வெள்ளி, 10 ஜூலை, 2020

ஒன்றில் இருந்துதான் எல்லாம் உருவானது்!

*ஒன்றில் இருந்து தான் எல்லாம் உருவானது* !


ஒன்றில் இருந்து தான் எல்லா உலகமும். அதன் உள் இருந்து இயங்கும் பஞ்சபூத கருவிகளும் அதனுள் இயங்கும்  எல்லா கிரகங்களும்.மற்றும் அனைத்து கருவிகளும். உருவானது !

ஒன்றில் இருந்து தான் எல்லாம் உருவானது என்பதை அறியாத மக்கள் படைக்கும் கடவுள். காக்கும் கடவுள்.அழிக்கும் கடவுள் என
 பலரால் பல கடவுள்களை படைக்கப்பட்டது என்றும். சமய மதங்கள் பல கற்பனை கதைகளை உருவாக்கி உள்ளார்கள்.அந்த கதைகளில் வரும் கதாநாயகர்களை கடவுள்களாக படைத்து விட்டார்கள். அந்த கதைகளின் கதாநாயர்களையும் என் கதாநாயகன் உயரந்தவன்.
உன் கதாநாயகன் தாழ்ந்தவன் என்று  போட்டிப்போட்டுக்கொண்டு உரிமைக் கொண்டாடிச் சண்டையிட்டு அழிந்து கொண்டு இருக்கிறார்கள் .

*வள்ளலார் பாடல்!*

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
பேதமுற் றங்கும்இங்கும்

போருற் றிறந்து வீண் போயினார் இன்னும் வீண்
போகாத படிவிரைந்தே
புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
என்பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
றெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்திருள் அகற்றும்ஒளியே
நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
நீதிநட ராஜபதியே.!

மக்கள் சமய மதங்களின் கடவுள் பெயரால் போரிட்டு அழிந்து வீண் போய் கொண்டு உள்ளார்கள். இனிமேலும் வீண்போகாமல் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே என்பிள்ளையாகிய உம்மை இவ்வேலை புரிக என ஆணை இடுகிறேன். அவர்களுக்கு உண்மையை உணர்த்தி.அறியாமையை போக்கி தெளிவுபடுத்த வேண்டும்

ஓரே கடவுள் என்பதை அறியாத முன்னோர்கள் வகுத்துதந்த வழியைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

ஒன்று இரண்டாகவும்,
இரண்டு மூன்றாகவும்.மூன்று  பலவாகவும்,
பலவகை கோடியாகவும்,கோடி பலகோடி யாகவும், கோடிகள் கோடி கோடி யாகவும்,பரந்து விரிந்து இயங்கிக் கொண்டு உள்ளது.

அனைத்தும் ஒன்றில் இருந்து தோன்றியதே என்பதை வள்ளலார் அருள் அறிவாலே அறிந்து கொண்டார்

இயற்கை உண்மை என்றும்.இயற்கை விளக்கம் என்றும்.இயற்கை இன்பம் என்றும் விளங்குகின்ற ஒன்றே. அகத்தில் இருந்து அருள்
ஆற்றலைக் கொண்டு .அந்த   ஒன்றானது, அனகமாக விரிந்து என்னில் அடங்காத உயிர்களாகவும் ஜடமாகவும் பரந்து விரிந்து நிறைந்து உள்ளது என்பதை தெரியப்படுத்துகின்றார்.

*வள்ளலார் பாடல்*!

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்

செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்

வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்

உயத்தரும் ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற *தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்*.!

என்றும் *மேலும்*.

 ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்

அன்றும் உளார் இன்றும் உளார் என்றும்உளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தமிலார் *அரும்பெருஞ்சோ தியினார்*

என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும் விளங் கிடுவார்
யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்

ஒன்றுறு தாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற *தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!*

மேலே கண்ட பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.

*உருவம்*
 *அருவம். உருஅருவம்* அனைத்துமாக உள்ளது ஒன்றே ஒன்றுதான்*.

*அதுதான் அருட்பெருஞ் ஜோதி*!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  உருவாக்கிய உண்மை எது?  என்றும்,அது யார்? என்றும் தெரியாமல் மனித இனம் அலைந்து திரிந்து அழிந்து கொண்டு உள்ளார்கள் என்பதை நினைந்து வருந்துகின்றார் வள்ளலார்.

எல்லாவற்றையும் படைத்தல். காத்தல்.பக்குவம் வருவித்தல்.தெளிவித்தல்.துருசுநீக்குவித்தல் போன்ற ஐந்து தொழில்களையும் செய்கின்றவர் ஒருவரே !  அவர் உருவாக்கிய மெய்ப்பொருள் உண்மையைக் கண்டவர் திரு அருட்பிரகாச வள்ளலார் .

என்றும் அழியாமல் எல்லாவற்றையும் படைத்து,காத்து,உருவம் கொடுத்தும் உருமாற்றிக் கொண்டு உள்ளதுதான் எல்லாம் வல்ல ''அருட்பெருஞ்ஜோதி '' என்னும் அருள் ஒளியாகும்.

*அந்த அருள் ஒளியைக் கண்டவர்*.
*களித்தவர்.கலந்து கொண்டவர் வள்ளலார்*

எனவே தான் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! என்ற உண்மையை உலக மக்களுக்குத் தெரிவிக்கின்றார்.

என்றும் அழியாமல் நிலைப்பெற்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டால் மட்டுமே. *நாம் என்றும் அழியாமல் வாழமுடியும்.* அவற்றுடன் உண்மை அன்போடு தொடர்பு கொண்டு அருளைப்பெற்று என்றும் அழியாமல் வாழலாம் என்பதை அறிந்து வாழ்ந்து கொண்டு இருப்பவர்தான் திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் ஆவார்கள்.

வள்ளலார் திருவாக்கு அருள்வாக்காக ஏற்று ஒரே கடவுள் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை உணர்ந்து தொடர்பு கொண்டால் மட்டுமே மேல்நிலைக்கு செல்லமுடியும்.

அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.!

அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.!

அதுவே பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும் !

அதுவே முத்தேக சித்தி என்பதாகும் !

அருட்பெருஞ்ஜோதி அகவல் !

ஒன்றதில் இரண்டு அது வொன்றினில் இரண்டு அது
ஒன்றினுள் ஒன்றது ஒன்று எனும் ஒன்றே !

ஒன்றல இரண்டு அல வொன்றினில் இடண்டு அல
ஒன்றினுள் ஒன்று அது ஒன்று எனும் ஒன்றே !

ஒன்றினில்
ஒன்றுஉள வொன்றினில் ஒன்றுஇல
ஒன்றுற வொன்றிய ஒன்று எனும் ஒன்றே !

என்று வள்ளல்பெருமான் அகவலில் சரியான தகவலை மக்களுக்கு தந்துள்ளார்
அந்த ஒன்றை அறிவதுதான் ''ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை'' என்பதாகும்.

எத்துனையும் பேதம் இல்லாமல் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவித்து.ஒரே ஒளித்தன்மை  உடைய உயிர்கள்யாவும் ஒன்று என்று உணர்ந்து.பேதம் இல்லாமல் உயிர்களை பாதுகாத்தால் ஆன்மாவை அறியலாம் . ஆன்மாவை அறிந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறியலாம்.

*ஆன்மாவை அறிந்தால் அனைத்தையும் அறியலாம்* !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு