திங்கள், 29 செப்டம்பர், 2014

வள்ளலார் சொல்லிய அறிவியல் .ஆன்மீகம் !



வள்ளலார் சொல்லிய அறிவியல் .ஆன்மீகம் !

வள்ளல்பெருமான் உலக உண்மைகளை விஞ்ஞான அறிவியல் ரீதியாகவும் ,அருள் நிறைந்த ஆன்மீக ரீதியாகவும் .திருஅருட்பாவில் எழுத்து வடிவமாக எழுதி விளங்க வைத்துள்ளார் .

அறிவியல்

அறிவியல் என்பது ;-புற அறிவைச் சார்ந்ததாகும். எதை சொன்னாலும், காட்டினாலும், அதை மக்கள் உண்மை தான் என்று அறிந்து கொள்வதற்கு தகுந்த காரண காரியங்களை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கருவிகளை வைத்து கண்டுபிடித்து ,செய்து வெளிப்படையாக மக்கள் கண்களுக்குத் நேரடியாக காட்ட வேண்டும் மக்களுக்குத் தெரிய வேண்டும். அப்போதுதான் மக்கள் தெளிவடைவார்கள்.அதற்கு விஞ்ஞான அறிவியல் என்பதாகும்.

விஞ்ஞான அறிவியல் ஆராச்சியாளர்கள் வெளிப்படையாக புறத்தில் தெரியாததை ஏற்றுக் கொள்வதில்லை.

ஆன்மீகம் என்பது அறிவுக்கு அப்பாற்பட்ட, கண்களுக்குத் தெரியாத மறைமுகமாக உள்ள உண்மைகளை தத்துவ வடிவமாக படைத்து இதுதான் உலகம், இதுதான் கடவுள், இதுதான் உயிர்கள் ,இதுதான் ஆன்மா ,இதுதான் தோற்றம்,இதுதான் மாற்றம்,இதுதான் மறைப்பு ,இதுதான் உண்மை என்று சொல்லுவதாகும்.

ஆன்மீகம் சொல்லுவதை அறிவியல் ஏற்றுக் கொள்வதில்லை,அறிவியல் சொல்லுவதை ஆன்மீகம் ஏற்றுக் கொள்வதில்லை.

அறிவியல் என்பது அணுக்களையும்,கருவிகளையும் வைத்து கண்டு பிடிப்பதாகும்.அந்தக் கருவிகள் ஒரு குறிப்பிட்ட கணக்கிற்கு அளவிற்குமேல் செல்லாது .அதற்குமேல் கருவிகளை இணைக்க தொடுக்க,அளக்க முடியாது,
அந்தக் கருவிகள் எந்த அளவிற்கு கண்டுபிடிக்க முடியுமோ ,அறியமுடியுமோ அதை வைத்துக் கொண்டு ..இதுதான் உண்மை என்று சொல்லிக் கொண்டு உள்ளார்கள் .காலங்கள் மாற மாற அதிலும் மாற்றங்கள் உண்டாகிக் கொண்டே உள்ளன.

ஒருகாலத்தில் உலகம் தட்டையாக உள்ளன என்றது .அடுத்து உலகம் உருண்டையாக உள்ளன என்றது.அடுத்து உலகம் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு உள்ளன என்றது .பூமி சிருயனை சுற்றுகிறது என்றும்.சூரியன் பூமியை சுற்றுகிறது என்றும் பலவாறாக அறிவியல்கள் மாறி மாறி சொல்லிக் கொண்டே வருகின்றன் .

அடுத்து அணு சோதனைகள் நடந்து கொண்டே உள்ளன்.பல நாடுகள் அதி வேகமாக செல்லும் ராக்கெட்டை கண்டுபிடித்து செவ்வாய் கிரகத்துக்கும் ,சந்திரனுக்கும்,அனுப்பி அங்குள்ள நிலவரம் என்ன ? மனிதன் அங்கு சென்று வாழ முடியுமா ? அங்குள்ள சீதோஷ்ண ,தட்ப வெப்ப நிலை எப்படி உள்ளன என்பதெல்லாம் அறிவியல் ஆராய்ச்சி நடந்து கொண்டு உள்ளன.இதுவும் சிலகாலம் சென்றபிறகு மாறிக் கொண்டேதான் இருக்கும் .

எப்படி இருந்தாலும் ..மனிதன் ஏன் ? பிறக்கின்றான் ஏன் எதற்காக வாழ்கின்றான் .பின் எதனால் மரணம் அடைகின்றான் என்ற கேள்விகளுக்கு விடை காண முடியாமல் அறிவியல் விஞ்ஞானம் அறியமுடியாமல் இருக்கின்றன.மறு பிறப்பு உண்டா ? இல்லையா ? என்ற கேள்விகளுக்கும் ஆன்மா எங்கு இருந்து வந்தன.? உயிர்கள் எங்கு இருந்து வந்த்தன ? எப்படி தோன்றின ? உயிர் எப்படி ? உடம்பை விட்டு பிரிகின்றன .என்ற சந்தேகங்களுக்கும் விடை காணமுடியாமல் தவிக்கின்றன.

இயற்கையை முழுமையாக கண்டுபிடிக்க ,தெரிந்து கொள்ள மேலும் அதை அளக்க நம்மிடம் முழுமையான அறிவும் இல்லை,ஆற்றலும் இல்லை ,கருவிகளும் இல்லை அதற்குண்டான வயதும் இல்லை. அலைந்து அலைந்து முடிவு தெரியாமல் அழிந்து போகிறோம்.அவர்களுக்கு பின்னாடி வருபவர்களும் அப்படியே ஒரு குறிப்பிட்ட அளவு ஆராய்ச்சி செய்து முடிவு தெரியாமல் அழிந்து போகின்றார்கள் இப்படியே நமது ஆராய்ச்சி அறிவியல் விஞ்ஞானம் நடைபெற்றுக் கொண்டுள்ளது .

அணு ஆராய்சியின் வழியாக மின்சாரத்தையும்,மின் சாரத்தினால் இயங்கும்,இயக்கும் கருவிகளையும் கண்டு பிடித்து உள்ளார்கள் .மின் ஒளியை கண்டு பிடித்து உள்ளார்கள் .தொலைத் தொடர்பை கண்டு பிடித்துள்ளார்கள்,சார்ட் லைட் என்னும் கதிர் வீச்சின் வழியாக ஒளியும் ஒலியும்,ஊடுருவி செல்லும் ஆகாய அணு சோதனையைக் கண்டு பிடித்துள்ளார்கள் .அணு ஆராய்சியினால் மனிதர்களையும் .உயிர்களையும் அழிக்கும் அணு ஆயுதங்களை கண்டு பிடித்துள்ளார்கள்.

ஆன்மீகம்

ஆன்மீகம் என்பது அறிவுக்கு மேம்பட்ட அருள் நிலையை வைத்து கண்டு பிடிப்பதாகும்.

அறிவில் இரண்டு வகை உண்டு ;-மெய் அறிவு ,பொய் அறிவு என இரண்டு வகை உண்டு. மெய் அறிவு என்பது உடம்பை வைத்து, உயிரை வைத்து, மனம் புத்தியை வைத்து அறிந்து கொள்வதாகும்.

பொய் அறிவு என்பது மற்றவர்கள் சொல்லிய தத்துவங்களை,கல்வியை  வைத்து கற்று அறிந்து கொள்வதாகும்.

இந்த இரண்டு அறிவும் உண்மையா என்றால் ? உண்மை இல்லை என்கின்றார் வள்ளல்பெருமான்.

ஆன்ம அறிவும், அருள் அறிவும் விளங்குகின்ற போதுதான் உண்மை என்ன வென்று தெரியும் .அதுவரையில் உண்மைகள் தெரியாது. நம்முடைய புறக் கண்கள் உண்மையை அறியாது .அதற்கு ஊனக் கண்கள் என்று பெயர் ஊனக் கண்களுக்கு உண்மைகள் தெரியாது.

ஆன்மாவில் இருந்து சுரக்கும் ''அருள் '' வெளி வரும்போதுதான் அருட்கண் திறக்கும் அதற்கு ஆன்ம அறிவு,அருள் அறிவு ,அருட்கண் என்று பெயராகும்.

அந்த அருள் ஆன்மாவில் இருந்து முழுமையாக சுரந்து,ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் பெரும் போது.. .அதற்கு ஆன்ம தேகம் என்று பெயர் .அருள் தேகம் என்று பெயர் .ஞான தேகம் என்று பெயர் . .சுத்த பிரணவ ஞான தேகம் என்று பெயர் மரணம் இல்லா பெருவாழ்வு என்று பெயர் .முத்தேக சித்தி என்று பெயராகும்.

வள்ளல்பெருமான் !

மேலே கண்ட முத்தேக சித்தியைப் பெற்றவர்தான் நமது வள்ளல்பெருமான்.

அந்த முன்று தேகத்திற்கும் மூன்று விதமான வாழ்க்கை மூன்றுவிதமான இன்பம் கிடைக்கின்றது..அதற்கு சுத்த தேகம்,பிரணவ தேகம்,ஞான தேகம் என்றும். இம்மை இன்பவாழ்வு .மறுமை இன்பவாழ்வு ,பேரின்ப வாழ்வு  என்பதாகும்.

வள்ளலாருக்கு முன்னாடி தோன்றிய அருளாளர்கள் எல்லாம் .சுத்ததேகம்,பிரணவ தேகம் மட்டுமே பெற்று இருக்கின்றார்கள் .ஞான தேகத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. வள்ளல்பெருமான் மட்டுமே மூன்று தேகத்தையும் ஒருங்கே பெற்றவராகும்.

அந்த முத்தேக சித்தியைப் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.அவர்களுக்கு இறப்பு இல்லை ,மீண்டும் பிறப்பு இல்லை என்றும் அழிவில்லை ,அவர்கள் மட்டுமே,உலக ரகசியங்களை அறியமுடியும். கடவுளை அறிய முடியும்.அதற்கு கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.

உலக வரலாற்றில் வள்ளலாரைத் தவிர ,இன்று வரையில் எவரும் அவர் அடைந்த நிலையை அடையவில்லை.

அந்த பெருநிலையை அடைந்ததால் தான் வள்ளல்பெருமானால் உலக உண்மைகளையும்,உலக ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்ல முடிந்தது....மேலும் மரணத்தை மனிதர்கள் வெல்ல முடியும் என்ற உண்மையை உலக மக்களுக்கு தெரியப்படுத்துகின்றார்.

மரணம் என்பது இயற்கை அல்ல ! மரணம் என்பது செயற்கை என்றார் .தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் என்பார்.

அருள் என்னும் திரவத்தை தன்னுடைய ஆன்மாவில் இருந்து முழுமையாக பெற்று மரணத்தை வெல்லும் வல்லபம் பெற்றவர்கள் மட்டுமே உலக உண்மைகளை அறிந்து மக்களுக்கு வழங்க முடியும் என்பது வள்ளல்பெருமானின் முக்கிய கொள்கையாகும்.

அதனால்தான் சமர சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கைகள் என்று பெயர் வைத்துள்ளார்கள்.அந்தக் கொள்கைகளை கடை பிடித்து ஒழுக்கத்துடன் வாழ்ந்து, மரணத்தை வென்று மரணம் இல்லாமல் ,மேலும் பிறப்பு இல்லாமல் வாழ்ந்து மக்களைக் காப்பாற்ற முடியும்.அதுவரையில் மக்களை யாரும் எவரும் காப்பாற்ற முடியாது. அதற்கு ஞான வழி என்றும் அருள் வழி என்றும் சுத்த சன்மார்க்கம் என்றும் பெயர் வைத்துள்ளார்.

அறிவியல் விஞ்ஞானிகளாலும் .ஆன்மீக அருளாலர்களாலும் சொல்ல முடியாத,காண முடியாத,கண்டு பிடிக்க முடியாத அனைத்தும் வள்ளல்பெருமான் வெளிப்படையாகக் கண்டு அதன் உண்மைகளை ''திருஅருட்பா ''என்னும் அருள் நூல் வாயிலாக உலக மக்களுக்குத் தெரியப் படுத்திக் கொண்டு உள்ளார் என்பதை நாம் படித்து,அறிந்து புரிந்து அதன்படி வாழ்ந்து மரணத்தை வென்று ...நாமும் இறைநிலையை அடைவோம்.

வள்ளல்பெருமான அவர்கள் ...ஐந்து பூதங்களான நிலம்,நீர்,அக்கினி ,காற்று,ஆகாயம்,போன்ற கருவிகளாலும்,கிரகங்களாலும்,அணு ஆயுதங்களாலும்,மனிதர்களால் உண்டாக்கும் தீ வினைகளாலும், மனிதர்களால் உண்டாக்கும் அணு ஆயுதங்களாலும்,மற்றும் எமன் என்னும் கூற்று வனாலும் மேலும் எந்த கருவிகளாலும் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தேகமான ஒளி தேகம் பெற்றவராகும்.

முன்னாடி தோன்றிய ஆன்மீக அருளாலர்களாலும் அறிவியல் விஞ்ஞானிகளாலும் கண்டுபிடிக்க முடியாத அனைத்தும் கண்டு பிடித்தவர்தான் வள்ளல்பெருமான் ஆவார்கள்.

அதனால் தான் அவருக்கு அருள் பெற்ற ''திரு அருட்பிரகாச வள்ளலார்'' என்றும் ''ஞான சித்தர்''என்றும் ,''அருள் விஞ்ஞானி'' என்றும் ''அருட்பெருஞ்ஜோதி அவரே'' என்றும் பெயர் பெற்றார் .

மேலே சொன்ன அனைத்து செய்திகளுக்கும் திருஅருட்பாவில் ,உரை நடைப்பகுதி வாயிலாகவும் ,செய்யுள் வாயிலாகவும் எழுதி வைத்துள்ளார்கள் படித்து தெரிந்து கொள்ளவும் .

மேலு சில பாடல்களை மட்டும் இங்கே பதிவு செய்கின்றோம் !

ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க
ஞான அமுதம் எனக்கு நல்கியதே ....வானப்
பொருட் பெருஞ் ஜோதிப் பொதுவில் விளங்கும்
அருட்பெருஞ் ஜோதி அது !

சுத்தவடிவம் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவம் நிறைந்து ஒங்கு ....சித்து எனும் ஓர்
ஞான வடிவும் இங்கே நான் பெற்றேன் எங்கு எங்கும்
தான விளையாட்டு இயற்றத் தான் .!

நானே தவம் புரிந்தேன் நம் பெருமான் நல் அருளால்
நானே அருட் சித்தி நான் அடைந்தேன் ...நானே
அழியா வடிவம் மூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு !

கட்டமும் கழன்றேன் கவலை விட்டு ஒழிந்தேன்
கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
சித்தமும் அடைந்தேன் சிற்சபை உடையான்
செல்வ மெய்ப் பிள்ளை என்று ஒரு பேர்ப்
பட்டமும் தரித்தேன் ஈனக்கு இது போதும்
பண்ணிய தவம் பலித்ததுவே !

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிர் ஆதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர்
என்தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே !

என ஆயிரக்கணக்கான பாடல்கள் திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளார்கள்  
படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.      

1 கருத்துகள்:

7 ஜனவரி, 2019 அன்று PM 3:51 க்கு, Blogger Unknown கூறியது…

avarin arivyal nool peyar enna iyya

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு