சனி, 17 ஆகஸ்ட், 2019

நிர்வாண சன்னியாசி !


நிர்வாண சந்நியாசி !

சென்னையில் வாழ்ந்த ''தோப்பா சாமியார்'' என்னும் பெயர் உடைய துறவியார் ! நிர்வாணசாமியார் என்று அழைக்கப்பட்டவர்..அவர் சென்னையில் நெல்லிக்காய் பண்டாரத் தெருவிற்கு அடுத்த தேரடித் தெருவில் உள்ள ஒரு திண்ணையில் அமர்ந்து கொண்டு இருந்தார்.அவரைப் பைத்தியக்காரன் என மக்கள் நினைத்து இருந்தார்கள்.

இந்த உலகில் மனித குணம் உள்ளவன் எவரும் இல்லை என்பதால் அவர் ஆடை அணியாமல் நிர்வாணமாக வாழ்ந்து வந்துள்ளார்.

மனிதன் முன்னால் வாழ்ந்தால்  ஆடை வேண்டும் ,எல்லா மனிதர்களும் மனித உருவிலே வாழ்கின்ற மிருகங்கள் என்பதால் ,மனித  மிருகங்கள் வாழும் இடத்தில், தான் இருப்பதால் ஆடை அணிய தேவை இல்லை என்பதால் ஆடை அணியாமல் இருந்துள்ளார். .

அந்தத் தெரு வழியாக போகிற ஒவ்வொருவரையும்.அவர் குணங்களை தெரிந்து கொண்டு,கழுதை போகிறது ,...மாடு போகிறது,...நாய் போகிறது,..நரி போகின்றது ..  பன்றி போகின்றது.யானை போகின்றது ,என்று மிருகங்களின் பெயரைச் சொல்லி அழைத்துக் கொண்டே இருப்பார் .

மக்கள் அவரைப்  பைத்தியக் காரன் என நினைந்து கண்டும் காணாமல் சென்று  கொண்டே இருப்பார்கள் .

ஆனால்  அவன் பைத்தியக் காரன் அல்ல ,மனிதனை தேடிக் கொண்டே இருக்கின்றான் .

வள்ளல்பெருமான் வருகை !

வள்ளலார் ஏழு கிணறு வீராசாமி தெருவில் உள்ள தன் வீட்டில் இருந்து  எப்பொழுதும் திருஒற்றியூருக்குக் கீழ் அண்டை மாடவீதி   வழியாகச் செல்லாது ,ஆங்குள்ள நெல்லிக் காய்ப் பண்டாரர் சந்து வழியாக செல்வது வழக்கமாக கொண்டு இருந்தார் .

ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாகத் தேரடித் தெரு வழியாகச் சென்று கொண்டு இருந்தார் ..அத்தெருவில் உள்ள ஒரு திண்ணையில் அமர்ந்து இருந்த ''தோப்பா   சாமியார்'' .வள்ளல்பெருமான் வருவதைக் கண்டு ''இதோ ஓர் உத்தம மனிதன் வருகிறார் ''என்பதை கண்ணுற்று உரைத்தான் .உரைத்ததோடு அல்லாமல், அடுத்து தம் உடம்பினையும்,உறுப்புகளையும்  தனது கரங்களைக் கொண்டு மறைத்து கூனி குறுகி ஒடுங்கி கொண்டார் .

அதைக் கண்ட மக்கள் அங்கு கூட்டமாக கூடி விட்டார்கள்...அதைக் கேட்ட ,அதைக் கண்ட நம் வள்ளல்பெருமான் அவர் பக்கத்தில் சென்று தன்னுடைய மேலாடையைக் கொடுத்து அணிந்து கொள்ளச் சொல்லி சில புத்திமதிகளை சொல்லி அன்றே அவ்விடத்தை விட்டு வெளியேறச் சொன்னார் ..

அந்த நிர்வாண சந்நியாசி வள்ளல்பெருமானை வணங்கி அவ்விடம் விட்டு அகன்று விட்டார் ..

அங்கு கூடி இருந்த அத்துணை மக்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போயினர் .இது வரையில் அந்த சன்னியாசியை பைத்தியக் காரன் என நினைத்து இருந்தோம் ..அவன் மனிதனை தேடிக் கொண்டு இருந்து இருக்கின்றான் .வள்ளல்பெருமானைப் பார்த்ததும் இதோ ''ஒரு உத்தம மனிதன்'' வருகிறான் என்பதை கண்டு தனது கைகளால் தன் அவயங்களை மறைத்துக் கொண்டார்.என்பதே மக்களின் பேச்சாக சென்னை நகரம் முழுவதும் பரவியது.


அங்கிருந்த தோப்பா சாமி வேலூருக்கு சென்றுவிட்டார்.. வட ஆற்காடு மாவட்டம் வேலூரில் சைதாப்பேட்டை மெயின்பஜாரில் உள்ள சாலையில் அவருடைய சமாதி உள்ளது. சித்தரின் சமாதி இப்போது ஒரு மடாலயமாக வளர்ந்துள்ளது.

வள்ளல்பெருமான் முற்றும் உணர்ந்த  அருளாளர் என்பதை மக்கள் அன்று புரிந்து கொண்டார்கள்.

வள்ளலாரை அறிந்து கொள்ள ஞான அறிவு வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு