வியாழன், 30 ஏப்ரல், 2015

வெற்றி என்பது என்ன ?

வெற்றி என்பது என்ன ?

இறைவன் படைத்த உலகை மனிதன் ஆளுவது எவ்வளவு அறியாமையாகும் .மனிதனை மனிதன் ஆள்வது அதைவிட கொடுமை.வேறு எதுவும் இல்லை.

உலகில் தோன்றிய மனித பிறவிகள் தவிர அனைத்து பிறவிகளும் எதையும் ஆள்வதில்லை.அதன் அதன் வாழ்க்கையை அவைகளே தீர்மானித்துக் கொள்கின்றன.

மனிதன் மட்டும்தான் மனிதனை ஆள்கிறான் .இவை எவ்வளவு முட்டாள் தனம்,..இறைவன் மனிதனுக்கு உயர்ந்த அறிவை கொடுத்துள்ளான் .அந்த அறிவு எதற்க்காக ?

மனிதன் தன்னுடைய அறிவை பயன்படுத்தி .தன்னுடைய உயிரையும் உடம்பையும் காப்பாற்றிக் கொண்டு இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வதே மனித வெற்றியாகும்

அருள் என்னும் ஆற்றலைப் பெறுவதே வெற்றியாகும் .அருளைப் எப்படி பெறவேண்டும் என்பதை அறிந்து அதில் வெற்றி பெறுபவனே மனிதன் .அருளைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக உயர்ந்த அறிவை மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ளார் .

இந்த உலகை ஆண்டவர்கள் அனைவரும் மண்ணோடு மண்ணாக மறைந்து போய் விட்டார்கள் .இந்த உலகை மனிதனால் ஆளமுடியாது.இறைவனால் மட்டுமே ஆளமுடியும்,....இறைவன் படைத்த உலகை மனிதன் ஆள்வதற்கு இறைவன் சட்டத்தில் இடம் இல்லை.

இறைவன் ஆட்சியில் உள்ள உயிர்கள் இறைவன் சொல்படி கேட்டு அதன்படி வாழ்ந்தால்தான் வெற்றிபெற முடியும்.

இதைத் தான் கடைபிடித்து வாழ்ந்து காட்டியவர் தான் வள்ளலார் என்பவராகும் அவர் சொல்லுவதை பாருங்கள்.

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் உமது
வாழ்க்கை எல்லாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர்
மையகத்தே உறும் மரண வாதனையைத் தவிர்த்த
வாழ்க்கை அதே வாழ்க்கை என மதித்து அதனைப் பெறவே
மெய்யகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது
மெய்ப்பொருளாம் தனித் தந்தை இந்தருணம் தனிலே
செய் அகத்தே வளர் ஞான சித்தி புரம் தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே !

மரணத்தை வென்று வாழும் வாழ்க்கையே வெற்றிபெறும் வாழ்க்கையாகும்.மற்ற வாழ்க்கைகள் யாவும் மிருக வாழ்க்கையாகும்.மனிதன் மிருக வாழ்க்கை வாழாமல் அருள் வாழ்க்கை வாழ்வதே வெற்றி வாழ்க்கையாகும் .

மனிதனால் உருவாக்கிய சட்டத் திட்டங்களால் மக்களைக் காப்பாற்ற முடியாது .அதில் வெற்றி காணவும் முடியாது. இறைவன் படைத்த சட்ட திட்டத்தை பின் பற்றி வாழ்ந்து அதில் வெற்றிப் பெற்றவனே உயிர்களையும் உலகையும் காப்பாற்ற முடியும் .அதுவே மகத்தான வெற்றியாகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

ஒன்றில் இருந்து தான் எல்லாம் உருவானது !


ஒன்றில் இருந்து தான் எல்லாம் உருவானது !

ஒன்றில் இருந்து எல்லாம் உருவானது என்பதை அறியாத மக்கள் ,உருவானதை உண்மை என்று உரிமைக் கொண்டாடுகிறார்கள் .

ஒன்று இரண்டாகவும்,இரண்டு பலவாகவும்,பல்வகை கோடியாகவும்,கோடி பலகோடி யாகவும், கோடிகள் கோடி கோடி யாகவும்,பரந்து விரிந்து இயங்கிக் கொண்டு உள்ளது.

அகம் என்ற ''ஆற்றல்'' படைத்த ஒன்று, அனகமாக விரிந்து என்னில் அடங்காத உயிர்களாகவும் ஜடமாகவும் பரந்து விரிந்து உள்ளது

உருவாக்கிய உண்மை எது என்றும்,அது யார்? என்றும் தெரியாமல் மனித இனம் அலைந்து திரிந்து அழிந்து கொண்டு உள்ளார்கள் .

உருவாக்கிய மெய்ப்பொருள் உண்மையைக் கண்டவர் திரு அருட்பிரகாச வள்ளலார் .

என்றும் அழியாமல் எல்லாவற்றையும் படைத்து,காத்து,மாற்றிக் கொண்டு உள்ளதுதான் எல்லாம் வல்ல ''அருட்பெருஞ்ஜோதி '' என்னும் அருள் ஒளியாகும்.

அந்த அருள் ஒளியைக் கண்டவர் என்றும் அழியாமல் அதனுடன் சேர்ந்து, என்றும் அழியாமல் வாழலாம் என்பதை அறிந்து வாழ்ந்து கொண்டு இருப்பவர்தான் அருட்பிரகாச வள்ளல்பெருமான் என்பவராகும்.

அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.!

அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.!

அதுவே பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும் !

அதுவே முத்தேக சித்தி என்பதாகும் !

அருட்பெருஞ்ஜோதி அகவல் !
ஒன்றதில் இரண்டு அது வொன்றினில் இரண்டு அது
ஒன்றினுள் ஒன்றது ஒன்று எனும் ஒன்றே !
ஒன்றல இரண்டு அல வொன்றினில் இடண்டு அல
ஒன்றினுள் ஒன்று அது ஒன்று எனும் ஒன்றே !
ஒன்றினில் ஒன்று உள வொன்றினில் ஒன்று இல
ஒன்றுற வொன்றிய ஒன்று எனும் ஒன்றே !

என்று வள்ளல்பெருமான் அகவலில் சரியான தகவலை மக்களுக்கு தந்துள்ளார்
அந்த ஒன்றை அறிவதுதான் ''ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை'' என்பதாகும்.

ஆன்மாவை அறிந்தால் அனைத்தையும் அறியலாம் !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

புதன், 29 ஏப்ரல், 2015

கடவுளைக் காண வழி காட்டியவர்கள் !

கடவுளைக் காண வழி காட்டியவர்கள் !

உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே பல ஞானிகள் ,கடவுளைக் காண பல வழிகளைக் காட்டினார்கள் .

எல்லா வழிகளும் தவறான வழிகளாகவே இருந்தன.அவர்கள் காட்டிய கடவுளும் பொய்யானக் கடவுளாகவே இருந்தன .

வள்ளல்பெருமான் மட்டுமே,''அருட்பெருஞ்ஜோதி ' என்னும்   உண்மையான கடவுளைக் காட்டினார்.அந்தக் கடவுளைக் காண உண்மையான நேர்மையான,இலகுவான,சிரமம் இல்லாத, நேர் வழியைக் காட்டினார் .

அவர் காட்டிய வழியில் செல்வதற்கு 'சமரச சுத்த சனமார்க்க சத்திய சங்கம் '' என்ற பொது நெறியை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார் .

அந்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்பது இறைவனே காட்டிய ,தோற்றுவித்த மார்க்கமாகும்.

ஆதலால் நான் உண்மையை உரைக்கின்றேன் என்கின்றார் வள்ளல்பெருமான் .

உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்து அடைமின் உலகீர்
உரை இதனில் சந்தேகித்து உளறி அழியாதீர்
எண்மையினால் எனை நினையீர் எல்லாஞ் செய் வல்லான்
என்னுள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்மின் நீவீர்
தண்மையொடு சுத்த சன்மார்க்க நெறியிற்
சார்ந்து விரைந்து ஏறுமினோ சத்திய வாழ்வளிக்க
கண்மை தரு ஒரு பெருஞ் சீர்க் கடவுள் எனப் புகலும்
கருணை நிதி வருகின்ற தருணம் இது தானே !

அழியாத கருணை நிதி என்னும் அருளை வழங்குவதற்கு கருணையான இறைவன் வருகின்றார்.நான் சொல்லியபடி கேட்டு நீங்களும் அந்த உண்மையான வழியில் விரைந்து வந்தீர்களானால்,  நீங்களும் அந்த அருள் நிதியைப் பெற்றுக் கொள்ளலாம்.வாருங்கள் வாருங்கள் என அழைக்கின்றார் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

பாவங்களையும் ,துன்பங்களையும் தீர்க்க ஒரே வழி !

பாவங்களையும் ,துன்பங்களையும் தீர்க்க ஒரே வழி !

நாம் அறிந்து செய்தாலும்,அறியாமல் செய்தாலும்.நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும்.நம்முடைய ஆன்மாவில் பதிவாகிக் கொண்டே இருக்கும்.

நாம் பிற உயிர்களுக்கு செய்யும் காரியங்கள்,தொடர்புகள் யாவும் மனத்தால்,வாக்கால், உடம்பால் மட்டுமே பதிவாகி நடை பெறுகின்றன.

அவைகள் தான் துன்பத்திற்கும்,இன்பத்திற்கும் காரண காரியமாகி இருக்கின்றது.

அதிக நன்மை செய்து தீமைகள் குறைவாக செய்தாலும் அந்த தீமைகள் பாவத்தில்தான் சேரும் .அவை பிற்காலத்தில் துன்பத்தைக் கொடுக்கும் .

அதிக தீமைகள் செய்து நன்மைகள் குறைவாக செய்தாலும் அவை தீராத துன்பத்தை தந்து கொண்டே இருக்கும்.

இந்த இரண்டு விதமான துன்பங்களையும் போக்க ஒரே வழி ஜீவ காருண்யம் மட்டுமே என்பதை வள்ளல்பெருமான் தெளிவாக மக்களுக்கு விளக்கி உள்ளார் .

ஜீவ காருண்யம் என்பது;--,மக்களுக்கு உண்டாகும் பசி,பிணி,தாகம்,இச்சை,எளிமை,கொலை,பயம்,போன்ற துன்பங்கள் வரும்போது அவரவரகளால் முடிந்து உதவிகளை செய்து பாவங்களையும்,துன்பங்களையும் போக்கிக் கொள்ளவேண்டும் என்பது இறைவனுடைய கட்டளையாகும்

இவை அறியாமல், துன்பங்களையும் பாவங்களையும் போக்குவதற்கு ஆலயங்களுக்கு செல்லுதல்,அபிஷேகம் செய்தல்,ஆராதனை செய்தல்.ஆலயத்தை வளம் வருதல்,கடவுளுக்கு படைத்தல்,அங்கப் பிரதஷ்ணம் செய்தல்.அலகு குத்தல்,மொட்டை அடித்தல்,விரதம் இருத்தல், உண்டியலில் பணம் போடுதல்,புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லுதல், போன்ற பக்தியினால் பாவங்களும் துன்பங்களும் தீர்ந்து விடாது.என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் நவக்கிரக பூஜை செய்து வளம் வருதல்,மரத்தை சுற்றுதல்,ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்தல் போன்ற மூட நம்பிக்கையில் ஈடுபடுதல் போன்ற காரியங்களால் பாவங்களும்,துன்பங்களும் தீர்க்க முடியாது.

மேலும் குகைகளுக்கு சென்று தவம் ,தியானம்,யோகம்,போன்ற காரியங்களில் ஈடுபட்டாலும்,மேலும் கோயில்கள் கட்டி கும்பாஅபிஷகம் செய்தாலும் துன்பங்களும் ,பாவங்களும் தீர்க்க முடியாது.

உயிருடன் வாழும் ஜீவர்களுக்கு,அன்பு,தயவு,கருணையுடன் நன்மை செய்வதுதான் ,நம்முடைய பாவங்களையும், துன்பங்களையும் போக்க முடியும் .

கருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறார் .என்பதை உணர்ந்து ஜீவ காருண்யம் செய்து பாவங்களையும் துன்பங்களையும் போக்கி,மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !
ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

எழுவகைப் பிறவி !

எழுவகைப் பிறவி !

இந்த மனித தேகத்திற்கு பிறப்பு ஏழு உண்டு ,அதுபோல் ஒவ்வொரு உயிர் இனங்களுக்கும் ஏழு பிறப்பு  உண்டு.அதேபோல் நாம் தாவரங்களில் இருந்து மனித தேகம் கிடைக்க பல கோடி பிறவிகள் எடுத்துள்ளோம்.

எல்லா பிறப்புகளிலும் மனித பிறப்பு என்பது உயர்ந்த அறிவுள்ளப் பிறவியாகும்.மனிதப் பிறவிக்கு கொடுத்த ஏழு பிறப்புகளின் முடிவுக்குள், இறைவன் அருளைப் பெற்று பேரின்ப நிலையை அடைய வேண்டும்.அப்படி அடையவில்லை என்றால்,கிழ்ப்  பிறவிக்குத் தள்ளப்படும்.

அதைக் கருத்தில் கொண்டுதான் பிறந்த பிறப்பில் இதில்தானே நித்திய வாழ்வு பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்து வாருங்கள் என்று வள்ளல்பெருமான் அழைக்கின்றார்.

பிறப்பின் ரகசியம் !

ஒவ்வொரு ஏழு பிறப்புகளிலும் ஒவ்வொன்றில் ஆனந்தமாய் விரிந்த யோனி பேதங்களின் விரிவெல்லாம் தோன்றி மேலேறி மறு பிறவி உண்டாம். ஒவ்வொரு பிறவியும் எந்தக் கல்பத்தில் நஷ்டம் அடைகின்றதோ அந்தக் கல்பகாலம் வரையில் தோற்றம் இல்லாமல் ,மண்ணில் மறைந்து இருந்து ,மறு கல்பத்தில் தோன்றி ,இவ்விதமாகவே மற்ற யோனிகள் இடத்தும் பிறந்து முடிவில் இத்தேகம் கிடைத்தது.

இந்த மனித தேகத்திற்கும் ஏழு பிறவி உண்டு ;--

யாதெனில் ;- கர்பத்தில் ஐந்து மாதம் வரையில் குழவியா  இருப்பது  ஒன்று.1,அவயவாதி உற்பத்தி காலம் ஒன்று ,2,பிண்டம் வெளிப்பட்ட காலம் ஒன்று .3,குழந்தைப் பருவம் ஒன்று.4,பாலப் பருவம் ஒன்று. 5,குமாரப் பருவம் ஒன்று.6, விருத்தப் பருவம் ஒன்று.7,ஆகப் பிறவி ஏழு .

இவ்வாறே தாவர முதலிய வற்றுக்கும் உண்டு.

மேலும் ஸ்தூலப் பிறப்பு,ஏழு,7,சூட்சமப் பிறப்பு ஏழு ,7,காரணப் பிறப்பு ஏழு 7,

ஆதலால் மேற்குறித்த ஸ்தூலப் பிறப்பு,..சூட்சமப் பிறப்பு..யாதெனில் ;--சாக்கிரம் 1,சொப்பனம்,2,சுழுத்தி ,3,சாக்கிரத்தில்சொப்பனம்,4,
சாக்கிரத்தில் சுழுத்தி,5,சொப்பனத்தில்,சொப்பனம்,6,சொப்பனத்தில் சுழுத்தி7,,....அகப் பிறப்பு ஏழு 7,

காரணப் பிறப்பு,;--மனோ சங்கல்பங்கள் எல்லாம் பிறவி.ஆதலால் மேற்குறித்த பிறவிக்குக் காரணம் நினைப்பு மறைப்பு ,

மனித தேகத்தில் அகத்தில் உள்ள ஆன்ம ஒளியில் உள்ள அருளைப் பெற்றால்,ஏழு பிறவிகளும் நீங்கி , நினைப்பு மறைப்பு என்ற திரைகள் நீங்கி ஊன உடம்பை  ஒளி உடம்பாக மாற்றம் செய்து,கடவுள் நிலையை அடையலாம் என்பது சுத்த சன்மார்க்க kolkaiyaakum.

இதுவே பிறவியின் இரகசியமாகும்.

அன்மநேயன் ஈரோடு ,செ, கதிர்வேல்.



  . 

வியாழன், 23 ஏப்ரல், 2015

தீபம் அறக்கட்டளைக்கு வாழ்த்துக்கள் !

தீபம் அறக்கட்டளைக்கு வாழ்த்துக்கள் !


அருட்பெருஞ் ஜோதி ......அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை ....அருட்பெருஞ் ஜோதி 

எவ்வுயிரும் பொது எனக் கண்டு இரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்தச்
செவ்வியர் தஞ் செயல் அனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன் இங்கே 
கவ்வை இலாத் திருநெறி அத்திருவாளர் தமக்கே ஏவல் கழிப்பாற் செய்ய 
ஒவ்விய தென் கருத்து அவர் சீர் ஓதிட என் வாய் மிகவும் ஊர்வதாலோ !...

பராபரன் உண்மை என்னும் தலைப்பில் ...வள்ளல்பெருமான் பாடல் 

உலகில் உள்ள எல்லா உயிர்களும் இறைவன் படைத்தது என்று உணர்ந்து அந்த உயிர்களுக்கு வரும் துனபங்களான ,பசி,பிணி,தாகம்,இச்சை ,எளிமை,கொலை பயம் போன்ற துன்பங்களைப் போக்கி மகிழ்ச்சி அடைய செய்விப்பதே மனித குலத்தின் இயற்கை குணமாகும் என்கின்றார் வள்ளல்பெருமான் .

மேலும் அவர்களின் செயல் அனைத்தும் திருவருளின் செயல் என்பதை அறிந்தேன் என்கின்றார் . அவர்களையே உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வாழ்த்தி அவர்களுக்கு திருவருள் திருநெறி என்னும் அருளை வாரி வழங்குவார் என்றும். அவர்களைப்  பின்பற்றி உலக மக்கள் அறிந்து செயல்பட வேண்டும் என்றும் .அவர்களுடைய அருள் செயல்களை எண்ணி ஓதிட என்னுடைய வாய் பறையாய் அறைகின்றது என்கின்றார் .

வள்ளல்பெருமான் வலியுறுத்திய ஜீவ காருண்ய தொண்டினை சிரமேற்க் கொண்டு ''தீப அறக்கட்டளை '' யின் சார்பாக ,சிறப்பாக செயலாற்றிக் கொண்டு வருகின்றது.

ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய உணவு வழங்கும் செயல்பாட்டை சென்னை நகரில் உள்ள முக்கிய இடங்களில் தினமும் 6000,ஆயிரம் நபர்களுக்கும்,  ஏராளமான பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கும்  உணவு வழங்கிக் கொண்டு வருகிறார்கள்.

மேலும் ஆதரவற்ற ஏழை எளிய குடும்பகளுக்கு அரிசி,ஆடை,வழங்கிக் கொண்டும்,பிணியால் வாடும் பிணியாளர்களுக்கு பிணியை போக்கியும்  தொண்டு செய்து கொண்டு வருகிறார்கள் .

மேலும் கல்வி பயிலும் ஆதரவு அற்ற ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு அவர்கள்  மேற்படிப்பிற்காக கல்வி உக்கத்துகையாக தீபம் அறக்கட்டளை யின் சார்பாக அவர்களின் தேவைகளுக்குத் தகுந்தவாறு பணம் கொடுத்துக் கொண்டும் வருகின்றார்கள் ..

சென்னை வேளச்சேரி ''தீபம் அறக்கட்டளையின்'' சார்பாக நடமாடும் நித்திய அன்ன தருமச்சாலை ஆறாம் ஆண்டு விழா 17--05--2015 ஆம் தேதி ,மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்

அவர்களின் அறப்பணி மிகவும் சீரும் சிறப்புமாறு வளர வளம்பெற எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிய வேண்டுமாய் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்,

தீபம் அறக்கட்டளையின் சார்பாக தொண்டு செய்யும் அனைத்து சன்மார்க்க அன்பர்களுக்கும்,அவர்களுக்கு உதவி செய்யும் கருணை உள்ள தயவாளர்களுக்கும்,அவர்களால் பயன் பெரும் அனைத்து ஆன்மநேய அன்புள்ளங்களுக்கும்,அறக்கட்டளையின் ஆறாம் ஆண்டு விழாவிற்கு வருகைதரும் அன்பு உள்ளங்களுக்கும்  இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து வணங்குகிறேன் .

இங்கனம் ;--
செ ,கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
108,C,நந்தா இல்லம்
வள்ளலார் வீதி
வய்யாபுரிநகர்
46,புதூர் அஞ்சல்
ஈரோடு 638002
SELL ;--9865939896 


திங்கள், 20 ஏப்ரல், 2015

அருட்பெருஞ்ஜோதி அகவல் திருநாள் !

அருட்பெருஞ்ஜோதி அகவல் திருநாள் !

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்கள் ஒரே இரவில் 1596,வரிகள் அடங்கிய ''அருட்பெருஞ்ஜோதி அகவல்''
18--04--1872,ஆம் ஆண்டு ( ஆங்கிரச ஆண்டு சித்திரை மாதம் 8.ஆம் நாள் வியாழக்கிழமை ) அன்று எழுதி உலக மக்களுக்கு அருளி உள்ளார் .

வள்ளல்பெருமான் எழுதிய ''அருட்பெருஞ்ஜோதி அகவல்'' தினத்தை சன்மார்க்க அன்பர்கள் ,அருட்பெருஞ்சோதி அகவல் தினமாக, அகவல் பாராயணம் செய்து வழிப்பட்டு கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

இந்த ஆண்டு 21--4--2015,ஆம் நாள் சித்திரை 8,ஆம் நாள் ,ஒவ்வொரு சன்மார்க்க சங்கங்களிலும்,சன்மார்க்க அன்பர்கள் ,அகவல் பாராயணம் செய்து ,பசித்த ஏழைகளுக்கும் ,மற்றும் உள்ள அன்பர்களுக்கும் அன்னதானம் செய்து வழிபாடு செய்வோம்.

ஆகவே இத்தகைய சிறப்பு மிகுந்த தினத்தில், அனைவரும் அருட்பெருஞ்ஜோதி அகவலை பாராயணம் செய்தால்,எல்லாத் தீமைகளும் ஒழிந்து நன்மை விளைவிக்கும் என்பது ஆண்டவரின் கட்டளையாகும்.

கவல் பாராயணம் செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெறுவோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

உண்மை அறிவு எது ?

உண்மை அறிவு எது ?

தெய்வங்கள் பல உண்டு என்று சிந்திப்பவரும் ,சிவலோகம்,வைகுண்டம்,கைலாயம்,பரலோகம் எல்லாம் உண்டு என்று நினைப்பவரும்,பொய்யான கற்பனைக் கதைகளையும்,அதனால் உருவாக்கப் பட்ட கற்பனைக் கலைகளையும்,அந்த கலைகளை தெய்வங்களாகப் படைத்து வழிபாடு செய்கின்றவர்களும் 

அவைகளைப் பற்றி மக்களுக்கு உண்மையாக இருப்பது போல் சொல்லுகின்றவரும்.பொய்யான சமய மதங்களை போற்று கின்றவர்களும் ,அவற்றை நம்புகின்றவர்களும் உண்மையை அறியாத ,அறிந்து கொள்ளமுடியாத உண்மையான அறிவு இல்லாதவர்கள் என்று வள்ளல்பெருமான் திட்டவட்டமாக பதிவு செய்து உள்ளார் .

பாடலைப் பாருங்கள் !

தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல செப்பு கின்றாரும்
பொய் வந்த கலைபல புகன்றிடு வாரும்
பொய்ச் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்று இல்லார்
மேல் விளைவை அறிகிலார் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பொழித்து அவர்க்கு அறிவு அருள்வீர்
எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே !

உண்மையான இறைவனையும்,உண்மையான அருளையும்,உண்மையான இன்பத்தையும் தெரிந்து கொண்டு அதை அனுபவிப்பவர்களே உண்மையான அறிவு உள்ளவர்களாகும் என்பதை மக்களுக்கு சொல்லி தெளிவுப் படுத்தி உள்ளார் .

எனக்கு உண்மையான அறிவையும்,அருளையும் ஆற்றலையும்,கொடுத்து தெளிவுப் படுத்தி மரணத்தை வெல்லும் வழியைக் காட்டி உள்ளது போல்,என்னுடைய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை உள்ள சகோதரர்களுக்கும், எனக்கு அறிவைத் தெளிவித்து விளக்கியதுபோல் அவர்களுக்கும் அறிவை கொடுத்து நம்மவர் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நமக்காக இறைவனிடம் வள்ளல்பெருமான் வேண்டிக் கொள்கின்றார்.

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்றெல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே .,,,,அகவல் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 13 ஏப்ரல், 2015

அறிவு எங்கே ? எப்படி உள்ளது ? எப்படி அறிந்து கொள்வது ?

அறிவு எங்கே எப்படி உள்ளது ?

அறிவு என்பது மனிதனுக்கு மட்டும் இறைவனால் பதிய வைக்கப் பட்டுள்ளது.

உலகில் உள்ள ஜீவ ராசிகளுக்கு அறிவு என்பது வெளிப்படாது.மனிதர்கள் தம்முள் இருக்கும் அறிவை தெரிந்து கொண்டால் மட்டுமே,உலகின் உண்மைகள் யாவும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

புத்தி என்பது வேறு ,அறிவு என்பது வேறு/!

உலகில் வாழும் மனிதர்கள் புத்தியைக் கொண்டுதான் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.உடம்பில் உள்ள மூன்றாவது அடுக்காண கரணங்களில் புத்தி என்பது இருக்கின்றது .

கரணங்களில் நான்கு பகுதிகள் உள்ளன ,மனம்,புத்தி ,சித்தம்,அகங்காரம்,என்னும் கருவிகளாகும்.அந்த கருவிகள்தான் மனித உடம்பில் உள்ள கருவிகளை இயங்க வைத்துக் கொண்டுள்ளன.''மனம்'' என்ன நினைக்கின்றதோ,அதை ''புத்தி'' ஏற்று,''சித்தம்'' என்னும் கருவிக்கு அனுமதி வழங்கி அகங்காரம் என்னும் கருவியின் மூலம், இந்திரியங்கள் என்னும் கருவிகளான ,கண்,காது, மூக்கு,வாய்,மெய் என்னும் உடம்பில் உள்ள கால், கைகளுக்கு வேலைகளைக் கொடுத்துக் கொண்டு உள்ளது.

இவைகள் யாவும் புத்தியின் செயல்களாகும்.புத்தியின் செயலால் செய்யப்படும் செயல்கள் யாவும் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும்.இறுதியில் மரணம் வந்து சேர்ந்து விடும்.

மனத்தினால் செயல்படுவதால் மனிதன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மனிதன் புத்தியைத்தான் அறிவு என்று நினைத்துக் கொண்டு உள்ளான் .

அறிவு எங்கே எப்படி உள்ளது !

ஜீவன் என்னும் உயிருக்குள் ஒளிர்ந்து கொண்டு இருப்பது அன்பு.அந்த அன்புக்குள் ஒளிர்ந்து கொண்டு இருக்கும் ஒளியே அறிவு என்பதாகும்.

அதைத்தான் வள்ளல்பெருமான் ''அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே '' என்கின்றார்.உயிரை நன்கு உணர்ந்து பார்த்தால் அது உணர்வு மயமாகவே இருக்கும்.அந்த உணர்வே அறிவு என்பதாகும்.

அறிவின் பட்டியல்கள் .

1,,புறப்புறம் என்னும் மெய் ,வாய்,கண்,மூக்கு ,செவி,என்கின்ற பொறியால் அறியும் பொறி அறிவு ஐந்தும் ,இந்திரிய அறிவு என்பதாகும் .

2,, ..அடுத்து புறம் என்னும் ,மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,என்னும் காரணங்களினால் அறியும் அறிவுக்கு கரண அறிவு என்பதாகும்.

3,,அடுத்து அகப்புறம் என்னும் ''ஜீவன்'' உயிரால் அறியும் அறிவுக்கு ஜீவ அறிவு என்பதாகும்.

4,,, அடுத்து அகம் என்னும் ஆன்மாவால் அறியும் அறிவுக்கு ஆன்ம அறிவு என்பதாகும்.

ஆன்ம அறிவுக்கு மேல் உள்ள அறிவுகள் !

1,அறிவு,2,பேரறிவு,3,அறிவுக்கு அறிவு,4,அறிவுள் அறிவு,5,அறிவுள்,அறிவுள் அறிவு,6,இயற்கை உண்மை அறிவு ,7,இயற்கை உண்மைத் தனி அறிவு,8,செயற்கை மன்னும் அறிவுக்குரிய தாரக அறிவு,9,தாரக முதல் அறிவு,10,அம்முதற்கோர் அறிவு,11,துரிய அறிவு,12,துரிய நிலைகடந்து அதன்மேல் சுத்த அறிவு ,13,சிவநிலை அறிவு.

அடுத்து ஒரு நான்கு அறிவுகள் வருமாறு !

1,தோற்றும் அறிவு .2,தோன்றும் அறிவு,3,தோற்றுவிக்கும் அறிவு ,4,பதி அறிவு ,

அடுத்து ஒரு ஆறறிவு வகை !

1,அறிவு,2,பேரறிவு ,3,மெய் அறிவு,4,சுத்த அறிவு,5,அறிவுக்கு அறிவு,6,அருள் அறிவு .

எல்லா அறிவையும் விட உயர்ந்த அறிவு அருள் அறிவாகும் !

முன்னர் அறிவு என்பதற்கு உயிருள் உள்ள ஒளியே அறிவு என்று பார்த்தோம்.இந்த அறிவானது மனம் எல்லாம் ஒழிந்து போக ,அதன்பின் வாக்கு எல்லாம் ஒழிந்து போக ,அதன்பின் மதிஎல்லாம் ஒழிந்து போக ,மதியின் வாதனையும் ஒழிந்து போன ,அந்த இடமே அறிவு உள்ள இடமாகும்.இவற்றை எல்லாம் கடந்து உள்ளது அருள் அறிவாகும்.

வாக்கு ஒழிந்து மனம் ஒழிந்து,மதி ஒழிந்து மதியின்
வாதனையும் ஒழிந்து அறிவாய் வயங்கி நின்ற இடம் .. என்பார் வள்ளல்பெருமான் .

அறிவுக்கு அறிவு என்பது யாது !

அறிவுக்கு அறிவு என்பது திருவருள் என்னும் அறிவாகும்.அதை தெரிந்து கொள்வது.

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆவது என்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயே மகளே !

ஆன்ம அறிவைக் கொண்டு தேடுகின்ற போது இறை அருளின் உருவம் என்னவென்று தெரியும்.

அருளின் நடனம் எப்போது தெரியும் !

அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திரு நட இன்பம் என்று அறியாயோ மகளே !

அருளைக் கொண்டு ,அருளைத் தேடுகின்ற போது,அருளை வழங்கும் இறைவன் யார் என்பது அப்போது தான் தெரியும்...உடம்பு உயிர் இல்லாமல்,நினைப்பு  மறைப்பு  இல்லாமல்,ஊன உடம்பை ஒளியாக மாற்றம் அடைகின்ற போது,இறைவனுடைய திரு நடனமும்  அவற்றால் கிடைக்கும் இயற்கை இன்பம் யாவும் மறைப்பு  இல்லாமல்,வெட்ட வெளியாகத் தெரியும்.

பேரறிவின் சுகம் !

மறப்பாகிய மறதியே இல்லாத பேரறிவே அருள் அறிவு என்பதாகும்.மறைப்பு என்பது,,, ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கின்ற மாயா திரைகள் என்னும் அஞ்ஞான திரைகள் நீங்கி ,அந்த திரை அகன்ற பின் தோன்றுவதே பேரறிவு என்னும் அருள் அறிவாகும் .அதனால் கிடைக்கும் இன்பமே இயற்கை இன்பமாகும்.

''மறப்பறியாப் பேரறிவில் வாய்த்த பெருஞ் சுகமே'' என்பார் வள்ளல்பெருமான்.
மெய்யறிவின் ஆற்றல் !

மறைப்பே இல்லாத,அதாவது வியப்பே இல்லாத அறிவே மெய்யறிவு ஆகும்.அந்த மெய்யறிவு தான் இறைவனின் இயற்கை உண்மை அறிவாகும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !

இயற்கை உண்மையான இறைவனிடம் ,...இயற்கை விளக்கமான அருளைப் பெற்று ...இயற்கை இன்பமான பேரின்பம் அடைவதுதான்  ..மரணத்தை வெல்லும் வழியாகும் அதற்கு  மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும் ...பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்....கடவுள் நிலை அறிந்து அம்மயமாய் மாறும் நிலையாகும்.

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம்
மருள் அறிவு எனவே வகுத்த மெய்ச்சிவமே !

இந்த அருள் அறிவை வள்ளல் பெருமானாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழங்கிய பொழுது ,இந்த உலகம் ,மற்றும் உள்ள பலகோடி உலகங்கள் யாவும்,வள்ளல்பெருமானை நீடுழி வாழ்க என வியப்பால் வாழ்த்திக் கொண்டே இருக்கின்றது.

அதே நேரத்தில் அருள் அறிவைப் பெற்று அருள் ஜோதியான  வள்ளல்பெருமான் இறைவனை எப்படி புகழ்ந்து பாடுகின்றார் என்பதைப் பாருங்கள் .

பேரிடர் தவிர்த்துப் பேரருள் புரிந்த பெரும நின்தன்னை என்தனக்கே
சாருறு தாயே என்று உரைப்பேனோ தந்தையே என்று உரைப்பேனோ
சீருறு குருவே என்று உரைப்பேனோ தெய்வமே என்று உரைப்பேனோ
ஆரென உரைப்பேன் என்னெனப் புகழ்வேன் யாது ஒன்றும் அறிந்திலன் அந்தோ .

யாராலும் தவிர்க்க முடியாத பேரிடர்களையும் துன்பங்களையும் ,என்னுடைய உடம்பையும்,உயிரையும் ஒளியாக மாற்றுவதற்கு ,உண்மையான அறிவையும் ,உண்மையான அருளையும் தந்து என்னை வேதித்த என்னுடைய அன்பே ,..உன்னை தாய் என்பதா ?,தந்தை என்பதா ?,குரு என்பதா ?,தெய்வம் என்பதா ? ,வேறு என்ன பெயர் வைத்து அழைப்பது என்பதும்  எப்படி புகழ்வது என்பதும்  ஒன்றுமே தெரியவில்லையே !

இனிமேல் உனக்கு என்னுடைய பெயர்தான் பொருத்தமானதாகும்,என்பதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமானுக்கு கொடுத்து ,இனிமேல் அனைத்து உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் நின்னையே குறி கொள்வார்கள் .என்பதை வள்ளல்பெருமானிடம் ஆணையிட்டு சொல்லுகின்றார். சொல்லுகின்றார் .

அந்தப் பாடலைப் பாருங்கள்.

ஆணை ஆணை நீ அஞ்சலை அருள் ஒளி தருகின்றாம்
கோணை மா நிலத்தவர் எலாம் நின்னையே குறிக்கொள்வர் நினக்கே எம்
ஆணை அம்பலத்து அரசையும் அளித்தனம் வாழ்க நீ மகனே என்று
எனை பெற்றிட  எனக்கு அருள் புரிந்த நின் இணை மலர்ப் பதம் போற்றி

என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அரசையும் அதாவது அவருடைய அருள் ஆட்சியும் வள்ளல்பெருமானிடம் கொடுத்து தானும் வள்ளல்பெருமானும் ஒன்றாக இணைந்து விட்டார்கள் இப்போது வள்ளல்பெருமான் வேறு ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வேறு என்பது இல்லை.என்பதை அறிவு உள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள்.

ஆதலால்  தான் .உண்மையான இரக்கம் உள்ளவர்களுக்கு உண்மையான அறிவு விளக்கம் தோன்றும்.உண்மையான அறிவு தோன்றுகின்ற போது,உண்மையான அருள் தோன்றும்.உண்மையான அருள் தோன்றுகின்ற போது ,உண்மையான இறைவன் யார் என்பது தோன்றும்.உண்மையான இறைவனைத் இடைவிடாது தொடர்பு கொண்டால்,ஊன உடம்பானது  உண்மையான ஆன்ம தேகமாக அதாவது ஒளிதேகமாக மாற்றம் அடையும் .

அந்த ஒளிதேகம் தான்  இறைவன் தேகம்என்பதாகும்..அதைத்தான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்று வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக விளக்குகின்றார்.

ஆதலால் நம்முடைய தலைப்பாகத்தில் சிரனடுவில்.உள்ள ஆன்மாவில் உள்ளதுதான் உண்மையான அறிவு .அந்த அறிவு மட்டுமே உண்மையை அறியும் அறிவாகும்.அதற்கு பொய் பேசத் தெரியாது..அதற்கு உண்மை எது .பொய் எது என்பது தெளிவாகத் தெரியும்.அந்த அறிவு இருக்கும் இடம்தான் சிற்சபை என்பதாகும்.அதைக் கண்ணால் கண்டவர் வள்ளல்பெருமான் ஒருவரே !

சிற்சபை அப்பனைக் கண்டு கொண்டேன் அருட் தெள்ளமுதஞ்
சற்சபை உள்ளம் தழைக்க உண்டேன் உண்மை தானறிந்த
நற்சபை சித்திகள் எல்லாம் என் கைவசம் நண்ணப் பெற்றேன்
பொற்சபை ஓங்கப் புரிந்து ஆடுதற்குப் புகுந்தனனே !

என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும்படி தெளிவாகத் தெரியப் படுத்துகின்றார்.உண்மையான சிற்சபையில் உள்ள ஆன்மா என்னும் உள் ஒளியைக் கண்டு அதனுள் இருக்கும் அறிவைக் கொண்டு  அறிவின் துணையாக அருளைப் பெறவேண்டும்.

வெளியில் உள்ள தத்துவங்களான தெய்வங்களை வழிபாடு செய்வதாலோ .வெளியில் அமர்ந்து தியானம் தவம்,யோகம்,போன்ற புறச்செயல்களில் ஈடு படுவதாலோ எந்த நன்மையையும் பெறமுடியாது.அறிவும் விளங்காது அறிவு இருக்கும் இடமும் தெரியாது.

அதனால்தான் வள்ளல்பெருமான் .ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் அருளைப் பெறக்கூடும் என்றார்.

அருள் என்பது ;-கடவுளுடைய இயற்கை விளக்கம் அல்லது கடவுள் தயவு என்பதாகும்.

ஜீவ காருண்யம் என்பது ,ஆன்மாக்களின் இயற்கை விளக்கம் அல்லது ஆன்மாக்களின் இயற்கை தயவு என்பதாகும்.

இதனால் ஒருமைக் கரணமாகிய சிறிய விளக்கத்தைக் கொண்டு பெரிய விளக்கத்தைப் பெறுதலும் வேண்டும் என்கின்றார்

சிறிய தயவைக் கொண்டு பெரிய தயவைப் பெறுதல் வேண்டும் என்றார் .

சிறு நெருப்பைக் கொண்டு பெரு நெருப்பைப் பெறுதல் போல் என்று அறிய வேண்டும் என்கின்றார்.

இதனால் ஜீவ காருண்ய ஒழுக்கமே சன்மார்க்கம் என்று அறியவேண்டும் என்று தெளிவாக விளக்கம் தந்துள்ளார் நமது வள்ளல்பெருமான் அவர்கள்.

அறிவு எப்போது விளங்கும் !

ஜீவ காருண்யம் விளங்கும் போது ;--அறிவும் அன்பும் உடனாக விளங்கும்.அதனால் உபகார சக்தி விளங்கும்.அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும்.

ஜீவ காருண்யம் மறையும் போது;-- அறிவும் அன்பும் உடனாக நின்று மறையும்.அதனால் உபகார சக்தி மறையும்.உபகார சக்தி மறையவே ,எல்லா தீமைகளும் தோன்றும்.

ஆகலின் புண்ணியம் என்பது ஜீவ காருண்யம் ஒன்றே என்றும்.

பாவம் என்பது ஜீவ காருண்யம் இல்லாமை ஒன்றே என்றும் அறிய வேண்டும்.

ஆதலால் ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கம் என்கின்றார் .அதாவது அறிவு விளக்கம் உண்டாகும் என்கின்றார்.

அதனால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்கின்றார் அதாவது அருளைப் பெரும் வழி என்கின்றார் .அவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால் அறிந்து அடைந்து அனுபவித்து நிறைவு பெற்ற சாத்திய ஞானிகளே பேரின்ப லாபத்தைப் பெற்ற முத்தர்கள் என்பவர்களாகும்.

அவர்களே கடவுளை அறிவால் அறிந்து  கடவுள் மயமானவர்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும் என்று சத்தியம் வைத்து உலக மக்களுக்கு பறை சாற்றுகின்றார் .

எனவே ;--ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை உடைய சகோதர சகோதரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது .அறிவு எங்கே உள்ளது ? அதை எப்படி அறிந்து கொள்வது ? என்பதை அறிந்து கொள்வதற்கு ஜீவ காருண்யமே வழி ,ஜீவ காருண்ய ஒழுக்கமே உண்மையான அறிவையும்,உண்மையான அன்பையும் கொண்டு ,உண்மையான அருளைப் பெற்று மரணத்தை வென்று மரணம் அடையாமல்,

ஆன்ம இன்ப வாழ்க்கை வாழ்ந்து ஆன்ம இன்ப லாபத்தைப் பெற்று,ஆன்ம இன்ப பேரின்பத்தை அடைந்து  வாழ்வோம் .

ஆன்ம இன்ப வாழ்க்கையில் மூன்று இன்பங்கள் அடங்கி உள்ளன .அவைகள் ;--
இம்மை இன்ப லாபம் ..மறுமை இன்ப லாபம் ..பேரின்ப லாபம். என்ற மூன்று லாபத்தையும் பெற்று மூன்று விதமான இன்பத்தையும் அடைந்து முழுமைப் பெறுகின்ற போதுதான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் முத்தேக சித்தியைப் பெற்று என்றும் அழியாத பேரின்ப சித்தியைப் பெற வேண்டும் .


உங்கள் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .






 .





சனி, 11 ஏப்ரல், 2015

ஈரோடு மேயருக்கு கடிதம் !

ஈரோடு மேயருக்கு கடிதம் !



ஈரோடு மாநகராட்சி மேயர் பெரு மதிப்பிற்குரிய  ''மல்லிகா பரமசிவம் '' அவர்களுக்கு வணக்கத்துடன்  வரையும் விண்ணப்பம் (கடிதம்)

ஈரோடு டவுன் எஸ்,கே,சி,ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே,சுமதியின் தந்தையும் ,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் பொறுப்பாளரும்'',''திரு அருட்பா ஆராய்சி மையத்தின் ஆசிரியரும்'',''திரு அருட்பிரகாச வள்ளலார் கல்வி அறக்கட்டளையின் தலைவரும்'',ஈரோடு மாநகராட்சி எஸ்,கே.சி, ரோடு  நடுநிலைப் பள்ளியின்,பெற்றோர் ஆசிரியர் சங்க இணைச்செயலாளர் '' செ,கதிர்வேல் ஆகிய நான் எழுதும் கடிதம் .

43,வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி ,பரிமளா ராஜேந்திரன் ,அவர்களின் பொய்யான புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் கே,சுமதியை ,10-4-2015,அன்று சுமார் 12,00.மணிக்கு தங்கள் அலுவலகத்திற்கு வரவழைத்து  விசாரணை என்ற பெயரில்,தரக்குறைவான,அநாகரிமான அசிங்கமான,கெட்ட,கெட்ட  வார்த்தைகளால் திட்டி அனுப்பி உள்ளீர்கள்.

உங்கள் வீட்டு வேலைக்காரியத் திட்டுவதுபோல் அரைமணி நேரம் நிற்க வைத்தே பலபேர் முன்னிலையில் பேசி உள்ளீர்கள்.இப்போதுள்ள வேலைக்காரிகள் தகாத வார்த்தைகளில் பேசினால் உடனே எதிர்த்து பேசும் குணம் படைத்தவர்களாக இருக்கின்றார்கள் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

அதனால் என்னுடைய மகள் சுமதி ,மனம் உடைந்து,உள்ளம் சிதறி, உண்ணாமல்,உறங்காமல், உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையில் உள்ளார் ,அதை நினைத்து எங்கள் மனமும் , உள்ளமும்,தவித்துக் கொண்டு உள்ளது.அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டால் என்னுடைய மகளை உங்களால் தரமுடியுமா ? சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்தக் கடிதம் எழுதுவது யாருக்கும் தெரியாது ,என்னுடைய மகள் சுமதிக்கும் தெரியாது.என்னுடைய மன வேதனையை உங்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த கடிதத்தை  எழுதுகிறேன்

மாமன்ற உறுப்பினர் பரிமளா ராஜேந்திரன் அவர்கள் தான், எல்லா வற்றிக்கும் காரணம்.அவர் செய்துள்ள குற்றங்களை மறைத்து ,தான் தப்பித்துக் கொள்வதற்காகவும் , உங்களிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதற்காகவும் பொய்யான தகவல்களைத் தந்துள்ளார்.அவருடைய பேச்சை உண்மை என்று நம்பிக் கொண்டு இப்படி தவறாக பேசி உள்ளீர்கள் .என நினைக்கின்றேன்.

வள்ளலார் வழியில் !

நான் வள்ளலாரின் தூய்மையான ஆன்மீக வழியில் நாற்பது ஆண்டுகளாக வாழ்க்கை நடத்திக் கொண்டு வருகிறேன்.என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் .தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் ,ஆன்மீக சிந்தனையாளர்களுக்கும் ,மற்றுமுள்ள ஒழுக்க சீலர்களுக்கும்,நல்ல சிந்தனை யாளர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

தமிழகம் முழுவதும்,,மற்றும்,வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் சென்று,எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு நேர்மை,ஒழுக்கம்,சத்தியம்,பண்பாடு ,மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற ஒழுக்கமான வாழ்க்கை முறைகளைப் பற்றி போதித்துக் கொண்டு வருகிறேன்.

அதேபோல் என்னுடைய குழந்தைகளையும்  நேர்மை,ஒழுக்கம், சத்தியம்,நாகரீகம், பண்பாடு போன்ற நல் ஒழுக்கங்களை சொல்லிக் கொடுத்துதான்   வளர்த்தி உள்ளேன்.

என்னுடைய மகள் தலைமை ஆசிரியை சுமதி அவர்கள், நேர்மை,ஒழுக்கம்,சத்தியம்,கண்ணியம் தவறாமல்,அவருடைய பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் நலன் கருதி அயராமல் உழைத்துக் கொண்டு வருகின்றார்.அவருடைய பள்ளிக்குச்சென்று பார்த்தீர்களானால் உங்களுக்கே நன்றாகத் தெரியும் புரியும், அவருடைய செயல்பாடுகளைப் பற்றி அரசுக் கல்வி அதிகாரிகளுக்கும்,மாநகராட்சி அதிகாரிகளுக்கும்  நன்றாகத் தெரியும்.

தனியார் பள்ளிகள் உயர்ந்தும் ,அரசுப்பள்ளிகள் தாழ்ந்தும் போவதற்கு அடிப்படைக்  காரணம் அரசியல்வாதிகள் அரசுப் பள்ளிகளில் தலையிட்டு ஆசிரியர்களை சுய சிந்தனையுடன் வேலை செய்ய விடாமல் துன்புறுத்துவதால்,அரசுப் பள்ளிகள் தரம் தாழ்ந்து கொண்டே உள்ளன

அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் நமது இந்திய அரசும் ,தமிழக அரசும், கல்விக்காக,பல கோடி ரூபாய் செலவு செய்து என்னபயன் ? .கல்வி நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் தலையிடாமல் இருந்தால் தான் ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காக,முறையாக, முழுமையாக மாணவ மாணவிகளுக்கு கல்வி போதிக்க முடியும்.

தமிழகம் எங்கும், அரசியல்வாதிகள் தலைமை ஆசிரியர்களுக்குத் தேவை இல்லாமல் தொல்லைக் கொடுத்துக் கொண்டே உள்ளார்கள் என்பதை பத்திரிக்கை வாயிலாக காணுகின்றபோது மிகவும் வேதனையாக இருக்கின்றது.

இவற்றை கலை எடுப்பதற்கு, நீக்குவதற்கு தமிழக அரசுக்கு ஒரு கடிதமும் எழுதி வைத்துள்ளேன்.அவற்றை தலைமை பள்ளிக் கல்வித் துறைக்கும்,தமிழக முதல்வருக்கும் தெரியப்படுத்தி ஒழுங்குப் படுத்தினால்தான் தடையில்லாக் கல்வி மாணவர்களுக்கு சென்று அடையும்,தனியார் பள்ளிகள் போல் அரசு பள்ளிகளும் மேன்மை அடையும் என்பது எங்களைப் போன்ற சான்றோர்களின் கருத்துக்களாகும். 

உங்களுடைய தனிப்பட்ட அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் மற்றவர்கள் சொல்லைக் கேட்டு ,இரண்டு பக்கமும் என்ன நடந்தது என்று தீர விசாரிக்காமல், ஒரு தலைமை ஆசிரியரை இப்படி தகாத வார்த்தைகளால் திட்டி,மனம் கலங்க,  கண்கலங்க,உள்ளம் கலங்க  வைப்பதால் உங்களுக்கு கிடைக்கும் லாபம் என்ன ? அதுதான் எனக்கு புரியவில்லை.

உங்களுக்குள் உள்ள உட்கட்சி பூசல்களை நீங்கள் பேசித் தீர்த்துக் கொள்ளாமல் ஒரு  தலைமை ஆசிரியரை பந்தாட வைப்பது என்ன நியாயம் என்பது தெரியவில்லை.உங்களுக்குள் உள்ள வெறுப்பை அரசு பணியாளர்களிடம் காட்டுவது எந்த விதத்தில் நியாயம் .சிந்திக்க வேண்டும்.

நீங்களும் ஒரு பெண்,...புகார் கொடுத்தவரும் ஒரு பெண்,...தலைமை ஆசரியரும் ஒரு பெண் .பெண்களுக்கு பெண்களே இப்படி நடந்து கொண்டால் ,பெண் உரிமையைப் பற்றிப் பேசி என்னபயன் ? பெண் சமத்துவம் பற்றிப் பேசி என்னபயன் ? ஆண்களுக்கு பெண்கள் சமம் என்று பேசி என்னபயன்? .அப்படி பேசும் பெண்களை என்னவென்று சொல்லுவது.பெண்களுக்கு பெண்களே எதிரிகளாக மாறிவிட்டால் நாடு என்னவாகும் என்பதை  சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த பிரச்சனையை தமிழகம் தழுவிய அளவில் என்னால் கொண்டு செல்ல முடியும். இதை அரசியலாக்கவும் என்னால் முடியும்.மக்கள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களிடம் நேரிலே சென்று சொல்லவும் என்னால்  முடியும்.அதனால் வரும் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதும் எனக்குத் தெரியும். நான் அப்படியே  செய்தாலும் எனக்கு எந்த தடைகளும் வராது.என்னை யாரும் ஒன்றும் செய்துவிட நுடியாது .

ஆனால் நான் அப்படி செய்யமாட்டேன்.நான் சராசரி மனிதர்களை பின் தொடர மாட்டேன்.நான் வள்ளலாரின் உண்மையான ஆன்மீக நெறியின் வழியைப் பின் பற்றுபவன்.எது எப்படி,என்ன  நடந்தாலும், எல்லாவற்றையும் நான் வணங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அனுப்பி விடுவேன்.அவர் தீர்ப்பு நீதி தவறாமல் இருக்கும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.அவர் கொடுக்கும் தண்டனையை யாராலும் தடுத்து நிறுத்த விட முடியாது.என்பதும் எங்களுக்குத் தெரியும்.   

தமிழகத்தை இதுவரையில் ஆண்டுள்ள முதல்வர்கள்,, ஆண்டு கொண்டு இருக்கின்ற எல்லா முதல்வர்களையும் எனக்குத் தெரியும்,அவர்களிடம் நெருங்கிய தொடர்பு உடையவன் .அந்த அளவிற்கு நான் நேர்மையும் ஒழுக்கமும் உள்ளவன் என்பது அனைவருக்கும் தெரியும்.

நான் ஒரு அரசியல் வாதி அல்ல ! எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல ! மக்களின் நல் வாழ்க்கைக் கருதி ஆன்மீகச் சேவை செய்யும்  ஒரு சாதாரண மனிதன்.என்னுடைய குழந்தைகளையும் அப்படித்தான் வளர்த்தி வைத்து இருக்கின்றேன்.அவர்களும் எந்த அரசியலையும் சார்ந்தவர்கள் அல்ல,என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் !

நீங்கள் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள்.அவை உங்களுக்கு கிடைத்த ஒரு நல்ல வரப்பிரசாதம்,பொக்கிஷம் போன்றது .அதை நல்லமுறையில்,நல்ல வழியில்  மக்களுக்கு பயன்படுத்துவது உங்கள் செயலாக இருக்க வேண்டும்.அதுதான் உங்களுக்கும் நல்லது.உங்கள் தலைமையின் கீழ் பணி புரியும் அரசு அதிகாரிகளுக்கும் நல்லது,  பொது மக்களுக்கும் நல்லது.

பதவி வரும் போகும்,.எந்தப் பதவியும் நிரந்தரம் அல்ல.
''பதவி வரும்போது பணிவு  வரவேண்டும்''.

உங்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்பதற்காகவோ அறிவுரை சொல்லவெண்டும் என்பதற்காக  இந்தக்  கடிதத்தை நான்  எழுதவில்லை.உங்களை நீங்களே  சீர் தூக்கிப் பார்த்துச் சிந்திக்க  வேண்டும் என்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.உங்கள் மனமே உங்களுக்கு பதில் சொல்லும் என நினைக்கின்றேன்.

இருந்தாலும் உங்கள் வார்த்தைகளால் உங்கள் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின்  தலைமை ஆசிரியை சுமதி, ..என்னுடைய மகள்  படும்  வேதனையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.உங்கள் மகள் இப்படி வேதனைப் பட்டால் உங்கள் மனம் எப்படி இருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தலைமை ஆசரியர் சுமைதியை, உங்கள் மகளாகக் கருதி நீங்களே அழைத்து  ஆறுதல் சொல்லி,ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தந்து,உற்சாகத்தை உண்டுபண்ண   வேண்டுமாய் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கடிதம் என்னுடைய தனிப்பட்ட சிந்தனையின் வெளிப்பாடு,..நான் எழுதிய இந்தக் கடிதத்தை  என் மகள் தலைமை ஆசிரியை சுமதிக்கும் தெரியப் படுத்த வேண்டாம்.மற்றவர்களுக்கும் தெரியப் படுத்த வேண்டாம்.நான் எழுதிய இந்தக் கடிதம்  உங்கள் பார்வைக்கு மட்டுமே,.நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் ,நீங்கள் என்னுடைய உடன்பிறவா ஆன்மநேய சகோதரி என்ற உரிமையிலும் இந்த கடிதத்தை எழுதி அனுப்பி உள்ளேன்.

இந்தகடிதம் என்னுடைய கம்யூட்டரில் நானே டைப் செய்து பிரிண்ட் எடுத்து அனுப்பி உள்ளேன்.நான் அனுப்பியது என் குடுப்பத்தில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாது..

மேலும் உங்கள் சேவை இந்த ஈரோட்டு மக்களுக்கு அவசியம் தேவை என்பதை சொல்லி உங்களை மனதார உளமார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.  ..வாழ்க வளமுடன் .

அன்புள்ள ஆனமநேயன் ஈரோடு செ,கதிர்வேல்
கைபேசி ....9865939896..



  

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

அருளின் அருமை,அருளின் பெருமை,அருளின் ஆற்றல் !

அருளின் அருமை,அருளின் பெருமை,அருளின் ஆற்றல் !

1,அருள் அலாது அணுவும் அசைந்திடாது அதனால்
அருள் நலம் பரவுக என்று அறைந்த மெய்ச்சிவமே !

2,அருள் உறின் எல்லாம் ஆகும் இது உண்மை 
அருள்பெற முயல்க என்று அருளிய சிவமே ---

3,அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்று எல்லாம் 
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே ---

4,அருள் பெறில் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும்
தெருள் இது எனவே செப்பிய சிவமே ---

5,அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே ---

6,அருட்சுகம் ஒன்றே அரும் பெறற் பெருஞ் சுகம்
மருட் சுகம் பிற வென வகுத்த மெய்ச்சிவமே ----

7,அருட் பேறதுவே அரும் பெறற் பெரும் பேறு
இருட் பேற் அறுக்கும் என்று இயம்பிய சிவமே ---

8,அருட் தனி வல்லபம் அதுவே எல்லாஞ் செய்
பொருட் தனிச் சித்தெனப் புகன்ற மெய்ச்சிவமே ---

9.அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை
பொருள் நிலை காண்கெனப் புகன்ற மெய்ச்சிவமே .

இப்படி ஒன்பது நிலைகளின் அருளின் அருமை,பெருமை, ஆற்றல் களை ஆண்டவர் வள்ளலாருக்குக் தெரிவித்து உள்ளார்

இந்த அருள் நிளைகளைப் பெற்றவர்கள் மரணத்தை வென்று ,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழலாம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

திங்கள், 6 ஏப்ரல், 2015

உண்மைக் கடவுள் ஒருவரே !

உண்மைக் கடவுள் ஒருவரே !

உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே உண்மையானக் கடவுள் யார் ? என்பதே தெரியாமல் இருந்தது .

சமயங்களும் மதங்களும் ,தத்துவங்களான பொருள்களையே கடவுள் என்று அறிமுகப் படுத்தி இருந்தார்கள் .அந்தக் கடவுள்கள் எல்லாம் அழிந்துப் போகக் கூடிய கடவுள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார் வள்ளல்பெருமான் .

எல்லா அண்டங்களையும்,எல்லா உலகங்களையும்,எல்லா பதங்களையும்,எல்லா சத்திகளையும்,எல்லா சத்தர்களையும், எல்லா கலைகளையும்,எல்லாப் பொருள்களையும்,,

எல்லா தத்துவங்களையும்,எல்லா தத்துவிகளையும்,எல்லா உயிர்களையும்,எல்லா செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும்,எல்லாப் பயன்களையும்,எல்லா அனுபவங்களையும்,

மற்றை எல்லா வற்றையும் ,தமது திருவருள் சத்தியால்,
தோற்றுவித்தல்,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல்,பக்குவம் வருவித்தல், விளக்கஞ் செய்வித்தல்,என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,

எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,
சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,எல்லாம் உடையராய்த் ,தமக்கு ஒரு வாற்றானும் ,ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெரும் தலைமையாக இயங்கி இயக்கிக் கொண்டு இருபவர்தான்

அருட்பெருஞ்ஜோதியர் என்னும் உண்மைக் கடவுளாகும்.

அந்தக் கடவுள், ஆணோ,பெண்ணோ,அலியோ (அதுவோ ) அல்ல .அது அருட் பெரோளியாகும்

அவர் அகம் புறம் முதலிய எவ்விடத்தும்,நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றவர் ஒருவரே

அருட்பெருஞ்ஜோதியர் என்னும் உண்மைக் கடவுளாகும்.

மற்றபடி உலகில் உள்ள அனைத்துக் கடவுள்களும் பொய்யானக் கடவுள்கள் என்பதை உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் படைத்தவர்கள் அறிவாலே அறிந்து கொள்ளவேண்டும்,

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

வள்ளலார் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வு !

வள்ளலார் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வு !

வரலுரில் உள்ள  சத்திய ஞான சபையில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரிடம்
வேண்டும் விண்ணப்பம் .

உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும்,திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்புப் பெயர்களும் .பார்வதிபுரம் என்றும் , வடலூர் என்றும் உலகியலால் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப்பதியின் இடத்தே ,

இயற்கை விளக்க நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ ஞான சபையில் ,இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து,இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத்  திரு நடச் செய்கையை எவ்வுயிரும் இன்பம் அடைதல் பொருட்டே செய்து அருளுகின்ற ,

எல்லாம் வல்லத் தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே !  தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளுகின்ற சமரச சுத்த சன்மார்க்க சத்திய விண்ணப்பம் .

இவ்வுலகத்தின் இடத்தே உயர்ந்த அறிவு உடைத்தாகிய  தேகத்தைப் பெற்ற யான் இத்தேகத்திற்கு இடைக்கிடை நேருகின்ற  மரணம்,பிணி,மூப்பு ,பயம்,துன்ப முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து,

இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொண்டு ,எக்காலத்திலும் ,எவ்விடத்தும்,எவ்விதத்தும் ,எத்துணையும்,தடைப்படாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதி தீவிர முயற்சியாக இருக்கின்றது.

எனது விருப்ப முயற்சி இங்கனமாக,அவத்தைகள் எல்லாவற்றையும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் பெறுதல் கூடும் என்று அறியத் தொடங்கிய தருணத்து ,வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது.

எல்லாம் உடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன் .

பின்னர் ,திருவருட் சுதந்திரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து .

எனது யான் என்னும் தேக சுதந்திரம் ,போக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கிய இடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.

ஆகலில்,எனது சுதந்தரமாகக் கொண்டு இருந்த தேக சுதந்தரத்தையும்,போக சுதந்தரத்தையும்,ஜீவ சுதந்தரத்தையும்,தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன்.

கொடுத்த தருணத்தே ,இத்தேகமும்,ஜீவனும்,போகப் பொருள்களும்,சர்வ சுதந்தரராகிய கடவுள் பெருங் கருணையால் கொடுக்கப் பெற்றன அன்றி, நமது சுதந்தரத்தால் பெற்றன அல்ல என்னும் உண்மையை அருளால் அறிவிக்கவும் அறிந்து கொண்டேன்.

இனி இத்தேகத்தின் இடத்தும்,சீவனிடத்தும் ,போகப் பொருகள் இடத்தும் தேவரீர் திருவருட் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமாட்டாது .தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி ,

மரணம்,பிணி,மூப்பு,பயம்,துன்பம் முதலிய அவத்தைகள் எல்லா வற்றையும் தவிர்த்து ,இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப ,சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.

இத்தேகத்தைப் பெற்ற எல்லாச் ஜீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து,அவரவர்களையும் உரிமை உடையவர்ளாக்கி வாழ்வித்தல் வேண்டும்.

தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம் ! வந்தனம் !

என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கின்றார் நமது வள்ளல்பெருமான்.

நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு முன்று சுதந்திரம் இறைவனால் கொடுக்கப் படுகின்றது.இந்த சுதந்தரத்தை அனுபவிக்கின்ற வரையில் மரணத்தை வெல்ல முடியாது.மரணம் வந்து கொண்டே இருக்கும்.

வல்லாரைப் போல் நாம் தேக சுதந்தரத்தையும் ,போக சுதந்தரத்தையும் ,ஜீவ சுதந்தரத்தையும் திருப்பி கொடுத்து விட்டு இறைவனிடம் உள்ள ''அருள்'' சுதந்தரத்தைப் பெற்று மரணத்தை  வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வோம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.   

வியாழன், 2 ஏப்ரல், 2015

அன்பு என்பது வேறு ! கருணை என்பது வேறு !

அன்பு என்பது வேறு ! கருணை என்பது வேறு !

அன்பு என்பது சிவமாக உள்ளது என்றார் திருமூலர்,

அன்பும் சிவமும் இரண்டு என்பார் அறிவிலார் என்பார் .
அன்புதான் சிவம் ,அன்பு வேறு ,சிவம் வேறு இல்லை அப்படி சொல்வது அறிவில்லாதவர் செயல் என்கின்றார்.

ஆனால் வள்ளல்பெருமான் அந்த பூட்டை உடைத்தார் .

அன்பு என்பது வேறு ,சிவம் என்பது வேறு என்கின்றார்.
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பரசிவமே ...என்கின்றார் .

அன்பு என்பது அணுவாக உள்ளது ,என்றதோடு அமையாது.அன்பின் அணுவின் உள்ளே பேரொளியாக உள்ளதுதான் சிவம் என்கின்றார்.
அன்பை விரிக்கின்ற போது,அதனுள் உள்ளவைகள் யாவை !

கலை குறையாத நிறைமயமாம் பதி...கனல்...செங்கதிர் ...ககனமாகிய வான் ...காற்று...அமுது...நிலை நிறை அடி,...அடிமுடி தொற்றா நின்மலம் ....நிற்குணம் ...மலைப் பற்ற உள்ளத்தே வயங்கும் மெய் வாழ்வு ....வரவு போக்கற்ற சின்மயம்...அலைகள் அற்ற கருணைத் தனிப் பெருங்கடல் ஆகிய இப் பன்னிரண்டும் ,அன்பினுள் உள்ளவைகளாகும்.

அல்லது இப்பன்னிரண்டும் கூடியது அன்பு என்பதாகும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.

கலை நிறை மதியைக் கனலைச் செங்கதிரை
ககனத்தைக் காற்றினை அமுதை
நிலை நிறை அடியை அடிமுடி தொற்றா
நின்மல நிற்குண நிறைவை
மலைவறும் உளத்தே வயங்கு மெய்வாழ்வை
வரவு போக்கற்ற சின்மயத்தை
அலையறு கருணைத் தனிப் பெருங் கடலை
அன்பினில் கண்டு கொண்டேனே !

அன்பு என்பதற்கு இப்படி ஒரு விளக்கம் யாரும் கூறினார் இல்லை.ஏன் ? அன்பு என்பதற்குரிய பொருள் பூட்டியே கிடந்தது.
அந்த பூட்டைத் திறந்து விட்டார் வள்ளலார் .

சிவம் என்பது ;--

கருணையே சிவம் என்கின்றார் .

இதனை ''கருணையும் சிவமும் பொருள் எனக் காணும் காட்சியும் பெருக ''--என ஆண்டவர் வள்ளலாருக்கு உணர்த்தி உள்ளார் .

அதைக் கண்டு கொண்ட பின்தான் ஆண்டவருக்கு பெயர் வைக்கின்றார் .

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி !.

உண்மையானக் கடவுள்;;அருட்பெருஞ்ஜோதி என்னும் கடவுள் தனிப் பெருங்கருணையாக உள்ளார் .என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தி உள்ளார் .

ஆதலால் அன்பு என்பது சிவம் அல்ல ! கருணை என்பதுதான் சிவம் என்னும் பேரொளியாகும்..

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே !

என்பதை வள்ளல்பெருமான் .அருட்பெருஞ்ஜோதி அகவலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

அறிவோம் கருணை யாக மாறுவோம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

புதன், 1 ஏப்ரல், 2015

மரணத்தை வெல்ல முடியுமா ? முடியும் !

மரணத்தை வெல்ல முடியுமா ? முடியும் !

திரு அருட்பிரகாச வள்ளலார்

உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே மனிதன் இறந்து கொண்டேதான் உள்ளான் ஆதலால் மரணம் என்பது இயற்கை என்றும்,ஆறிலும் சாவு,
நூரிலும் சாவு என்றும், மனிதன் பிறக்கும் போதே மரணம் நிச்சயக்கப் பட்டது என்றும்,,பிறந்தவன் ஒருநாள் இறந்தே ஆக வேண்டும் என்றும்.மக்கள் மத்தியிலே தீர்க்க முடியாத,உணர்ந்து கொள்ள முடியாத,தெரிந்து கொள்ள முடியாத  விஷ விதையை  விதைத்து விட்டார்கள் .

மக்களுக்கு நல்வழியைக் காட்டவந்த அருளாளர்கள், உண்மை என்னவென்று தெரியாமல் யாரும் திறக்க முடியாத ஒரு பொய்யானப் பூட்டைப் போட்டு பூட்டி விட்டார்கள் .அந்த பூட்டைத் திறந்து பூட்டையும் உடைத்து குழி தோண்டிப் புதைத்து விட்டார் நமது வள்ளல்பெருமான் அவர்கள். 

மனிதன் மரணத்தை வெல்ல முடியுமா ?முடியாதா? என்ற வினா மக்களிடையே பல்லாண்டு காலமாக உள்ள சந்தேகங்களாகும் .இதற்கு பதில்;- ஆன்மீக வாதிகளாலும் ,அறிவியல் வல்லுநர்களாலும் அணுக்களை ஆராய்ச்சி செய்யும்,அணு ஆராய்ச்சி யாளர்களாலும் ,விஞஞான ஆராய்ச்சி யாளர்களாலும் ,மற்றும் உள்ள பகுத்தறிவு வாதிகளாலும் ,பொது சிந்தனை யாளர்களாலும் இன்றுவரை {வள்ளலாரைத் தவிர }வேறு  யாராலும் பதில் சொல்ல,பதில் காண முடியாமல் விழிக்கிறார்கள் .

ஒரு சிலர் உலகில் தோன்றியது எல்லாம் அழிந்து கொண்டேதான் இருக்கும் என்கிறார்கள்.ஒருசிலர் எல்லா உயிர்களும் பிறந்து பிறந்து இறந்து இறந்து கொண்டேதான் இருக்கும்,அதுவே இறைவனுடைய திருவிளையாடல் என்கிறார்கள்.ஒருசிலர் உலகில் படைக்கப் பட்ட அனைத்தும் மனிதர்களுக் காகத்தான் ஆதலால் அனைத்தையும் அழித்து தின்று ஏப்பம் போட்டுவிட்டு மனிதனும் அழிந்துவிட வேண்டியது தான் என்கிறார்கள்.ஒருசிலர் மனிதன் ஒழுக்க முள்ளவனாக வாழ்ந்து சொர்க்கம் ,கைலாயம்,சிவலோகம் ,வைகுண்டம் என்னும் இடத்திற்குச் சென்று மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்றும் எழுதி வைத்துள்ளார்கள் ..

ஒருசிலர் உடம்போடு சமாதி நிலை அடைந்து இறை நிலையை அடையலாம் என்கிறார்கள்,ஒருசிலர் காசி, ராமேஸ்வரம் ,இமயமலை,கைலாயமலை ,போன்ற புண்ணிய தீர்த்தங்களை தரிசித்து ஆலய வழிபாடு போன்ற கர்மங்கள் செய்வதால் கர்மம் தொலைந்து,புண்ணியம் பெற்று  இறை நிலையை அடையலாம் என்கிறார்கள் .

ஒருசிலர் உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் தோற்றமும மாற்றமும், அழிவும்  இயற்கை என்கின்றார்கள்  .ஒருசிலர்,, கடவுள் என்பது ஒன்றும் இல்லை எல்லாம் அணுக்களின் கூட்டு சேர்க்கையாகும் என்கிறார்கள் .ஒருசிலர் வேதம் ஆகமம் புராணங்கள் இதிகாசம் சாத்திரம்  போன்றவைகளைப்  படித்து அதன்படி வாழ்ந்து வருபவகள் மட்டும்தான் இறைவனையே அடைய முடியும் என்கிறார்கள்,ஒருசிலர் உயிர்களுக்கு தொண்டு செய்தால்போதும்,பிற உயிர்களை வதைக்காமல் இருந்தால் போதும்,இறை நிலையை அடையலாம் என்கிறார்கள். 

இப்படிச் சமய,மதத் தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனைக் கண்ணை மூடிக்கொண்டு அதன்படி வேதம் ,ஆகமம்,புராணம்,இதிகாசம் போன்ற வர்ணம் ஆசிரமம் ஆசாரங்கள் போன்ற சங்கற்ப விகற்பங்களை செய்து இறை நிலையை அடையலாம் என்கிறார்கள்.இப்படி எண்ணற்ற வழிமுறைகள் ,என்பனப் போன்ற கருத்துக்கள் மனித வாழ்க்கைக்கு பலபேர் பல வழிகளில் வகுத்து வைத்துள்ளார்கள் 

ஒரு சிலர் எல்லா வற்றிற்கும் ஆசைதான் காரணம் ஆசையை அழித்தால் இறை நிலையை அடையலாம் என்கிறார்கள் ஒரு சிலர் துறந்தார்க்கும், துறவா தார்க்கும்,, இறந்தார்க்கும் ,,இல் வாழ்வான் துணை என்கிறார்கள் அவர்களே இறைவனை அடையமுடியும் என்கிறார்கள். 

எதைப் பற்றியும் கவலைப் படாமல் பணம் கிடைத்தால் போதும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் பணம், பெண், பொன் இருந்தால் போதும் என்று எண்ணி மக்களின் உழைப்பை சுரண்டி, பகல் கொள்ளை அடித்து,இதுதான் வாழ்க்கை என்று  வாழ்ந்து கொண்டு உள்ளவர்களும் உள்ளார்கள்.இப்படியே  மக்களின்  மனநிலையை, பல ஆன்மீக வாதிகள் தவறான வழிகளைக் காட்டி குழைப்பி வைத்துள்ள நிலையில் மக்கள் உண்மை என்னவென்று தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கிறார்கள் .எவை உண்மையானது  ,எவை பொய்யானது  என்பது தெரியாமல், மலத்தில் புழுத்த புழுக்களைப் போல் மக்கள் தவித்துக் கொண்டு உள்ளார்கள்.

வருவிக்க உற்ற வள்ளலார் !

இவற்றுக் கெல்லாம் ஒரு முடிவு கட்ட,இறைவனால் இந்த உலகிற்கு வருவிக்கப் பட்டவர்தான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

மனித பிறப்பு, மனித வாழ்க்கை என்பது என்ன?

மனித பிறப்பு என்பது எல்லாப் பிறப்பு களிலும் உயர்ந்த பிறப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும் ..மனிதப்  பிறப்பு என்பது இந்த பஞ்ச பூத மாயை உலகில் ''அறம்,பொருள் இன்பம்,வீடுபேறு'',என்ற நான்கையும் அனுபவித்து பின் பற்று அற விட்டு ,இறைவன் அருளைப் பெற்று இறை நிலையை அடைவதுதான் {அதாவது நாம் வந்த இடம் தெரிந்து செல்வது } உண்மையான மனித வாழ்க்கையாகும் ,அதுதான் பேரின்பமாகும்.அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பவையாகும் .மற்றவை அனைத்தும் அழிந்து போகும் உலக போக சிற்றின்பமாகும்.

ஆனால் மனித பிறப்பு எடுத்த எந்த மனிதர்களும் எந்த ஞானிகளும் அந்த நிலையை அடையவில்லை.அப்படி அடைந்ததாக சொல்வதெல்லாம் சுத்த பொய்யாகும்.

இம்மை இன்ப வாழ்வு ,..மறுமை இன்பவாழ்வு ..வாழ்ந்து ஆயுளை நீட்டி உள்ளார்கள்.மறுபடியும் அவர்கள் இறந்து, பிறந்து பேரின்ப நிலையை அடையவேண்டும்.

கடவுள் நிலை அறிந்து அம்மயமாவதறகு,ஊன  உடம்புடன் செல்ல முடியுமா ? உடம்பை அழித்து விட்டு செல்லமுடியுமா ? மரணம் வந்து விட்டால் செல்ல முடியுமா? சாமாதி நிலையில் இருந்தால் செல்ல முடியுமா ? என்றால் அப்படி எதனாலும் செல்ல முடியாது .இதற்கு இறைவன் அனுமதியும் கிடையாது .இதற்கு வள்ளலார் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம் ,

கல்வி இரண்டு வகைப்படும் !

ஒன்று சாகும் கல்வி! ,மற்றொன்று சாகாக் கல்வி!

சாகும் கல்வி என்பது மாயையால் உண்டாக்கிய ஐம்பூதப் பொருள்களை பலவழிகளில் சம்பாதித்து அனுபவித்து அதனால் வரும் இன்ப துன்பங்களான ,பசி,பிணி,கொலை,தாகம்,இச்சை,எளிமை, பயம்,போன்ற இல் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களினால் ,அதாவது பருவ மாற்றங்களான கர்ப்பகாலம், குழைந்தை,இளமை,வாலிபம் ,வயோதிகம், பின் முதிர்ச்சி,உடல் தளர்ச்சி, பிணி,போன்ற துயரம், துன்பம் அடைந்து பின் மரணம் அடைவது சாகும் கல்வியாகும்.

உலகில் உள்ள அனைத்துக் கல்விகளும் பொருள் ஈட்டுவதற்கு பயன் படும் கல்வியாகும்.இதனால் என்ன பயன் என்றால் ,நம் உடம்பில் உள்ள கண்,காது,மூக்கு,வாய்,மெய் என்னும் உடம்பு,போன்ற இந்திரியங்களும்.மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,என்னும் கரணங்களும் மட்டும் தான் மகிழ்ச்சி அடைகின்றன,ஜீவன்  என்னும் உயிரும் ,ஆன்மா என்னும் உள்ஒளியும் மகிழ்ச்சி அடைவதில்லை.இதற்கு வள்ளலார் சொல்லும் பாடல் வருமாறு --

கரணம் மிகக் களிப்புறவே கடல் உலகும் வானும்
கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவீர்
மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ
மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே
திரணமும் ஓர் ஐந்தொழிலைச் செய்ய ஒளி வழங்கும்
சித்திபுரம் என ஓங்கும் உத்தம சிற்சபையில்
சரணம் எனக்கு அளித்து எனையும் தானாக்க எனது
தனித் தந்தை வருகின்ற தருணம் இது தானே .

என விளக்கம் அளிக்கிறார் .

பெருங் கடலையும் ,உலகையும்,வானத்தையும், நாட்டையும் ஆளும் அதிபதிகளாக இருந்தாலும்,உங்களுக்கு வரும் மரணத்தைத் தவிர்த்துக் கொள்ள முடியுமா ? மரணத்தை தவிர்த்துக் கொள்ள முடியாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?என்று கேட்கிறார் வள்ளலார் .அப்படி வாழ்வதால் என்ன பயன் அடைந்து உள்ளீர்கள்.?உங்கள் வாழ்க்கையில் புறப்புறம் என்னும் இந்திரியங்களும் ,புறம் என்னும் கரணங்கள் மட்டுமே  மகிழ்ச்சி அடைகின்றன ,ஜீவனோ ,ஆன்மாவோ மகிழ்ச்சி அடைவதில்லை ,ஜீவனும் ஆன்மாவும் மகிழ்ச்சி அடையாத வாழ்க்கை மிருக வாழ்க்கையாகும் மிருகங்களும் உண்ணுகின்றன உறங்குகின்றன பின் இறந்து விடுகின்றன ,அவைப்  போலத்தான் மனிதனின் வாழ்க்கையும் உள்ளது.

மனிதன் உயர்ந்த அறிவு படைத்தவன் இல்லையா ? மனிதன் அறிவு உள் நோக்கிச் செல்லும் வல்லமையை இறைவன் கொடுத்துள்ளார் ,மற்ற உயிர் இனங்களுக்கு உள் நோக்கிச் செல்லும் அறிவு கிடையாது .இவற்றை மனிதன் சிந்திக்க வேண்டாமா ? உணரவேண்டாமா? மனதை அடக்கத் தெரிந்தவன் மனிதன்,.. மனதை அடக்கி உள் நோக்கிச்சென்று உயர்ந்த நிலையை அடையவேண்டும் மனிதப் பிறப்பு உயர்ந்த பிறப்பு என்பது எல்லாம் ,பொய்யா ? உள்ளே இருக்கும் ஆன்மாவைத் தொடர்பு கொண்டு ,உண்மையான அருள் அறிவைப் பயன் படுத்தி அருளைப் பெறவேண்டும், அந்த அருளினால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.அதுவே மனிதப்  பண்பு என்பதாகும். அதுவே சாகாக் கல்வியாகும்.

சாகும் கல்வி !  

உண்ணுவதும் உறங்குவதும் பின் இறப்பதும் சாகும் கல்வியாகும்.நாம் உண்ணுகின்ற உணவு இரைப்பையில் சென்று ஐந்து நாழிகையில் பால் போன்று அரைத்து பிரித்து ஊட்டவேண்டிய அனைத்து உறுப்புகளுக்கும்,வாதம்,பித்தம்,சிலேத்துமம் என்னும்  நரம்புகளின் வழியாக,எலும்புகளின் வழியாக,தசைகளின் வழியாக  அனுப்பி வைக்கப் படுகிறது,அதனால்  எழுபத்தி இரண்டாயிரம் நாடியும் அக்கிரம மின்றி நிலை பெறுகின்ற படியால் உடல் இயங்கிக் கொண்டு இருக்கிறது .இதை விரிக்கில் பெருகும் .

நாம் உண்ணுகின்ற உணவைப் பிராண சக்தியைக் கொண்டு அரைத்து ,ஆட்டி அதில்  உள்ள சத்தை பிரித்து ரசாயன மாற்றம் போல் ,ரத்தமாகவும் அதில் இருந்து சத்தை பிரித்து, ''விந்து '' வாகவும்  மாற்றம் செய்து குண்டலினிப் பைக்குள் அனுப்பிவைக்கிறது .இவை பதினாறு வயதுக்கு மேல் அதன் வேலையை தொடங்குகிறது .இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான முறையில் செயல்படும் செயல்களாகும், விந்து என்பது  நாம் உண்ணும் உணவுக்கு தகுந்தாற் போல் சுரக்கும் சக்தியாகும். .விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்பது பழமொழி யாகும்,

விந்துவின் ஆதிக்கத்தால்,அதன் செய்கையால் ,அதன் தன்மையால்  இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் ,துணிவையும் உணர்வையும் ,ஊக்கத்தையும் கொடுப்பது பூத விந்து என்னும் திரவம்தான், இந்த உலகில் நமக்கு உண்டாகும் நல்லது கெட்டது அனைத்திற்கும் காரண காரியமாக உள்ளது மனிதனின் விந்து விளக்கமே யாகும்.

இந்த பூத விந்துதான் எல்லா வற்றிற்கும் காரண காரியமாகும் இதைத்தான் குண்டலினி சத்தி என்பதாகும்.இதுதான் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை போன்ற ஆசைகளை உருவாக்குவதாகும்.இந்த மூன்று ஆசைகளினால் மனிதன் அழிந்து விடுகிறான்,

ஒரு சிலர் விந்தைக் கட்டுபடுத்தி வெளியே விடாமல் இருந்தால் அருள் கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் உணவைக் குறைத்து வாழத் தொடங்கினார்கள் ---இதுவே மரணத்திற்கு காரணம் என நினைத்தார்கள். இதை அறிந்தவர்கள் ஆசையைத் துறக்க வேண்டும் என்றார்கள் ஆசையே எல்லா வற்றுக்கும் காரணம் என்றார்கள்.ஆனால் ஆசையைத் துறந்தாலும் பசியைத் துறக்க முடியவில்லை--பசியைத் துறந்த துறவிகள், சந்நியாசிகள் ,சித்தர்கள் யோகிகள் ,ஞானிகள் எல்லாம் காடு ,மலை,வனம்,குகைபோன்ற  தனிமையான இடங்களுக்குச் சென்று கடுமையான தவம் செய்து சமாதி நிலையை அடைந்தார்கள்.

இன்று உலகம் முழுவதும் உள்ள மலைகள் எல்லாம் சித்தர்கள் சமாதி அடைந்த இடங்களாகும்.

மேலே கண்டவர்கள் சரியை கிரியை யோகம ஞானம் என்னும் பதினாறு  படி நிலைகளில் இருந்து இறைவனை அடையலாம் என்று ஒவ்வொருவரும் ஒரு ஒரு வழியைக் கடைபிடித்து வாழ்ந்து வந்துள்ளார்கள் .அவர்கள் முயற்சிக்கு  தகுந்தாற் போல் சில,பல சித்துக்கள் கிடைத்து இருக்கிறது .அதனால் அவர்கள் அந்த சித்தை வைத்துக் கொண்டு, எல்லாம் கிடைத்து விட்டது போல் இறுமாப்பு அடைந்து,நீண்ட நாள் வாழ்ந்து, மரணத்தை வெல்ல முடியாமல் அழிந்து போய் விட்டார்கள். மரணத்தை வென்றால்தான் இறைவனை அடைய முடியும் என்ற ரகசியத்தை எவராலும் கண்டுப்  பிடிக்க முடியவில்லை .

ஏன் என்றால்;-- மரணம் என்பது இயற்கை என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள் ,உடம்பு அழிந்து விடும்,உயிர் அழிந்துவிடும், ஆன்மா அழியாதது .உடம்போடு உயிர் அழிந்துவிடும் அதனால் உடம்பு இல்லாமல் உயிர் இல்லாமல் இறைவனை அடையலாம்,என்பது ஆன்மீகவாதிகளின்  கொள்கைகளாகும்,அவை முற்றிலும் தவறான கொள்கை களாகும் என்கிறார் வள்ளலார் .

ஆதலால் ஆசைதான் எல்லா வற்றுக்கும் காரணம் ஆசையை ஒழித்து விட்டால்,இறைவன் அருளைக் கொடுத்து விடுவார், இறை நிலையை அடைந்து விடலாம், என்பது சமய மதக் கொள்கைகளின் கோட்பாடுகளாகும்.இவை முற்றிலும் தவறானது என்பதை வள்ளலார் விளக்குகிறார் ,

உடம்பின் ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் ,கண்டதே காட்சி ,கொண்டதே கோலம் என்று வாழ்ந்து,கதைகளாகவும்,கற்பனைகளாகவும்,தத்துவங்களை உண்மை போல் அமைத்து வைத்து தாங்களும் குழம்பி மக்களையும் குழம்ப வைத்து விட்டுப் போய் விட்டார்கள்.அதனால் இன்றுவரை மக்கள் உண்மை என்ன வென்று தெரியாமல்,பொய்யையே உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் .

ஆகாரம்,..மைத்துனம்,..தூக்கம்,..பயம் இவைகளால் மரணம் வருகின்றது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளார் வள்ளலார் .அதன் விளக்கம் அருட்பாவில் பார்த்துக் கொள்ளுங்கள்.

மரணம் என்பது இயற்கை அல்ல ! அவை நாம் வாழும் வாழ்க்கை முறையால் நாம் செய்யும் தவறுகளால் மரணம் வருகின்றது.ஆதலால் மரணம் செயற்கை என்பதை வள்ளலார் ,;;தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்'' என்பார் இவை இன்று நேற்று அல்ல !  என்றும் உள்ளதால் இந்த நோவை நீக்க வேண்டும் என்கிறார் அவர் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு,

சாவதென்றும் பிறப்பதென்றும்  சாற்றுகின்ற பெரும் பாவம் தன்னை எண்ணி நோவது இன்று புதியது அன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி
ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே யாகும் மற்றை இறைவராலே
ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இச்சிறியே னால்ஆவது என்னே !

என்னும் பாடல் வாயிலாக  உயிர்கள் அனைத்தும் சாவதும் பிறப்பதுமாய் தொடர் கதையாகவே உள்ளது என்பதைத் தெரியப் படுத்தி உள்ளார் .மரணம் என்பது பெரும் பிணி என்கின்றார்.பெரும் பாவம் என்கின்றார். அந்த பிணியை அதாவது நோயை  நீக்குவது எந்த மருந்தாலும் எந்த கடவுளாலும் நீக்க முடியாது.என்கின்றார் அந்த தீர்க்கமுடியாத நோய் நம்மை எப்படிபிடித்துக் கொண்டுள்ளது .அந்த தீர்க்க முடியாத பெரும் பிணியை ,நீக்குவதற்கு எந்த மருந்து தேவைப்படுகின்றது.அவை  எங்கே கிடைக்கின்றது ? யார் ? இடம் இருந்து பெற்றுக் கொள்வது என்பதை மனிதன் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் உடம்பு வந்த வழியும், உயிர் வந்த வழியும்,மரணம் என்னும் பிணி, (நோய்) பற்றிக் கொண்ட வழியும் தெரியாமல் ,அதன் ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் மரணத்தை வெல்ல முடியாது ,அதற்கு வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு ;--

உடம்பு வருவகை அறியீர் உயிர் வகையை அறியீர்
உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம் புகு பேய் மனத்தாலே மயங்கு கின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்று அறியீர்
இடம் பெறும் பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே
நடம்புரி என் தனித் தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியம் சார்வீரே !

மனம் என்பது உலக போகத்திலே இட்டுச்செலவது ,அது பேய் குரங்குப் போன்றது அதை வசப்படுத்த தெரியாமல் ,வழி துறை தெரியாமல் பொய்யான பொருள் வாழ்க்கை வாழ்ந்து இன்பம் துன்பம் என்ற இகவாழ்க்கை என்ற அற்ப செயல்களால் அனுபவித்து பின் எண்ணி எண்ணி இளைத்துக் கொண்டு உள்ளீர்கள் , மரணத்தை வெல்லமுடியாமல் வாழும் ,உலகில் உள்ள அனைவரும் ஏழைகள் தான் ,ஒருவரும் பணக்காரன் அல்ல ,

மேலும் வள்ளலார் பாடலைப் பாருங்கள் !

இறந்தவரை எடுத்திடும் போது அரற்று கின்றீர் உலகீர்
இறவாத பெருவரம் நீர் ஏன் அடைய மாட்டீர்
மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ உமக்கு
மறந்தும் இதை நினைக்கின் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர்
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம்
சேராமற் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்மின் இங்கே
பிறந்த பிறப்பில் இதில் தானே நித்திய மெய் வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே !

இறந்தவரைப் பார்த்து இருக்கின்றவர்கள் அழுகிறீர்கள் .இறவாமல் வாழும் வழி ஒன்று இருக்கின்றது நான் கற்றுத் தருகிறேன் வாருங்கள் என்று வள்ளலார் அழைக்கின்றார் .நான் காட்டிய உண்மை நெறியான சன்மார்க்க நெறியைக் கடைபிடித்து வாழ்ந்தால் இந்த பிறவியிலே மரணத்தை வென்று பேரின்ப சித்தி நித்திய மெய்வாழ்வு வாழலாம் என்பதை சொல்லி மக்களை அழைக்கின்றார் .என்னே அவரின் பெருங்கருணை .

மரணம் என்னும் நோயை நீக்குவதற்கு,உண்மைக் கடவுளான அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் தொடர்பு கொண்டு,  பூரண அருளைப் பெற்று மரணத்தை வெல்லுகிறவன் எவனோ அவனே பணக்காரன்,அவனே மனித பிறப்பின் ரகசியத்தை அறிந்து கொண்டவன்.அவனே உண்மை தெரிந்த வல்லவன்   என்பதை வள்ளலார் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ,

நாடு ,மொழி,இனம்,கடவுள்,மதம்,சமயம்,ஜாதி,ஆண்,பெண், போன்ற பேதம் இல்லாமலும் மற்றும் இறைவன் படைத்த அணைத்து உயிர்களும் ஒரேத் தன்மை உடையது.என்பதை அறிவால் அறிந்து,'ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை'' என்னும ஒருமையை அறிந்து உணர்ந்து கொண்டால் மட்டுமே உண்மை என்னும் அருள் அறிவு தன்னைத்தானே விளங்கும் என்கின்றார் நமது வள்ளல்பெருமான் .

உலக போகப் பொருள்கள் மீது ,எந்தப் பற்றும் இன்றி ,உயிர்களின் உண்மையை அறிந்தும்  உயிரை உண்டாக்கும் ஆன்மாவை,அறிந்தும் ,இந்த உலகத்திற்கு ஆன்மாவை அனுப்பிய ஆண்டவர் யார் ? என்பதையும் அறிந்து அந்த உண்மைக் கடவுளின் தொடர்பு கொண்டால் மட்டுமே ,நம்முடைய வாழ்க்கையின் ரகசியங்கள் தெரிந்து கொள்ள முடியும்.--

அந்த உண்மையைத் தெரிந்து கொள்ள எது தடையாக இருக்கின்றது என்பதை நமக்கு தெளிவாக விளக்கி உள்ளார்கள்

நம்மைப் படைத்த இறைவன் யார் ? என்பதை நம்முடைய ஆன்ம அறிவைக் கொண்டு,''கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ்ஜோதியர்! என்னும் அருள் அறிவை  அறிந்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும்,''ஒருமை'' வந்தால் அன்றி ,அறிவு விளக்கமும்,அருள் விளக்கமும்  வெளிப் படாது என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார் வள்ளல்பெருமான்

உலகப்  பற்றை ஒழித்தால் மட்டும் போதாது. ,தியானம்,யோகம,தவம்,
முக்தி,முத்தி,குண்டலணி சக்தி எழுப்புதல், காயகல்பம், ரசவாதம், நவபாஷாணம்,சமாதி போன்ற  சித்துவிளையாட்டு,  செயல்களால் அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியாது, பின் எப்படி பெற முடியும்.அதற்கு வள்ளலார் சொல்லிக் கொடுக்கும் சாகாக் கல்வியைக்  கற்க வேண்டும்.

சாகாக் கல்வி !

மரணத்தை வெல்ல முடியும் ! முடியும் !அதற்கு சாகாக் கல்வி என்று பெயர் வைத்துள்ளார் வள்ளல்ளார்!.

சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்
தான் என அறிந்த அறிவே
தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே
தனித்த பூரண வல்லபம்
வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும்
விளைய விளைவித்த தொழிலே
மெய்த் தொழில தாகும் இந் நான்கையும் ஒருங்கே
வியந்து அடைந்து உலகம் எல்லாம்
மாகாதல் உற எல்லாம் வல்ல சித்தாகி நிறை
வான வரமே இன்பமாகும்
மன்னுமிது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின்
மரபு என்று உரைத்த குருவே
தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்
தேற்றி அருள் செய்த சிவமே
சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே
தெய்வ நடராஜ பதியே !

சாகாத கல்வி என்பது ஒன்று உண்டு என்பதை முதன் முதலில் கண்டு பிடித்து உலகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் வள்ளலார் ,சாகாக் கல்வி என்பது மரணத்தை வெல்லும் வழியைக் கற்றுக் கொள்வதே சாகாக் கல்வி என்பதாகும் கல்வியின் முதல் பாடம் .

முதலில் கடவுள் ஒருவர் என்பதை அறிந்து கொள்வதே ஆரம்பக் கல்வியாகும் அதுவே உண்மை அறிவாகும்,

ஐந்து மலமான,ஆணவம்,மாயை,கன்மம்,மாமாயை,பெருமாயை என்னும், ஐந்து பூதங்களின் தொடர்பு இல்லாமல் அவற்றை வெல்வதற்கு அருளைப் பெற்று வாழ்வதே பூரண வல்லபம் என்பதாகும்.

பிராணவாயு என்னும்  சுவாசம் இல்லாமல் வாழும் வாழ்க்கை.. வேகாக்கால், ...உயிர்போகாமல் வாழும் சாகாத் தலை,...ஆன்மா மீண்டும் உடம்பு,உயிர் எடுக்காமல் அருளைப் பெற்று வாழ்வதே போகப் புனல் என்பதை தெரிந்து கொண்டு வாழ வேண்டும்.

ஆன்மதேகம் என்னும் ஒளி உடம்பைப் பெற்று, என்றும் அழியாமல் வாழ்ந்து அனைத்துப் பொருள்களையும் அருளைக்  கொண்டு உருவாக்கும் தொழிலே உண்மையான தொழிலாகும்.அதாவது உதாரணம் ;--இறந்தவரை உயிர் பெற்று எழுப்பும் தொழிலாகும்,

கல்வி,அறிவு,வல்லபம் ,தொழில் போன்ற நான்கையும் கற்று என்றும் அழிவில்லாத செயல்களை செய்யும் ஆற்றல் பெற்றதே என்றும் அழியாத இன்பமாகும்.

மனிதனாக பிறந்து இந்த உலகத்தில் மேலே கண்ட செயல்களை கண்டு பிடித்து அதன்படி வாழ்ந்து வழிகாட்டியவர் வள்ளலார் ஒருவர்தான் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் .

எப்படி கண்டு பிடித்தார் ? என்பதைப் பார்ப்போம்.!

இவ்வுலகில் உள்ள அனைத்தும்,உயிர்கள் வாழ்வதற்காக, இறைவனால் படைக்கப் பட்டதாகும்.படைக்கப் பட்ட எந்த பொருளையும் உயிர் வாழ்வதற்காக அனுபவிக்கலாம் ,அழிக்கக் கூடாது, சேர்த்து வைக்க கூடாது,அளவுக்கு அதிகமாக அனுபவிக்கக் கூடாது .எங்கும் எடுத்து செல்லக் கூடாது!,எடுத்து செல்லவும் முடியாது !என்பதை அறிந்த வள்ளலார் .அதற்கு மேல் இந்த உடம்பு ஏன் வந்தது ?உயிர் எப்படி வந்தது என்பதை அறிய தொடங்குகிறார்.அப்படி அறியும் போது ,உயிர்களுக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்கு மூன்று சுதந்திரம்,இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்கிறார் ,

அந்த சுதந்திரத்தை மனிதன் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் ,அந்த சுதந்திரத்தை பயன் படுத்தி வாழும் வாழ்க்கையில் இன்பம் துன்பம் தொடர்ந்து கொண்டே வரும் என்பதை உணர்கிறார்.நல்லது செய்தால் நல்வினையாகவும்,தீயவை செய்தால் தீவினை யாகவும் ஆன்மாவில் பதிவாகிக் கொண்டே இருக்கிறது, இதுவே பிறப்பு இறப்புக்கு காரண காரியமாக இருந்து கொண்டு உள்ளது என்பதை அறிந்த வள்ளலார் இந்த உலகத்தில் உள்ள எதையும் அனுபவிக்காமல் வாழ்வது எப்படி என்பதை நினைந்து நினைந்து ,உணர்ந்து உணர்ந்து ,அவருடைய அருள் அறிவுக்கு அதிகமான வேலைக் கொடுக்கிறார் ,

அறிவை அறிவாலே அறிகின்ற போது உண்மையான அறிவு பதில் சொல்கிறது..அதற்கு வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு.

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவ மாகின்றது என்னடித் தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே.

அருளாலே அருள் இறை அருள் கின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திரு நட இன்பம் என்று அறியாயோ மகளே.!

என்ற பாடல் நமக்கு அறிவை விளக்கும் ,ஆற்றலைக் கொடுக்கும் உண்மையை உணர்த்தும் பாடல்களாகும் .

அருளைப் பெற்றால் மரணத்தை வெல்ல முடியும் என்பதை அறிந்த வள்ளலார் ,அருளைப் பெறுவதற்கு எவை தடையாக இருக்கிறது என்றால் ,இறைவன் நமக்குக் கொடுத்த சுதந்தரத்தை ,நாம் உபயோகப் படுத்தக் கூடாது, எனக்கு இவைகள் வேண்டாம் என்று திருப்பித் தந்து விடவேண்டும் என்பதை வள்ளலார் அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் எப்படி விண்ணப்பம் செய்கிறார் என்பதை அனைவரும் பார்ப்போம் .

ஆறாம் திருமுறையில் முதல் விண்ணப்பம் "'சத்திய விண்ணப்பம் "

எல்லாம் வல்ல தனித் தலைமைக் கடவுளாகிய
அருட்பெரும்ஜோதி ஆண்டவரே !

தேவரீர் திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளுகின்ற சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்;--

இவ்வுலகத்தின் இடத்தே உயர்ந்த ஆறறிவுள்ள உயர்வு உடைத்ததாகிய தேகத்தைப் பெற்ற யான் ,இத்தேகத்திற்கு இடைக்கு இடை நேருகின்ற மரணம்,பிணி,மூப்பு ,பயம்,துன்பம் முதலிய அவத்தைக்கள் எல்லா வற்றையும் நிவர்த்தி செய்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொண்டு,எக்காலத்தும் ,எவ்விடத்தும்,எவ்விதத்தும்,எத்துணையும்,தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.

எனது விருப்ப முயற்ச்சி இங்கனமாக ,அவத்தைகள் எல்லா வற்றையும் நீக்கி,இத்தேகத்தையே  நித்திய தேகமாக்கி,எக்காலத்தும் ,அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல்,எதனால் பெறுதல் கூடும் என்று அறியத் தொடங்கிய தருனத்தே;--

வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது,எல்லாம் உடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடும் என்று தேவரீர் திருவளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன் ,

பின்னர் திருவருட் சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து.;--

எனது யான் என்னும்,தேக சுதந்தரம்,போக சுதந்தரம்,ஜீவ சுதந்தரம் .என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கிய விடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.ஆதலில்,

எனது சுதந்தரமாகக் கொண்டு இருந்த தேக சுதந்தரத்தையும்,போக சுதந்தரத்தையும்,ஜீவ சுதந்தரத்தையும்,தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன் ,கொடுத்த தருணத்தே,இத்தேகமும் ,ஜீவனும்,போகப் பொருள்களும்,சர்வ சுதந்தரராகிய கடவுள் பெருங் கருணையால் கொடுக்கப் பெற்றன மன்றி ,நமது சுதந்தரத்தால் பெற்றன அல்ல என்னும் உண்மையை அறிந்து கொண்டேன் .

இனி,இத்தேகத்தின்  இடத்தும்,ஜீவன் இடத்தும் ,போகப் பொருள்கள் இடத்தும்.தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்ற மாட்டாது.

தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்து அருளி,மரணம்,பிணி,மூப்பு,பயம்,துன்பம் முதலிய அவத்தைகள் எல்லா வற்றையும் தவிர்த்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கி,எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல்.வேண்டும்.

இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர் களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து அவரவர்களையும் .உரிமை உடையவர்கள் ஆக்கி வாழ்வித்தல் வேண்டும்.

தேவரீர் பெருங் கருணை ஆட்சிக்கு வந்தனம் !வந்தனம் !

நித்தியதேகம் !

நித்திய தேகம் என்று சொல்லுவதை நாம் கவனிக்க வேண்டும்,நித்திய தேகம் என்பது உடம்பு இல்லாத ஒளி தேகமாகும்.உடம்பு கடவுள் கொடுத்த தேகம் அல்ல !.மாயையினால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடாகும்.பஞ்ச பூதங்களான மண்,நீர்,அக்கினி,காற்று,ஆகாயம் போன்ற கருவிகளைக் கொண்டு ஆன்மாவுக்கு,மாயையினால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு என்னும் தேகமாகும் .ஆதலால்  நம் உடம்பு செயற்கை உடம்பாகும்  ,

நித்திய தேகம் என்பது இயற்கை உடம்பாகும்..அதனால்தான் வள்ளலார் செயற்கை உடம்பு வேண்டாம்--இயற்கை உடம்பான நித்திய தேகம் வேண்டும் என இறைவனிடம் கேட்கிறார்.மரணம் அடைந்தால் இயற்கை என்னும் நித்திய தேகம் கிடைக்காது...மரணம் அடையாமல் இத்தேகத்தையே நித்திய தேகமாக மாற்ற வேண்டும்.அதாவது ஒளி உடம்பாக மாற்ற வேண்டும்.ஒளி உடம்பு என்பது ''உயிர் இல்லாதஉடம்பு'' அதைத்தான் மரணம் இல்லாத பெருவாழ்வு என்கிறார் வள்ளலார்.

மரணத்தை வெல்லுவதற்கு இதைவிட வேறு சாத்தியக் கூறுகள் உண்டா ?தேவையா?சிந்தித்துப் பார்க்க வேண்டும்.வள்ளலாரைப் போல் வாழ்ந்தால் நிச்சயம் மரணத்தை வெல்ல முடியும்.அதை விடுத்து ,எல்லா பற்றுகளையும் விடாமல் வைத்துக் கொண்டு மரணத்தை வெல்ல முடியுமா ?சத்தியமாக முடியாது. பற்றிய பற்று அத்தனையும் பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறவீரே என்பார் வள்ளலார் .

அருள் !

இந்த உலகம் பொருளினால் உண்டாக்கப் பட்டது,பொருளை வைத்துக் கொண்டு அருளைத் தேடமுடியாது ,அப்படி தேடினாலும் கிடைக்காது..''பொருளை அருளாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும்'' அதுவே ''ஜீவ காருண்யம் என்பதாகும்''  அருளைத் தேடுவதற்கு தடையாக இருப்பது என்ன என்பதை வள்ளலார் விளக்குகிறார் நாம் இதுவரையில் அருளைத் தேடாமல் பொருள் மீது பற்று வைத்து இருந்ததற்கு காரணம் என்ன ?,

நாம் இதுவரையில் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம் ,ஏன் என்றால் அவைகளின் ஒன்றிலாவது தெய்வத்தை இன்னபடி என்றும்,தெய்வத்தின் உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.அணு மாத்திரமேனும் தெரிவிக்காமல் பிண்ட லட்சணத்தை ஆண்டத்தில் காட்டினார்கள்.யாதெனில், கைலாசபதி என்றும்,வைகுண்டபதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும் பெயரிட்டு இடம்,வாகனம்,ஆயுதம் வடிவம்,ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

தெய்வத்துக்குக் கை,கால் முதலியன இருக்குமா ? என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும் (ஆதி சங்கரர்,ராமானுஜர்,சங்கராச்சாரியார் மற்றும் உள்ள பெரியவர்கள்)  ,உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கிறார்கள்,ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் (வியாசர்,மற்றும் வால்மீகி ),அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை ,

அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை,இதுவரைக்கும் அப்படிப் பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லி இருக்கின்றார்கள் ,அதற்காக அவற்றில் லஷியம் வைத்தால் ஆண்டவர் இடத்தில் வைத்துக் கொண்டு இருக்கிற லஷியம் போய் விடும் அவைகளில் லஷியம் வைக்காமல் ஆண்டவர் இடத்திலே லஷியம் வைக்க வேண்டியது நமது விருப்ப முயற்சியாக இருக்க வேண்டும் ,

மரணத்தை வெல்லவும்,-அதாவது ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றும், அருளைக் கொடுக்க கூடியவர், இயற்கை  உண்மைக்  கடவுளான ''அருட்பெரும்ஜோதி ஆண்டவர்'' ஒருவரால்தான் முடியும் .அதற்கு சாட்சி  நானே இருக்கிறேன் ,நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டு இருந்தது இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது அந்த லட்சியம் எப்படிப் போய் விட்டது பார்த்தீர்களா ?நான் பாடி இருக்கிற திருஅருட்பாவில் அடங்கி இருக்கிற பாடலையும் மற்றவர்கள் பாடலையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாட்சி  சொல்லிவிடும்.ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் ,அப்போது எனக்கு அவ்வளவு அற்ப அறிவாக இருந்தது.என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் .

காரணம் என்ன ? அவைகள் பக்தி மார்க்கம்,''வள்ளலார் கண்டது அருளைப் பெரும் ஞான மார்க்கம்'' .அதாவது ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய மார்க்கமாகும்'' ஞானம் என்பது ஒன்றும் இல்லாதது.ஒன்றும் இல்லாமல்{எதிலும் தொடர்பு இல்லாமல் } இருந்தால்தான் அருள் என்னும் ஞானம்{அருள்அறிவு } கிடைக்கும்.மேலும் வள்ளலார் சொல்லியது.

இப்போது அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் .இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது.ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ?என்றால் பெற்றுக் கொள்ளவில்லை.என்னை மேலே ஏற்றிவிட்டது யாதெனில்.

உண்மை பெருநெறி ஒழுக்கமும் --''கருணை'' தான் என்னை மேலே  ஏற்றிவிட்டது உண்மை பெருநெறி ஒழுக்கம் யாதெனில்,''கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக '' என்றது தான் என்னை ஏறா நிலைமிசை ஏற்றிவிட்டது .அது யாதெனில் உயிர்களின் மேல் தயவு,.. கடவுளின் மீது  அன்பு,...  தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது .அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும் அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும் தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.இப்போது என்னுடைய அறிவு அண்டம் அண்டங்களுக்கும் அப்பாலும் கடந்து இருக்கின்றது .அது அந்த ஒருமையினால் தான் வந்தது நீங்களும் என்னைப் போல் ஒருமையுடன் இருங்கள் ,அருள் தானே கிடைக்கும்.அருள் கிடைத்தால் மரணத்தை வெல்லலாம்.நித்திய தேகம் பெறலாம் .

அருள் என்பது என்ன ?

அருள் என்பது அருட்பெருமஞ்ஜோதி ஆண்டவரால் எல்லா ஆன்மாக்களிலும் வைக்கப் பட்டுள்ள மாபெரும் பொக்கிஷமாகும்.அவை ஆண்டவருடைய கருணையால் தான் சுரக்கும் .அதை தாங்கும் அளவிற்கு நாம் நம்முடைய உடம்பை தயார் படுத்த வேண்டும் .அருளைத் தாங்கும் அளவிற்க்கு தகுதி உடையவர் யார் என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகிறார் .

நிந்தை இலார் நெஞ்சகத்தே நிறைந்த பெருந் தகையை
நிலை அனைத்தும் காட்டி அருள் நிலை அளித்த குருவை
எந்தையை என் தனித்தாயை என் இரு கண்மணியை
என்னுயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை
சிந்தையிலே தனித்து இனிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
செய்ய வல்ல தனித் தலைமைச் சிவபதியை உலகீர்
முந்தை மல இருட்டு ஒழிய முன்னுமினோ கரண
முடுக்கு ஒழித்துக் கடை மரண நடுக்கு ஒழித்து முயன்றே !

இந்திரியம் கரணம் என்னும் கருவிகள் செயல்படாமல் இருந்தால் -- ஜீவன் என்னும் உயிர், ஆன்மாவில் அடங்கும் போதுதான் அருள் என்னும் அமுதம் சுரக்கும் .{அதாவது ஆபரேஷன் செய்யும் போது வலி தெரியாமல்இருக்க ,மயக்க மருந்து கொடுத்து மயக்க நிலையில் இருப்பது போன்று } அமுதம் சுரக்கும் போது உடம்பின் மாற்றங்கள் என்னவாக மாற்றம் அடையும் என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகிறார் ,ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றுவதுதான் மரணத்தை வெல்லும் வழியாகும் .அதாவது வேதியல் மாற்றம் போல் .

உடம்பு மாற்றம் அடைவதைப் பற்றி வள்ளலார் சொல்லுவதைக் கவனிப்போம்!

தோல் எலாம் குழைந்திடச் சூழ் நரம்பு அனைத்தும்
மேல் எலாம்  கட்டவை விட்டு விட்டு இயங்கிட
என்பு எலாம் நெக்கு நெக்கி இயல் இடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசை எலாம் மெய்யுறத் தளர்ந்திட
இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம்
உரைத்திட பந்தித் தொரு திரளாயிட
மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம்
உடல் எலாம ஊற்று எடுத்து ஓடிநிரம்பிட
ஒண்ணுதல் வியர்த்திட ஒளிமுகம் மலர்ந்திடத்
தண்ணிய உயிர்ப்பினிற் சாந்தம் ததும்பிட
உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்து ஓடிட

வாய் துடித்து அலறிட வளர் செவித் துணைகளில்
கூயிசைப் பொறி எலாங் கும்மெனக் கொட்டிட
மெய் எலாம்  குளிர்ந்திட மென் மார்பு அசைந்திடக்
கை எலாம் குவிந்திடக் கால் லெலாஞ் சுலவிட
மனங் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட
இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட
அகங்காரம் ஆங்காங்கு  அதிகரிப்பு அமைந்திடச்
சகங் காண உள்ளம தழைத்து மலர்ந்திட
அறிவுருவு அனைத்தும் ஆனந்தம் மாயிடப்
பொறியுறும்  மான் மதற் போதமும் போயிடத்

தத்துவம் அனைத்தும் தாமொருங்கு ஒழிந்திடச்
சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட
உலகம் எலாம் விடயமும் உளவு எலாம மறைந்திட
அலகிலா அருளின் ஆசை மேற் பொங்கிட
என்னுளத்து  எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட
என்னுளத்து  ஓங்கிய என் தனி அன்பே !

பொன்னடி கண்டு அருள் புத்தமுத உணவே
என்னுளத்து  எழுந்த என்னுடைய அன்பே
தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால்
என்னை வேதித்த என் தனி அன்பே !

அருள் என்னும் அமுதம் சுரக்கும் போது உடம்பு எப்படி வேதியல் மாற்றம் உண்டாகிறது என்பதை மிகத் தெளிவாக வள்ளலார் தெரியப் படுத்தி உள்ளார். இந்த உலகத்தில் யாராவது என்னைப் போல்,மரணம் இல்லாப் பெருவாழ்வு  பெற்று இருக்கிறார்களா என்பதை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடத்தில் கேட்கிறார்.

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் மெஞ்ஞான்றும்
சாகா வரம் எனைப் போற் சார்ந்தவரும் --தேவா நின்
பேர் அருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் நீ சற்றே யறை !

மரணத்தை வென்ற மாபெரும் மகான் நமது வள்ளல்பெருமான் அவர்கள்,அருட்பெரும்ஜோதி ஆண்டவரைப் பார்த்து கேட்கும் கேள்விக்கு ஆண்டவர் என்ன பதில் சொல்கிறார் என்பதைப் பார்ப்போம் .

துன்பெலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச்
சூழ்ந்த அருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே
சுதந்தரம் ஆனது உலகில்
வன்பெலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய்
வாழ் வெலாம் பெற்று மிகவும்
மன்னுயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன்
மனம் நினைப்பின் படிக்கே
அன்ப நீ பெருக உலவாது நீடுழி விளை
யாடுக அருட்ஜோதியாம்
ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்
ஆணை நம் ஆணை என்றே
இன்புறத் திருவாக்களித்து என் உள்ளே கலந்து
இசைவுடன் இருந்த குருவே
எல்லாஞ் செய் வல்ல சித்தாகி மணி மனிறில்
இலங்கு நடராஜ பதியே !

என்ற பாடல் மூலமாக விளக்கம் அளிக்கிறார்.

 வள்ளலார் இடம் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சொல்லியது !.

உலகம் இதுவரையில் உண்மை அறியாமல் இருந்தது ,ஆதலால் எனக்கு துன்பம் இருந்தது ,அந்த துன்பங்கள் யாவும் உன்னால் தீர்ந்து விட்டது,நீ ஒருவன் தான் என்னுடைய செல்லப் பிள்ளை,நல்லப் பிள்ளை ,தாவரங்கள் முதல் எல்லா உயிர் இனங்களும்,துன்பம் இல்லாமல் வாழ வேண்டும் என்று வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய உனக்கு ,உன் மன நினைப்பின் படிக்கே அன்பையும் அருளையும் பெற்று ,நீடுழி காலம் விளையாடி மகிழ வேண்டும். ஆதலால் என்னுடைய ஆட்சியை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று,அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வள்ளலார் வசம் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறார் ,உன்னை என்றும் கைவிடாமல் உன்னுடனே இருப்பேன் இது நம் இருவருடைய ஆணையாகும் என்று மகிழ்ச்சியுடன் வாக்களித்து உள்ளார் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் .

இதைவிட பெரிய பேறு உலகத்தில் யாருக்காவது கிடைத்தது உண்டா ?மரணத்தை வென்றால் மட்டும் போதாது அதற்கு உண்டான தகுதியும் வேண்டும் .''அருளாட்சி பெறும்'' அந்த தகுதியை வள்ளல் பெருமானுக்கு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் கொடுத்துள்ளார்..

நமது உடம்பு தாயின் கருப்பையில் அணுக்களின் கூட்டு சேர்க்கையால் அசுத்த  பூத காரிய அமுதத்தினால் {அணுவை ஒட்டும் பசையால்} பின்னப் பட்டதாகும் ,அந்த உடம்பை அருளைக் கொண்டு பிரிக்க வேண்டும்,வேறு எதைக் கொண்டும் பிரிக்க முடியாது .அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ,நம் ஆன்மாவில் உள்ள அமுதத்தை எப்போது வெளிப் படுத்துகிறாரோ அப்போதுதான்,அந்த அருள் அமுதத்தால் ---பூத காரிய அமுதத்தால் பின்னப்பட்ட அணுக்களை தனித்தனியாகப் பிரிக்க முடியும்,அப்போது ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறும் .இதுவே மரணத்தை வெல்லும் வழியாகும் ,இன்னும் விரிக்கில் பெருகும் என்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன் .

மரணத்தை வெல்ல முடியும் இதில் எந்தவித சந்தேகமும் தேவை இல்லை .மனிதர்களாக பிறந்தவர்கள் மரணத்தை வென்று இறைவனை அடைவது தான் மனிதர்களின் இறுதி நிலையாகும் .அதைத்தான் வள்ளலார் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பார்! ,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பார்! ,பேரின்ப பெருவாழ்வு என்பார் ! பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பார் ! மனிதர்களால மட்டுமே மரணத்தை வெல்ல முடியும் .

மரணத்தை வென்றவர்களை எதனாலும் அழிக்க முடியாது என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள் படியுங்கள் !

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எந்தனக்கே \
ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர்
என் தந்தை அருட்பெருஞ்சோதி இறைவனைச் சார்வீரே !

உலகில் உள்ள மண் ,நீர்,அக்கினி,காற்று ,ஆகாயம் போன்ற சக்திகளாலும்,பிணி என்னும் நோயாலும்,கொலைக்கருவியாலும்,கோள்கள் என்னும் கிரகங்களாலும்,பிறர்  இயற்றும் கொடுமையான மந்திரம் ,தந்திரம் போன்ற செயல்களாலும்,வேறு ஏதாவது அறிவியல் விஞ்ஞானத்தினால்  கண்டுபிடிக்கும் அணு ஆயுத அழிவுகளால், வெடித்து சிதறும் அணுக்களாலும்,எக்காலத்தும் அழிக்க முடியாத மெய் {உடம்பு }அளிக்க வேண்டும் என்றேன்,--கால தாமதம் செய்யாமல் விரைந்து அளித்தான் --யார் ?--அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்னும் பேர் ஒளியாகும் .என்கிறார் வள்ளலார் .

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் கருணையால் மரணத்தை வென்று வாழ்ந்து வழி காட்டியுள்ளார்

இதை நினைத்து சந்தேகப் படாதீர்கள் ! இழிவாக நினைக்காதீர்கள்.! இயற்கை உண்மையான இறைவனை தொடர்பு கொள்ளுங்கள்,உயிர்களின் மேல் அன்பு,தயவு, கருணையை இடைவிடாது கடைபிடியுங்கள்    சத்தியமாக மரணத்தை வெல்லமுடியும்.எல்லாம் உண்மையாக நடக்கும் ,மனிதனாக பிறப்பு எடுத்த அனைவருக்கும் கிடைக்கும் 

முதலில் மனிதனாக வாழ்ந்து பின் அருளைப் பெற்று மரணத்தை வெல்வோம்

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேல்
கைபேசி ;--9865939896 ...