செவ்வாய், 29 மார்ச், 2016

சித்தர்கள் மூன்று வகைகள் !

சித்தர்கள் மூன்று வகைகள் !


சித்தர்களில் மூன்று பிரிவுகள் உள்ளளன.

கர்ம சித்தர்கள்,யோக சித்தர்கள் ,ஞான சித்தர்கள்..

கர்மம் என்னும் வினையை ஒழித்தவர்கள்.கர்ம சித்தர்கள்,இவர்கள் உடம்போடு உயிரோடு முக்தி என்னும் சமாதி யானவர்கள்.

யோக சித்தர்கள் உடம்பை விட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டு சித்திப் பெற்றவர்கள்.

ஞான சித்தர்கள் உடம்பு,உயிர்,ஆன்மாவோடு மறைந்தவர்கள்.

இவர்கள் மேலும் பல நூறு ஆண்டுகள் அவரவர் செய்கைக்கு தகுந்தாற்போல் உருவம் என்னும் பிறப்பு எடுக்காமல் மீண்டும் மனிதப் பிறவி எடுப்பார்கள்.

வள்ளலார் சுத்த பிரணவ ஞான சித்தியைப் பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர்.வள்ளலாரை ஆண்டவர் ஏற்றுக் கொண்டார்.ஞான சபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளையாக வாழ்ந்தவர்.

அனைத்து உயிர்களின் மேல் அன்பு தயவு,கருணைக் கொண்டு வாழ்ந்ததால் இறைவன் வள்ளலாரை பரிபூரண அருளைக் கொடுத்து தன்னையே தந்து தன்வசமாக மாற்றிக் கொண்டார்.

தன கையில் பிடித்த தனி அருட்ஜோதியை வள்ளலார் கையில் கொடுத்தார்.

தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால்
என்னை வேதித்த ஏன் தனி அன்பே !

பொன்னுடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டாய்
என்னுளங் கலந்த ஏன் தனி அன்பே !

என்பார் வள்ளலார்.ஆதலால் உலகில் வாழ்ந்த அருளாளர்களின் வரிசையில் முதன்மை இடத்தைப் பெற்றவர் வள்ளல்பெருமான்..

வள்ளல்பெருமான் வாழ்ந்த வாழ்க்கை அனைத்தும், மனிதனாக பிறந்த ஜீவர்கள் அனைவருக்கும் ,இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து,இறைவனிடம் பூரண அருளைப் பெற்று மரணத்தை வென்று வழிகாட்டியாக திகழ்ந்தார் என்பதை மனித சமுதாயம் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.;--
கூ கா என அடுத்தோர் கூடி அழாத வண்ணம்
சாகா வரம் எனக்கே தந்திட்டான் --ஏகா அன்
ஏகா என மறைகள் ஏத்துஞ் சிற்றம்பலத்தான்
மா காதலனா மகிழ்ந்து.

நோவாது நோன்பு எனைப் போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப் போல் சார்ந்தவரும் --தேவா நின்
பேரருளை என் போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் சற்றே அறை ....

மேலே கண்ட பாடல் அனைவருடைய அறியாமையைப் போக்கும் பாடலாம்.நிதானமாக படித்து அதன் உண்மையை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

அரைகுறை அருளைப் பெற்றவர்கள் கர்ம சித்தர்கள் ,யோக சித்தர்கள்,முழுமையான பூரண அருளைப் பெற்றவர்தான் வள்ளலார்.

பூரண அருளைப் பெற்றவர்கள் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.

மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது ,உடம்போடு போவதில்லை,சமாதி அடைந்து போவதில்லை,மறைந்து போவதில்லை .

ஊன உடம்பை, பூரண அருள் பெற்று ஒளி உடம்பாக மாற்றிக் கொள்வதாகும். அதற்கு வள்ளலார் வைத்த பெயர ,''சுத்த பிரணவ ஞான தேகம்''என்பதாகும்.

சுத்த பிரணவ ஞான தேகம் பெற்றவர்களுக்கு மட்டுமே பிறப்பு இறப்பு என்பது எப்போதும் இல்லை .

மேலே கண்ட மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றால் என்னவென்று தெரியாத மக்களுக்கு உண்மையை உணர்த்தும் பாடலாகும்.

ஆன்மநேயன் ;--ஈரோடு கதிர்வேல்.
9865939896,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு