சனி, 10 ஆகஸ்ட், 2019

வள்ளலார் நீதி மன்றம் செல்லுதல் !

 வள்ளலார் உருவில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நீதி மன்றம் செல்லுதல்.!

வள்ளலார் எழுதிய திருஅருட்பாவில்

சாதி சமயம் மதம் எல்லாம் பொய்யான கற்பனைக் கதைகள் என்றும் அவைகளில் சொல்லப்படும் கடவுள்கள் எல்லாம் தத்துவங்கள் என்றும்..  .''கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்'!' என்பதை திரு அருட்பாவில் ,பல  பாடல்கள் வாயிலாக வள்ளலார் தெரியப்படுத்தி எழுதி வைத்து உள்ளார் ..அவற்றைக் கண்ணுற்ற சமய வாதிகள் வள்ளலார் மீது கோபம் கொண்டு அவர் மீது மஞ்ச குப்பம் நீதி மன்றத்தில்
வழக்குத் தொடர்ந்தனர் ....

வள்ளலார் எழுதியது திருஅருட்பா அல்ல ,அவை மருட்பா என்று ,சமயவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ,யாழ்பாணத்தில் உள்ள ஆறுமுக நாவலரை அழைத்து வந்து மஞ்சகுப்பம் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வள்ளலாருக்கு நீதிமன்ற சம்மன் வந்தது ,சம்மனை வாங்க மறுத்து விட்டார்.தன்னுடைய சீடர் வேலாயுதம் அவர்களின் அன்பிற்கு கட்டுப்பட்டு கோர்ட்டு சம்மனை கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொண்டார்.

இந்த செய்தி தமிழகம் எங்கும் தீ போல் பரவியது.
நீதீமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்த்து. அப்போது ஆங்கிலேயர் ஆட்சி காலம்.

நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது இராமலிங்கம் இராமலிங்கம் என்று குரல வந்தது ..திடீர் என்று இராமலிங்கம் கூண்டுக்குள் 
( வந்து நின்றார் )பிரசன்னமானார் .நீதிபதி முதற்கொண்டு அனைவரும் எழுந்து கை கூப்பி வணக்கம் செய்தனர்...நீதிபதியும் தன்னை யறியாமல் எழுந்ததை உணர்ந்து சமாளித்துக் கொண்டு அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

, நீதிபதி ஆறுமுக நாவலரைப் பார்த்து .நீங்கள் தானே வழக்குத் தொடர்ந்தவர் என்று நீதிபதி கேட்க ..ஆமாம் என்று அவர் பதில் சொல்ல ,இராமலிங்கம் வந்தவுடன் அவரைப் பார்த்து எழுந்து வணக்கம் சொன்னீரே, ஏன் ? என்று கேட்க ,அதற்கு அவர் அறிவில் பெரியவர்,உயர்ந்தவர்,அனைவராலும் மதிக்கத்தக்கவர்,பாராட்டத் தக்கவர் . ஆதலால் வணக்கம் சொன்னேன் என்று சொல்ல ..

நீங்களே அவர் பெரியவர், உயர்ந்தவர் என்று ஒப்புக் கொண்டதால் ,அவர் எழுதியது ''திருஅருட்பா'' தான்,மருட்பா அல்ல என்று தீர்ப்பு வழங்கினார்.இந்த செய்தி தமிழகமெங்கும் தீப்போல் பரவியது .அவர் புகழ் மேன் மேலும் அதிகமாக மக்கள் மத்தியில் பரவலாயிற்று .

ஆனால் வள்ளலார் நீதி மன்றம் செல்லவில்லை, வடலூரில் உள்ள தருமச்சாலையில் தன்னுடைய அன்பர்களிடம் உரையாடிக்கொண்டு இருந்தார் என்ற செய்தி நீதிமனறத்தில் இருந்த வந்த அன்பர்கள் அறிய, வள்ளலார் இதை வெளியில் சொல்லவேண்டாம் என்று அடக்கிவிட்டார்.நீதி மன்றத்திற்கு சென்றது வள்ளலார் உருவில் அருட்பெருஞ்ஜோதி இறைவனே சென்றார் என்பது உண்மையாகும் .

இந்த வழக்குத் தொடரும்போது நான்கு திருமுறைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.அதிலே சாதி சமய மதங்களை பொய் என்று சாடி பதிவு செய்துள்ளார்..

வள்ளலார் மரணத்தை வென்று. சித்திப்பெற்றபின் ஐந்தாவது திருமுறையும்.ஆறாவது திருமுறையும் வெளியிடப்பட்டதாகும்....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு