ஞாயிறு, 8 ஜனவரி, 2012

அருளும் !பொருளும் !


அருளும் !பொருளும் !

அருளும் !பொருளும் !

முதலில பொருளைப் பற்றி பார்ப்போம் !

இந்த உலகத்தில் வாழ்வதற்கு பொருள் தேவைப்படுகிறது .பொருள் இல்லாமல் எந்த உயிரும் வாழ முடியாது .அந்தப் பொருள் எதுவாக இருகிறது என்றால் ,நீர், ,நிலம், ,அக்னி, ,காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது தான்.  அதிலே, இயங்கும் பொருள், இயங்காதப் பொருள் என்றும், உயிர் உள்ளப்பொருள், உயிர் இல்லாதப் பொருள் என இருவகைப்படும் கல்லும் மண்ணும் உயிர் இல்லாதப்பொருள் .மற்றவை எல்லாம் உயிரில் இருந்து உருவாகும் பொருள்களாகும் .

எல்லா ஜீவன்களுக்கும்,இந்த உலகத்தில் உடம்பும் உயிரும் வாழ்வதற்கு, பொதுவாக உணவு என்னும் பொருள் தேவைப்படுகிறது. அந்த பொதுவான உணவு எது என்றால் ,கடவுளால் படைக்கப் பட்ட தாவரங்களாகும்.அந்த தாவரங்களையும் வேரோடு பிடுங்கி எந்த ஜீவன்களும் உணவாக உட் கொள்ளக் கூடாது என்பது இறைவன் வகுத்த சட்டமாகும். .தாவரங்களில் இருந்து கிடைக்கும் பூ, காய், கனி,இலை என்னும் கீரை வகைகளாகும் .இந்த பொருள்கள் தான் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக கிடைக்கும் நியதி ஆகாரமாகும் .இதுதான் இறைவன் கட்டளையாகும் .

நாம் அனைவரும் இறைவன் விதித்த கட்டளைப் படி உணவை உண்கிறோமா ? என்பதை நாம் அறிவு முலமாக சிந்திக்க வேண்டும் .

உலகில் உள்ள ஜீவன்கள் எதுவும் { மனிதனைத் தவிர }சேமித்து வைப்பதில்லை ஏன்அவைகள் சேமிப்பதில்லை அவைகளுக்கு வேண்டிய உணவு தங்கு தடை இல்லாமல் உயிர் உள்ளவரை கிடைக்கிறது. .இவை தாவரங்கள் முதல் மிருகங்கள் வரை இந்த உலகத்தில் வாழ்வதற்கு இறைவனால் படைக்கப் பட்டதாகும் .இதற்குப் பெயர் பொருள் உணவு என்பதாகும் .

மனிதன் !

மனிதப் பிறவி, உயர்ந்த பிறவி, என்று எல்லோராலும் பேசப்படுகிறது எல்லா ஞானிகளும் அப்படித்தான் சொல்லி உள்ளார்கள் ,ஏன் மனிதப் பிறவி மட்டும் உயர்ந்தது என்பதை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

உயிர்களைப் படைத்த இறைவன் உயிர்களின் பரிணாமப் பிறவி என்னும் தாவரங்கள் தொடங்கி மிருகப் பிறவி முடிந்து மனிதப் பிறவி வரை தான் அதாவது தோற்றம், வாழ்க்கை, மாற்றம் இருக்க வேண்டும் என்பதாகும்.இதைத்தான் பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்று சொல்லிக் கொண்டு
 உள்ளார்கள் இதை உண்மை என்று எல்லா ஞானிகளும் சொல்லிக் கொண்டு உள்ளார்கள்..

சாவதும் ,பிறப்பதும், தாவரம் முதல் மிருகப் பிறவி வரைதான்,மனிதப் பிறவி எடுத்ததின், கொடுத்ததின் நோக்கம் எதற்க்காக என்றால் இந்த உலகத்தில் பொருளைத் தேடி வாழ்வதற்கு இல்லை, அருளைத் தேடி, அருளை உணவாக உண்டு,நம்மை படைத்த தந்தையாகிய அருட்பெரும்ஜோதி என்னும் உண்மைக கடவுளின் உண்மையை அறிந்து கடவுளின் வீட்டிற்கு செல்ல வேண்டும் அதாவது எங்கிருந்து வந்தோமோ அங்கு செல்ல வேண்டும் என்பதுதான், கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்

மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை மண்ணாசை,
பொன்னாசை ,பெண்ணாசை,என்ற ஆசைக்காக வாழ்க்கையையே வீணாக்கிக் கொண்டு வாழ்ந்து அழிந்து விடுகிறான் .

இந்த அற்ப ஆசைக்காக பண்ணாத தீமைகளே கிடையாது செய்யாத குற்றங்களே கிடையாது .அழிந்து போகும் பட்டம் ,பதவி, புகழ், என்ற அற்ப புகழ்ச்சிக்காக, எத்தனை உயிர்களை கொன்று தின்று வாழ்ந்து வருகிறார்கள் .தான் புகழோடு வாழ்வதற்கு எத்தனை குடி மக்களின் உழைப்பை அழித்து,அவர்களின் ரத்தத்தை உயிரோடு உறுஞ்சி குடித்துக் கொண்டும் இருக்கிறார்கள் .

பொருளுக்காக இந்த உலகில் உள்ள மனித தேகம் படைத்த அனைத்து மனிதர்களும் இன்பமும் துன்பமும் அடுத்து அடுத்து எண்ணி எண்ணி இளைத்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள் .பொருள்தான் வாழ்க்கை என்று உண்மை தெரியாமல் அழியும் பொருள் மேல் அதிக இச்சை வைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .

மனிதர்கள் மேல் குற்றம் இல்லை !

பொருள் மேல் அதிக ஆசையும் அன்பும் வைத்து வாழும் மக்கள் குற்ற வாளிகள் அல்ல, அவர்களுக்கு வழி காட்டியவர்கள் தான் குற்ற வாளிகள் வழி காட்டியவர்கள் யார் தெரியுமா ?

ஆன்மீக சிந்தனை யாளர்கள் தான் குற்றவாளிகள் ,கடவுளின் பெயரால் சாதி,சமயம், மதம், ,சாத்திரங்கள், என்ற பெயரால் பொய்யான கற்பனைக் கதைகளை மக்கள் மத்தியில் விதைத்து விட்டார்கள் .கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் பொருளின் இச்சையால் வாழ்வது போல் சித்தரித்து விட்டார்கள்.

கடவுளை மனித உருவம் போல் படைத்து வைத்து ,கடவுளுக்கு மனைவி மக்கள் குடும்பம் குழந்தைகள் ஆட்சி அதிகாரங்கள்,மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை இருப்பது போல் கற்பனை கதைகளை எழுத்து வடிவமாக வடித்து வைத்து விட்டார்கள் .அதையே மக்கள் உண்மை என்று நம்பி இன்றுவரை வாழ்ந்து வருகிறார்கள் .

இதுமட்டுமா இந்துமதம் ,இஸ்லாம் மதம் ,கிருத்தவ மதம் ,பவுத்தமதம் .போன்ற பலவகைப்பட்ட மதங்கள் .இந்த உலகில் உலா வருகின்றன.ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு கடவுள் என பல கடவுள்கள் இந்த உலகத்தை ஆண்டு கொண்டு உள்ளார்கள் .இதில் எந்தக் கடவுள் உண்மையானக் கடவுள் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது ஒவ்வொரு மதத்தையும் ஒவ்வொரு கூட்டம் பிடித்துக் கொண்டு உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் போல்,ஒவ்வொரு கடவுளுக்கும் கட்சிகள் உண்டு .அதுமட்டுமா !மதங்கள் பெயரால் தெய்வங்கள் பெயரால் சமயங்கள் பெயரால் ,சாத்திரங்கள் பெயரால் கோத்திரங்கள் பெயரால் ,ஆதியில் இருந்து இன்றுவரை போரிட்டு அழிந்து வீண் போய் கொண்டு உள்ளார்கள் .இதை நிறுத்த தடை செய்ய .இதை ஒழிக்க எந்த மனித சட்டங்களாலும் .மத சட்டங்களாலும் முடிய வில்லை .இதற்கு எல்லாம் யார் காரணம் .?

கடவுளைப் படைத்த மத வாதிகளும் சமயவாதிகளும் தான் காரணம் கலை உரைத்த .கற்பனை கதைகளை நிலை எனக் கொண்டாடும் கண் மூடி பழக்கம்  எல்லாம் குழியைத் தோண்டி மண்ணைப் போட்டு மூடும் காலம் எப்பொழுது வருமோ தெரிய வில்லை .மக்கள் எப்போது உண்மையான கடவுளை அறிந்து கொண்டு மனிதனாக வாழப் போகிறார்களோ தெரிய வில்லை .

இத்தனை இன்பத்திற்கும் துன்பத்திற்கும் போராட்டத்திற்கும் அடிப்படைக் காரணம் பணம் என்னும் பொருள் தான் காரணமாகும் .

கோடி கோடியாக பொருளை வைத்துக் கொண்டு அருளைத் தேடுகிறார்கள் .பொருளை வைத்துக் கொண்டு அருளைத் தேடினால் அருள் கிடைத்து விடுமா ?அருள் என்பது விலை கொடுத்து வாங்கும் பொருளா? ?பொய்யானக் கடவுள் களுக்கு ஆலயங்களை கட்டி வைத்து ,அதிலே கல்லிலும் மண்ணிலும் ,செம்பிலும் ,தங்கத்திலும் விக்கிரங்கள் செய்து வைத்து அதுதான் கடவுள் என்று மக்களை நம்ப வைத்து மக்களை ஏமாற்றி பிழைத்துக் கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம்..அதையே உண்மை என்று நம்பி ஆட்டு மந்தைகள் போல் பின் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள் .

பசியோடு வாழும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யாமல் .கொள்ளை அடித்த லஞ்சம் வாங்கிய ,ஊழல் செய்த பணத்தை அந்த பொம்மைக் கடவுளின் உண்டியலில் கொட்டுகிறார்கள்,அந்த பொம்மைக் கடவுள் இவர்களை காப்பாற்றுவாரா ? படித்து பட்டம் வாங்கியவர் முதல் அறிவியல் ,விஞ்ஞானிகள்.ஆணு ஆராய்ச்சி யாளர்கள், அரசியல் மேதைகள் .ஆன்மீக சித்தனையாளர்கள் .ஆட்சியாளர்கள் ,படிப்பு அறிவு இல்லாத சாதாரண மனிதர்கள் வரை இதே வேலையை செய்து கொண்டு உள்ளார்கள் .இவர்களின் அறியாமையை என்ன வென்று சொல்வது. இவர்களை காப்பாற்றுவதுதான் யார் ?நாம் சிந்தித்து பார்க்க வேண்டாமா !

பொருள் ;-

அழியும் பொருளைக் கொண்டு அழியா அருளை பெற முடியாது !

பொருள் உடம்பையும் உயிரையும் மாற்றிக் கொண்டே இருக்கும் !

பொருள் துன்பமும் துயரமும் துக்கமும் தந்து கொண்டே இருக்கும் !

பொருள் அச்சமும் பயமும் தந்து கொண்டே இருக்கும் !

பொருள் நிலை இல்லாத அழிந்து போகும் சிற்றின்பத்தை தரும் !

பொருள் தன்னைக் காட்டிக் கொடுத்து விடும் !

அருள் என்னும் அமுதம் ;--

அருள் அமுதம், உடம்பையும் உயிரையும் அழியாப் பொன் உடலாக மாற்றும் !

அருள் அமுதம், அழியும் ஊன உடம்பை அழியா ஒளி உடம்பாக மாற்றும் !

அருள் அமுதம், என்றும் அழியாத பேரின்ப பெரு வாழ்வைத் தரும்!

அருள் அமுதம்,  மரணம் இல்லாத மரணம் இல்லா பெருவாழ்வைத் தரும் !

அருள் அமுதம் எக்காலத்திலும் தன்னைக் காட்டிக் கொடுக்காது !.

அருள் அமுதம் என்பது என்ன ?..

அருள் அமுதம், என்பது என்ன என்பதைப் பார்ப்போம் .

அருள் என்பது இறைவனால் கொடுக்கப் பட்ட மாபெரும் பொக்கிஷமாகும்.இறைவனால் படைக்கப் பட்ட அனைத்து உயிர்களுக்கும் சமமாக அருள் என்னும் பொருள் வழங்கப் பட்டுள்ளது .

ஆன்மா என்பது என்றும் அழியாதது அது உருவம் அற்றது ஒளியாக உள்ளது .ஆன்மாக்கள் உயிர் பெற்று வாழ்வதற்குத் தான் இந்த மாயா உலகம் படைக்கப் பட்டதாகும் .ஆன்மாக்கள் பொருளை விரும்பினால் இந்த உலகத்தில் எத்தனை கோடி ஆண்டுகள் வேண்டு மானாலும் வாழலாம்

இந்த உலகத்தில் ஆன்மாக்கள் உடம்பு இல்லாமல் வாழ முடியாது .உடம்பு எடுத்தாலே உயிர் வந்து விடும் .உயிர் என்பது வேறு! ஆன்மா என்பது வேறு !ஆன்மாவுக்கு மூன்று சுதந்திரம் கொடுக்கப் பட்டுள்ளது

அவை தேக சுதந்தரம் ,போக சுதந்தரம் .ஜீவ சுதந்தரம் ,இந்த மூவகை சுதந்தரமும் உள்ளதால்தான் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து உருவம் மாறிக் கொண்டே இருக்கின்றன .இதில் நிரந்தரமான இன்பமும் துன்பமும் நிலைத்து நிற்காது .வாழ்க்கையின் செயல் பாடுகளுக்கு தகுந்தாற் போல் நன்மையையும் தீமையும் ஆன்மாவில் பதிவாகிக் கொண்டே இருக்கும் .

இதைத்தான் நன்மையையும் தீமையும் பிறர் தர வாராது என்பார்கள் இதைத்தைதான் பாவம் புண்ணியம் என்பார்கள் .பாவம் புண்ணியம் என்பது கிடையாது .நன்மை செய்தால் நன்மையையும் ,தீமை செய்தால் தீமையும் வந்தே தீரும் .நன்மை வந்தால் மகிழ்ச்சி அடைகிறோம் ,தீமை வந்தால் துன்பம் அடைகிறோம் .இது ஏன் ?

இந்திரியங்க்களோ ,கரணங்களோ ,ஜீவனோ இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிப்பதில்லை .ஆன்மாதான் அனுபவிக்கின்றது கண், காது, மூக்கு,வாய்,மெய் என்னும் உடம்பு போன்ற இந்திரியங்களும் ,மனம் ,புத்தி ,சித்தம் அகங்காரம் போன்ற கரணங்களும் .உயிர் என்னும் ஜீவனும் ,ஆன்மாவிற்கு புறக் கருவிகளேத் தவிர {அதாவது ஜடங்களே, வேறு எந்த அனுமானமும் கிடையாது ..அதனால்தான் உடம்பை விட்டு ஆன்மா சென்று விட்ட பிறகு எந்த அவயங்களும் இயங்குவதில்லை வேலை செய்வதில்லை .

அதனால்தான் நான் யார் என்பது ஆன்மா என்னும் ஒளி என்பதாகும் ஆன்மாக்கள் எல்லாம் ஒரே தன்மை உடையது அதில் பேதமில்லை,உயிருக்கும் உடம்புக்கும் தான் பேதம் மாறிக் கொண்டே இருக்கும் இதை உணர்ந்தவர்கள் தான் ஞானிகள் என்பதாகும்

ஆன்மாக்கள் எல்லாம் இறைவன் படைப்பு உயிரும் உடம்பும் மாயையின் படைப்பு என்பதை உணர்ந்தவர்கள் உடம்பையும் உயிரையும் நேசிக்க மாட்டார்கள் ,அதன் உள் இருந்து இயங்கும் ஆன்மாவை நேசிப்பார்கள். .

இதைத்தான் நமது அருட் தந்தை அருட்பிரகாச வள்ளலார் "ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை'' வேண்டும் என்றார் அருளின் வாயிலாக ஆன்மாவைக் கண்டவர் அருளின் வாயிலாக உண்மைக கடவுளைக் கண்டவர் !பிறப்பு இறப்பு என்னும் பெருங் கடலை கடந்தவர்.என்றும், அழியாத ஒளி தேகம் பெற்றவர், மரணம் இல்லா பெரு வாழ்வாகிய, மரணம் இல்லா பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் .அதற்கு பெயர்தான் பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும் ,அதாவது கடவுள் நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்வதாகும் , இதுதான் இறைவனுடன் கலப்பதாகும் .

மரணம் அடைபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மறுபடியும் பிறப்பு உண்டு, இது சத்தியம் .யாரும் யாரையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள் .

செத்தபின் சிவலோகம் வைகுண்டம் கைலாயம் ,பரலோகம் சொர்க்க லோகம்,சிவகதி,மோட்ஷம் ,அடைந்து விட்டார்கள் என்பது எல்லாம் அறியாமையாகும் பித்து பிடித்தவர்கள் பேசும் பேச்சாகும் .செத்தவர்களுக்கு எந்த லோகமும் கிடையாது இந்த உலகத்திலே அவரவர்கள் செய்கைக்குத் தகுந்தாற் போல் மறுபடியும் பிறப்பு உண்டாகும் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் .

செத்தபின் சிவலோகம் வைகுண்டம் என்பார்கள் பித்த மனிதர்காள்

இறப்பு என்பது எப்பொழுது இல்லையோ அப்போது தான் பிறப்பு என்பது இல்லை அதுவரையில் பிறந்து பிறந்து இறந்து இறந்து இந்த மாயை உலகில் அலைந்து அலைந்து அழிந்து கொண்டே இருக்க வேண்டியதுதான் .

பிறப்பை ஒழிப்பதற்குத் தான் பல ஞானிகள் பல வழிகளை நமக்கு காட்டி உள்ளார்கள் ஆனால் ஒரு ஞானிகள் கூட உண்மையான நேர் வழியைக் காட்ட வில்லை உண்மையான கடவுளையும் காட்ட வில்லை .உண்மையான கடவுள் இருக்கும் இடத்தையும் காட்ட வில்லை .,உண்மையை அறிந்தால் தானே உண்மையை காட்ட முடியும் எல்லா மதங்களும் மார்க்கங்களும் உண்மைக்கு புறம்பாகவே சொல்லியும் எழுதியும் வைத்து விட்டு சென்று விட்டார்கள் நாமும் அதை வைத்துக் கொண்டு குழந்தைகள் போல் விளையாடிக் கொண்டு இருக்கிறோம்.        

அருள் எங்கு உள்ளது !

நம் உடம்பில் உள்ள தலைப் பாகத்தில் உச்சிக்கும் கீழே ,உள் நாக்கிற்கு மேலே
மூலையின் மத்தியில் ஆன்மா என்னும் ஒளி ஆற்றல்தான் உடம்பை இயக்கிக் கொண்டு உள்ளது அந்த ஒளியின் உள்ளே அமுதம் என்னும் மணிக கட்டி உள்ளது.அதை நினைந்து ,நினைந்து உணர்ந்து உணர்ந்து ,நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ,ஊற்று எழும் கண்ணீரால் உடம்பு நனைந்து நனைந்து ,அருள் அமுதே !நன் நிதியே !ஞான நடத்தரசே என் உரிமை நாய்கனே என்று,வனைந்து வனைந்து நம் உணர்வுகளை ஆன்மாவை விட்டு விலகாமல் தொடர்பு கொள்ள வேண்டும் ,அப்பொழுது தான் ஆன்மாவில் உள்ள அருள் அமுதம் நெகிழ்ச்சியால் சுரக்கும் ,

அந்த நெகிழ்ச்சிக்கு ஒருமை வர வேண்டும் ,அதாவது ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை வர வேண்டும் .

அருள் அமுதத்திற்கு பல பெயர் உண்டு, !

தனிப பொருள் ,மெய்ப் பொருள் ,பராபர இயல் ,பதவி இயல் ,சிவ ரகசியம் ,திரு அருள் வல்லபம் ,சிவ பதி,அருள் குரு,உயிர்த் தாய் ,உயிர்த் தந்தை ,உயிர்த் துணை ,உயிர் நட்பு, உயிர் உறவு, இயற்கை உண்மை ,இயற்கை விளக்கம் ,இயற்கை இன்பம் ,சத்து ,சித்து, ஆனந்தம் ,அருள் அமுதம் ,மணி,மந்திரம் ,மாற்று அறியாப் பொன் ,உலவா நிதி ,ஜோதி மலை ,இயற்கைப் பேருண்மை ,தனி அன்பு, நித்தியா விளக்கு, நிறை மதி, கருணை மழை ,செஞ்சுடர் ,அருட் கனல் ,பரஞ்சுடர் ,அருட்பெரும்ஜோதி எனப் பல பெயர்கள் உள்ளன ,

எல்லாவற்றுக்கும் சேர்ந்து ஒரு முழுப் பெயர் வைத்துள்ளார் வள்ளலார் ,பெயர் வைத்து விட்டு இவை நான் வைக்க வில்லை அந்த அருட்பெரும் ஜோதியே இப்படி வைக்க சொல்லியது என்கிறார் .

அந்தபெயர்தான் கடவுளின் உண்மையான பெயர் என்பதாகும் அதன் பெயர் !

அருட்பெரும்ஜோதி! அருட்பெரும்ஜோதி !
தனிப பெருங் கருணை! அருட்பெரும் ஜோதி !

என்பதாகும் .அதற்கு மேலும் பல பெயர் வைத்துள்ளார் வள்ளலார் !

இயற்கை உண்மையர் என்றும்,இயற்கை அறிவினர் என்றும்,இயற்கை இன்பினர் என்றும்,நிற்குண்ர் என்றும்,சிற்குனர் என்றும் ,நித்தியர் என்றும்,சத்தியர் என்றும்,ஏகர் என்றும்,அநேகர என்றும்,ஆதியர் என்றும் அநாதியர் என்றும்,அமலர் என்றும்,அருட்பெரும் சோதியார் என்றும்,அற்புதர் என்றும், நிர் அதிசியர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,எல்லாம் உடையவர் என்றும், எல்லாம் வல்லவர் என்றும், அளவு கடந்த திரு குறிப்பு திரு வார்த்தைகள் உளளன .

உருவமற்ற இறைவனை உருவமாக வழி படுவது அறியாமையாகும் .பழக்க வழக்க மாகும் .

அருட்பெரும்ஜோதி !

நாம் வாழும் உலகம் ஓர் அண்டம் என்பதாகும் .இவை போல் பல கோடி அண்டங்கள் உள்ளன ,இவ்வளவு என்று எண்ணில் அடங்கா அண்டங்களையும் இயக்கும் ஆற்றல் அதாவது சக்தி ,அருட்பெரும்ஜோதி என்னும் ஒளியிடம் உள்ளது.அந்த அருட்பெரும்ஜோதியின் குழந்தைகள் தான் ஆன்மாக்கள் }தாவரம் முதல் மனிதர் வரை உள்ள எல்லா ஜீவன்களும் அவருடைய குழந்தை களாகும் .

இந்த உலகத்திற்கு ஆன்மாக்கள் என்னும் ஒளியை அனுப்பும் போதே,அனைத்தும் மீண்டும் திரும்ப வருவதற்கு அருள் என்னும் அரும் பெரும் பொருளை ஆன்மாவில் வைக்கப் பட்டுள்ளது .இந்த உலகத்திற்கு ஆன்மாக்கள் வந்ததும் மாயை என்னும் பஞ்ச பூதங்களில் சிக்கிக் கொண்டு உலக போகங்களிலே வாழத் தொடங்கி விட்டன .

உலக இசசையில் வாழ்வதால் தன்னிடம் உள்ள அருளை அறிந்து தெரிந்து கொள்ளாமல் போய் விடுகிறது .உலக வாழ்க்கையில் துன்பமும் துயரமும் அச்சமும் உண்டாகும் காலத்தில், இந்த மனிதப் பிறவி வேண்டாம் என்ற வெறுப்பு உண்டாகிறது .வெறுப்பு உண்டாகும் போது எங்கு செல்வது என்று தெரியாமல் ஏதாவது ஒன்றில் சிக்கிக் கொள்கிறது.

அந்த சிக்கல்தான் நமக்கு வழிகாட்டிய சாதி, சமயம் ,மதம்,சாத்திரம் கோத்திரம் நாடு, மொழி இனம் போன்ற சிக்கல் களாகும் .எல்லா குற்றங் களுக்கும் அறியாமைக்கும் இவைகளே காரண காரியமாக இருக்கின்றது. இதனால் அகத்தில் உள்ள அழியா அருளைத் தேடாமல் அழியும் பொருளைத் தேடிஅலைந்து திரிந்து அழிந்துக் கொண்டே இருக்கிறோம் .

ஆண்டவரின் அருளைப் பெற்றால்தான் நன்மை உண்டாகும் என்று பல பல மதங்களும், பல பல மார்க்கங்களும் பலபல வழிமுறைகளை வகுத்து தந்துள்ளன .இதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்றால் எதிலும் உண்மை இல்லை எல்லாம் பொய்யான கற்பனைக் கதைகளையே காவியங்களாக,படைத்து ஆன்மீக வழி காட்டுதல்களாக,விஷத்தை விதைத்து விட்டார்கள் அவை வளர்ந்து முதிர்ந்து ஆழமாக ஆன்மாவில் பதிவாகி விட்டது,அந்த பதிவை லேசில் எடுக்க முடியாமல் மனித இனம் தவித்துக் கொண்டு உள்ளது.

முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்கள். உண்மை தெரியாது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கிறார்கள்.ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்ட பாடில்லை அவன் பூட்டிய கற்பனைக் கதையான பூட்டை ஒருவரும் திறக்க வர வில்லை.இதுவரைக்கும் அப்படிப் பட்டவன் பூட்டிய பூட்டை உடைத்து எறிய ஒருவரும் வரவில்லை

1823,ஆம் ஆண்டு வள்ளலார் வந்தார் 1874,ஆம் ஆண்டுக்குள் பொய்யான கற்பனைக் கதைகளான பூட்டை உடைத்து புதைத்து விட்டார். ...

இப்பொழுது மக்கள் உண்மையை உணர்ந்து கொண்டு வருகிறார்கள். வாழ்கிறார்கள் ..

 உலக வாழ்க்கையை வெறுத்து வாழ்வது வாழ்க்கை அல்ல ,உண்மையை தெரிந்து வாழ்வதுதான் வாழ்க்கையாகும் .

உண்மை தெரிந்தவர்கள் உலகை வெறுக்க மாட்டார்கள் உலக மக்களுக்கு உண்மையை தெரிவிப்பார்கள், உபகாரம் செய்வார்கள் ,அனைவரும் தன் சகோதர ஆன்மாக்கள் என்பதை உணர்ந்து ,யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்றும்,என்போல் இந்த உலகம் நன்மை பெறுதல் வேண்டும் என இறைவனிடம் வேண்டு வார்கள்

எத்துணையும் பேதம் இல்லாமல் எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமை உள்ள வர்களாய் உணர்ந்து உபகாரம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உள்ளத்தில் ஆன்மாவில் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அருள் புரிந்து அருள நடம் புரியும் இடமாகும் அவர்களே இறைவன் அருள் பெற்ற அருளாளர்கள் என்பதாகும் .அவர்களே கடவுளின் அவதாரமாகும் .

உலக வாழ்க்கையில் வாழ்ந்தாலும் உலகில் உள்ள எந்த பொருளையும் அனுபவிக்காமல், பற்று வைக்காமல்,இறைவன் திரு அருளைப் பெறுவதற்கு தனித்து இருந்து ,பசித்து இருந்து ,விழித்துக் கொண்டே இடை விடாமல் தன்னுடைய ஆன்மாவில் தொடர்பு வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் இதுவே அருளைப் பெறுவதற்கு உண்டான சாதனையாகும்,சாதனமாகும் .

ஆண்டவன் அருளைப் பெறுவதற்கு சத் விசாரம்,பரோபகாரம் என்பது மிகவும் முக்கியமாகும்.

ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடாகும் !
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடாகும் !.

கல்வி !--

சாகும் கல்வி ,சாகாக் கல்வி என இருவகை உண்டு ,பொருளுக்காக படிப்பது காகும் கல்வி,அருளுக்காக படிப்பது சாகாக் கல்வி ,இந்த உலகத்தில் சாகாக் கல்வியை அறிமுகப் படுத்தியவர் திரு அருட் பிரகாச வள்ளலார் என்பவராகும் .

சாகாக் கல்வியை கற்பதற்கு ,கடவுள் ஒருவரே என்ற உண்மையை அறியும் அறிவே அறிவாகும்,நம்மை பிடித்துக் கொண்டுள்ள ,ஆணவம் கன்மம் மாயை ,மாமாயை,பெரு மாயை ,என்னும் ஐந்து மலங்களையும் வெல்லும் வல்லபமெ ,வல்லபமாகும்.எந்த உயிர்களையும் அழிக்காமல் தன்னுடைய உயிரையும் அழிக்காமல் அனைத்து உயிர்களையும் பாது காக்கும் தொழிலே சிறந்த  தொழிலாகும் இந்த நான்கு துறைகளையும் வியந்து அடைந்து இறைவன் மேல் மா பெரும் காதல் கொள்வது தான் இன்பமாகும் அதுவே பேரின்பமாகும்.அதுவே சாகாக் கல்வியாகும் .

மேலே கண்டபடி வாழ்பவர்களுக்கு ஆன்மாவில் உள்ள அருள் அமுதம் சுரக்கும் .அந்த அருளை உண்பவர்களுக்கு எக்காலத்திலும் அழியாத,{ ஊன}உடம்பு ஒளி உடம்பாக மாறும்.அதற்கு ஒளி தேகம் என்பது பெயராகும். .அந்த தேகம் அடைந்தவர்களை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது ,நெருங்கவும் முடியாது .பார்க்கவும் முடியாது.அவர்கள் எங்கு வேண்டு மானாலும், நினைத்த மாத்திரத்தில் .செல்வார்கள் அருட்பெரும்ஜோதி ஆண்டவருக்கு உள்ள அனைத்து சத்திகளும் அவருக்கு உண்டு .

இதுவே அருளின் தன்மையாகும் இதை அனுபவித்து வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான் வள்ளலார் என்பவராகும்.

அருளுக்கும் பொருளுக்கும் உண்டான வேறுபாடுகள் சுருக்கமாக விளக்கி உள்ளேன் இன்னும் விரிக்கில் பெருகும் .

சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் .

அன்புடன் ஆன்மநேயன் ;-கதிர்வேலு


தொடர்பு முகவரி ;-
செ,கதிர்வேலு,
108,c,நந்தா இல்லம் .வள்ளலார் வீதி,
"'அருட்பா ஆராய்ச்சி மையம் ""
வையாபுரி நகர,
46,புதூர் அஞ்சல்,
ஈரோடு ,638002,
தொலை பேசி ---9865939896,----0424 2401402,    

1 கருத்துகள்:

26 ஜனவரி, 2012 அன்று AM 1:45 க்கு, Blogger Balaji கூறியது…

கருத்துக்கு நன்றி. நான் ஒருவேளை கடவுளாக இருந்திருந்தால், மக்கள் என்னை எப்படி வணங்கினாலும் அருளியிருப்பேன். காரணம் எனக்கு அவர்கள் வழி முக்கியமில்லை. தர்மம் மட்டுமே. அவர்கள் என்னை சபரி மலையில் சத்திய ஜோதியாகவும் காணலாம் அல்லது அண்ணாமலையிலும் காணலாம் அல்லது காணாமலும் இருக்கலாம். என்னை நினைத்து தர்ம நியதியுடன் வாழ்ந்தால் போதும். சதுர் வேதங்கள் போற்றும் ரூபத்தின் மேல் நம்பிக்கைள் இல்லை என்பது உங்களது தனிப்பட்ட விஷயம் அனால் பொம்மை என்று நிந்திப்பது வத்ததிற்குரியது. நான் எனது அன்னையை கடவுளாக நினைக்கலாம் அல்லது பொம்மையை கூட கடவுளாக நினைக்கலாம் என்னுடைய திருப்திக்கேற்ப. உண்மையான கடவுள் ஒருபோது அதை நிந்திக்க மாட்டார். இதோ நீ என்னை விடுத்து எதையோ கும்பிடுகிறாய். நீ இப்போதே உன்னுடைய கைகளை இழப்பை என்று பெருமை மிக்க பரமாத்மா கூறமாட்டார். சாதாரண மான ஜீவாத்மாவான நமக்கே இவ்வளவு பெருந்தன்மை இருக்கும் பொழுது, பரமத்மாவனவர் கல்யாண குணங்களுடையவர். கடவுளே இல்லை என்று அறியாமையில் போராடும் பலபேருக்கு மத்தியில் தாங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புவதும் பல ஞானார்த்தமான விஷயங்களை சிந்திப்பதும் உத்தமம். பரப்ரும்மம் ஒருபோதும் கீழ் நிலையில் சிந்திக்காது. சிவனாகவும், அல்லாவாகவும் அதுவாகவும் எதுவாகவும் நம் வாங்கலாம். பலரின் நன்மையை கருதும் தங்களை நான் மானசீகக் கடவுளாக நினைத்தாலும் கடவுள் பொறமைகொள்ள மட்டடார். ஏனென்றால் அவர் கோடி சூர்ய பிரபாவமும் லோகசமான நற்குணங்களையும் உடையவர். தவறாகில் மன்னிக்கவும். வயதில் சிறியவன்.

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு