tag:blogger.com,1999:blog-118177708240943157.post2820685774592511557..comments2024-02-01T20:38:29.038+05:30Comments on அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: கடிதம்அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்http://www.blogger.com/profile/04399248863417864235noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-118177708240943157.post-78181862136360164062011-04-30T21:53:07.308+05:302011-04-30T21:53:07.308+05:30உருவ வழிபாடு ஏன்? ---வேதாத்திரி மகரிஷி,
28 ஏப்ரல் ...உருவ வழிபாடு ஏன்? ---வேதாத்திரி மகரிஷி,<br />28 ஏப்ரல் 2011, 13:53 க்குஇல் Thalavai Samyஆல்<br /> http://arivhedeivam.blogspot.com/2009/10/blog-post_10.html <br /> <br />உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, உடல்வலிவு, சுகம், செல்வம், இவ்வேழு சம்பத்துக்களும் சரியாக இருந்தால்தான் ஒரு மனிதன் வாழ்க்கையில் தங்கு தடையின்றி எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொள்ளமுடியும்.<br /> <br />இது கருவமைப்பின் மூலமாகவோ அல்லது சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வின் காரணமாகவோ ஒவ்வொருவருக்கும் ஒன்றில் சிறப்பு இருக்கும். ஒவ்வொன்றில் குறைவு இருக்கும்.<br /> <br />குறைவாக உள்ளதை சரி செய்து, சமப்படுத்திக் கொள்வதற்கு அவரவர்கள் அறிவினாலேயே மனதில் சங்கல்பத்தின் மூலம் திடப்படுத்தி, பல தடவை அதையே எண்ணி எண்ணி குறைபாட்டைக் களைந்து நிறைவு செய்து வருவதற்கு, அறிவிற்குத் துணை செய்வதற்கு பூஜாவிதிகள் என்பதை முற்காலத்தில் ஏற்படுத்தினார்கள்.<br /> <br />பூஜாவிதி என்பது சடங்குகள் என்றாலும் எந்தக் குறைபாடு மனிதனிடம் இருக்கிறதோ, அந்தக் குறைபாட்டை அவனே நீக்கிக் கொள்வதற்காக மனஎழுச்சி, மனோதிடம், கற்பனையாக இருந்தாலும், பலதடவை செய்து செய்து இம்மாதிரி எனக்கு வேண்டும் என்று எண்ணும்போது முனைமனமானது, அடிமனதோடு தொடர்பு கொள்ளும்., அடிமனமானது பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆற்றல் களத்தோடு தொடர்பு கொண்டு, எங்கேயிருந்தாலும் இவனுக்கு வேண்டியது தானாக வந்து சேரும் அளவுக்கு உண்டாக்கும்.<br />இயற்கைச் சட்டம் என்ன என்றால் fraction demands totality supplies<br />இயற்கையிலிருந்து துண்டுபட்டுள்ளதே ஜீவன், மனிதன்<br />முழுமுதற்பொழுதாக உள்ள இறைநிலை, அறிவு என்ற நிலையில் பிரபஞ்சம் முழுவதும் கலந்து, உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றிலும் நிரம்பி இயங்கி கொண்டிருக்கிறது.<br />அதனால் எங்கே யாருக்கு என்ன தேவைப்பட்டாலும், விரும்பினாலும் அது கிடைக்கத்தான் வேண்டும்<br /> <br />ஆனால் விரும்புவர்கள் மனதை அதற்குரிய முறையில் அழுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், தகுதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்https://www.blogger.com/profile/04399248863417864235noreply@blogger.com