வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

ஆன்மா ஆன்மதேகம் எடுக்க வேண்டும் !

ஆன்மா ஆன்ம தேகம் எடுக்க வேண்டும்.!

ஆன்மாவானது. உயிரை அழிக்கவும் கூடாது.. உயிர் பஞ்சபூத அணுக்களின்  பொருளினால் உடம்பு இயங்கவும் கூடாது  உயிரும் உடம்பும் ஆன்மாவின்  அருள் ஒளியில் கரைந்து இறைவனிடம் கலக்க  வேண்டும்.

ஜீவ தேகத்தில் இருந்து வாழும் ஆன்மா ஆன்ம தேகம் எடுக்க வேண்டும்.இந்த முடிவை ஆன்மாதான் எடுக்க வேண்டும்.

உடம்பில் உயிர் இயக்கம் உள்ளவரை மரணம் வந்தே தீரும். ஆன்மாதான் உயிரையும் உடம்பையும் பெற்றுக் கொண்டு உலக வாழ்வில் துன்ப்ப் படுகின்றது..

ஆன்மா தன்னையும் தன் அறிவையும்.தன்னிடம் உள்ள அருளையும் அறியாமல் வாழ்கின்ற வரை மரணம் வந்து கொண்டே இருக்கும்.

உயிர் பிரிந்தாலும் ஆன்மாவிற்கு வேறு உயிர் உடம்பு கட்டிக் கொடுக்கப்படும்.உயிர் உடம்பில் இயங்கிக் கொண்டே இருந்தாலும் மரணம் வந்தே தீரும்.

மரணத்தை வெல்லுவதற்கு என்ன வழி என்பதை வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார். ஆன்மாவின் உலக வாழ்க்கைக்கு...ஜீவ சுதந்திரம்..தேக சுதந்திரம். போக சுதந்திரம் என மூன்று சுதந்திரம் இறைவன் கட்டளைப்படி மாயைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

இந்த சுதந்திரத்தை ஆன்மா தன்னை அறியாமல் பயன் படுத்திக் கொண்டு இருப்பதால் நரை.திரை.பிணி.மூப்பு.பயம்.துன்பம்   இறுதியில் மரணம் வந்து விடுகின்றது..

இந்த உண்மையை வள்ளலார் ஆன்ம அறிவினால் அறிந்து மூன்று சுதந்திரமும் தனக்கு வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்து விட்டப்பிறகு...ஆன்ம சுதந்திரம் வேண்டும் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் கேட்கிறார்... உண்மை அறிந்து கேட்டதால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உடனே ஆன்ம சுதந்திரம்  கொடுத்துவிட்டார்...

ஆன்ம சுதந்திரம் எதற்காக கேட்டார்.

ஆன்ம சுதந்திரம் கிடைத்தால் மட்டுமே இறைவனிடம் அருளைப் பெற முடியும். அருளைப் பெற்று மரணத்தை வென்று மீண்டும் பிறப்பு இறப்பு இல்லாமல் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ முடியும் என்பதை ஆன்ம அறிவால் அறிந்து கேட்டார்..ஆண்டவர் கொடுத்துவிட்டார்..

இதுவே நாம் அனைவருக்கும் வள்ளலார் காட்டிய நேர்வழியாகும்..

அந்த சுதந்திரம் பெறுவதற்கு சத்விசாரம் பரோபகாரம் என இரண்டு நேர் வழிகளை வள்ளலார்  காட்டி உள்ளார்.

இந்த வழியில் ஆன்மா செல்லாமல் தவறான வழியில் சென்றுக் கொண்டு இருப்பதால் இன்றுவரை எந்த ஆன்மாவும் மரணத்தை வெல்ல முடியாமல் வேறு தேகம் எடுத்துக் கொண்டே இருக்கின்றது.

இதற்குத்தான் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை மற்றும் ஒருமைத்தன்மை வேண்டும் என்றார்..

நம் ஆன்மா எந்த வழியைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டு உள்ளது என்பதை நம் ஆன்மாதான் அறிந்து திருத்திக் கொள்ள வேண்டும்.

திருந்தாதவரை.திருத்திக் கொள்ளாதவரை எக்காலத்திலும் மரணத்தை வெல்ல முடியாது.

வள்ளலார் சொல்லி உள்ள  ஒழுக்கத்தில் ஒரு ஒழுக்கம் கூட முழுமையாக ஒருவரும் கடைபிடிக்கவில்லை  என்பதை அவரவர்களே சுய பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

மாறுவோம் மற்றவர்களையும்  மாற்றுவோம்...முடியாததது என்பது இந்த உலகில் எதுவும் கிடையாது..முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்..முயற்சி தீவினையை அகற்றி நல்வினை யாக மாற்றப்படும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு