திங்கள், 3 நவம்பர், 2014

அறிவு இருக்கா ? புத்தி இருக்கா ?





அறிவு இருக்கா ? புத்தி இருக்கா ?

அறிவு புத்தி என்ற வார்த்தைகள் மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படுகின்றது .

நம்முடைய உடம்பு நான்கு வகையாக நான்கு பிரிவுகளாக உள்ளன .

இந்திரியம்,கரணம்,ஜீவன்,ஆன்மா என்ற நான்கு பிரிவுகளாக ,உள்ளன,

அகம்,என்பது ஆன்மா இருக்கும் இடம்,அகப்புறம் என்பது ஜீவன் என்னும் உயிர் இருக்கும் இடம்,புறம் என்பது கரணங்கள் என்னும் மனம் ,புத்தி,சித்தம்,அகங்காரம் என்னும் கருவிகள் இயங்கும் இடமாகும் .புறப்புறம் என்பது இந்திரியங்கள் என்னும் கண் ,காது,மூக்கு,வாய்,உடம்பு என்னும் கருவிகள் இருக்கும் இடங்ககலாகும் .

இந்திரியங்களில் இருந்து தோன்றும் அறிவு இந்திரிய அறிவு,கரணங்களில் இருந்து தோன்றும் அறிவு கரண அறிவு,ஜீவன் என்னும் உயிரில் இருந்து தோன்றும் அறிவு ஜீவஅறிவு,ஆன்மாவில் இருந்து தோன்றும் அறிவு ஆன்ம அறிவு .

மனிதர்கள் பேசுகின்ற அறிவு கரணங்களில் இருந்து தோன்றும் புத்திதான் அறிவு என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

புத்தியில் இருந்து தோன்றும் செயலுக்கு நினைப்பு,மறைப்பு இருந்து கொண்டே இருக்கும் .

உண்மை அறிவு என்பது ஆன்மாவில் இருந்து தோன்றும் அறிவாகும்.அந்த  அறிவுக்கு  உண்மையைத் தவிர வேறு எதுவும் தெரியாது .உண்மை மட்டும்தான் தெரியும் .உண்மையைப் தெரிந்து கொண்டவர்கள் பேசுபவர்கள் உலகில் யாரும் இல்லை .

உண்மை அறிவுக்கு நினைப்பு மறைப்பு என்பது இருக்காது .

நினைப்பு மறைப்பு இல்லாமல் ஆன்ம அறிவை அறிந்து கொண்டவன் மட்டுமே உயர்ந்த அறிவு உள்ள மனிதன் .அவனால் எதையும் சாதிக்க முடியும்,உலகையே மாற்ற முடியும்.அவனுக்கு அருளை அறிந்து கொண்டு அதை பெரும் வல்லமை உடையவன் .அந்த அருளால் மரணத்தை வெல்ல முடியும்,உண்மையான கடவுளைக் காண முடியும்.

அதனால் புத்தியை அறிவு என்று நினைக்காமல் ,ஆன்மாவில் உள்ள ஆன்ம அறிவை பெற்று அதனால் கிடைக்கும் அருளை அனுபவித்து ,கடவுள் நிலை அறிந்து அதன் மயமாய் தன்னை மாற்றிக் கொள்பவனே அருளாளன் என்பவன் ஆகும் அவர்களே முற்றும் தெரிந்த ஞானிகள் என்று போற்றப் படுபவர்களாகும்.

அந்த அறிவை பெறுவதற்கு  சாதி,சமய ,மதம் என்ற விஷத் தனமையான கூண்டுக்குள் இருந்து வெளியே வந்து ,எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நினைத்து .அன்பு,தயவு,கருணைக் கொண்டு,அனைத்து உயிர்களிலும் உடம்பு களிலும் உள் ஒளியாக ஆன்மா என்னும் அருள் ஒளி ஒரே தன்மையாக உள்ளன என்பதை அறிந்து , ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையுடன் வாழ வேண்டும்.

அந்த ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழ்பவனுக்கு மட்டுமே ஆன்ம அறிவு என்னும் உண்மை அறிவு தோன்றி விளங்கும்..அதுவே அறிவு என்பதாகும் .

அறிவுக்கும் புத்திக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து புத்தியை அறிவு என்று நினைக்காமல் அறிவை தெரிந்து கொண்டு அதன்படி உண்மை ஒழுக்கமுடன் வாழ்வோம்.ஆன்ம அறிவைப் அறிவோம் .அதில் உள்ள அருளைப் பெறுவோம்.
அருளைப் பெற்று பேரின்ப வாழ்வை அடைந்து ...,பசி இல்லாமல் ,,,பிணி இல்லாமல் ,,,தாகம் இல்லாமல் ,,,இச்சை இல்லாமல் ,,,எளிமை இல்லாமல் ,,,பயம் இல்லாமல் ,,,துன்பம் இல்லாமல் ,,,,கொலை இல்லாமல்  ,மகிழ்ச்சியுடன் வாழ்வோம் .

இவைகள் யாவும் உயர்ந்த அறிவு படைத்த மனிதனால் மட்டுமே முடியும் .

மேலே கண்ட உண்மை அறிவைத தெரிந்து அதன்படி வாழ்ந்து ,பூரண அருளைப் பெற்று மரணத்தை வென்று ,கடவுள் நிலை அறிந்து அதன் மயமானவர்தான் நமது தமிழ் நாட்டில் தோன்றிய வள்ளல்பெருமான் ஆவார் .

இராமலிங்கம் என்பவர் ,வள்ளலார் ஆனார்,அதன்பின் திரு அருட்பிரகாசர் என்னும் ஒளி உடம்பை பெற்று கடவுள் நிலையை அடைந்தவராகும்.

அவர் காட்டிய சுத்த சன்மார்க்க மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து அருளைப் பெற்று என்றும் அழியாத பேரின்ப பெரு வாழ்வில் வாழ்வோம்.

உங்கள் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு