொடுக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளன என்பதை பூரணமாக அறிந்து, எல்லாம் வல்ல தனித்தலைமை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து அவரிடமே,சரண் அடைந்து,அழுது புலம்பி,அருளால்தான் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்கிறார் .

அதற்கு சான்றானப்பாடல் ! (தற்சுதந்தரம் இன்மை ) பாடல் ஆறு .

சாவது என்றும் பிறப்பது என்றும் சாற்றுகின்ற பெரும் பாவம் தன்னை எண்ணி
நோவது இன்று புதியது அன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி
ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே யாகும் மற்றை இறைவராலே
ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இச்சிறியேனால் ஆவது என்னே !

என்னும் பாடல் வாயிலாக, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே முடியும் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துகின்றார் .

அதன்பின் அருள் சுரக்கும் வழியை அறிந்து கேட்டு மரணத்தை வெல்லும் வழியை பெறுகின்றார் .

அருள் ....வெளியில் எங்கும் இல்லை ! ஒவ்வொரு ஆன்மாவிலும் அருளை இறைவன் வைத்துள்ளார் . அதை திறந்து எடுக்கும் வழி தெரியாமல் அலைந்து,அலைந்து வீணே அழிந்து கொண்டுள்ளோம் .அதற்கு அடிப்படைக் காரணம் .

ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் ,அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை.அவன் பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்க வில்லை.இது வரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை .

முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும் உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கின்றார்கள் .

மறைத்தவனும் இறுதி வரையில் உண்மையை சொல்ல வில்லை.அவனுக்கு பின்னாடி வந்த வேதம் ,ஆகமம்,புராணம்.இதிகாசம்,சாத்திரம் போன்ற நூல்களை படித்து ,மக்களுக்கு போதித்த பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டவர்கள் யார் ?



அருள் சுரக்கும் வழி ! 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு