செவ்வாய், 3 மே, 2011

மனம் என்ற கரணங்கள் கண்கள் என்னும் இந்திரியங்கள் மூலமாக செயல்படுகின்றது.ஆதலால் கண்கள் பார்ப்பது மனதில் பதிவாகும்.மனதில் பதிவாவது ஜீவனில் பதிவாகும்.ஜீவனில் பதிவாவது, ஆன்மாவில் பதிவாகும்.ஆதலால் உருவங்களை பார்த்து வழிபாடு செய்பவர்கள்,எக்காலத்திலும் உண்மையை உணரமுடியாது.அதனால் தான வள்ளலார் உருவவழிபாட்டை வேண்டாம் என்று சொன்னார்.உயிரும் ஒளி,கடவுளும் ஒளியாக உள்ளார்.ஒளியை வழிபாடு செய்தால் கண்களின் ஒளிமூலமாக மனம் என்னும் ஓலியில் கலந்து ஜீவன் ஓளிமூலம் ஆன்மாஎன்னும் ஓலியில் பதிவாகும்.அப்பொழுது அருட்பெருஞ்ஜோதியுடன்.இங்திரியங்கள்,கரணம்,ஜீவன் ,ஆன்மா அனைத்தும் தொடபு கொள்ளும்,அப்பொழுது உண்மைகள் தானே விளங்கும்.கூட்டம் சேரவேண்டும் என்பதற்க்காக மக்களை அறியாமையில் தள்ளி விட்டுக் கொண்டு பணம் சம்பாதிக்கும் வேளையில் சிலகூட்டங்கள் ஆன்மீகம் என்ற பெயரில் பொய்யான கற்பனைகளை சொல்லி ம்க்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.அதையும் உண்மை என்று நம்பி மக்கள் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள்.ஆத்லால் தான் வள்ளலார் கலையுறைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும் கண் மூடிபழக்கமெல்லாம் மண்மூடிப்போக என சாடுகிறார்.ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா ஜோதி தன்னையே நினைமின்கள் சகம் பெற விழைவீர்,இது மேலேறும் வீதி, மற்றை வீதிகள் கீழ் செல்லும் வீதி என்றார்,இதுவரை இருந்தது போல் இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள்.புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கிறேன்.என்றும்.வைதாலும் வைதிடுமின் வாழ்த்தென கொண்டுடுவேன் மனம் கோனெண் மானமெல்லாம் போன் வழிடுத்தேன் நீவிரெல்லாம் புனிதம் முறுபொருட்டே.என்று நம்மையெல்லாம் அழைகிறார்.அடுத்து மற்றவர்கள் ஏதாவது ஒன்று சோல்ல கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளியுண்டாகும்.அதனால் பல்லிலித்து இருமாந்து கெட நேரிடும்.ஆதலால் எதையும் நம்பவேண்டாம்.நம்மை இயக்கும் உயிர் ஒளியை தொடர்பு கொள்ளுங்கள்.அது வேரெங்கும் இல்லை நம் சிரநடுவில் இருக்கிறது.அதற்கு சிற்சபை என்று பெயர்.சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுமின் சித்தியெல்லாம் சத்தியம் சேர்ந்திடுமே,என்று சத்தியம் வைத்து சொல்கிறார் வள்ளலார்.அவர் எழுதிய அருட்பாவில் அனைத்து உண்மைகளையும் தெரியப்படுத்தியுள்ளார்.படித்து பயன் பெருங்கள்.ஆன்ம நேயன்;-கதிர்வேலு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு