வெள்ளி, 17 ஜூன், 2016

தவம் ,தியானம்,யோகம்,உடற்பயிற்சி தேவையா ?

தவம் ,தியானம்,யோகம்,உடற்பயிற்சி தேவையா ?
இன்று உலகம் முழுவதும் மக்கள் .தவம்,தியானம்,யோகம்,உடற்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனம் அமைதி பெரும் என்று அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்கின்றார்கள்.
அவர்களை வைத்து கோடி கோடியாக பணம் சந்பாதிக்கும் பயிற்சி நிலையங்கள் எங்கு பார்த்தாலும் குவிந்து கிடக்கின்றன.
முதலீடு இல்லாமல் பணம் பறிக்கும், பயிற்சி நிலையங்களை அமைத்து மக்களை சுரண்டிக் கொள்ளை அடித்துக் கொண்டு உள்ளார்கள்.
அதற்கு மத்திய அரசும் அதிக அக்கறை எடுத்துக் கொள்கின்றன.!
நல்ல காரியம்தான் அதில் தவறு ஏதும் இல்லை.
மனிதனின் மனநிலை மாறுவதற்கும்,பிணி வருவதற்கும் ,உடல் பருமன் ஆவதற்கும் தீராத வியாதி வருவதற்கும்,தீராத துன்பம் வருவதற்கும் என்ன காரணம் என்று அறிய தவறி விட்டு விடுகிறார்கள் !.
கடப்பாறையை விழுங்கி விட்டு சுக்கு கசாயம் சாப்பிடுவதுபோல் உள்ளது.சுக்கு கசாயத்தால் கடப்பாரை வெளியே வந்துவிடுமா ? சிந்திக்க வேண்டும் ! .
உணவுதான் எல்லாவற்றுக்கும் காரணம் !
நமக்கு இறைவன் அழகான உடம்பைக் கொடுத்து உள்ளான் .உயிரைக்அ கொடுத்து உள்ளான் ,அவற்றை இயக்கம் ஆன்மா என்னும் ஒளியை வைத்துள்ளான். 
உடம்பின் உள்  உறுப்புக்களின் இயக்கம் அற்புதமானது.அந்த உறுப்புக்களுக்கு இடையூறு இல்லாமல் வாழ்வதே மனித வாழ்க்கையாகும்.
உடம்பிற்கு உள்ளே  போகும் பெரிய  துவாரம் வாய் தான் ,அதன் வழியாகத்தான் எந்தப் பொருள் களையும் உடம்பிற்கு உள்ளே அனுப்புகிறோம்.அதற்குப் பெயர்தான் உணவு என்பதாகும்.உணவுதான் மனித உடம்பை சீர் படுத்தவதாகும்.
மனிதன் உண்ணுகின்ற உணவு முறைகள் தான் அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருக்கின்றது.
ஒவ்வாத உணவுகளை உண்டுவிட்டு பண்ணாத தீமைகள்,,,,பகராத முடியாத கொடுமைகள் , ,செய்யத்தகாத செய்கின்ற செயல்கள் ,அனைத்தும் செய்து விட்டு மனம் அமைதி பெறவில்லை என்றால் எப்படி அமைதி பெரும்.
மனத்தைக் கட்டுபடுத்த உணவு முறைதான் முக்கிய பங்கு வகிக்கின்றது 
உணவு முறையில் இரண்டு வகை உண்டு தாவர் உணவு ,புலால் உணவு என்பதாகும்.தாவர உணவை முறையாக உண்பவர்களுக்கு எந்த வியாதியும் துன்பங்களும் வராது.அதே நேரத்தில் மனம் அலைபாயாது ஒரே சீராக செயல்படும்.
புலால் உணவு உண்பவர்களுக்கு தீராத வியாதிகளும் ,தீராத துன்பங்களுக்ம் வந்து கொண்டே இருக்கும்.அதே நேரத்தில் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.மனதை அடக்கவே முடியாது. .
எனவே உணவு முறையைக் கட்டுப் படுத்தாமல்,தவறான  முறையில் உணவை உட்கொண்டு  வாழ்க்கையை அமைத்துக் கொண்டு எவ்வளவுதான் ,தவம்,தியானம்,
யோகம்,உடற்பயிற்சி செய்தாலும் அவை ஆற்றிலே கரைத்த புளியைப்போல் ஆகிவிடும்..
உணவு முறையில் ஒழுக்கம் இல்லாமல் செயல்படும் எந்த செயல்களாக இருந்தாலும் அவைகளால் எந்த பயனும் இல்லை.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் .
என்கின்றார் திருவள்ளுவர் ,ஒழுக்கம் என்பது உயிரை விட மேலானது.உயிரைக் காப்பாற்றுவது ,ஒழுக்கம் என்கின்றார் .
எல்லாவற்றுக்கும் அடிப்படையானது ஒழுக்கம் !
வள்ளலார் ஒழுக்கத்தை நான்காக பிரித்து அதன் தனமைகளை விளக்கமாக விளக்கி உள்ளார்.
வள்ளல்பெருமான் எழுதிய திருஅருட்பாவை வாங்கி படித்துப் பாருங்கள் ஒழுக்கம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அவை ஜீவ காருண்ய ஒழுக்கம் என்பதாகும்.ஜீவ காருண்ய ஒழுக்கம் என்றால் உயிரைக் காப்பாற்றும் ஒழுக்கம் என்பதாகும்.....மற்ற உயிர்களைக் காப்பாற்றும் போது நம்முடைய உயிர்  காப்பாற்றப் படும் என்பதாகும்.
அதிலே நான்கு வகை உண்டு .இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்பதாகும்.
முதலாவதாக உள்ளது இந்திரிய ஒழுக்கம் என்பதாகும் கண்,காது,மூக்கு ,வாய்,உடம்பு,என்பதாகும் இவற்றைக் கொண்டுதான் புறத்தில் எல்லாச்செயல்களும் செய்து கொண்டு வருகின்றோம்.
நாம் செய்யும் செயல்கள் அனைத்தும்,கரணங்களில் உள்ள மனம் ,புத்தி,சித்தம்,அகங்காரத்தின் ஆதிக்கத்தின் படிதான் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றோம்.
ஆன்மாவில் உள்ள அறிவின்படி எவரும் செயல்படுவதில்லை. கரணங்களில் உள்ள மனத்தின்படியும், புத்தியின்படியும் தான் செயல்பட்டு வாழ்ந்து கொண்டு வருகின்றோம்.
மனத்தின்படி செயல்படுவதால்,தவம்,தியானம்,யோகம் ,உடற்பயிற்சி போன்ற பயிற்சிகளினால் ,செயல்களினால், மனத்தை அடக்க முடியாது.
அந்த பயிற்சியினால் மனம் அடங்குவதுபோல் தெரியும் மறுபடியும் மனம் அதே பழைய நிலைக்கு வந்துவிடும்.
தியானம் ,தவம்,யோகம்,செய்வதால் ஏதோ சிறு ஒளி உண்டாவதுபோல் தெரியும் .அதனால் பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும் என்கின்றார் வள்ளல்பெருமான்.
அறிவின் படி செயல்பட்டால் நன்மை எது ? தீமை எது என்பது தெரியும்.
ஜீவகாருண்யம் எவை எனில் ;--இந்திரியங்கள் என்னும் கண்,காது,மூக்கு ,வாய்,உடம்பின் வழியாக உலகில் உள்ள உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் மனத்தின் வழியாக துன்பம் செய்யாமல்,உடம்பின் வழியாக துன்பம் செய்யாமல் வாக்கின் வழியாக துன்பம் செய்யாமல் . நன்மையே செய்து வந்தால் மனம் அடங்கும்.எல்லா நன்மைகளும் தானே வந்து சேர்ந்துவிடும்.
முக்கியமாக உயிர்க் கொலை செய்வதையும் ,மாமிசம் உண்பதையும் நிறுத்தி விட்டாலே மனம் அடங்கும்.
வாயில்லாத அப்பாவி உயிர்களை உயிர்க்கொலை செய்து அதன் ஊன் சுவையை உண்டு வாழ்பவர்களுக்கு ,எவ்வளவு தான் இடைவிடாது தியானம்,தவம், யோகம்,உடற்பயிற்சி செய்தாலும் பாறையில் விதைத்த விதைபோல் ஆகிவிடும்.
ஆதலால் இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் இரண்டையும் கடைபிடிப்பவர்களுக்கு மனம் தானே அடங்கும்..
ஜீவகாருண்யத்தை கடைபிடித்து தவம்,தியானம், யோகம்,உடற்பயிற்சி செய்தால் ஓர் அளவிற்கு நன்மைதரும்.
கருணை இல்லாமல் எதை செய்தாலும் அதனால் எந்த பயனும் இல்லை .
கருணையோடு,தயவோடு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு  செயல்படும் மனிதர்களுக்கு எக்காலத்திலும், துன்பம்,துயரம்,அச்சம்,பயம்,என்பது எப்போதும் சிறிது அளவும் வரவே வராது.
அவர்கள் நோய் இல்லாமல் மன அமைதியுடன் நீண்ட காலம் உயிருடன் மகிழ்ச்சியுடனும் வாழலாம்.

சிந்திப்பீர் செயல்படுவீர் !
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896...

புதன், 15 ஜூன், 2016

ஆன்மா ! ஆணவம் ! மாயை,கன்மம் !

ஆன்மா என்பது !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குழந்தை என்பதாகும்.


மாயை !

மனம் என்பது உலகியல் இன்பத்தை தேடிக் கொண்டே இருக்கும் ஒரு சூக்குமக் கருவியாகும்.மனம் இல்லை என்றால் மனிதன் இல்லை ..

இறைவனால் அனுப்பட்ட ஆன்மா , பஞ்ச பூத உலகத்தில் வாழ்வதற்கு ,மாயை என்னும் அதி சூக்குமக் கருவியால்,ஆன்மாவிற்கு  உயிரும் உடம்பும் பொருத்தி வாழ்வதற்கு வசதி செய்து கொடுக்கப்படுகின்றது.

மாயைக்கு என்ன ? அந்த அளவிற்கு சக்தி உள்ளது என்று கேட்கலாம் ,நினைக்கலாம்,

பல கோடி அண்டங்களையும்,உலகங்களையும் உயிர்களையும்,பஞ்ச பூத அணுக்கள் களையும்,கிரகங்களையும் .படைத்துள்ளவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் என்பதை நாம் முதலில் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு அண்டங்களையும் நிர்வாகம் செய்ய ஒரு தலை சிறந்த நிர்வாக  அதிகாரி தேவை ! அந்த நிர்வாக அதிகாரிதான் மாயை என்னும் அதிகாரியாகும்,அந்த அதிகாரியை யாரும் எளிதில் பார்த்துவிட முடியாது.தொடர்பு கொள்ள முடியாது .

பொருள் உள்ளவர்களால் பார்க்க முடியாது .அருளைப் பெரும் தகுதி உள்ளவர்கள்,இடைவிடாது நன் முயற்ச்சி செய்து அருளைப் பெற்றால்  மட்டுமே மாயையின் சொரூபத்தை காண முடியும்.

பஞ்ச பூத உலகத்தின் இயக்கத்திற்கு,அதன்  நிர்வாக பொறுப்பும் அவற்றை  ஆட்சி  செய்யும்  நிலையான பதவியில் இருப்பது தான் மாயை என்பதாகும் அந்த .மாயையை அவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து,இறக்கி விடவோ  நீக்கிவிடவோ  முடியாது.அதுதான் நிலையான ஜனாதிபதி போன்றது ஆகும்..

எக்காலத்திலும்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்.  சட்டத்தை மீறாமலும்  சட்டத் திருத்தம் செய்யாமலும்,  ஒழுக்கம் தவறாமல்.ஒருமை மாறாமல், தன்னுடைய பணியை சிறப்பாக செய்து கொண்டு உள்ளதுதான் மாயை என்பதாகும்.

பலப்பல  ஞானிகள், சித்தர்கள்,யோகிகள் ,மற்றும் உலக அறிவாளிகள்,மேலும் பலத்தரப்பட்ட   மக்கள் மாயையைக் குறைச்சொல்லிக் கொண்டே இருப்பார்கள் அவை முற்றிலும் தவறானதாகும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வகுத்துத் தந்த சட்டத்தை எக்காலத்திலும்,எக்காரணம் கொண்டும் தவறான முறையில் செயல் படுத்தாத நேர்மையான ,ஒழுக்கமான சிறந்த  அதிகாரி தான் மாயை என்பதாகும்.

மாயைக்குத் துணையாக ,மாமாயை,பெருமையை,என்ற இரண்டு துணை அதிகாரிகள் செயல் பட்டுக் கொண்டு உள்ளார்கள்...இவர்கள் மூவரையும் மீறி எதுவும் இவ்வுலகில் நடைபெறாது,செயல்படாது,இயக்க முடியாது .இயங்க முடியாது.

 மாயை  தாய் போன்றது.!

மாயை என்பது தாய் போன்றது ! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தந்தை போன்றவர் !

ஆன்மாவிற்கு உயிரைக் கொடுப்பவர் தந்தை ! உடம்பைக் கொடுப்பது தாய் !

மாயையின் நிர்வாகம்;---இந்த  பஞ்ச பூத உலகில் நீர்,நிலம்,அக்கினி,காற்று,ஆகாயம்,மற்றும்,சூரியன் .சந்திரன,நட்சத்திரங்கள்,, மேலும்,ஒன்பது கிரகங்கள்,மேலும் வால்அணு ...,திரவ அணு,..குரு அணு ...லகு அணு ,...அணு....,பரமா அணு.... ,விபு அணு ...என்னும்  ஏழு விதமான , அணுக்களை நிர்வாகம் செய்வது .மாயையின் வேலைகள் ஆகும்.

அதே வேளையில் இங்கு அருள் நிறைந்து இருக்கின்றது.அருளை நிர்வாகம் செய்யும் பொறுப்பை மாயை இடம் ஒப்படைக்க வில்லை.என்பதை நன்கு அறிந்து,புரிந்து ,தெரிந்து கொள்ள வேண்டும்.

அருளை நிர்வாகம் செய்யவும்,பாது காக்கவும்,.அருளை .யார் ? யாருக்கு எந்த அளவிற்கு  கொடுப்பது,..கொடுக்காமல் இருப்பது என்பது எல்லாம்,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பொறுப்பும்,தனிப் பெருங் கருணை என்பதாகும்.

கணவன் மனைவி !

மாயையும், ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் கணவன் மனைவி போன்றதாகும்.இதைத்தான் சக்தி இல்லையேல் சிவன் இல்லை,சிவன் இல்லையேல் சத்தி இல்லை என்பார்கள்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடம் ! நிர்வாகம் செய்யும் இடம் ! எங்கு உள்ளது என்பதை நமது அருட் தந்தை ''அருட் பிரகாச வள்ளலார்'' கீழ் கண்ட பாடல் வாயிலாக தெரியப் படுத்துகின்றார் .

அருட் பெரு வெளியில் அருட்பெரு உலகத்து
அருட்பெரும் தலத்து மேல் நிலையில்
அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்
அருட்பெரும் திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரும் நிதியே
அருட்பெரும் சித்தி என் அமுதே
அருட்பெரும் களிப்பே அருட்பெரும் சுகமே
அருட்பெரும் சோதி என் அரசே !

என்னும் பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார் .

அருட்பெரு வெளியில் இருந்து தான் ,பலகோடி அண்டங்களையும், பலகோடி உலகங்களையும்,எல்லாப் பதங்களையும்,எல்லாச் சத்திகளையும்,எல்லா சத்தர்களையும்,எல்லாக் கலைகளையும்,..எல்லாப் பொருள்களையும்,..எல்லாத் தத்துவங்களையும்,..எல்லா தத்துவி களையும் ...எல்லா உயிர்களையும் ...எல்லா செயல்களையும் ...எல்லா இச்சைகளையும் ...எல்லா ஞானங்களையும் ...எல்லாப் பயன்களையும் ...எல்லா அனுபவங்களையும் ...மற்றை எல்லா வற்றையும் ...தமது திருவருள் சத்தியால் ..

தோற்றுவித்தல்,..வாழ்வித்தல் ...குற்றம் நீக்குவித்தல் ...பக்குவம் வருவித்தல்,,,விளக்கம் செய்வித்தல் என்னும் ஐந்து தொழில்கள் முதலிய பெருங் கருணைத் தொழில்களை இயற்றி இயக்கிக் கொண்டு உள்ளவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும் ...  

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சமூகத்தில் ஆன்மாக்கள் நிறைந்து இருக்கின்றது.!

மாயையின் சமூகத்தில் அணுக்கள் நிறைந்து இருக்கின்றது.

 

கொடுத்து உடம்பை நான்கு பிரிவுகளாக வகுத்து ,நான்கு பிரிவுகளுக்கும்


ஆன்மா என்பது வேறு ! உயிர் என்பது வேறு ! உடம்பு வேறு !

ஆன்மா என்பது வேறு ! உயிர் என்பது வேறு ! உடம்பு வேறு !

ஆன்மா இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்து சுற்றுலா செய்து விட்டு,அழியாத அருளைப் பெற்று  மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பி செல்ல வேண்டும் என்பதுதான் இறைவனின் சட்டம் கட்டளை !.
ஆன்மா இந்த உலகத்திற்கு வந்து சுற்றுலா செய்ய வேண்டுமானால்,தனித்து செயல்பட முடியாது அதற்கு வேண்டிய வசதிகளை மாயை செய்து கொடுக்க வேண்டும் மாயையால்  உ.யிரும் உடம்பும் கொடுக்கப் படுகின்றது .
ஆன்மா இந்த உலகத்தில் சுற்றுலா செய்வதற்கு  உயிரும் உடம்பும் மாயையினால் கட்டிக் கொடுக்கப்படுகின்றது.
ஆன்மாவிற்கு முதலில் உயிர்  கொடுத்து, தாவரம்,ஊர்வன, ,பறப்பன,நடப்பன,தேவர்,நரகர் ,மனிதர் போன்ற ஏழு வகையான உடம்பு கொடுக்கப்படுகின்றது.
உயிர் ஒன்றுதான் ஆனால்  உடம்புகள் வேறுவேறாக கட்டிக்  கொடுக்கப்படுகின்றது.
பல பிறவிகள் எடுத்து இறுதியாக மனித தேகம் கொடுக்கப் படுகின்றது.
ஆன்மாவிற்கு கடைசியாக மனிதப் பிறப்புக் கொடுக்கப்படுகின்றது.மனிதப் பிறப்பில் மட்டுமே  .அறம்.பொருள் ,இன்பம்,அனுபவித்து பின் வீடுபேறு அடைய வேண்டும்.
வீடுபேறு என்பது எங்கு இருந்து வந்ததோ அங்கே திரும்பி செல்லவேண்டும்.அதுதான்  சொந்த வீடு என்பதாகும் .இங்கு வாழ்ந்து  வந்த வீடு வாடகை வீடு என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒளி அணுக்களால் கட்டிக் கொடுக்கப் பட்ட வீடு !
ஆன்மாவிற்கு மாயையால் கட்டிக்  கொடுத்த உயிரையும்,உடம்பையும், அழிக்காமல்,அதை ஒளியாக மாற்றி திருப்பி மாயையிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஏன் என்றால் ? ஒளி அணுக்களைக் கொண்டுதான் உயிரும். உடம்பும்,கட்டிக் கொடுக்கப் படுகின்றது .அதை மீண்டும் ஒளியாக மாற்றி மாயையிடம் ஒப்படைக்கப் படவேண்டும்.,
சாமாதி அடைந்தோ ! முக்தி அடைந்தோ ! பஞ்ச பூதங்களில் கலந்தோ ! வந்த இடத்திற்கு செல்ல முடியாது .அவர்களுக்கு மீண்டும் பிறப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.!
தவம்,தியானம்,யோகம் போன்ற அற்ப செயல்களாலும் சொந்த வீட்டிற்கு செல்ல முடியாது.!
ஆன்மா எப்படி இங்கு வந்ததோ அப்படியே திரும்பி செல்லவேண்டும்.
உடமபையோ உயிரையோ எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
உயிரையும் உடம்பையும் அழித்துவிட்டு செல்லவும்  அனுமதி கிடையாது..உயிரையும்,உடம்பையும் அழித்தால் அதற்கு மரணம் என்று பெயர் .
மரணம் வந்தால் மீண்டும் உயிரும் உடம்பும் கொடுத்து .துன்பம் ,துயரம்,அச்சம் பயம் போன்ற துன்பங்களில் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்.
திரும்பிச் செல்லாத ஆன்மாக்கள் !
இதுவரையில் வந்த ஆன்மாக்கள் ஒன்று கூட சொந்த வீட்டிற்கு  திரும்பி செல்லவில்லை.
இந்த உண்மையை எந்த அருளாளர்களும் மனித தேகம் படைத்தவர்களுக்கு சொல்லித் தரவில்லை.கதைகளாகவும் கற்பனைகளாகவும் சொல்லி மக்களை குழப்பி விட்டார்கள் .
ஏன் என்றால் அவர்களுக்கு கடவுளின் உண்மையும் ஆன்மாவின் தன்மையும்,முழுமையாக தெரிந்து கொள்ள வில்லை .
வள்ளல்பெருமான் வந்து,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியபடி  தான் வாழ்ந்து ,அனைத்து ஆன்மாக்களுக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன்  உண்மையான வழியைக் காட்டி உள்ளார்.
உண்மையான வழியைக் காட்டுவதுதான் சுத்த சன்மார்க்க கொள்கையாகும் .
சுத்த சன்மார்க்க கொள்கை சாகாக் கல்வியைக் கற்றுக் கொடுப்பதாகும்.
இதுவரையில் சாகும் கல்வியை கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் அதனால் ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் இறந்து இறந்து ,பிறந்து பிறந்து துன்பத்தில் மூழ்கிக் கொண்டே இருந்து வருகின்றன.
சாகாக் கல்வி என்பதற்கு  ''மரணம் இல்லாப் பெரு வாழ்வு'' என்று பெயர் வைத்துள்ளார்.
ஆன்மாக்கள் மீண்டும் சொந்த வீட்டிற்கு  திரும்பி செல்ல வேண்டுமானால் அருளைப் பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி .உடம்பையும்,உயிரையும் மாயையிடம் திருப்பிக் கொடுத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.
உடம்பையும் உயிரையும் திரும்ப கொடுக்க வேண்டுமானால் அருள்  வேண்டும் .
அருள் என்பது இறைவனால் கொடுக்கும் நன்  நிதியாகும் அது அழியாத நிதியாகும்.
அருளைப் பெரும் வழி !
மாயையால் உண்டாகும்  உலகில் உள்ள உயிர்களுக்கு வரும் .பசி,பிணி,கொலை,தாகம்,இச்சை.எளிமை,பயம், போன்ற துன்பங்களைப் போக்க வேண்டும்.
உயிர்களின் துன்பங்களை போக்கினால் அருள் என்னும் (திரவம்) அருள்   ஆற்றல் ஆன்மாவில் இருந்து சுரக்கும்.அந்த ஆற்றல் உள்ள அருளினால் 
உயிரையும்,உடம்பையும் அழிக்காமல் அவற்றை  ஒளிமயமாக்கி  முழுவதுமாக மாயையிடம் ஒப்படைத்தால் ஆன்மாவிற்கு என்று ஆன்ம தேகம் கொடுக்கப்படுகிறது.
ஆன்ம தேகத்திற்கு மூன்று வடிவங்கள் கொடுக்கப் படுகின்றது.அவை ;-- சுத்த தேகம்,..பிரணவ தேகம்,..ஞான தேகம் என்னும் ஒளி தேகம் கொடுக்கப்படுகின்றது.அதற்கு 'சுத்த பிரணவ ஞான தேகம்'' என்றும் முத்தேக சித்தி என்றும்,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும்  பெயர் வைத்துள்ளார்  வள்ளல்பெருமான்.
''சுத்த பிரணவ ஞான தேகம்'' பெற்றால் எந்த தடையும் இல்லாமல் ஆன்மா இந்த அண்டத்தை விட்டு வெளியே சென்று வந்த இடத்திற்கு சென்றுவிடும்.
தனியாக வந்த ஆன்மா உயிர் உடம்பு,எடுத்து திறம்பட வாழ்ந்து உயிரையும் உடம்பையும் அழிக்காமல் திருப்பிக் கொடுத்து.மாயையிடம் நல்லபெயர் எடுத்து நற் சான்று பெற்று திரும்பி சென்றால் ஆண்டவர் அற்புதமான பரிசு ஒன்று வழங்குவார்.
அங்கு சென்றவுடன் ஆன்மாவிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் ஐந்தொழில் செய்யும் வல்லபம் என்னும் பரிசு வழங்கப் படுகின்றது.
அதற்கு பேரின்ப வாழ்க்கை பேரின்ப லாபம் ,என்றும் அழியாத நிரந்தர பேரின்பம் என்றும்,சத்து சித்து ஆனந்தம் என்றும் பெயராகும்.
ஆன்மாவை இங்கு அனுப்பியதின் நோக்கமே பேரின்பம் பெற்று வாழ்வதற்காகவே இறைவன் அனுப்பி உள்ளார் .
ஆன்மா சுற்றுலா செய்ய  அனுப்பியதின் நோக்கம் அருளைப் பெறுவதற்கே ! 
சுற்றுலாவில் நாம் இன்பம் அடைய வேண்டுமேத் தவிர துன்பம் அடையக் கூடாது .சுற்றுலா செய்துவிட்டு இங்கு இருந்து திரும்பும் போது ,அருள் வல்லபத்துடன் மகிழ்ச்சியாக செல்ல வேண்டும் என்பதுதான் ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் விருப்பமாகும்.
உயர்ந்த அறிவை பெற்றுள்ள மனித தேகம் எடுத்துள்ளவர்கள் உயிரையும் உடம்பையும் மாற்றி இந்த தேகத்தையே நித்திய தேகமாக மாற்றி பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவே வள்ளல்பெருமானை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் .
நாம் அனைவரும் வள்ளல்பெருமான் வாழ்ந்து காட்டிய சுத்த சன்மார்க்க பெருநெறியைக் கடைபிடித்து அருளைப் பெற்று பேரின்பத்தைப் பெறுவோம்.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,

செவ்வாய், 14 ஜூன், 2016

சும்மா இருக்கும் சுகம் !

சும்மா இருக்கும் சுகம் !
இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.
பூத வெளியை கடந்து ஞான வெளி என்னும் அருள் வெளியை தொடர்பு கொண்டால் பேச்சு இல்லாமல் அதாவது சப்தம் இல்லாமல் சும்மா இருப்பதாகும் .
அதில் உள்ள சுகத்தை அனுபவிப்பதுதான் அருள் சுகம் .
அந்த சுகத்தை சொல்லால் அறிய முடியாது ,சும்மா இருந்தால் தான் அறிய முடியும் .
அதைத்தான் வள்ளலார் சொல்லால் அளப்பது அறிதாம் ஜோதி வரை மீது தூய துரிய அப்பதியில் நேயம் அற ஓது என்றார்
அருட்பெருஞ்ஜோதியை தொடர்பு கொள்ளும் போது பேச்சு அற்று சும்மா இருப்பதையே சுகம் என்கிறார் வள்ளலார்
அதற்கு பெயர் தான் மவுனம்
மவுனம் சாதிப்பது அன்றி வேறு ஒன்றும் கண்டிளேன் என்பார்
மவுனத்தின் சக்தி அளவில் அடங்காதது
அதைத் தான் வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம் என்பதாகும்
அந்த வெளிக்குப் பெயர் மவுன வெளி என்பாகும்
இன்னும் விரிக்கில் பெருகும் .
ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

மரணத்தை வெல்ல முடியமா ? முடியாதா ?

மரணத்தை வெல்ல முடியமா ? முடியாதா ?
மனிதன் மரணத்தை வெல்ல முடியுமா ?முடியாதா? என்ற வினா மக்களிடையே பல்லாண்டு காலமாக உள்ள சந்தேகங்களாகும் .இதற்கு பதில் ஆன்மீக வாதிகளாலும் ,அறிவியல் வல்லுனர்களாலும் அணுக்களை ஆராய்ச்சி செய்யும்,ஆணு ஆராய்ச்சி யாளர்களாலும் ,விஞஞான ஆராய்ச்சி யாளர்களாலும் ,மற்றும் உள்ள பகுத்தறிவு வாதிகளாலும் ,பொது சிந்தனை யாளர்களாலும் இன்றுவரை {வள்ளலாரைத் தவிர } யாராலும் பதில் சொல்ல,பதில் காண முடியாமல் விழிக்கிறார்கள் .
ஒரு சிலர் உலகில் தோன்றியது எல்லாம் அழிந்து கொண்டேதான் இருக்கும் என்கிறார்கள்.ஒருசிலர் எல்லா உயிர்களும் பிறந்து பிறந்து இறந்து இறந்து கொண்டேதான் இருக்கும்,அதுவே இறைவனுடைய திருவிளையாடல் என்கிறார்கள்.ஒருசிலர் உலகில் படைக்கப் பட்ட அனைத்தும் மனிதர்களுக் காகத்தான் ஆதலால் அனைத்தையும் அழித்து தின்று ஏப்பம் போட்டுவிட்டு மனிதனும் அழிந்துவிட வேண்டியது தான் என்கிறார்கள்.ஒருசிலர் மனிதன் ஒழுக்க முள்ளவனாக வாழ்ந்து சொர்க்கம் ,சிவலோகம் ,வைகுண்டம் என்னும் இடத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்கிறார்கள்.
ஒருசிலர் உடம்போடு சமாதி நிலை அடைந்து இறை நிலையை அடையலாம் என்கிறார்கள்,ஒருசிலர் காசி ராமேஸ்வரம் ,இமயமலை,கைலாயமலை ,போன்ற புண்ணிய தீர்த்தங்களை தரிசித்து ஆலய வழிபாடு போன்ற கர்மங்கள் செய்வதால் கர்மம் தொலைந்து இறை நிலையை அடையலாம் என்கிறார்கள் .ஒருசிலர் உயிர்களின் பரிணாம வளர்ச்சி தோற்றமும மாற்றமும் இயற்கை யாகும் .அதலால் கடவுள் என்பது ஒன்றும் இல்லை எல்லாம் அணுக்களின் சேர்க்கையாகும் என்கிறார்கள் .ஒருசிலர் வேதம் ஆகமம் புராணங்கள் இதிகாசம் சாத்திரம போன்றவைகளை படித்து அதன்படி வாழ்ந்து வருபவகள் மட்டும்தான் இறைவனையே அடைய முடியும் என்கிறார்கள்,ஒருசிலர் உயிர்களுக்கு தொண்டு செய்தால்போதும்,பிற உயிர்களை வதைக்காமல் இருந்தால் போதும்,இறை நிலையை அடையலாம் என்கிறார்கள்.
சமய,மதத் தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனைக் கண்ணை முடிக்கொண்டு அதன்படி வர்ணம் ஆசிரமம் ஆசாரங்கள் போன்ற சங்கற்ப விகற்பங்களை செய்து இறை நிலையை அடையலாம் என்கிறார்கள்.இப்படி எண்ணற்ற வழிமுறைகள் ,என்பனப் போன்ற கருத்துக்கள் மனித வாழ்க்கைக்கு பலபேர் பல வழிகளில் வகுத்து வைத்துள்ளார்கள்
ஒரு சிலர் எல்லா வற்றிற்கும் ஆசைதான் காரணம் ஆசையை அழித்தால் இறை நிலையை அடையலாம் என்கிறார்கள் ஒரு சிலர் துறந்தாற்க்கும்,துவ்வா தார்க்கும் இறந்தார்க்கும் இல் வாழ்வான் துணை என்கிறார்கள் அவர்களே இறைவனை அடையமுடியும் என்கிறார்கள்.
எதைப் பற்றியும் கவலைப் படாமல் பணம் கிடைத்தால் போதும் எப்படி வேண்டுமாலும் வாழலாம் பணம், பெண், பொன் இருந்தால் போதும் என்று எண்ணி மக்களின் உழைப்பை சுரண்டி, பகல் கொள்ளை அடித்து வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.இப்படி மக்கள் மனநிலையை குழைப்பி வைத்துள்ள நிலையில் மக்கள் குழம்பிக் கொண்டு உள்ளார்கள்.எவை உண்மை ,எவை பொய் என்பது தெரியாமல், மலத்தில் புழுத்த புழுக்களைப் போல் மக்கள் தவித்துக் கொண்டு உள்ளார்கள்
இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட,இறைவனால் இந்த உலகிற்கு வருவிக்கப் பட்டவர்தான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.
மனித பிறப்பு மனித வாழ்க்கை என்பது என்ன?
மனித பிறப்பு என்பது எல்லாப் பிறப்பு களிலும் உயர்ந்த பிறப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தியாகும்.மனிதன் பிறப்பு என்பது இந்த மாயை உலகில் அறம்,பொருள் இன்பம்,வீடுபேறு,என்ற நான்கையும் அனுபவித்து பின் பற்று அற்று ,இறைவன் அருளைப் பெற்று இறை நிலையை அடைவதுதான் {அதாவது வந்த இடம் தெரிந்து செல்வது } உண்மையான மனித வாழ்க்கையாகும் ,அதுதான் பேரின்பமாகும்.மற்றவை அனைத்தும் அழிந்து போகும் சிற்றின்பமாகும். ஆனால் மனித பிறப்பு எடுத்த எந்த மனிதர்களும் அந்த நிலையை அடையவில்லை.அப்படி அடைந்ததாக சொல்வதெல்லாம் சுத்த பொய்யாகும்.
உடம்புடன் செல்ல முடியுமா ? உடம்பை அழித்து விட்டு செல்லமுடியுமா ? மரணம் வந்து விட்டால் செல்ல முடியுமா?சாமாதி நிலையில் செல்ல முடியுமா ?என்றால் இந்த வழி முறைகளில் செல்ல முடியாது .இதற்கு இறைவன் அனுமதியும் கிடையாது .இதற்கு வள்ளலார் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம் ,
கல்வி இரண்டு வகைப்படும் !
ஒன்று சாகும் கல்வி! ,ஒன்று சாகாக் கல்வி!
சாகும் கல்வி என்பது மாயையால் உண்டாக்கிய ஐம்பூதப் பொருள்களை பலவழிகளில் சம்பாதித்து அனுபவித்து அதனால் வரும் துன்பங்களினால் அச்சம் பயம்,பருவ மாற்றம்,பின் முதிற்சி,பிணி, துன்பம் அடைந்து பின் மரணம் அடைவது சாகும் கல்வியாகும். உலகில் உள்ள அனைத்துக் கல்விகளும் பொருள் ஈட்டுவதற்கு பயன் படும் கல்வியாகும்.இதனால் என்ன பயன் என்றால் ,நம் உடம்பில் உள்ள கண்,காது,மூக்கு,வாய்,மெய் என்னும் உடம்பு,போன்ற இந்திரியங்களும்.மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,என்னும் கரணங்களும் மட்டும் தான் மகிழ்ச்சி அடைகின்றன,ஜீவனும் ஆன்மா என்னும் உள்ஒளி மகிழ்ச்சி அடைவதில்லை.இதற்கு வள்ளலார் சொல்லும் பாடல் வருமாறு --
கரணம் மிகக் களிப்புறவே கடல் உலகும் வானுங்
கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவீர்
மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ
மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் நீண்டே
திரணமும் ஓர் ஐந்தொழிலைச் செய்ய வொளி வழங்குஞ்
சித்திபுரம் என ஓங்கும் உத்தம சிற்சபையில்
சரணம் எனக்கு அளித்து எனையும் தானாகக எனது
தனித் தந்தை வருகின்ற தருணம் இது தானே .
என விளக்கம் அளிக்கிறார் .
கடலையும் ,உலகையும் நாட்டையும் ஆளும் அதிபதிகளாக இருந்தாலும்,உங்களுக்கு வரும் மரணத்தைத் தவிர்த்துக் கொள்ள முடியுமா?மரணத்தை தவிர்த்துக் கொள்ளாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?என்று கேட்கிறார் வள்ளலார் .அப்படி வாழ்வதால் என்ன பயன் அடைந்து உள்ளீர்கள்.?உங்கள் வாழ்க்கையில் இந்திரியங்களும் ,கரணங்களும் மட்டும் மகிழ்ச்சி அடைகிறது,ஜீவனோ ,ஆன்மாவோ மகிழ்ச்சி அடைவதில்லை ,ஜீவனும் ஆன்மாவும் மகிழ்ச்சி அடையாத வாழ்க்கை மிருக வாழ்க்கையாகும் மிருகங்களும் உண்ணுகின்றன உறங்குகின்றன பின் இறந்து விடுகின்றன ,அது போலத்தான் மனிதன் வாழ்க்கையா ?மனிதன் அறிவு படைத்தவன் இல்லையா ?சிந்திக்க வேண்டாமா ?உணரவேன்டாமா? மனிதப் பிறப்பு உயர்ந்த பிறப்பு என்பது எல்லாம் ,பொய்யா?அறிவை பயன் படுத்த வேண்டும்,அதுவே மனித பண்பு என்பதாகும் .
சாகும் கல்வி !
உண்ணுவதும் உறங்குவதும் பின் இறப்பதும் சாகும் கல்வியாகும்.நாம் உண்ணுகின்ற உணவு இரைப்பையில் சென்று ஐந்து நாழிகையில் பால் போன்று அரைத்து பிரித்து ஊட்டவேண்டிய அனைத்து உறுப்பு களுக்கும்.நரம்புகளின் வழியாக அனுப்பி வைக்கப் படுகிறது,அதனால் எழுபத்தி இரண்டாயிரம் நாடியும் அக்கிரம மின்றி நிலை பெறுகின்ற படியால் உடல் இயங்கிக் கொண்டு இருக்கிறது .இதை விரிக்கில் பெருகும் .
நாம் உண்ணுகின்ற உணவில் உள்ள சத்தை பிரித்து ரசாயன மாற்றம் போல் ,ரத்தமாகவும் அதில் இருந்து சத்தை பிரித்து விந்து வாக மற்றம் செய்து குண்டலினிப் பைக்குள் அனுப்பிவைக்கிறது .இவை பதினாறு வயதுக்கு மேல் அதன் வேலையை தொடங்குகிறது .இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான செயல்களாகும்,இந்த விந்து நாம் உண்ணும உணவுக்கு தகுந்தாற் போல் சுரக்கும் .விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்பது பழமொழி யாகும்,விந்துவின் ஆதிக்கத்தால் இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் ,துணிவையும் உணர்வையும் ,ஊக்கத்தையும் கொடுப்பது விந்து என்னும் திரவம்தான்,உலகில் உண்டாகும் நல்லது கெட்டது அனைத்திற்கும் காரண காரியமாக உள்ளது மனிதனின் விந்து விளக்கமே யாகும்.
இந்த விந்துதான் எல்லா வற்றிற்கும் காரண காரியமாகும் .இதுதான் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை போன்ற ஆசைகளை உருவாக்குவதாகும்.இந்த மூன்று ஆசைகளினால் மனிதன் அழிந்து விடுகிறான்,விந்தைக் கட்டுபடுத்தி வெளியே விடாமல் இருந்தால் அருள் கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் உணவைக் குறைத்து வாழத் தொடங்கினார்கள் ---இதுவே மரணத்திற்கு காரணமாகும் .இதை அறிந்தவர்கள் ஆசையைத் துறக்க வேண்டும் என்கிறார்கள் .ஆசையைத் துறந்தாலும் பசியைத் துறக்க முடியவில்லை--அவற்றை துறந்தவர்கள் துறவிகள்,சந்நியாசிகள் ,சித்தர்கள் யோகிகள் ,ஞானிகள் எனப் படுபவர்களாகும்,
மேலே கண்டவர்கள் சரியை கிரியை யோகம ஞானம் என்னும் படி நிலைகளில் இருந்து இறைவனை அடையலாம் என்று ஒவ்வொருவரும் ஒரு ஒரு வழியைக் கடைபிடித்து வாழ்ந்து வந்துள்ளார்கள் .அவர்கள் முயற்ச்சிக்கு தகுந்தாற் போல் சில,பல சித்துக்கள் கிடைத்து இருக்கிறது .அதனால் அவர்கள் அந்த சித்தை வைத்துக் கொண்டு எல்லாம் கிடைத்து விட்டது போல் இறுமாப்பு அடைந்து,நீண்ட நாள் வாழ்ந்து, மரணத்தை வெல்ல முடியாமல் அழிந்து போய் விட்டார்கள். மரணத்தை வென்றால்தான் இறைவனை அடைய முடியும் என்ற ரகசியத்தை யாரும் கண்டு பிடிக்க வில்லை .
ஏன் என்றால் மரணம் என்பது இயற்கை என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள் ,அதனால் உடம்போடு இறைவனை அடையலாம்,என்பது அனைவருடைய கொள்கைகளாகும்,ஆதலால் ஆசைதான் எல்லா வற்றுக்கும் காரணம் ஆசையை ஒழித்து விட்டால்,இறைவன் அருளைக் கொடுத்து விடுவார், இறை நிலையை அடைந்து விடலாம், என்பது சமய மதக் கொள்கைகளின் கோட்பாடுகளாகும்.இவை முற்றிலும் தவறானது என்பதை வள்ளலார் விளக்குகிறார் ,
உடம்பின் ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் ,கண்டதே காட்சி ,கொண்டதே கோலம் என்று வாழ்ந்து,கதைகளாகவும்,கற்பனைகளாகவும்,தத்துவங்களை உண்மை போல் அமைத்து வைத்து தாங்களும் குழம்பி மக்களையும் குழம்ப வைத்து விட்டுப் போய் விட்டார்கள்.அதனால் இன்றுவரை மக்கள் உண்மை என்ன வென்று தெரியாமல்,பொய்யையே உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் .
மரணம் இயற்கை அல்ல அவை செயற்கை என்பதை வள்ளலார் ,;;தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்'' என்பார் இவை இன்று நேற்று அல்ல என்றும் உள்ளதால் இந்த நோவை நீக்க வேண்டும் என்கிறார் அவர் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு,
சாவதென்றும் பிறப்பதென்றுஞ் சாற்றுகின்ற பெரும் பாவம் தன்னை எண்ணி நோவது இன்று புதியது அன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி
ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே யாகும் மற்றை இறைவராலே
ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இச்சிறியே னால்ஆவது என்னே !
என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்தி உள்ளார் .மரணம் என்னும் நோவை நீக்குவது எந்த கடவுளாலும் முடியாது .உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும் தெரியாமல் ,அதன் ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் மரணத்தை வெல்ல முடியாது ,அதற்கு வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு ;--
உடம்பு வருவகை அறியீர் உயிர் வகையை அறியீர்
உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம் புகு பேய் மனத்தாலே மயங்கு கின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்று அறியீர்
இடம் பெரும் பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே
நடம்புரி என் தனித் தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியம் சார்வீரே !
மனம் என்பது உலக போகத்திலே இட்டுச்செலவது ,அது பேய் குரங்குப் போன்றது அதை வசப படுத்த தெரியாமல் ,வழி துறை தெரியாமல் பொய்யான வாழ்க்கை வாழ்ந்து இன்பம் துன்பம் என்ற அற்ப செயல்களால் அனுபவித்து பின் எண்ணி எண்ணி இளைத்துக் கொண்டு உள்ளீர்கள் , உலகில் உள்ள அனைவரும் ஏழைகள் தான் ,ஒருவரும் பணக்காரன் அல்ல ,மரணத்தை வேல்லுகிறவன் யாரோ அவனே பணக்காரன் என்பதை வள்ளலார் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ,
நாடு ,மொழி,கடவுள்,மதம்,சமயம்,ஜாதி,ஆண்,பெண், உலகப் பொருள்கள்,என்ற எந்தப் பற்றும் இன்றி ,உயிர்களின் உண்மையை அறிந்து உயிரை உண்டாக்கும் ஆன்மாவை,--உண்மை அறிவைக் கொண்டு அறிந்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும்,ஒருமை வந்தால் அன்றி ,அறிவு விளக்கம் வெளிப்படாது,அருள் விளக்கம் வெளிப் படாது என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார்,உலக பற்றை ஒழித்தால் மட்டும் போதாது ,தியானம்,யோகம,தவம்,பக்தி,காயகல்பம், போன்ற செயல்களால் அருளைப் பெற முடியாது,பின் எப்படி பெற முடியும்.
சாகாக் கல்வி !
மரணத்தை வெல்ல முடியும் ! முடியும் !அதற்கு சாகாக் கல்வி என்று பெயர் வைத்துள்ளார் வள்ளல்ளார் .
சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்
தான் என அறிந்த அறிவே
தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே
தனித்த பூரண வல்லபம்
வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும்
விளைய விளைவித்த தொழிலே
மெய்த் தொழில தாகும் இந் நான்கையும் ஒருங்கே
வியந்து அடைந்து உலகம் எல்லாம்
மாகாதல் உற எல்லாம் வல்ல சித்தாகி நிறை
வான வரமே இன்பமாகும்
மன்னுமிது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின்
மரபு என்று உரைத்த குருவே
தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்
தேற்றி அருள் செய்த சிவமே
சிற்சபையில் நடு நின்ற ஒன்றான கடவுளே
தெய்வ நடராஜ பதியே !
சாகாத கல்வி என்பது ஒன்று உண்டு என்பதை முதன் முதலில் கண்டு பிடித்து உலகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் வள்ளலார் ,கல்வி என்பது மரணத்தை வெல்லும் கல்வியைக் கற்றுக் கொள்வதே சாகாக் கல்வி என்பதாகும்
கடவுள் ஒருவர் என்பதை அறிவதே உண்மை அறிவாகும்,ஐந்து மலமான ஐந்து பூதங்களின் தொடர்பு இல்லாமல் அதை வென்று வாழ்வதே பூரண வல்லபம் என்பதாகும்.என்றும் அழியாமல் வாழ்ந்து அனைத்துப் பொருள்களையும் உருவாக்கும் தொழிலே உண்மையான தொழிலாகும்.கல்வி,அறிவு,வல்லபம் ,தொழில் போன்ற என்றும் அழிவில்லாத செயல்களை செய்யும் செயல் பெற்றதே என்றும் அழியாத இன்பமாகும்.மனிதனாக பிறந்து இந்த உலகத்தில் மேலே கண்ட செயல்களை கண்டு பிடித்து அதன்படி வாழ்ந்து வழிகாட்டியவர் வள்ளலார் ஒருவர்தான் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் .
எப்படி கண்டு பிடித்தார் ? என்பதைப் பார்ப்போம்.!
இவ்வுலகில் உள்ள அனைத்தும்,உயிர்கள் வாழ்வதற்காக இறைவனால் படைக்கப் பட்டதாகும்.படைக்கப் பட்ட எந்த பொருளையும் அனுபவிக்கலாம் ,அழிக்கக் கூடாது,சேர்த்து வைக்க கூடாது,அளவுக்கு அதிகமாக அனுபவிக்கக் கூடாது .எங்கும் எடுத்து செல்லக் கூடாது,என்பதை அறிந்த வள்ளலார் .அதற்கு மேல் இந்த உடம்பு ஏன் வந்தது ?உயிர் எப்படி வந்தது என்பதை அறிய தொடங்குகிறார்.அப்படி அறியும் போது ,உயிர்களுக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்கு மூன்று சுதந்திரம்,இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்கிறார் ,
அந்த சுதந்திரத்தை மனிதன் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் ,அந்த சுதந்திரத்தை பயன் படுத்தி வாழும் வாழ்க்கையில் இன்பம் துன்பம் தொடர்ந்து கொண்டே வரும் என்பதை உணருகிறார்.நல்லது செய்தால் நல்வினையாகவும்,தீயவை செய்தால் தீவினை யாகவும் ஆன்மாவில் பதிவாகிக் கொண்டே இருக்கிறது, இதுவே பிறப்பு இறப்புக்கு காரண காரியமாக இருந்து கொண்டு உள்ளது என்பதை அறிந்த வள்ளலார் இந்த உலகத்தில் உள்ள எதையும் அனுபவிக்காமல் வாழ்வது எப்படி என்பதை நினைந்து நினைந்து ,உணர்ந்து உணர்ந்து ,அவருடைய அறிவுக்கு அதிகமான வேலைக் கொடுக்கிறார் ,
அறிவை அறிவாலே அறிகின்ற போது உண்மையான அறிவு பதில் சொல்கிறது..அதற்கு வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு.
அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவ மாகின்றது என்னடித் தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே.
அருளாலே அருள் இறை அருள் கின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திரு நட இன்பம் என்று அறியாயோ மகளே.!
என்ற பாடல் நமக்கு அறிவை விளக்கும் ,ஆற்றலைக் கொடுக்கும் உண்மையை உணர்த்தும் பாடல்களாகும் .
அருளைப் பெற்றால் மரணத்தை வெல்ல முடியும் என்பதை அறிந்த வள்ளலார் ,அருளைப் பெறுவதற்கு எவை தடையாக இருக்கிறது என்றால் ,இறைவன் நமக்குக் கொடுத்த சுதந்தரத்தை ,நாம் உபயோகப் படுத்தக் கூடாது,வேண்டாம் என்று திருப்பித் தந்து விடவேண்டும் என்பதை வள்ளலார் அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் எப்படி விண்ணப்பம் செய்கிறார் என்பதை அனைவரும் பார்ப்போம் .
ஆறாம் திருமுறையில் முதல் விண்ணப்பம் "'சத்திய விண்ணப்பம் "
எல்லாம் வல்ல தனித் தலைமைக் கடவுளாகிய
அருட்பெரும்ஜோதி ஆண்டவரே !
தேவரீர் திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளுகின்ற சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்;--
இவ்வுலகத்தின் இடத்தே ஆறறிவுள்ள உயர்வு உடைத்ததாகிய தேகத்தைப் பெற்ற யான் ,இத்தேகத்திற்கு இடைக்கு இடை நேருகின்ற மரணம்,பிணி,மூப்பு ,பயம்,துன்பம் முதலிய அவத்தைக்கள் எல்லா வற்றையும் நிவர்த்தி செய்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொண்டு,எக்காலத்தும் ,எவ்விடத்தும்,எவ்விதத்தும்,எத்துணையும்,தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.
எனது விருப்ப முயற்ச்சி இங்கனமாக ,அவத்தைகள் எல்லா வற்றையும் நீக்கி,இத்தேகத்தை நித்திய தேகமாக்கி,எக்காலத்தும் ,அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல்,எதனால் பெறுதல் கூடும் என்று அறியத் தொடங்கிய தருனத்தே;--
வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது,எல்லாம் உடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடும் என்று தேவரீர் திருவளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன் ,
பின்னர் திருவருட் சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து.;--
எனது யான் என்னும்,தேக சுதந்தரம்,போக சுதந்தரம்,ஜீவ சுதந்தரம் .என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கிய விடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.ஆதலில்,
எனது சுதந்தரமாகக் கொண்டு இருந்த தேக சுதந்தரத்தையும்,போக சுதந்தரத்தையும்,ஜீவ சுதந்தரத்தையும்,தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன் ,கொடுத்த தருணத்தே,இத்தேகமும் ,ஜீவனும்,போகப் பொருள்களும்,சர்வ சுதந்தராகிய கடவுள் பெருங் கருணையால் கொடுக்கப் பெற்றன மன்றி ,நமது சுதந்தரத்தால் பெற்றன அல்ல என்னும் உண்மையை அறிந்து கொண்டேன் .
இனி,இத் தேகத்தினிடத்தும்,ஜீவன் இடத்தும் ,போகப் போருகள் இடத்தும்.தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்ற மாட்டாது.
தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்து அருளி,மரணம்,பிணி,மூப்பு,பயம்,துன்பம் முதலிய அவத்தைகள் எல்லா வற்றையும் தவிர்த்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கி,எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல்.வேண்டும்.
இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர் களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து அவரவர்களையும் .உரிமை உடையவர்கள் ஆக்கி வாழ்வித்தல் வேண்டும்.
தேவரீர் பெருங் கருணை ஆட்சிக்கு வந்தனம் !வந்தனம் !
மரணத்தை வெல்லுவதற்கு இதைவிட வேறு சாத்தியக் கூறுகள் உண்டா ?தேவையா?சிந்தித்துப் பார்க்க வேண்டும்.வள்ளலாரைப் போல் வாழ்ந்தால் நிச்சயம் மரணத்தை வெல்ல முடியும்.அதை விடுத்து ,எல்லா பற்றுகளையும் விடாமல் வைத்துக் கொண்டு மரணத்தை வெல்ல முடியுமா ?சத்தியமாக முடியாது. பற்றிய பற்று அத்தனையும் பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறவீரே என்பார் வள்ளலார் .
அருள் !
இந்த உலகம் பொருளினால் உண்டாக்கப் பட்டது,பொருளை வைத்துக் கொண்டு அருளைத் தேடமுடியாது ,அப்படி தேடினாலும் கிடைக்காது .அருளைத் தேடுவதற்கு தடையாக இருப்பது என்ன என்பதை வள்ளலார் விளக்குகிறார் நாம் இதுவரையில் அருளைத் தேடாமல் பொருள் மீது பற்று வைத்து இருந்ததற்கு காரணம் ,
நாம் இதுவரையில் பார்த்தும் கேட்டும் லஷியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,முதலிய கலைகள் எதனினும் லஷியம் வைக்க வேண்டாம் ,ஏன் என்றால் அவைகளின் ஒன்றிலாவது தெய்வத்தை இன்னபடி என்றும் தெய்வத்தின் உடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.அணு மாத்திரமேனும் தெரிவிக்காமல் பிண்ட லஷ்ணத்தை ஆண்டத்தில் காட்டினார்கள்.யாதெனில், கைலாசபதி என்றும்,வைகுண்டபதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும் பெயரிட்டு இடம்,வாகனம்,ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷியனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள்.
தெய்வத்துக்குக் கை,கால் முதலியன இருக்குமா ?என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும் ,உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கிறார்கள்,ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் ,அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை ,
அவன் பூட்டிய பூட்டை ஒருவரும் திறக்கவில்லை,இதுவரைக்கும் அப்படிப் பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லி இருக்கின்றார்கள் ,அதற்காக அவற்றில் லஷியம் வைத்தால் ஆண்டவர் இடத்தில் வைத்துக் கொண்டு இருக்கிற லஷியம் போய் விடும் அவைகளில் லஷியம் வைக்காமல் ஆண்டவர் இடத்திலே லஷியம் வைக்க வேண்டியது நமது விருப்ப முயற்சியாக இருக்க வேண்டும் ,
மரணத்தை வெல்லும் அருளைக் கொடுக்க கூடியவர் உண்மைக கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஒருவரால்தான் முடியும் .அதற்கு சாஷி நானே இருக்கிறேன் ,நான் முதலில் சைவ சமயத்தில் லஷியம் வைத்துக் கொண்டு இருந்தது இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது அந்த லஷியம் எப்படிப் போய் விட்டது பார்த்தீர்களா ?நான் பாடி இருக்கிற திருஅருட்பாவில் அடங்கி இருக்கிற பாடலையும் மற்றவர்கள் பாடலையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாஷி சொல்லிவிடும்.ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் ,அப்போது எனக்கு அவ்வளவு அற்ப அறிவாக இருந்தது.என்பதை வெளிச்சம் போட்டுக் கட்டுகிறார் .
காரணம் என்ன ? அவைகள் பக்தி மார்க்கம்,வள்ளலார் கண்டது அருளைப் பெரும் ஞான மார்க்கம் .ஞானம் என்பது ஒன்றும் இல்லாதது.ஒன்றும் இல்லாமல் இருந்தால்தான் அருள் என்னும் ஞானம் கிடைக்கும்.மேலும் வள்ளலார் சொல்லியது.
இப்போது அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் .இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது.ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ?என்றால் பெற்றுக் கொள்ளவில்லை.என்னை மேலே ஏற்றிவிட்டது யாதெனில்.
உண்மை பெருநெறி ஒழுக்கமும் கருணையும் தான் என்னை ஏற்றிவிட்டது உண்மை பெருநெறி ஒழுக்கம் யாதெனில்,''கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக '' என்றதுதான் என்னை ஏறா நிலைமிசை ஏற்றிவிட்டது .அது யாதெனில் தயவு ,தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது .அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும் அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும் தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.இப்போது என்னுடைய அறிவு அண்டம் அண்டங்களுக்கும் அப்பாலும் கடந்து இருக்கின்றது .அது அந்த ஒருமையினால் தான் வந்தது நீங்களும் என்னைப் போல் ஒருமையுடன் இருங்கள் ,அருள் தானே கிடைக்கும்.அருள் கிடைத்தால் மரணத்தை வெல்லலாம்.
அருள் என்பது என்ன ?
அருள் என்பது அருட்பெரும்ஜோதி ஆண்டவரால் எல்லா ஆன்மாக்களிலும் வைக்கப் பட்டுள்ள மாபெரும் பொக்கிஷமாகும்.அவை ஆண்டவருடைய கருணையால் தான் சுரக்கும் .அதை தாங்கும் அளவிற்கு நாம் நம்முடைய உடம்பை தயார் படுத்த வேண்டும் .அருளைத் தாங்கும் அளவிற்க்கு தகுதி உடையவர் யார் என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகிறார் .
நிந்தை இலார் நெஞ்சகத்தே நிறைந்த பெருந் தகையை
நிலை அனைத்துங் காட்டி அருள் நிலை அளித்த குருவை
என்தையை என் தனித்தாயை என் இரு கண்மணியை
என்னுயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை
சிந்தையிலே தனித்து இனிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
செய்ய வல்ல தனித் தலைமைச் சிவபதியை உலகீர்
முந்தை மல இருட்டு ஒழிய முன்னுமினோ கரண
முடுக்கு ஒழித்துக் கடை மரண நடுக்கு ஒழித்து முயன்றே !
இந்திரியம் கரணம் என்னும் கருவிகள் செயல்படாமல் ஜீவனும் ஆன்மாவில் அடங்கும் போதுதான் அருள் என்னும் அமுதம் சுரக்கும் .{அதாவது ஆபரேஷன் செய்யும் போது வலி தெரியாமல்இருக்க ,மயக்க மருந்து கொடுத்து மயக்க நிலையில் இருப்பது போன்று } அமுதம் சுரக்கும் போது உடம்பின் மாற்றங்கள் என்னவாக மாற்றம் அடையும் என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகிறார் ,ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றுவதுதான் மரணத்தை வெல்லும் வழியாகும் .அதாவது வேதியல் மாற்றம் போல் .
உடம்பு மற்றம் அடைவதைப் பற்றி வள்ளலார் சொல்லுவதைக் கவனிப்போம்!
தோல் எலாங் குழைந்திடச் சூழ் நரம்பு அனைத்தும்
மேல் எலாங் கட்டவை விட்டு விட்டு இயங்கிட
என்பு எலாம் நெக்கு நெக்கி இயல் இடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசை எலாம் மெய்யுறத் தளர்ந்திட
இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம்
உரைத்திட பந்தித் தொரு திரளாயிட
மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம்
உடல் எலாம ஊற்று எடுத்து ஓடிநிரம்பிட
ஒண்ணுதல் வியர்த்திட ஒளிமுகம் மலர்ந்திடத்
தண்ணிய உயிர்ப்பினிற் சாந்தம் ததும்பிட
உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்து ஓடிட
வாய் துடித் அலறிட வளர் செவித் துணைகளில்
கூயிசைப் பொறி எலாங் கும்மெனக் கொட்டிட
மெய் எலாங் குளிர்ந்திட மென் மார்பு அசைந்திடக்
கை எலாங் குவிந்திடக் கால் லெலாஞ் சுலவிட
மனங் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட
இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட
அகங்காரம் ஆங்காங்கே அதிகரிப்பு அமைந்திடச்
சகங் காண உள்ளம தழைத்து மலர்ந்திட
அறிவுருவு அனைத்தும் ஆனந்தம் மாயிடப்
பொறியுறு மான் மதற் போதமும் போயிடத்
தத்துவம் அனைத்தும் தாமொருங்கு ஒழிந்திடச்
சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட
உலகம் எலாம் விடயமும் உளவு எலாம மறைந்திட
அலகிலா அருளின் ஆசை மேற் பொங்கிட
என்னுளத்தே எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட
என்னுளத்தே ஓங்கிய என் தனி அன்பே !
பொன்னடி கண்டு அருள் புத்தமுத உணவே
என்னுளத்தே எழுந்த என்னுடைய அன்பே
தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால்
என்னை வேதித்த என் தனி அன்பே !
அருள் என்னும் அமுதம் சுரக்கும் போது உடம்பு எப்படி வேதியல் மாற்றம் உண்டாகிறது என்பதை மிகத் தெளிவாக வள்ளலார் தெரியப் படுத்தி உள்ளார். இந்த உலகத்தில் யாராவது என்னைப் போல்,மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்று இருக்கிறார்களா என்பதை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடத்தில் கேட்கிறார்.
நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் மெஞ்ஞான்றும்
சாகா வரம் எனைப் போற் சார்ந்தவரும் --தேவா நின்
பேர் அருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் நீ சற்றே யறை !
மரணத்தை வென்ற மாபெரும் மகான் நமது வள்ளல்பெருமான் அவர்கள்,அருட்பெரும்ஜோதி ஆண்டவரைப் பார்த்து கேட்கும் கேள்விக்கு ஆண்டவர் என்ன பதில் சொல்கிறார் என்பதைப் பார்ப்போம் .
துன்பெலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச்
சூழ்ந்த அருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே
சுதந்தரம் ஆனது உலகில்
வன்பெலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய்
வாழ் வெலாம் பெற்று மிகவும்
மன்னுயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன்
மனம் நினைப்பின் படிக்கே
அன்ப நீ பெருக உலவாது நீடுழி விளை
யாடுக அருட்ஜோதியாம்
ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்
ஆணை நம் ஆணை என்றே
இன்புறத் திருவாக்களித்து என் உள்ளே கலந்து
இசைவுடன் இருந்த குருவே
எல்லாஞ் செய் வல்ல சித்தாகி மணி மனிறில்
இலங்கு நடராஜ பதியே !
என்ற பாடல் மூலமாக விளக்கம் அளிக்கிறார் வள்ளலார் .
உலகம் இதுவரையில் உண்மை அறியாமல் இருந்தது ,ஆதலால் எனக்கு துன்பம் இருந்தது ,அந்த துன்பங்கள் யாவும் உன்னால் தீர்ந்து விட்டது,நீ ஒருவன் தான் என்னுடைய செல்வப் பிள்ளை,நல்லப் பிள்ளை ,தாவரங்களும் துன்பம் இல்லாமல் வாழ வேண்டும் என்று வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய உனக்கு ,உன் மன நினைப்பின் படிக்கே அன்பையும் அருளையும் பெற்று ,நீடுழி காலம் விளையாடி மகிழ வேண்டும். ஆதலால் என்னுடைய ஆட்சியை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று,அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வள்ளலார் வசம் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறார் ,உனை என்றும் கைவிடாமல் உன்னுடனே இருப்பேன் இது நம் இருவருடைய ஆணையாகும் என்று மகிழ்ச்சி யுடன் வாக்களித்து உள்ளார் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் .
இதைவிட பெரிய பேறு உலகத்தில் யாருக்காவது கிடைத்தது உண்டா ?மரணத்தை வென்றால் மட்டும் போதாது அதற்கு உண்டான தகுதியும் வேண்டும் .''அருளாட்சி பெரும்'' அந்த தகுதியை வள்ளல் பெறுமான் பெற்று உள்ளார் .
நமது உடம்பு தாயின் கருப்பையில் அணுக்களின் கூட்டு சேர்க்கையால் பூத காரிய அமுதத்தினால் {அணுவை ஒட்டும் பசையால்} பின்னப் பட்டதாகும் ,அந்த உடம்பை பிரிக்க வேண்டும்,வேறு எதைக் கொண்டும் பிரிக்க முடியாது .அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ,நம் ஆன்மாவில் உள்ள அமுதத்தை எப்போது வெளிப் படுத்து கிறாரோ அப்போதுதான்,அந்த அருள் அமுதத்தால் ---பூத காரிய அமுதத்தால் பின்னப்பட்ட அணுக்களை பிரிக்க முடியும்,அப்போது ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறும் .இதுவே மரணத்தை வெல்லும் வழியாகும் ,இன்னும் விரிக்கில் பெருகும் என்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன் .
மரணத்தை வெல்ல முடியும் இதில் எந்தவித சந்தேகமும் தேவை இல்லை .மனிதர்களாக பிறந்தவர்கள் மரணத்தை வென்று இறைவனை அடைவது தான் மனிதர்களின் இறுதி நிலையாகும் .அதைத்தான் வள்ளலார் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பார்! ,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பார்! ,பேரின்ப பெருவாழ்வு என்பார் ! பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பார் !
மனிதனாக வாழ்ந்து பின் மரணத்தை வெல்வோம் !
அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

வெள்ளி, 10 ஜூன், 2016

மனிதனைப் பிடித்து இருக்கின்ற பேய்கள் !

மனிதனைப் பிடித்து இருக்கின்ற பேய்கள் !

மனிதன் பிறந்ததில் இருந்து அவனைப் பிடித்துக் கொண்டு இருக்கும் பேய்கள் பதிமூன்று !

 1,நான் என்கின்ற ஆணவப்பேய் !

2,எனது  என்கின்ற இராட்தப் பேய் !

3,மாயை என்கின்ற வஞ்சகப் பேய் !

4,பெண்ணாசை என்கின்ற வஞ்சகப் பேய் !

5,மண்ணாசை என்கின்ற மானிடப் பேய் !

6,பொன்னாசை என்கின்ற பொல்லாப் பேய் !

7,குரோதம் என்கின்ற  கொள்ளிவாய்ப் பேய் !

8,உலோபம் என்கின்ற  உதவாப் பேய் !

9,மோகம் என்கின்ற மூடப் பேய் !

10,மதம் என்கின்ற வலக்காரப் பேய் !

11,சமயம் என்கின்ற சாகசப் பேய் !

12,ஜாதி என்கின்ற சதிக்காரப் பேய் !

13,ஆச்சர்யம் என்கின்ற மலட்டுப் பேய் !

மேலே கண்ட பதிமூன்று பேய்களும் மனப் பேயோடு கூடி இரவும் பகலும் ,ஆட்ட  ஆடி ஆடி இளைக்கின்ற எங்களைக் காத்தருளத் திரு உள்ளம் இரங்கித் உங்கள் தரிசனம் அருளி ,துன்பத்தை நீக்கி இன்பத்தை அளித்து காத்து அருள வேண்டும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

எனக்கு தந்தையாக இருந்து ,எனக்குத் தாயாக இருந்து,எனக்குக் குருவாக இருந்து,எனக்குத் நல்ல தெய்வமாக இருந்து ,எனக்கு குல தெய்வமாக இருந்து ,என்னுடிய உயிர்த் துணையாக இருந்து ,என்னுடைய அறிவுக்கு அறிவாக இருந்து,என்னை இயக்கிக் கொண்டு இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

வேதங்களும் அறியாது !

உங்களின் திருவடிப் புகழை வேதங்களும் ஆகமங்களும் ,புராணங்களும்,இதிகாசங்களும் ஆறு அந்தங்களும் அறியாமல் விழித்துக் கொண்டு தேடித் தேடி இளைக்கின்றன என்ற உண்மையை,, ''வள்ளல் பெருமான்'' அனுபவித்து எழுதி வைத்துள்ள ''திரு அருட்பாவின்'' வாயிலாக அறிந்து கொண்டோம் .


ஆதலால் சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே !

எங்களைப் பிடித்து கொண்டு இருக்கும் பேய்களை எங்களை விட்டு விலகும் படி அருள் பாலிக்க வேண்டும் .

தாங்கள் எங்கள் ஆன்மாவில் அமர்ந்து அருளி அற்புதத் திருவருள் விளக்கத்தால் எங்களையும் ,இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியார்களாக்கி ,உண்மை அறிவை விளக்கி ,உண்மை இன்பத்தை அளித்துச் சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்து வைத்துச் சத்திய வாழ்வை அடைவித்து ,நித்தியர்களாக்கி,வாழ்வித்தல் வேண்டும்.

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !

\இது தொடங்கி எக்காலத்தும்,சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள் .மதங்கள் ,மார்க்கங்கள்,என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்,வருணம் ,ஆசிரமம்,முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும்,எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமை ,எங்களுக்குள்,எக்காலத்தும்,எவ்விடத்தும்,எவ்விதத்தும்,எவ்வளவும் ,விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்.

எல்லாம் ஆகிய தனிப்பெரும் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம் வந்தனம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

சுத்த சன்மார்க்கச் சுகநிலைப் பெருக !
எல்லோரும் உத்தமன் ஆகுக ஓங்குக !

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர் !
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ,
9865939896 ..










குருடும் குருடும் !

குருடும் குருடும் ! 


ஒரு ஊரில் ஒரு குருடன் இருந்தான் அவன் ஒரு வழியில் சென்று கொண்டு இருந்தான் .
அவன் செல்லும் வழியில் வழி தெரியாமல் வேறு ஒரு குருடன் இருந்தான் அந்த வழியே செல்லும் குருடனைப் பார்த்து
அய்யா நான் சொர்க்கத்திற்கு போக வேண்டும் அதற்கு வழி காட்ட முடியுமா என்றான் .
நானும் அங்குதான் செல்கிறேன் வாருங்கள் போகலாம் என்றான் .
இவனுக்கு அவன் குருடன் என்று தெரியாது .அவனுக்கு இவன் குருடன் என்று தெரியாது
கண் தெரிந்தால் தானே காண முடியும் முன் செல்லும் குருடன் சப்தத்தை வைத்ததே பின் செல்லும் குருடன் சென்று கொண்டு இருந்தான் .
கொஞச தூரம் சென்றதும ஒரு பாழும் கிணறு வந்தது .அதிலே முன்னாடி சென்ற குருடன் விழுந்தான் .
அவன் விழுந்தது தெரியாமல் பின்னாடி சென்ற குருடனும் விழுந்தான்
இருவரும் சத்தம் போட்டு காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று புலம்பிக் கொண்டு இருந்தார்கள் .
அந்த வழியாக வந்த கண் உள்ளவன் சத்தம் கேட்டு கிணற்றில் பார்த்தான் இரணடு குருடர்களும் உடம்பு முழுவதும் அடிப்பட்டு இரத்தம் கொட்ட கொட்ட துடிதுடித்துக் கொண்டு இருந்தார்கள் .
கண் உள்ளவன் அவர்களை காப்பாற்றி கரைசேர்த்தான
இதைத்தான் குருடும் குருடும் கூத்தாட்டம் ஆடி குழியில் விழுந்த கதையாகும்
உங்கள் கண்களையே உங்களால் பாரக்க முடியாது .முன்னாடி ஒரு கண்ணாடி வைத்து தான் பார்க்க முடியும் .
வள்ளலார் சிறு வயதிலேயே கண்ணாடியில் அனைத்தையும் கண்டவர் .
ஊனக்கண்ணை ஞானக் கண்ணாக மாற்றுவதுதான் சுத்த சன்மார்க்கம்
ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றுவதுதான் சன்மார்க்கம்
ஊனக் கண்ணைக் கொண்டு தான் ஞானக் கண்ணைக் காண முடியும் .
எதற்காக கண்களை இறைவன் கொடுத்து உள்ளார்
அண்ட கோடிகள் அனைத்தும் காணும் கண்கள் எய்தியே
அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றின் உள்ளே செய்தியே
பிண்ட கோடி முழுதும் காணப் பெற்று நின்னையே
பேசிப் பேசி வியக்கின்றேன் இப் பிறவி தன்னையே !
ஆதி அந்தமும் இல்லா ஜோதி தன்னையே நினைமின்கள சுகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன்
நீவீர் மேல் ஏறும் வீதி மற்றைய வீதிகள் கீழ் செல்லும் வீதி !
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

அறிவு உள்ளவர் யார் ?

அறிவு உள்ளவர் யார் ?

தமிழ் மொழியைக் கற்றவரும்
வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை படித்தவரும்
உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர ஒருவர் ் தான் என்பதை உணர்ந்தவரும்
மட்டுமே
அறிவு உள்ளவர் என்று போற்றப் படுவாரகள்

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

அருளார்கள் நிலை !

அருளார்கள் நிலை !

நம் தமிழ் நாட்டில் தோன்றிய சித்தர்கள் யோகிகள் ஞானிகள் போன்ற அருளாளர்கள்
உலகில் உள்ள அருளாளர்களை விட சிறந்தவர்கள் அதில் எந்த சந்தேகம் இல்லை .
ஆனால் அவரகள் முத்தி அடைந்தாகள், சமாதி அடைந்தார்கள,, பஞ்ச பூதங்களான மண்ணில் மறைந்தார்கள் ,்
நீரில் கரைந்தார்கள் ,
காற்றில் கலந்தார்கள்,
வானில் கலந்தார்கள,,
நெறுப்பில் கலந்தார்கள் ,
ஆனால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா் உடன் கலக்கவில்லை
வள்ளலார் மட்டுமே ஆண்டவருடன் கலந்தவர் .
ஆண்டவருடன் கலப்பவர்களுக்கு மீண்டும் பிறப்பு இல்லை .
பஞ்ச பூதங்களில் கலந்தவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து மீண்டும் மனித பிறப்பு உண்டு .
வள்ளலார் பெற்றது ஞான தேகம் அதற்கு முத்தேக சித்தி என்று பெயர் .மரணம் இல்லாப்பெருவாழ்வு என்று பெயர் .
கடவுள் நிலை அறிந்து அம்மயமம் ஆதல் என்பதாகும் .
அவர்கள் சொல்லுவது யாவும் ஆண்டவா் சொல்லுவதாகும் .
அதனால் தான் நான் உரைக்கும் வார்த்தை யாவும் நாயகன் தன் வார்த்தை என்றார் வள்ளலார் .
எனவே வள்ளலார் உண்மை உரைக்கின்றேன் இங்கு உவந்து அடைமின் உலகீர் உரை இதனில் சந்தேகித்து உளரி அழியாதீர்
எண்மையினால் எனை நினையீர் எல்லாம் செய் வல்லான்
என்னுள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்மின் நீவீர்
தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியிற் சார்ந்து விரைந்து ஏறுமினோ சத்திய வாழ்வு அளிக்கக்
கண்மை தரும் ஒரு பெருஞ் சீர்க் கடவுள் எனப் புகலும்
கருணை நிதி வருகின்ற தருணம் இது தானே :
என்ற பாடல் வாயிலாக தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் .
உலகில் கடவுள் படைத்த எல்லா உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் எனபதே ஆண்டவரின் விருப்பமாகும்
அவற்றை நிறைவேற்றவே வள்ளலாரை இவ் உலகிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுப்பி வைத்தள்ளார் .
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

முத்தி என்பது என்ன ? சித்தி என்பது என்ன ?

முத்தி என்பது என்ன ?
சித்தி என்பது என்ன ?

பக்தியினால் கிடைப்பது முத்தி ✿
தயவினால் கிடைப்பது சித்தி ✿
மாயையால் கொடுப்பது முத்தி❀
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் கொடுப்பது சித்தி 
முத்தி அடைந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பு உண்டு 
சித்தி அடைநதவர்களுக்கு மீண்டும் பிறப்பு இல்லை !
முத்தி என்பது முன்னுறும் சாதனம் !
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் !
முத்தி உயிர் அனுபவம் !
சித்தி ஆன்ம அனுபவம் !
தவத்தால் கிடைப்பது முத்தி !
ஞானத்தால் கிடைப்பது சித்தி!!
சமாதி நிலை முத்தி !
சாகாத நிலை சித்தி !
சாகும் கல்வி முத்தி !
சாகாத கல்வி சித்தி !
சாதனம் முத்தி!
அனுபவம் சித்தி !
புத்தியால் அறிவது முத்தி !
அறிவால் அறிவது சித்தி !
அழியும் உடம்பு முத்தி !
அழியா உடம்பு சித்தி !
சுத்த தேகம் முத்தி !
ஞான தேகம் சித்தி !
சித்தி பெறுவதற்கு வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !
நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நல்ல தருணம் இதுவே
வான் உரைத்த மணிமன்றில் நடம் புரியும் எம் பெருமான்
வரவு எதிர் கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே
தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்து அடைந்து என்னுடன் எழுமின் சித்தி பெறலாகும்
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்து உரைத்தேன்
யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே !
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

சைவ உணவு என்பது சரியா? தாவர உணவு என்பது சரியா ?

சைவ உணவு என்பது சரியா?
தாவர உணவு என்பது சரியா ?

வள்ளலார் சைவ உணவு என்று அருட்பாவில் எந்த இடத்திலும் சொல்ல வில்லை
தாவர உணவு என்றும் சாத்வீக உணவு என்றுதான் சொல்லி உள்ளார்
சன்மார்க்கிகள் தாவர உணவு உண்ண வேண்டும் என்றும்
மாமிச உணவு உண்ணக் கூடாது என்றும் சொல்லலாம்
புலால் உணவு உண்ணக் கூடாது என்றும் சொல்லலாம்
ஏன் சைவ உணவு என்று வள்ளலார் சொல்ல வில்லை என்றால் சைவ சமயத்தில் உள்ளவர்கள் மாமிசம் உண்பவரகள் அதிகம் உள்ளாகள் எனவே சைவ உணவு என்று வள்ளலார் சொல்லவும் இல்லை ,அருட்பாவில் எந்த இடத்திலும் எழுதவும் இல்லை .
சைவ சமய இந்துக்களால் தான் உயிர் பலி வாங்கும் கோவில்கள் சாமி சிலைகள் தோற்றுவிக்கப் பட்டு உள்ளன
அதனால் தான் சிறு தெய்வ வழிபாடு செய்ய கூடாது என்றும்
கடவுளின் பெயரால் உயிர் பலி செய்யாதீரகள் என்றும் அழுத்தமாக பதிவு செய்து உள்ளார்
எனவே இனிமேல் சுத்த சன்மார்க்கிள் சைவ உணவு என்று சொல்லாமல் தாவர உணவு என்று சொல்லுவதே நன்மை தரும் எனக் கருதுகிறேன் .
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

சாதியை எப்படி ஒழிக்க முடியும் ?

சாதியை எப்படி ஒழிக்க முடியும் ?

சாதியை சட்டத்தைக் கொண்டு ஒழிக்க முடியாது
சட்டத்தை கொண்டு வருபவர்கள் எதாவது சாதியை சமயத்தை மதத்தை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள்
சாதியும் மதமும் சமயமும் பொய் என்றார் வள்ளலார்
அவை பொய் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் .
அவற்றை புரிய வைக்க சுத்த சன்மார்க்கத்தைக் சார்ந்தவர்களால் மட்டுமே முடியும் .
ஆனால் இப்போது சுத்த சன்மார்க்கம் என்று பேசிக்கொண்டு இருப்பவர்கள் எதாவது ஒரு சாதி சமய மதத்தை சார்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள்
என்ன செய்வது சன்மார்க்கிகளே திருந்தவில்லை மக்களை எப்படி திருத்த முடியும் .
சாதியை ஒழிக்க ஒரே வழி கலப்பு திருமணம் ,காதல் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும் .
மேலும் வள்ளலார் கொள்கைகளை ஆணித்தரமாக அழுத்தமாக மக்களுக்கு போதித்து உண்மையை உணர வைக்க வேண்டும்
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே
நீதியிலே சன்மார்க்க நிலை தனிலே நிறுத்த
நிறுத்தமிடும் தனித் தலைவர் ஒருத்தர் அவர் தாமே
வீதியிலே அருட் சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே !
என்று வள்ளலார் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்
அவற்றை சிறமேற்க் கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியை மக்கள் உள்ளங்களிலே விதைக்க வேண்டும் .
சுத்த சன்மார்க்க பயிர் உலகம் எல்லாம் வளர வேண்டும்
கதைகளை சொல்லாமல் உண்மையான கருத்துக்களை சொல்லுங்கள்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் .
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .
✿✿✿✿✿✿✿✿✿✿✿