வெள்ளி, 30 டிசம்பர், 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள் !

புத்தாண்டு வாழ்த்துக்கள் !

உலகில் உள்ள அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

உலகில் உள்ள அனைவரும் நீண்டஆயுள் , நிறைந்த செல்வம்,அழியாப்புகழ் பெற்று ஆனந்தமும் மகிழ்ச்சியும் பெற்று நலமுடன் வாழ அருட்ப்ரும்ஜோதி ஆண்டவர் அருள் புரிவார் .

சாதி சமயம் மதம் ,என்ற பேதம் இல்லாமல் ஆன்ம நேயத்துடன் வாழ்வோம் .ஒன்றே கடவுள் !அதுவே அருட்பெரும்ஜோதி! !நாம் அனைவரும் அந்த ஜோதியின் குழந்தைகள் என்ற உண்மையை உணர்ந்து ஒற்றுமையுடன் வாழ்வோம் .

எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு இறைவன் படைத்த உயிர்களை அழிக்காமல் பாது காப்போம் .எல்லா உயிர்களின் உணவுக்காக தாவரங்களை இறைவன் படைத்துள்ளார் அதிக சத்துள்ள தாவர உணவை உண்டு நோயும் ,துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் .மலரட்டும் வாழ்க்கை .

தன் உயிரைக் காக்க பிற உயிர்களை அழிப்பதால் துன்பம் சேருமோ தவிர இன்பம் வராது என்பதை உணர்ந்து உயிர்களை நேசிப்போம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்,மனம் போன போக்கில் போகாமல், அறிவினால் அறிவை அறிந்து அமைதியுடன் வாழ்வோம் .

வருகிற புத்தாண்டை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் .அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .


கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

அன்புடன் உங்களின் தோழன் ஆன்மநேயன்
கதிர்வேலு .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு