புதன், 13 செப்டம்பர், 2023

இந்து பாபா அவர்களுக்கு கடிதம் !

 *இந்து பாபா அவரகளுக்கு அநேககோடி  வத்தனம் வணக்கம் வாழ்த்துக்கள்!*


*43 ஆண்டுகளாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால், ஈரோடு கதிர்வேல் ஆகிய அடியேன் சன்மார்க்கத்தில் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறேன்.*


 *அவ்வாறு உழைத்து வந்த எமக்கு, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு சன்மார்க்க சங்கங்களும்,நினைக்காத, கவனிக்காத, வழங்காத அரிய பெரிய சிறப்பு பட்டமுமான "சுத்த சன்மார்க்க சுடர்",என்கின்ற பட்டமும் மேலும் ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கி கவுரபடுத்தி உள்ளீர்கள்,*



*09-09-2023 to 10-09-2023 ஆம்  இரு நாட்கள் மலேசிய அருட்பேரொளி சமூகநல சமரசப் பேரவையின் சார்பாக,அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி பக்தி நெறி மாநாட்டில்*


*மாநாட்டின் தலைவர் மற்றும் சிறப்புமிகு நர்வாகத் தலைவர் மாநாட்டின் கதாநாயகன் அருள்திரு இந்துபாபா  அவர்களுக்கும்,அன்பு சகோதிரி  திருமதி அருள்திரு வனிதா திருமலை நாயக்கன் அவர்களுக்கும்,அன்பு சகோதரர் அருள்திரு திருமலை நாயக்கன் அவர்களுக்கும் வாயார வாழ்த்த வார்த்தைகள் இல்லை,நன்றி நன்றி நன்றி மட்டுமே செலுத்த முடியும்.* 


*நீங்களும் உங்கள் அன்பு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், அழியாப்புகழுடன்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டி விண்ணப்பித்து கொள்கிறேன் தொடரட்டும் உங்கள் அருட்பணிகள்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் *"சுத்த சன்மார்க்க சுடர்" முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு