உங்கள் குறிப்பு உருவாக்கப்பட்டது.
உலகம் வெப்பமயமாக என்ன காரணம் ?
ஆன்மநேய அன்புடைய நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .கருணை என்னும் மாபெரும் சக்தியை மக்களை மறந்து விட்டார்கள் .கருனையினால் தான் இந்த உலகை காப்பற்ற முடியும் என்ற உண்மையை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் .கருணை இல்லாமல் உயிர்களை கொன்றுதான் தின்றுதான் வாழ்வோம் என்ற மன அழுத்தம் மக்கள் மனதில் பரவி விட்டது.
இதனால்தான் உலகில் உள்ள துன்பங்களுக்கு காரணம் என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை .உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ,விஞ்ஞானிகள்,அறிவியல் வல்லுனர்கள்.உலக ஐநாசபை அணு ஆராய்ச்சியாளர்கள் ,மதவாதிகள் ,சமயவாதிகள் ,ஆட்சியாளர்கள் .பகுத்தறிவு சிந்தனையாளர்கள் .மனித நேயமுள்ளவர்கள் .இன்னும் பல சிந்தனையாளர்கள் .இருந்தும் இந்த உண்மையை அறியாமல் இருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு உண்மை தெரியவில்லையா ?உண்மை தெரிந்தும் இந்த உலகம் எப்படிப் போனால் நமக்கு என்ன என்று இறுமாந்து இருக்கிறார்களா?என்பது தெரியவில்லை .
ஒவ்வொரு நாளும் பல கோடி உயிர்கள் மனிதனால் அழிக்கப் படுகிறது .அந்த உயிரின் ஆற்றல் அந்த உயிரின தன்மை என்னவென்று யாருக்கும் தெரியவில்லை ,அதன் தன்மை -- ஒரு உயிரின் தன்மை ஒரு கோடி சூரிய பிரகாசம் ஆற்றல் உள்ளது .அதன் ஆற்றலை மறைத்துக் கொண்டு ஐம பூதமான மண் .நீர் .அனல்,காற்று ஆகாயம் போன்ற கருவிகளைக் ,கொண்டு உடம்பு என்னும் வீட்டைக் கட்டிக் கொண்டு இந்த உலகத்தில் வாழ்கிறது .அப்படியே பல பல பிறவிகள் எடுத்துக் கொண்டு வாழ்ந்து இறுதியாக மனிதப் பிறவி எடுத்து வாழ்கிறது.
எல்லா பிறவியை விட உயர்ந்த பிறவி மனிதப் பிறவி என்று உணர்ந்தும் .பகுத்தறிவு பெற்ற மனிதன் ,ஒரு உயிரைக் கொள்வதும் கொன்ற அந்த துர்நாற்றம் உள்ள அசுத்த மாமிச உணவை உண்பதும் ,குற்றம்,தவறு, அநியாயம் அக்கிரமம் என்பதை ஏன் உணராமல் போனார்கள் .அறிவு இல்லையா ?அறிவு தெளிவு இல்லையா?அறிவு இருந்தும் பழக்கத்தினால் செய்கிறார்களா ?என்பது தெரியவில்லை .
இன்று உலகம் வெப்பமயமாக மாறிக் கொண்டு இருப்பதற்கு முக்கியக் காரணம் உயிர்களைக் கொல்வது புலால் உண்பது தான் என்பதை மறுக்க முடியாது மறைக்க முடியாது .இதுதான் உண்மையாகும் .உயிரைக் கொல்லுகின்றபோது ஆன்மாவில் உள்ள ஒளிக கதிர்கள் துடித்துடித்து வெளியே கக்குகிறது .அதனுடைய வெப்பம் அளவில் அடங்காதது .அந்த வெப்பம்தான் மண் ,நீர் அனல்,காற்று .ஆகாயம் அனைத்திலும் கலந்து உலகம் முழுவதும் வெப்பம் பரவிக் கொண்டு வருகிறது, /இப்படியே விட்டு விட்டால் உலகமே வெப்பக் காடாக மாறி மனிதனும் மற்ற உயிர்களும் அழிந்து விடும்.
இனிமேலாவது உயிர்களை கொல்லவும்.புலால் உண்ணவும் கூடாது என்பதை உலகமும் உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் அறிவைக் கொண்டு சிந்தித்து உணரவேண்டும் வாழ்க உலக உயிர்கள் .
மேலும் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொல்லவும் .
அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு. .
 ·  · பகிர்தல் · நீக்க