வெள்ளி, 7 டிசம்பர், 2012

நண்பருக்கு பதில் கடிதம் !

ஆன்மநேய அன்புடைய சகோதரர் அவர்களுக்கு வந்தனம் !.

இந்த உலகத்தில் உள்ள அனைத்து அருளாளர்களும் இறைவனை தேடி உள்ளார்கள் .யாரும் இறைவனை காண முடியவில்லை .காரணம் அவர்கள் இறைவனை காணும் தகுதியை பெறவில்லை .அவர்களுடைய நிலை வேறு வள்ளலார் அடைந்த நிலை வேறு...வள்ளலார் அனைத்து உயிர்களையும் தன்னுடைய உயிர்களாக கண்டவர் ..வாடிய பயிரைக் கண்டு வாடியவர் .,ஆன்மநேய ஒருமைப்பாடு என்னும் உயர்ந்த கொள்கையை உடையவர் .அதுவும் தவிர மரணத்தை வென்ற மகான் ! கடவுள் நிலை அறிந்து அதன் மயமானவர் .ஐந்தொழில் வல்லபத்தை இறைவனிடம் பெற்றவர் .இன்னும் நிறைய ஆதாரங்கள் உள்ளன.

வள்ளலார் சொல்லும் பாடலைப் பாருங்கள் .

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும் 
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் ....தேவா நின் 
பேரருளை என்போல் பெற்றவரும் எவ்வுலகில் 
யார் உளர் சற்றே அறை !

மேலும் 

நான் செய்த புண்ணியம் யார் செய்தனர் இந்த நானிலத்தே 
வான் செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்து கண்டேன் 
ஊன் செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக்கி 
கோன் செயவே பெற்றுக் கொண்டேன் உண்டேன் அருள் கோனமுதே !   
என்று இறைவனிடம் கேட்கிறார் அதற்கு இறைவன் பதில் சொல்லுகிறார் 

மேலும் ..

பொய் பிடித்தார் எல்லோரும் புறத்து இருக்க நான்போய் 
பொது நடங்கண்டு உலங் களிக்கும் போது மணவாளர் 
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம் 
விளங்க உலகத்திடையே விளக்குக என்று எனது 
கைபிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக் கொண்டேன் 
களித்திடுக இனி உனை நாங் கைவிடோம் என்றும் 
மைபிடித்த விழி உலகர் எல்லோரும் காண 
மாலை இட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே !

எல்லா அருளாளர்களும் உண்மை தெரியாமல் பொய்யான கடவுளைக் அறிமுகப் படுத்தி உள்ளார்கள் .அவர்கள் முன்னிலையில் வள்ளலாரை அமர்த்தி அடையாளம் காட்டி உள்ளார் .வள்ளலார் காட்டிய உண்மையான கடவுளை அப்போதுதான் அவர்கள் (அருளாளர்கள் )எல்லோரும் அறிந்து கொண்டார்கள் .அதுவரையில் அவர்களுக்கு உண்மையான கடவுள் யார் என்பது தெரியாது.

முன்னாடி வந்த அருளாளர்கள் எல்லோரும் தத்துவங்களை கடவுள்களாக அறிமுகப் படுத்தி உள்ளார்கள் .வள்ளலார் வந்து தான் உண்மையான கடவுளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .சாதி ,சமயம்,மதம் அற்ற உண்மை பொது நெறியாகிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார் .

எல்லோருக்கும் பொதுவான உண்மைக் கடவுளான ''அருட்பெருஞ் ஜோதி ''கடவுள் ஒருவரே என்பதை மக்களுக்கு தெளிவுப் படுத்தி உள்ளார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்...கோவில் ,ஆலயம் ,சர்ச்சு ,மசூதி ,பிரமிட் ,என்று அமைக்காமல் .எல்லோருக்கும் பொதுவான ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை ''என்னும் பொது வழிபாட்டு முறையை வடலூரில் அமைத்து உள்ளார் .என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் .

கடவுளை அடைவதற்கு ..பக்தி,தவம்,யோகம்,தியானம் ,சந்நியாசம்,துறவறம் ,போன்ற எதுவும் வேண்டாம்,''ஜீவகாருண்யம் என்னும் உயிர் இரக்கமே ''கடவுள் வழிபாடு என்பதை மக்களுக்கு தெரியப் படுத்த வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை ''தோற்றுவித்து உள்ளார் .என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆண்டவர் துன்பத்தை போக்கியவர் வள்ளலார் !

துன்பெலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினை 
சூழ்ந்த அருள் ஒளி நிறைந்தே 
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே 
சுதந்திரம் ஆனது உலகில் 
வன்பெலாம் நீக்கி நல்வழி எலாம் ஆக்கி மெய் 
வாழ்வெலாம் பெற்று மிகவும் 
மன்னுயிர் எலாம் களித்திட நினைத்தினை உன்றன் 
மனம் நினைப்பின் படிக்கே 
அன்பை நீ பெருக உலவாது நீடுழி விளையாடுக 
''அருட்ஜோதியாம் ''
ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம் 
ஆணை நம் ஆணை என்றே 
இன்புறத் திரு வாக்களித்தே என்னுள்ளே கலந்து 
இசைவுடன் இருந்த குருவே 
எல்லாம் செய் வல்ல சித்தாகி மணிமன்றில் 
இலங்கு நடராச பதியே !

என்று தெளிவுபட விளக்கி உள்ளார் என்பதை நாம் அறிவாலே அறிந்து கொள்ள வேண்டும் .

வள்ளலார் ஏன் இந்த உலகத்திற்கு வந்தார் ,எதற்க்காக இறைவன் அவரை வருவிக்க உற்றார் என்பதை வள்ளலார் தெரியப் படுத்தி உள்ளார் ,அந்த பாடலைப் பாருங்கள் .

பேருற்ற உலகில் உறு சமயம் மத நெறிஎலாம் 
பேய் பிடிப்புறற பிச்சுப் 
பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல 
பேத முற்று அங்கும் இங்கும் 
இறந்து வீண் போயினர் இன்னும் வீண் 
போகாத படி விரைந்தே 
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப் 
பொருளினை உணர்த்தி எல்லாம் 
ஏருற்ற சுக நிலை அடைந்திட புரித நீ 
என்பிள்ளை யாதலாலே 
இவ்வேலை புரிக என்று இட்டனன் மனத்தில் வேறு 
என்னற்க எனற குருவே .
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள் 
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே 
நிர்க்குனானந்த பர நாதாந்த வரை யோங்கும் 
நீதி நடராஜ பதியே !

என்று இறைவன் வருவிக்க உற்ற செய்தியினை மக்களுக்கு தெரியப் படுத்தி உள்ளார் .இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?மற்ற அருளாலர்களுக்கும் ,வள்ளலாருக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.வள்ளலார் காட்டிய பாதை உண்மையான பாதை என்பதை அறிந்து அவர் காட்டிய ...அன்பு,தயவு,கருணை நெறியில் வாழ்ந்து பயன் பெறுவோம் .மேலும் திருஅருட்பாவில் நிறைய ஆதாரங்கள் உள்ளன ,தெளிவுபட படித்து அறிந்து புரிந்து கொள்ள வேண்டும் .

நன்றி வந்தனம் .

அன்புடன் ஆன்மநேயன் ;---கதிர்வேலு ....    


6 டிசம்பர், 2012 10:50 am அன்று, Kamal Kannan <lakankamal1983@gmail.com> எழுதியது:
மதிப்பிற்குரிய கதிர்வேலு அவர்களே,

வள்ளலார் மட்டும் தான் அருட்பெரும் ஜோதி ஆண்டவரை கண்டுள்ளார் என்று தாங்கள் கூறுவதை சற்று நன்றாக சிந்தித்து பாரும்.  இப்படி கூறுவது ஆண்மிகவதியின் ஆன்மிக வார்த்தைகளாக கருதப்பட மாட்டது. வள்ளலார் போன்ற பல மகான்கள் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் தேசம்  நமது பாரதம்.  இதை என்றும் மறவாதீர்.  இராமலிங்க சுவாமிகளை நாம் போற்றுகின்றோம், அவருடைய உயர்வான ஆன்மிக கருத்துகளை உணர முற்படுகின்றோம். நாம் அனைவரும் அந்த (இறைவன்) மெய்பொருளை அடைய  அவர் விருப்பபட்டார்.  இன்றும் உலகம் அறிப்படா இப்படைப்பின் நலனுக்காக இதுபோன்ற மகான்கள்  வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். 

விரைவில் இவ்வுலகம் பொன்னுலகமாக மாறப்போகின்றது, அருட்பெரும் ஜோதியை தன்னுள்ளே காண உடனே முற்படுங்கள் அவர் உங்களுக்காக காத்து கொண்டிருக்கிறார். 

தங்களின்  ஆன்மிக கருத்துக்கு மிக்க நன்றி. 

"ஓம் பரம்பிரம்ம சக்ரதார்" 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு