திங்கள், 3 நவம்பர், 2014

சாதி சமய மதம் பற்று இல்லாமல் வாழ்பனே மனிதன் !


சாதி சமய மதம் பற்று இல்லாமல் வாழ்பனே மனிதன் !
கடவுள் எந்த சாதி,சமய,மதத்தையும் தோற்றுவிக்க வில்லை இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை சாதி சமய மதம் என்ற பொய்யான கொள்கைகளை மக்கள் மத்தியில் விதைத்து அவை அழிக்க முடியாத மரங்களாக வளர்ந்து விட்டது
கடவுளை நினைப்பதற்கும் தொழுவதற்கும் தடையாக இருப்பதே சாதி சமயம் மதம்,என்பவைகளாகும் இதைப் புரியாமல் சாதிக்கு ஒரு கடவுள் சமயத்திற்கு பல கடவுள் .மதத்திற்கு தனித்தனி கடவுள் என்று பிரித்து மனிதர்களை மடையர்களாக ஆக்கி விட்டார்கள் .
இதை எல்லாம் மறைத்தவன் ஒரு வல்லவன் அவன் பூட்டிய பூட்டை ஒருவரும் திறக்கவில்லை,அதை உடைத்து எறியவும் யாரும் வரவில்லை .
வள்ளல்பெருமான் வந்துதான் சாதி,சமய மத குப்பைகளை குழி தோண்டி புதைக்க வந்தவராகும்.மறைத்தவன் சூழ்ச்சியை உடைத்து எரிந்தவர்தான் வள்ளல்பெருமான்.
இறைவன் யார் என்ற உண்மைகளை வெளிச்சமாக காட்டியுள்ளார் .இப்போதுதான் மனிதர்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள் இனி கொஞ்சம் காலத்தில் சாதி,சமயம்,மதம் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிடும்
சாதி சமய மதத்தை தோற்றுவித்தவர்கள் கர்ம சித்தர்கள் ..இனி வரப்போவது நடந்து கொண்டு இருப்பது ஞான சித்தர்கள் காலம் உண்மைகள் தானாகவே விளங்கும் காலம் .மனிதனுடைய அறிவு தெளிவு பெரும் காலம் .
ஆதலால் பொய்யான சாதி சமய மத பற்றுகளை விட்டு மனிதநேயம் ஆன்மநேயம் கொண்டு வாழ்பவனே மனிதன்
மனிதனுக்கு உயர்ந்த அறிவு உண்டு ,உயர்ந்த அறிவு உண்மை எது ?பொய் எது ? என்பதை உணர்ந்து கொள்ளும் அறிவே உயர்ந்த அறிவாகும் .
மனிதன் மனிதனாக வாழ்ந்து எல்லா உயிர்களும் தம் உயிர்போல் நேசிக்கும் அன்பையும் தயவையும் கருணையும் கொண்டு வாழ்வோம் .அதுவே மனிதத் தன்மையாகும்
அன்புடன்
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு