உலகம் அமைதி பெற என்ன வழி ?
ஆன்மநேய அன்புடையீர் வந்தனம்
நாம் அனைவரும் ஏதோ ஒரு லாபத்தைத் தேடி அலைந்து கொண்டுதான் இருக்கிறோம்.அது உலகியலாக இருந்தாலும் சரி,அருளைப் பெறுவதாக இருந்தாலும் சரி,.அந்த லாபம் எது என்றால்..பணம் என்னும் பொருள்தான், உலகியலில வாழ வேண்டுமானால் பொருள் தேவைப்படுவதாகும்.,அந்த பொருள் எப்படிவரும்,பலபேருடன் சேர்ந்து வாழும் நாம் பலபேருடைய கூட்டு முயற்சியினால் உருவாககப்படுவதுதான் பொருள் என்று சொல்லப்படுகிறது..அந்த பொருளை நாம் சரிசமமாக பகிர்ந்து கொள்கிறோமா?என்றால் இல்லை ஏன் இந்த நிலை உருவானது.பொருள் எல்லோருக்கும் சமம்தானே!அப்படி இருக்க ஒருவரிடத்தில் அதிகமாகவும்.ஒருவரிடத்தில் குறைவாகவும்,ஒருவரிடத்தில் ஒன்றுமே இல்லாமலும் இருப்பதை நாம் காண்கிறோம்.ஆனால் இந்த உலகத்தில் அனைவரும் ஏதோ ஒரு காரிய காரணத்தை முன்னிட்டு ஏதோ ஒரு தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறோம் யாரும் சும்மா இருந்து விடவில்லை.அப்டி இருக்க இந்த பேதங்கள் வர காரணம் என்ன?காரியம் என்ன? சிந்திக்க வேண்டும் .
இதற்கு அடிபடைக் காரணம் ஆன்மீகக் கொள்கைகள்தான் என்பது யாருக்கும் தெரியாததாகும் மக்களுக்கு தேவையான பொருள்களை தயாரிக்க தொழில்களைப் பிரித்தார்கள்,அதற்கு மனிதர்களை பிரித்தார்கள் அவர்கள் தொழிலுக்கு தகுந்தாற்போல் சாதிகளை பிறித்தார்கள்,தொழில் வளம் பெருகியது,பொருள் பரிமாற்றம் பகிர்ந்து கொள்ளப் பட்டது.அந்த பொருளை பெற்றுக் கொள்வதற்கு, [பரிமாற்றதிக்கு] பதிலாக தங்கம்,பணம்,என்ற நாணயம் தயாரிக்கப்பட்டது.அந்த நாணயம் என்னும் பணத்தைக் கொண்டு அவரவருக்கு வேண்டியப் பொருளை பரிமாற்றம் செய்து கொள்ளலாம், அந்த பணத்தைக் கொடுத்து அவரவர்கள் பொருளை பெற்றுக் கொள்ளலாம் என்ற சட்டம் உருவாக்கப்பட்டது,அந்த சட்டத்தை உருவாக்கியவர்கள்,அக்காலத்தில் இருந்த பெரியவர்கள் என்று சொல்லப்பட்ட ஆன்மீக வாதிகளாகும்,
அப்படியே வளர்ந்து வந்த தொழில்களில் பணம் யாரிடம் அதிகம் இருந்ததோ அவர்கள் பணக்காரர்கள் எனப்பட்டனர்.பணம் யாரிடம் அதிகம் இருக்கிறதோ அவர்கள் உயர்ந்தவர்கள்.அவர்கள் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்றும்,யாரிடம் பணம் குறைவாக இருந்ததோ அவர்கள் ஏழைகள், அவர்கள் கீழ் சாதிக்காரர்கள்.என்று மதிப்பிடப்பட்டது.அடுத்து பணமே இல்லாதவர்கள் மிகவும் நீழ் ஜாதிக்காரர்கள்,அவர்களை கீழ்த்தரமான வேலைகளை கொடுத்து ஒதுக்கி வைத்தார்கள்,அவர்களுக்கு ஊரை சுத்தம் செய்தல்,இறந்துபோன உயிர்களை அடக்கம் செய்தல்,ஊரில் உள்ள செய்திகளை மற்றவர்களுக்கு தண்டோரா மூலம தெரியப்படுத்துதல் போன்ற எடுபிடி வேலைகளையெல்லாம்,செய்ய சொல்லியதோடு அல்லாமல்,அவர்களை ஊருக்கு வெளியே குடி இருக்கவைத்தார்கள்,அவர்களை தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்தார்கள்.
பணம்தான் மனிதனை பிரித்து !
மனிதனாக பிறந்த அனைவரும் ஒன்று என்ற நிலை மாறி,மனிதனை மனிதன் பிரித்து வைத்தது எது ?பணம் என்னும் பொருள்தான் மனிதனை பிரித்து வைத்தது.
இவற்றை எல்லாம் பிரித்தவர்கள் யார்?ஆன்மீகவாதிகள் என்று சொல்லப்பட்ட பெரியவர்கள் அல்லவா !
அவர்கள் கற்றுத்தந்த ஆன்மீகம் இன்று வளர்ந்து மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டன. மக்கள் கதிகலங்கி அவதிப்படுகிறார்கள்.அதுமட்டுமா உண்மைக்கு புறம்பான கற்பனைக் கதைகளை உலகம் முழுவதும் பரப்பி விட்டார்கள்.அந்த கற்பனைக் கதைகளை உண்மையென்று உண்மையாகவே நடந்துள்ளது போல் ஆலயங்களையும் புண்ணிய ஷேத்திரங்களையும் கட்டிவைத்த உள்ளார்கள் அதில் பொய்யான தத்துவ உருவங்களை சிலைகளாக அதாவது கடவுள்களாக வைத்து வழிபாடு செய்ய வைத்தார்கள்,அவைகள் மக்கள் மனதில் ஆழமாக வேர் ஊன்றி பதிந்து விட்டது .
கடவுளுக்கு கை கால மூக்கு வாய் கண் உடம்பு இருக்குமா என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கிறார்கள் .கடவுளுக்கு பணம் கொடுத்து அருளைப் பெற முடியுமா ?அப்படியானால் அந்தக் கடவுள் வியாபாரியா ?என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்லமுடியும் .இப்படி கடவுளை அசிங்கப் படுத்தி விட்டார்கள் .பணம் கடவுளையும் மனிதனையும் பிரித்து வைத்து விட்டது .இவைகள் எல்லாம் யாருடைய வேலை ,உண்மையான கடவுளை மறைத்தவன் யார் ?அவனைக் கண்டு பிடித்து மக்கள் மத்தியில் நிறுத்த வேண்டும் இல்லையா?இதை யார் செய்வது ?
இதை வள்ளலார் தான் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார் !
கடவுள் பெயரைச சொல்லி ஏமாற்றும் கூட்டம் இன்று அதிகமாகி விட்டது.அதனால் மக்கள் மூட நம்பிக்கையில்,பணத்தை பறிகொடுத்து கவலைப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.இவை இந்தியாமட்டும் அல்ல உலகம் முழுவதும் நடந்து கொண்டு உள்ளது .இதை மாற்ற என்ன வழி ! என்று தெரியாமல் உலகமே திணறிக் கொண்டு உள்ளது.
சாதி மதம் சமயம் என்று வைத்துக் கொண்டு மத ஒற்றுமை வேண்டும், மத நல்லிணக்கம் வேண்டும்.என்று வாய் கிழிய பேசினால் தீர்ந்து விடுமா? ஒற்றுமை வந்து விடுமா?எக்காலத்திலும் வாராது தீராது.எத்தனை சட்டங்கள் திட்டங்கள் போட்டாலும் போட்டாலும் வேலைக்கு உதவாது .
உலகத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் ஒரே கடவுள்தான் என்ற உண்மையை உணரவைக்க வேண்டும்.எல்லோரும் இறைவனுடைய குழந்தைகள் என்பதை தெளிவுப் படுத்த வேண்டும் .சாதி மதம் சமயம் எல்லாம் பொய்யானது என்று மக்கள் அறிவு பூர்வமாக அறிய வேண்டும்.இவை அரசாங்கத்தால் ஆட்சியாளர்களால்,சட்டத்திட்டத்தால், முடியுமா என்றால் சத்தியமாக முடியாது.
இதை மக்கள் உணரவேண்டும்
இந்த உலகத்தை திருத்துவதற்கும் மாற்றுவதற்கும் இறைவனால் அனுப்பப் பட்டவர்தான் வள்ளலார் என்பவராகும் .அவர்தான் உலக உண்மைகளை மக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார் .
கடவுள் ஒருவரே !
அவரே அருட்பெரும்ஜோதியாக உள்ளார் !
சிறு தெய்வ வழிபாடு கூடாது!
தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி செய்யக் கூடாது !
புலால் உண்ணக கூடாது !
சாதி சமயம் மதம் அனைத்தும் பொய்யானது !
எவ்வுயிரையும் தம் உயிர்போல் நேசிக்க வேண்டும் .!
ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !
ஏழைகளின் பசி தவிர்த்தலே இறைவனை காணும் வழியாகும் !
வேதம் ஆகமம் புராணங்களும் உண்மையைத் தெரிவிக்காது
இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்ககூடாது!
ஜீவ கருணையே பேரின்ப வீட்டின் திறவுகோல் !
தனிமனித ஒழுக்கமே உயர்வுக்கு வழி வகுக்கும் !
மேலே உள்ளபடி ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்தால் இந்த உலகம் தூய்மை பெரும் அமைதி பெரும் ,மக்கள் மகிழ்ச்சியுடன் வாழலாம் வள்ளலார் எழுதியுள்ள திரு அருட்பாவை படியுங்கள் உலக உண்மைகள் யாவும் தெளிவாக விளங்கும் .
அன்புடன் ஆனமநேயன் கதிர்வேலு. .
 ·  · பகிர்தல் · நீக்க