வியாழன், 12 ஜனவரி, 2012

பொங்கல் வாழ்த்து !

பொங்கல் வாழ்த்து !

உலகில் உள்ள அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகள்!

தமிழ் எழுத்துக்கள் உயிர் எழுத்து ,மெய் எழுத்து ,உயிர் மெய் எழுத்துக்கள் என்று மூவகைப்படும் ,உலகில் உள்ள ஜீவன்கள் அனைத்திற்கும்,உயிர் இருக்கிறது ,உடம்பு இருக்கிறது ,உயிரையும் உடம்பையும் இயக்கும் இயற்கை உண்மையான ஆன்மா என்னும் {ஆயுதம் }இருக்கிறது அதுதான் ஆயுத எழுத்து என்பதாகும் .அதுவே கடவுளாகும் அது ஒளியாக உள்ளது.

அதனால் அனைத்து உலக ஜீவன்களும் தமிழ் இனங்களே என்பதாகும் .தமிழ்  என்னும் மொழி அனைத்து உலக மக்களுக்கும் முதன் மொழி என்பதாகும் ."'சுழன்றும் ஏர் பின்னது உலகம் " என்பது ,உலகம் எப்படி சுழன்றாலும் பசி என்பது அனைவருக்கும் பொதுவானதாகும் ,அந்த பசியைப் போக்குவது விவசாயமாகும் விவசாயத் தொழிலால் உணவுப் பொருள்கள் கிடைக்கிறது .உணவுப் பொருளால் அனைத்து மக்களுக்கும் பசியை போக்கப் படுகிறது .


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர் !

ஆதலால் இந்த உலகில் விஞ்ஞானம்,அறிவியல் ,அரசியல்,ஆன்மீகம்  நாகரீகம் எவ்வளவு வளர்ந்து இருந்தாலும்,அனைத்தும் உணவுக்காக விவசாயத்தின் பின்தான் செல்ல வேண்டும் என்பது, அனைவரும் அறிந்த உண்மையாகும் .

விவசாயமே! ஊழல்,லஞ்சம் ,ஏமாற்றுதல் அல்லாத நேர்மையான தொழிலாகும். ஆதலால் அவர்களே வழிபடும் தெய்வமாகும் .விவசாயத்தின் பின்தான் அனைத்து உலகமும் செல்ல வேண்டும் என்பது இறைவன் கட்டளையாகும் .  

பசியைப் போக்குவதால் விவசாயத்திற்கு முதலிடம் கொடுத்து தைப் பொங்கல் விழா தமிழர்களால் வகுக்கப் பட்டது, தமிழர் திருநாள் என்பதை விட உலகில் உள்ள அனைவரும் தைப பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

ஒவ்வொரு குடும்பமும் குழந்தைகளும் புத்தாடை உடுத்தி புதுப் பொங்கல் வைத்து அனைவரும் பகிர்ந்து உண்டு மகிழ்ச்சியுடன் தைப பொங்கலைக் கொண்டாடுவோம்.

துன்பமும், துயரமும், அச்சமும், பயமும் இல்லாமல் எல்லா உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அருளை வேண்டி இந்த பொங்கல் திரு நாளில் பிரார்த்தனை செய்வோம் .

அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் ..
அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் .மனம் மலரட்டும் .

அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு