புதன், 19 ஆகஸ்ட், 2020

அருளாளர்கள் மகாசபை கூட்டம் !

 *அருளாளர்கள் மகாசபை கூட்டம்* ! 


பல கோடி உலகங்களையும். பலகோடி அண்டங்களையும். அதில் உள்ள பஞ்ச பூதங்களையும். ஒளிக் கதிர்களையும். கிரகங்களையும் பொருள்களையும் மற்றும் அனைத்து உயிர்களையும்.மற்றும் எல்லாவற்றையும். தோற்றுவித்தல்.விளக்கம் செயவித்தல்.துரிசு நீக்குவித்தல்.பக்குவம் வருவித்தல்.பலன் தருவித்தல். போன்ற ஐந்தொழிலும்  செய்துகொண்டு உள்ளவர்.


இயற்கை உண்மையானவர் .

இயற்கை விளக்கமானவர் .

இயற்கை இன்பமானவர் என்றும் எல்லோராலும் போற்றப்படுகின்ற *ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* என்பவராகும். இங்கே ஆண்டவர் என்பது உருவம் *அற்ற அருள் ஒளியைக் குறிப்பதாகும்.*


அந்த அருளால்  படைக்கப்பட்ட அண்டங்களையும் உலகங்களையும்  ஆட்சி செய்ய.நிர்வாகம் செய்ய. பல கோடி அதிபர்களையும் கர்த்தாக்களையும்.

அருளாளர்களையும் மற்றும் பலகோடி ஊழியர்களையும்  நியமித்துள்ளார்.


ஆன்மாக்கள் !   


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் இவ்வுலகிற்கு  அனுப்பிய ஆன்மாக்கள்.  உயிர் எடுத்து  உடம்பு எடுத்து  இறுதியாக மனித பிறப்பு எடுத்து  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று. மரணத்தை வென்று. ஊன் உடம்பை ஒளி உடம்பாக   மாற்றி அருட்பெருஞ்ஜோதியுடன் கலந்து  பேரின்ப வாழ்க்கை வாழவேண்டும் என்பதே இறைவன்  ஆணையாகும்*.


அருட்பெருஞ்ஜோதி கட்டளைப்படி  ஆணைப்படி நடைபெறவில்லை. காரணம் ! ஆன்மாக்களுக்கு வழிகாட்டிய.உலகில் உள்ள எல்லா அருளாளர்களும் உண்மை பாதி. பொய் பாதியாக.

உண்மைகலந்த பொய்யாகப்  போதித்து  *உண்மைக்கு புறம்பான* செய்திகளையும் கொள்கைகளையும் விதைத்து விட்டார்கள். 


ஆதலால் ஆன்மாக்கள் பெறவேண்டிய ஆன்ம லாபத்தை பெறமுடியாமல் இறந்து இறந்து.பிறந்து பிறந்து துன்பத்திலே சிக்கி வாழ்ந்து கொண்டு உள்ளன.


ஆன்மீகத்தின் பெயரால்  நேர்வழியில் ஆன்மாக்களை  கொண்டுசெல்ல எந்த ஒரு ஆன்மீக அருளாளர்களும் முன்வரவில்லை.

அவர்களும் உண்மைத் தெரிந்துகொள்ள விருப்பம் இல்லாமல் மாயையில் சிக்கிக் கொண்டார்கள்.


எனவே ஆன்மாக்கள் உண்மைத் தெரிந்து உண்மை விளக்கம் பெற்று உண்மை இன்பத்தைப் பெறவேண்டும் என்பதற்காக 


05-10-1823 ஆம் ஆண்டு  பக்குவம் உள்ள ஆன்மாவை இவ்வுலகிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும். 


வள்ளலார் அவர்கள் ஆன்மாக்களுக்கு சொல்ல வேண்டிய உண்மைகள் யாவும் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லியதோடு அல்லாமல்.வாழ்ந்தும் காட்டி உள்ளார்.


எனவே பழைய கருணை இல்லா ஆட்சியை அப்புறப்படுத்திவிட்டு.கருணை உள்ள அருள் நயந்த நல்ல அருளாட்சியைக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு. *ஆட்சி மாற்றம் தேவை* என்பதால்  மாபெரும் அருளாளர்கள் மகாசபையை அருட்பெரு வெளியில்  கூட்டுகின்றார்.


*அருளாளர்கள் மகாசபை கூட்டம்* !  


மகாசபைக்கு வரவைக்கப்பட்டவர்கள் யார் ?  யார்? என்பதை பாடல்கள் மூலமாய் பட்டியல் போட்டு தெரிவிக்கின்றார்.


*பாடல்கள்* !  


உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி

உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி


பெருத்த மற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்

பேசில் அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்


திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று

தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ


வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி

மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.! 


மேலும் பாடல் 


பார்உலகாதிபர் புவனாதிபர் அண்டா திபர்கள்

பகிரண்டா திபர் வியோமா திபர் முதலாம் அதிபர்


ஏர் உலவாத் திருப்படிக்கீழ் நின்று விழித் திருக்க

எனைமேலே ஏற்றினர் நான் போற்றிஅங்கு நின்றேன்


சீர்உலவா யோகாந்த நடம் திருக்கலாந்தத்

திருநடம் நா தாந்தத்தே செயும் நடம்போ தாந்தப்


பேர் உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்

பெற்றேன் நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.!


மேலே கண்ட அருளாளர்கள் அனைவரும் சபையிலே அமர்ந்திருக்க வள்ளல் பெருமானை மட்டும் அழைத்து சபையின்  நடுவே அமர்த்தி.இவர் யார் ? என்பதையும் அவருடைய பூரண அருள் ஆற்றல் பற்றியும்  அனைவருக்கும் புரியும்படி அறிமுகப்படுத்தி. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்கின்றார்.


*வள்ளலார் பாடல்* ! 


*பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க* நான்போய்ப்

பொதுநடங்கண் டுளங்களிக்கும் போது* மண வாளர்*


*மெய்பிடித்தாய் வாழியநீ* சமரசசன் மார்க்கம்

விளங்கஉல கத்திடையே விளங்குக என் றெனது


கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்

களித்திடுக இனியுனைநாம் கைவிடோம் என்றும்


*மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண*

மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.*! 


மேலும் ஒரு பாடல் !


*பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க* நான்போய்ப்

பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர்


திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்

தெய்வமல ரடிபிடித்துக் கொண்டேன் சிக் கெனவே


*வருத்தமுறேல் இனிச்சிறிதும்* *மயங்கேல்* *காண் 

*அழியா*

*வாழ்வுவந்த துன்தனக்கே* ஏழுலகும் மதிக்கக்


கருத்தலர்ந்து வாழிய என்று  *ஆழிஅளித் தெனது*

கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி.!  


மேலே கண்ட பாடல்களின் வாயிலாக  தெளிவான விளக்கத்தோடு எளிய தமிழில் எல்லோருக்கும் ?புரியும்படி சொல்லியுள்ளார்... 


இதுவரையில் ஆட்சியில் இருந்த பொய்பிடித்தவர்களையும்.பொருத்தம் இல்லாதவர்களையும். அகற்றி. அவர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு. *உண்மையான புதிய அருள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருகிறார்*.


இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆணைப்படி   புதிய அருளாட்சியை  தலைமை ஏற்று நடத்திக் கொண்டு உள்ளவர்  தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.


*அவர் செய்யும் ஐந்தொழிலையும் நீயே செய் என்று எனக்கு அளித்தான் என்கிறார்*.


பாடல் ! 


ஐந்தொழில் நான் செயப்பணித்தாய் அருளமுதம் உணவளித்தாய் 


வெந்தொழில் தீர்ந் தோங்கிய நின் மெய்யடியார் சபைநடுவே


எந்தை உனைப் பாடிமகிழ்ந் தின்புறவே வைத்தருளிச்


*செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்*.!


மேலும் ஒருபாடலில் சொல்லுகின்றார்.!


சத்தியவான் வார்த்தை இது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்


இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும் அத் தினங்கள் எலாம் இன்பம் உறு தினங்கள்


*சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்* எலா உலகும்

தூய்மைஉறும்* *நீ உரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்*


செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.! 


இனி வரும் காலம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கைகள் துலங்கும் காலம்.இனி வரும் தினங்கள் எல்லாம் இன்பம் உறும் தினங்களாகும்.

எல்லா உலகும் தூயமை பயக்கும்.நீ சொல்லியது அனைத்தும் பலிக்கும் நிறைவேறும்.

சந்தேகம் வேண்டாம் சந்தோடம் உறுவாய் .


இனி தெத்தவர்கள் மீண்டும் பிறந்து வந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று ஆனந்தமுடன் திரிந்து மகிழ்ந்திருப்பார்கள்.


ஏன் என்றால் ? உலகம் எங்கும் சாதி.சமயம்.மதம் அற்ற  திருவருட் செங்கோல் ஒரே கொள்கையுடன் ஒரே மாதிரியாக பொது நோக்கத்தோடு. *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன்* சமமாக  செயல்படும் என்பதை தெரியப்படுத்துகின்றார்.


*வள்ளலார் பாடல்* ! 


உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி

இலகஅருள் செய்தான் இசைந்தே 


திலகன் என

நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்

தானே எனக்குத் தனித்து.! 


என்ற பாடலில் கண்டபடி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளைப்பெற்று மரணத்தை வென்று  சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் முத்தேக சித்திபெற்று ஆண்டவர்  ஆணைப்படி ஒரு திலகம் போல் அருள் ஆட்சி நடத்திக் கொண்டு உள்ளவர் தான் வள்ளலார் என்பவராகும்.


வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியில் கலந்து கொண்டார்.

அவருக்கு மனித  உருவம் இல்லை. அருள் ஒளியாக அருள் தேகமாக உள்ளார்.


எனவே வள்ளலார் உருவத்தை வைத்து வழிபடாமல். உயிர் இரக்கமான பரோபகாரத்தை கடைபிடித்து.  அருட்பெருஞ்ஜோதிஆண்டவர் மேல் தீராத அன்பு கொண்டு.நமது சிற்சபையின் கண் மனத்தை செலுத்தி   வழிபட்டால் பெறவேண்டியதை பெற்றுக் கொள்ளலாம். 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு