[4/16, 2:46 PM] TamilThenral: _பாவேந்தரா இப்படி எழுதினார்_ ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
' _நித்திரையில் இருக்கும் தமிழா_ ' எனப் பாவேந்தர் பெயரில் , _உருச்சிதைந்த சில வரிகளைப் புத்தாண்டு குறித்துப் பாவேந்தர் எழுதிய பாடலா_ கப் பலரும் உலவ விடுகின்றனர்.
அது _பிழையான செயல்_ !
அது _பிழையான பாடல்_ .
அந்த வரிகளின் _முழுமையான வடிவம் இந்தப் பாடல்_ : _____________________________
_தமிழ்ப் புத்தாண்டு_
_தை முதல்நாளே_ !
- _புரட்சிப் பாவேந்தர்_
_பாரதிதாசன்_
( எண்சீர் ஆசிரிய விருத்தம் )
அகத்தியனும் காப்பியனும்
தோன்றும் முன்னர்
அரியதமிழ்த் தலைக்கழகம்
தோன்றும் முன்னர்
மிகுந்தகடல் குமரியினை
மறைக்கும் முன்னர்
விண்ணுயர்ந்த பனிமலைதான்
நிமிரும் முன்னர்ப்
பகுத்தறிவின் துணையாலே
அரசி யற்றிப்
பல்கலையின் ஒளியாலே
உலகம் காத்துத்
திகழ்பழைய தமிழகமே
இடைநாள் தன்னில்
திராவிடநா(டு) எனப்போற்றும்
என்றன் அன்னாய்!
பத்தன்று நூறன்று
பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாயத்
தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைமுதல்நாள்
பொங்கல் நன்னாள்!
போற்றிவிழா கொண்டாடி
உன்ந லத்தைக்
கத்துகடல் கவர்ந்ததுவோ
பகைவர் கூட்டம்
கவிழ்ப்பதற்கு முனைந்ததுவோ
காக்கும் போரில்
செத்தவர்கள் பலநூறோ
மறவா வண்ணம்
செந்தமிழின் சொற்களிலே
செதுக்கி வைத்தோம்
தெலுங்குமலை யாளம்கன்
னடம்என் கின்றார்
சிரிக்கின்றோம் அன்னாய்நின்
மக்கள் போக்கை !
நலங்கெட்டுப் போவதில்லை
அதனால் என்ன
நான்குபெயர் இட்டாலும்
பொருள்ஒன் றன்றோ
கலங்கரையின் விளக்குக்கு
மறுபேர் இட்டால்
கரைகாணத் தவறுவரோ
மீகா மன்கள் ?
இலங்குதிரு வே! வையம்
செய்த அன்னாய்
எல்லோரின் பெயராலும்
உனக்கென் வாழ்த்தே
தமிழகமே திராவிடமே
தைம்மு தல்நாள்
தனிலுன்னை வாயார
வாழ்த்து கின்றேன்
அமிழ்தான பாற்பொங்கல்
ஆர உண்டே
அகமகிழ்ந்து தமிழாலே
வாழ்த்து கின்றேன்
எமைஒப்பார் எவருள்ளார்?
எம்மைவெல்வார்
இந்நிலத்தில் பிறந்ததில்லை
பிறப்ப தில்லை
இமைப்போதும் பழிகொண்டு
வாழ்ந்த தில்லை
எனும்உணர்வால் வாழ்த்துகின்றேன்
வாய்ப்பேச் சல்ல !
அன்றொருநாள் வடபுலத்தைக்
குட்டு வன்போய்
அழிக்குமுனம் தன்வீட்டில்
இலையில் இட்ட
இன்பத்துப் பொங்கலுண்டான்
அதைப்போ லத்தான்
இன்றுண்டேன் அன்றுன்னை
வாழ்த்தி னான்போல்
நன்றுண்டேன் வாழ்த்துகின்றேன்
எனைப்பெற் றோயே
நல்லுரிமை உன்மூச்சில்
அகன்ற தில்லை
பொன்னேஎன் பெருவாழ்வே
அன்பின் வைப்பே
புத்தாண்டு வாழ்த்துரைத்தேன்
நன்று வாழ்க !
- _சூலூர் பாவேந்தர் பேரவை_
[4/16, 2:46 PM] TamilThenral: தமிழ் ஆண்டுகளை சமஸ்கிருத பெயரில் மட்டுமே அறிந்திருப்பீர்கள்..
இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.
*1.* பிரபவ - *நற்றோன்றல்*
*2.* விபவ - *உயர்தோன்றல்*
*3.* சுக்கில - *வெள்ளொளி*
*4.* பிரமோதூத - *பேருவகை*
*5.* பிரசோத்பத்தி - *மக்கட்செல்வம்*
*6.* ஆங்கீரச - *அயல்முனி*
*7.* சிறிமுக - *திருமுகம்*
*8.* பவ - *தோற்றம்*
*9.* யுவ - *இளமை*
*10.* தாது - *மாழை*
*11.* ஈசுவர - *ஈச்சுரம்*
*12.* வெகுதானிய - *கூலவளம்*
*13.* பிரமாதி - *முன்மை*
*14.* விக்ரம - *நேர்நிரல்*
*15.* விச - *விளைபயன்*
*16.* சித்திரபானு- *ஓவியக்கதிர்*
*17.* சுபானு - *நற்கதிர்*
*18.* தாரண- *தாங்கெழில்*
*19.* பார்த்திப - *நிலவரையன்*
*20.* விய - *விரிமாண்பு*
*21.* சர்வசித்த - *முற்றறிவு*
*22.* சர்வதாரி - *முழுநிறைவு*
*23.* விரோதி - *தீர்பகை*
*24.* விகிர்தி- *வளமாற்றம்*
*25.* கர - *செய்நேர்த்தி*
*26.* நந்தன - *நற்குழவி*
*27.* விசய - *உயர்வாகை*
*28.* சய - *வாகை*
*29.* மன்மத - *காதன்மை*
*30.* துன்முகி - *வெம்முகம்*
*31.* ஏவிளம்பி - *பொற்றடை*
*32.* விளம்பி - *அட்டி*
*33.* விகாரி - *எழில்மாறல்*
*34.* சார்வரி - *வீறியெழல்*
*35.* பிலவ - *கீழறை*
*36.* சுபகிருது - *நற்செய்கை*
*37.* சோபகிருது - *மங்கலம்*
*38.* குரோதி - *பகைக்கேடு*
*39.* விசுவாவசு - *உலகநிறைவு*
*40.* பராபவ - *அருட்டோற்றம்*
*41.* பிலவங்க - *நச்சுப்புழை*
*42.* கீலக - *பிணைவிரகு*
*43.* சவுமிய - *அழகு*
*44.* சாதாரண - *பொதுநிலை*
*45.* விரோதி கிருது - *இகல்வீறு*
*46.* பரிதாபி - *கழிவிரக்கம்*
*47.* பிரமாதீச - *நற்றலைமை*
*48.* ஆனந்த - *பெருமகிழ்ச்சி*
*49.* இராட்சச - *பெருமறம்*
*50.* நள - *தாமரை*
*51.* பீங்கள - *பொன்மை*
*52.* காளயுக்தி- *கருமைவீச்சு*
*53.* சித்தார்த்தி - *முன்னியமுடிதல்*
*54.* ரவுத்ரி- *அழலி*
*55.* துன்மதி- *கொடுமதி*
*56.* துந்துபி- *பேரிகை*
*57.* உருத்ரோத்காரி - *ஒடுங்கி*
*58.* இரக்தாட்சி- *செம்மை*
*59.* குரோதன்- *எதிரேற்றம்*
*60.* அட்சய - *வளங்கலன்*
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்எம்
பெருமான்மெய்யே உன் பொன்னடிகள் கண்டிங்கு வீடுற்றேன்
பாட்டோடு பொருந்தாத
இசையால் பயன் இல்லை.
இரக்கம் இல்லாத கண்களாலும் பயன் இல்லை.
*சிவ சிவ*🙏
****************************
[4/16, 2:46 PM] TamilThenral: மறைக்கப்பட்ட 'உண்மைகள்
இரண்டாம் உலகப்போரின் போது
இந்தியாவில்...
பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இந்திய சிப்பாய்களை
இத்தாலி,
ஜெர்மன்
துருக்கி
போன்ற நாடுகளின் மீது போரிடுவதற்காக அனுப்ப பிரிட்டிஷ் அரசு
முடிவெடுத்தது
அதற்கு,
சர்தார் வல்பாய் படேல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால்
காந்தி இந்திய சிப்பாய்களை அனுப்பவதற்கு சம்மதித்தார்
இதனால்,
படேலுக்கும் காந்திக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது
இறுதியில்,
சுமார் 5000 இந்திய சிப்பாய்கள் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இத்தாலி மீது போர்தொடுக்க அனுப்பட்டனர்
அங்கு,
ஐயாயிரம் இந்திய சிப்பாய்களும் இத்தாலி இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டனர்.
ஒரு நாடக அரங்கத்தில்
அடைத்து வைத்து
விஷவாயு* செலுத்தி
படுகொலை செய்ய முசோலினி திட்டமிடுகிறார்.
அதனை ஹிட்லருக்கும் தெரியப்படுத்துகிறார்.
செய்தி அறிந்து பதைபதைக்கிறார் ஒரு இந்திய தலைவர்.
அவசரம் வேண்டாம்
அந்த சிப்பாய்களை ஒருமுறை நான் பார்க்கவேண்டும்...
அது வரையில் பொறுத்திருங்கள்
என்று வேண்டுகோள் விடுத்தார்
நமது சிப்பாய்கள் அடைத்து வைத்திருந்த அரங்கத்தில்
முதலில் முசோலினி நுழைந்தார்.
*'அமைதி'*
இரண்டாம் நபராக ஹிட்லர் நுழைந்தார்...
*'அசைவில்லை'*
மூன்றாவது நபராக இந்தியத்தலைவர் நுழைந்தார்
அவரைப்பார்த்தும் 5000
இந்தியசிப்பாய்களும்
வீருகொண்டு எழுந்து,
உணர்ச்சி பிழம்பாக மாறி
நேதாஜி ஜிந்தாபாத்
என்று எழுப்பிய கோஷம் அரங்கமே அதிர்ந்தது.
ஹிட்லரும், முசோலினியும்
விக்கித்து நின்றனர்.
அப்போது நேதாஜி அவர்கள்
ஹிட்லரிடமும், முசோலினியிடமும்,
"இவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றி கொண்டிருந்தாலும் என் தாய் நாட்டு மக்கள்
எனது சகோதரர்கள்
இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி
என்னிடம் தாருங்கள்.
நான் இவர்களை இந்திய தேசிய இராணுவத்தில் சேர்த்து
பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு
என் பாரதநாட்டின்
விடுதலையை பெற்று விடுவேன்
என்று கூற
முசோலினியும், ஹிட்லரும் சம்மதித்தனர்
5000 வீரர்களும் இந்திய தேசியஇராணுவத்தில் இணைந்த செய்தியை
சர்வதேச ரேடியோவில்
அறிவிக்கிறார் நேதாஜி.
இந்தச் செய்தியை கேட்ட இங்கிலாந்துக்கு நடுக்கம் ஏற்படுகிறது.
பிரிட்டிஷ் பாராளுமன்றம் அவசரமாகக் கூடி விவாதித்தது.
இந்தியாவில் உள்ள இராணுவத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் இந்திய சிப்பாய்கள் கையில் இப்போது *'துப்பாக்கி இருக்கிறது
அது எந்த நேரமும் நமக்கெதிராக திரும்பும்.
அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது.
எனவே,
நாம் இந்தியாவைவிட்டு உடனடியாக வெளியேறி விட வேண்டும்"
என்ற தீர்மானமும் போட்டது.
தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறினார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்தது.
இவ்வாறு,
நேதாஜியின் சேவையும், தியாகமும் அளப்பரியது.
அவரது வாழ்க்கையும், வரலாறுகளும்,
ஏன் மரணம் உட்பட...
*மறைக்கப்பட்ட உண்மைகள் ஏராளம்.*
அன்று,
ஐயாயிரம் இராணுவ வீரர்கள் போட்ட கோஷம் தான் நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தது என்றால் மிகையல்ல.
ஆகவே,
நாமும் உரக்கச்சொல்வோம்
தேசப்பிதா நேதாஜி ஜிந்தாபாத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக