திங்கள், 29 செப்டம்பர், 2014

வள்ளலார் சொல்லிய அறிவியல் .ஆன்மீகம் !



வள்ளலார் சொல்லிய அறிவியல் .ஆன்மீகம் !

வள்ளல்பெருமான் உலக உண்மைகளை விஞ்ஞான அறிவியல் ரீதியாகவும் ,அருள் நிறைந்த ஆன்மீக ரீதியாகவும் .திருஅருட்பாவில் எழுத்து வடிவமாக எழுதி விளங்க வைத்துள்ளார் .

அறிவியல்

அறிவியல் என்பது ;-புற அறிவைச் சார்ந்ததாகும். எதை சொன்னாலும், காட்டினாலும், அதை மக்கள் உண்மை தான் என்று அறிந்து கொள்வதற்கு தகுந்த காரண காரியங்களை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கருவிகளை வைத்து கண்டுபிடித்து ,செய்து வெளிப்படையாக மக்கள் கண்களுக்குத் நேரடியாக காட்ட வேண்டும் மக்களுக்குத் தெரிய வேண்டும். அப்போதுதான் மக்கள் தெளிவடைவார்கள்.அதற்கு விஞ்ஞான அறிவியல் என்பதாகும்.

விஞ்ஞான அறிவியல் ஆராச்சியாளர்கள் வெளிப்படையாக புறத்தில் தெரியாததை ஏற்றுக் கொள்வதில்லை.

ஆன்மீகம் என்பது அறிவுக்கு அப்பாற்பட்ட, கண்களுக்குத் தெரியாத மறைமுகமாக உள்ள உண்மைகளை தத்துவ வடிவமாக படைத்து இதுதான் உலகம், இதுதான் கடவுள், இதுதான் உயிர்கள் ,இதுதான் ஆன்மா ,இதுதான் தோற்றம்,இதுதான் மாற்றம்,இதுதான் மறைப்பு ,இதுதான் உண்மை என்று சொல்லுவதாகும்.

ஆன்மீகம் சொல்லுவதை அறிவியல் ஏற்றுக் கொள்வதில்லை,அறிவியல் சொல்லுவதை ஆன்மீகம் ஏற்றுக் கொள்வதில்லை.

அறிவியல் என்பது அணுக்களையும்,கருவிகளையும் வைத்து கண்டு பிடிப்பதாகும்.அந்தக் கருவிகள் ஒரு குறிப்பிட்ட கணக்கிற்கு அளவிற்குமேல் செல்லாது .அதற்குமேல் கருவிகளை இணைக்க தொடுக்க,அளக்க முடியாது,
அந்தக் கருவிகள் எந்த அளவிற்கு கண்டுபிடிக்க முடியுமோ ,அறியமுடியுமோ அதை வைத்துக் கொண்டு ..இதுதான் உண்மை என்று சொல்லிக் கொண்டு உள்ளார்கள் .காலங்கள் மாற மாற அதிலும் மாற்றங்கள் உண்டாகிக் கொண்டே உள்ளன.

ஒருகாலத்தில் உலகம் தட்டையாக உள்ளன என்றது .அடுத்து உலகம் உருண்டையாக உள்ளன என்றது.அடுத்து உலகம் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு உள்ளன என்றது .பூமி சிருயனை சுற்றுகிறது என்றும்.சூரியன் பூமியை சுற்றுகிறது என்றும் பலவாறாக அறிவியல்கள் மாறி மாறி சொல்லிக் கொண்டே வருகின்றன் .

அடுத்து அணு சோதனைகள் நடந்து கொண்டே உள்ளன்.பல நாடுகள் அதி வேகமாக செல்லும் ராக்கெட்டை கண்டுபிடித்து செவ்வாய் கிரகத்துக்கும் ,சந்திரனுக்கும்,அனுப்பி அங்குள்ள நிலவரம் என்ன ? மனிதன் அங்கு சென்று வாழ முடியுமா ? அங்குள்ள சீதோஷ்ண ,தட்ப வெப்ப நிலை எப்படி உள்ளன என்பதெல்லாம் அறிவியல் ஆராய்ச்சி நடந்து கொண்டு உள்ளன.இதுவும் சிலகாலம் சென்றபிறகு மாறிக் கொண்டேதான் இருக்கும் .

எப்படி இருந்தாலும் ..மனிதன் ஏன் ? பிறக்கின்றான் ஏன் எதற்காக வாழ்கின்றான் .பின் எதனால் மரணம் அடைகின்றான் என்ற கேள்விகளுக்கு விடை காண முடியாமல் அறிவியல் விஞ்ஞானம் அறியமுடியாமல் இருக்கின்றன.மறு பிறப்பு உண்டா ? இல்லையா ? என்ற கேள்விகளுக்கும் ஆன்மா எங்கு இருந்து வந்தன.? உயிர்கள் எங்கு இருந்து வந்த்தன ? எப்படி தோன்றின ? உயிர் எப்படி ? உடம்பை விட்டு பிரிகின்றன .என்ற சந்தேகங்களுக்கும் விடை காணமுடியாமல் தவிக்கின்றன.

இயற்கையை முழுமையாக கண்டுபிடிக்க ,தெரிந்து கொள்ள மேலும் அதை அளக்க நம்மிடம் முழுமையான அறிவும் இல்லை,ஆற்றலும் இல்லை ,கருவிகளும் இல்லை அதற்குண்டான வயதும் இல்லை. அலைந்து அலைந்து முடிவு தெரியாமல் அழிந்து போகிறோம்.அவர்களுக்கு பின்னாடி வருபவர்களும் அப்படியே ஒரு குறிப்பிட்ட அளவு ஆராய்ச்சி செய்து முடிவு தெரியாமல் அழிந்து போகின்றார்கள் இப்படியே நமது ஆராய்ச்சி அறிவியல் விஞ்ஞானம் நடைபெற்றுக் கொண்டுள்ளது .

அணு ஆராய்சியின் வழியாக மின்சாரத்தையும்,மின் சாரத்தினால் இயங்கும்,இயக்கும் கருவிகளையும் கண்டு பிடித்து உள்ளார்கள் .மின் ஒளியை கண்டு பிடித்து உள்ளார்கள் .தொலைத் தொடர்பை கண்டு பிடித்துள்ளார்கள்,சார்ட் லைட் என்னும் கதிர் வீச்சின் வழியாக ஒளியும் ஒலியும்,ஊடுருவி செல்லும் ஆகாய அணு சோதனையைக் கண்டு பிடித்துள்ளார்கள் .அணு ஆராய்சியினால் மனிதர்களையும் .உயிர்களையும் அழிக்கும் அணு ஆயுதங்களை கண்டு பிடித்துள்ளார்கள்.

ஆன்மீகம்

ஆன்மீகம் என்பது அறிவுக்கு மேம்பட்ட அருள் நிலையை வைத்து கண்டு பிடிப்பதாகும்.

அறிவில் இரண்டு வகை உண்டு ;-மெய் அறிவு ,பொய் அறிவு என இரண்டு வகை உண்டு. மெய் அறிவு என்பது உடம்பை வைத்து, உயிரை வைத்து, மனம் புத்தியை வைத்து அறிந்து கொள்வதாகும்.

பொய் அறிவு என்பது மற்றவர்கள் சொல்லிய தத்துவங்களை,கல்வியை  வைத்து கற்று அறிந்து கொள்வதாகும்.

இந்த இரண்டு அறிவும் உண்மையா என்றால் ? உண்மை இல்லை என்கின்றார் வள்ளல்பெருமான்.

ஆன்ம அறிவும், அருள் அறிவும் விளங்குகின்ற போதுதான் உண்மை என்ன வென்று தெரியும் .அதுவரையில் உண்மைகள் தெரியாது. நம்முடைய புறக் கண்கள் உண்மையை அறியாது .அதற்கு ஊனக் கண்கள் என்று பெயர் ஊனக் கண்களுக்கு உண்மைகள் தெரியாது.

ஆன்மாவில் இருந்து சுரக்கும் ''அருள் '' வெளி வரும்போதுதான் அருட்கண் திறக்கும் அதற்கு ஆன்ம அறிவு,அருள் அறிவு ,அருட்கண் என்று பெயராகும்.

அந்த அருள் ஆன்மாவில் இருந்து முழுமையாக சுரந்து,ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் பெரும் போது.. .அதற்கு ஆன்ம தேகம் என்று பெயர் .அருள் தேகம் என்று பெயர் .ஞான தேகம் என்று பெயர் . .சுத்த பிரணவ ஞான தேகம் என்று பெயர் மரணம் இல்லா பெருவாழ்வு என்று பெயர் .முத்தேக சித்தி என்று பெயராகும்.

வள்ளல்பெருமான் !

மேலே கண்ட முத்தேக சித்தியைப் பெற்றவர்தான் நமது வள்ளல்பெருமான்.

அந்த முன்று தேகத்திற்கும் மூன்று விதமான வாழ்க்கை மூன்றுவிதமான இன்பம் கிடைக்கின்றது..அதற்கு சுத்த தேகம்,பிரணவ தேகம்,ஞான தேகம் என்றும். இம்மை இன்பவாழ்வு .மறுமை இன்பவாழ்வு ,பேரின்ப வாழ்வு  என்பதாகும்.

வள்ளலாருக்கு முன்னாடி தோன்றிய அருளாளர்கள் எல்லாம் .சுத்ததேகம்,பிரணவ தேகம் மட்டுமே பெற்று இருக்கின்றார்கள் .ஞான தேகத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. வள்ளல்பெருமான் மட்டுமே மூன்று தேகத்தையும் ஒருங்கே பெற்றவராகும்.

அந்த முத்தேக சித்தியைப் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.அவர்களுக்கு இறப்பு இல்லை ,மீண்டும் பிறப்பு இல்லை என்றும் அழிவில்லை ,அவர்கள் மட்டுமே,உலக ரகசியங்களை அறியமுடியும். கடவுளை அறிய முடியும்.அதற்கு கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.

உலக வரலாற்றில் வள்ளலாரைத் தவிர ,இன்று வரையில் எவரும் அவர் அடைந்த நிலையை அடையவில்லை.

அந்த பெருநிலையை அடைந்ததால் தான் வள்ளல்பெருமானால் உலக உண்மைகளையும்,உலக ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்ல முடிந்தது....மேலும் மரணத்தை மனிதர்கள் வெல்ல முடியும் என்ற உண்மையை உலக மக்களுக்கு தெரியப்படுத்துகின்றார்.

மரணம் என்பது இயற்கை அல்ல ! மரணம் என்பது செயற்கை என்றார் .தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் என்பார்.

அருள் என்னும் திரவத்தை தன்னுடைய ஆன்மாவில் இருந்து முழுமையாக பெற்று மரணத்தை வெல்லும் வல்லபம் பெற்றவர்கள் மட்டுமே உலக உண்மைகளை அறிந்து மக்களுக்கு வழங்க முடியும் என்பது வள்ளல்பெருமானின் முக்கிய கொள்கையாகும்.

அதனால்தான் சமர சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கைகள் என்று பெயர் வைத்துள்ளார்கள்.அந்தக் கொள்கைகளை கடை பிடித்து ஒழுக்கத்துடன் வாழ்ந்து, மரணத்தை வென்று மரணம் இல்லாமல் ,மேலும் பிறப்பு இல்லாமல் வாழ்ந்து மக்களைக் காப்பாற்ற முடியும்.அதுவரையில் மக்களை யாரும் எவரும் காப்பாற்ற முடியாது. அதற்கு ஞான வழி என்றும் அருள் வழி என்றும் சுத்த சன்மார்க்கம் என்றும் பெயர் வைத்துள்ளார்.

அறிவியல் விஞ்ஞானிகளாலும் .ஆன்மீக அருளாலர்களாலும் சொல்ல முடியாத,காண முடியாத,கண்டு பிடிக்க முடியாத அனைத்தும் வள்ளல்பெருமான் வெளிப்படையாகக் கண்டு அதன் உண்மைகளை ''திருஅருட்பா ''என்னும் அருள் நூல் வாயிலாக உலக மக்களுக்குத் தெரியப் படுத்திக் கொண்டு உள்ளார் என்பதை நாம் படித்து,அறிந்து புரிந்து அதன்படி வாழ்ந்து மரணத்தை வென்று ...நாமும் இறைநிலையை அடைவோம்.

வள்ளல்பெருமான அவர்கள் ...ஐந்து பூதங்களான நிலம்,நீர்,அக்கினி ,காற்று,ஆகாயம்,போன்ற கருவிகளாலும்,கிரகங்களாலும்,அணு ஆயுதங்களாலும்,மனிதர்களால் உண்டாக்கும் தீ வினைகளாலும், மனிதர்களால் உண்டாக்கும் அணு ஆயுதங்களாலும்,மற்றும் எமன் என்னும் கூற்று வனாலும் மேலும் எந்த கருவிகளாலும் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தேகமான ஒளி தேகம் பெற்றவராகும்.

முன்னாடி தோன்றிய ஆன்மீக அருளாலர்களாலும் அறிவியல் விஞ்ஞானிகளாலும் கண்டுபிடிக்க முடியாத அனைத்தும் கண்டு பிடித்தவர்தான் வள்ளல்பெருமான் ஆவார்கள்.

அதனால் தான் அவருக்கு அருள் பெற்ற ''திரு அருட்பிரகாச வள்ளலார்'' என்றும் ''ஞான சித்தர்''என்றும் ,''அருள் விஞ்ஞானி'' என்றும் ''அருட்பெருஞ்ஜோதி அவரே'' என்றும் பெயர் பெற்றார் .

மேலே சொன்ன அனைத்து செய்திகளுக்கும் திருஅருட்பாவில் ,உரை நடைப்பகுதி வாயிலாகவும் ,செய்யுள் வாயிலாகவும் எழுதி வைத்துள்ளார்கள் படித்து தெரிந்து கொள்ளவும் .

மேலு சில பாடல்களை மட்டும் இங்கே பதிவு செய்கின்றோம் !

ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க
ஞான அமுதம் எனக்கு நல்கியதே ....வானப்
பொருட் பெருஞ் ஜோதிப் பொதுவில் விளங்கும்
அருட்பெருஞ் ஜோதி அது !

சுத்தவடிவம் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவம் நிறைந்து ஒங்கு ....சித்து எனும் ஓர்
ஞான வடிவும் இங்கே நான் பெற்றேன் எங்கு எங்கும்
தான விளையாட்டு இயற்றத் தான் .!

நானே தவம் புரிந்தேன் நம் பெருமான் நல் அருளால்
நானே அருட் சித்தி நான் அடைந்தேன் ...நானே
அழியா வடிவம் மூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு !

கட்டமும் கழன்றேன் கவலை விட்டு ஒழிந்தேன்
கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
சித்தமும் அடைந்தேன் சிற்சபை உடையான்
செல்வ மெய்ப் பிள்ளை என்று ஒரு பேர்ப்
பட்டமும் தரித்தேன் ஈனக்கு இது போதும்
பண்ணிய தவம் பலித்ததுவே !

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிர் ஆதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர்
என்தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே !

என ஆயிரக்கணக்கான பாடல்கள் திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளார்கள்  
படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.      

சனி, 27 செப்டம்பர், 2014

சாட்டர்டே போஸ்ட்,ஆன்மநேயர் கதிர்வேலும் மனித உறவுகளும்.


   


சாட்டர்டே போஸ்ட்,ஆன்மநேயர் கதிர்வேலும் மனித உறவுகளும்.

எனவே இவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக ஒரு கேள்வி கேட்டேன். 

///இன்றைய வாழ்க்கைமுறையில் மனித உறவு எப்படி இருக்கிறது. அதை மேம்படுத்த என்ன செய்யலாம். ?///



மனித உறவு ! இன்றைய மனித வாழ்க்கையில் மனித உறவுகள் தள்ளி வைக்கப் படுகின்றது.அதற்கு காரணம் ! இன்றைய உலகில் மனிதர்கள் ஆடம்பரத்தை அதிகம் விரும்புகின்றார்கள் பணத்தைத் தேடி அலைகின்றார்கள் அதனால் பாசத்தை ஓரம் கட்டி விடுகின்றார்கள். பணம் இருந்தால் போதும் ,அனைத்தும் கிடைக்கும் அதை வைத்துக் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்று நினைக்கின்றார்கள். பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது என்பதை யாரும் உணர்வது இல்லை. 

நம்முடைய தாய்,தந்தையர்கள்,அதற்கு முன்பு வாழ்ந்த தாத்தா ,பாட்டிகள் எல்லாம் அன்பை மூலதனமாக வைத்து வாழ்ந்தார்கள் .அதனால் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் . பிரிந்து வாழ்ந்தால் அதை கேவலமாக நினைத்தார்கள். குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்பவர்களுக்கு ஊரில் உள்ள மற்ற உறவினர்கள் ,நண்பர்கள் யாரும் அதிகமாக உதவி செய்ய மாட்டார்கள்.அவர்களுக்கு வெளியே ஆதரவு இருக்காது என்பதை உணர்ந்து பெரியவர்கள் சொல்லும் வரை தனிக்குடித்தனம் போக மாட்டார்கள். 

பெரிய குடும்பமாக இருந்தால்,பெரியவர்களே அவரவர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து,பிரிக்க வேண்டியதை பிரித்து,தனித்தனியாக குடும்பத்தை வைத்து வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கி வைப்பார்கள். அதிலும் யாருக்காவது அஜாக்கிரதையால் துன்பம் நேரிட்டால் அவர்களுக்கு தகுந்த முறையில் உதவி செய்து,அந்த துன்பத்தில் இருந்து அவர்களை காப்பாற்றுவார்கள். 

எவ்வளவுதான் குடும்பத்தில் குழப்பங்கள் பிரச்சனைகள் வந்தாலும்,அதை பெரியவர்கள் அன்பால் அரவணைப்பால் சொல்லி புரிய வைத்து ஒற்றுமையுடன் வாழ வழி வகுத்து தந்தார்கள். சுயநலம் இல்லாமல் பொது நலத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.அவரவர்களுக்கு எவை தேவையோ அதை மட்டுமே அனுபவித்து வந்தார்கள்.அதனால் யாருக்கும் எந்த துன்பமும்,துயமும்,அச்சமும் பயமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். 

இப்போது காலங்கள் மாறி விட்டன.மகனோ,மகளோ,நன்றாக படித்து வேலைக்குச் சென்று ,,பெற்றோர்களை விட அதிகமாக சம்பாதிக்கின்றார்கள் .சம்பாதிக்கின்றோம் எனற ஆணவத்தால் அவர்களை அறியாமலே ,பெரியவர்களை மதிப்பதில்லை,மதித்தாலும் அவர்கள் சொல்லை யாரும் கேட்பதில்லை. தங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் ஆடம்பரமான வாழ்க்கை வாழ தொடங்கி விட்டார்கள்.

ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதற்கு தகுந்தாற்போல் பெரிய பெரிய கம்பெனிகள் விலை உயர்ந்த பொருள்களை தயாரித்து மக்கள் வாங்கும்படி விளம்பரங்கள் செய்து தவணை முறையில் விற்பனை செய்து வருகின்றார்கள். பேராசையின் காரணமாக வருமானத்திற்கு மேலாக,பெரிய ஆடம்பரமான வீடுகளும்,வீட்டை நிரப்புவதற்கு தேவையற்ற பொருகளை வாங்கி வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்படுகின்றார்கள்.அதற்கு மேலாக விலை உயர்ந்த வாகனங்கள் வாங்கி அதற்கு செலவு செய்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள். 

தங்கள் குழந்தை களுக்கு நல்ல கல்வியை கொடுக்காமல் . கவுரவத்திற்காக,மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என்ற அற்ப ஆசைகளுக்காக, அதிகமான பணம் வசூலிக்கும் வியாபார கல்வி சாலைகளுக்கு அனுப்பிவிட்டு பணம் அதிகம் செலவாகிறதே என்று அங்கலாயித்துக் கொண்டு சிரமப்படுகின்றார்கள். அவர்களை தட்டிக் கேட்க ,அறிவுரை சொல்ல ஆள் இல்லை என்பதால் வாழ்நாள் முழுவதும் துன்பபடுகின்றார்கள்.

நாகரீகம் என்ற போர்வையில் அனைவரும் துன்பப்பட்டுக் கொண்டுதான் உள்ளார்கள் .யாரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததாக தெரியவில்லை, மனித உறவு இல்லாமல் பண உறவைத் தேடிக் கொண்டு உள்ளார்கள். மனித உறவு என்பது மிகவும் மகத்தானது,அது அன்பின் பிறப்பிடம் மனித உறவு என்பது நிலையான அன்பு உடையதாகும்.அந்த அன்பிற்கு ஈடு இணையாக வேறு எதுவும் இல்லை,.அன்பு தான் மனிதனை மகிழ்ச்சி அடைய செய்விக்கும். அன்பு இருக்கும் இடத்தில் ஆண்டவர் குடியிருப்பார் .பணம் இருக்கும் இடத்தில் எமன் குடி இருப்பார் .என்பதை மனிதர்கள் உணர்ந்து மனித நேயத்தை பாது காக்க வேண்டும்.மனித நேயம்தான் மகிழ்ச்சியைக் கொடுக்கும். 

வள்ளுவ பெருந்தகை சொல்லுவார் ...அன்புடையார் எல்லாம் உடையார் ,அன்பிலார் ஏதும் இலார் .என்பார் . வள்ளல்பெருமான் அவர்கள்...அன்பெனும் பிடியும் அகப்படும் மலையே என்பார் .ஒரு பெரிய அசையாத மலையையே அன்பால் கையில் அகப்பட்டுவிடும் என்பார். வருங்காலத்தில் உயர்ந்த மனிதப்பிறப்பு எடுத்த மனிதர்கள் .பேராசையை விடுத்து வருமானத்திற்கு தகுந்த செலவுகளை செய்து தேவையான ஆசைகளை நிரந்தரமாக இருக்கும்படி செய்து மகிழ்ச்சியுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

 தாய் தந்தையர்களை ,பெரியவர்களை மனம் நோகாமல் பாது காக்க வேண்டும்.ஏழை எளியவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு உபகாரம் செய்ய வேண்டும் .அவர்களின் வாழ்த்துக்கள் நம்மை எப்போதும் பாது காக்கும். யாவரும் மதிக்கத்தக்க மனித நேயத்துடன் வாழ்க்கையைத் தொடங்கினால் என்றும் துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழலாம் . இன்றைய சமுதாயம் நாளைய உலகை உருவாக்கும் சிற்பிகள் . 

ஒவ்வொரு தனிமனிதனும் சத்தியம்,நேர்மை,ஒழுக்கம்,உழைப்பு, உயிர் இரக்கம் உடையவர்களாக வாழ்ந்தால் ,நாமும்,நாடும் நலம் பெரும். ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

டிஸ்கி 1. :- மிக அருமையான தெளிவான இன்றைய தலைமுறைக்குத் தேவையான கருத்துக்களைச் சொல்லி இருக்கீங்க கதிர் சார் . சாட்டர்டே போஸ்ட் சார்பா உங்க கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி தெரிவிச்சுக்குறேன்.  

டிஸ்கி 2:- ////வருகிற அக்டோபர் மாதம் நான்கு ஐந்தாம் தேதி வள்ளலார் அவதார தின விழா ...மலேசிய நாட்டில் சுத்த சன்மார்க்க மாநாடு நடைபெற உள்ளது .ஈரோடு கதிர்வேல் கலந்து கொண்டு அருள் உரை நிகழ்த்துகிறார் .///

வாழ்த்துகள் சார். !!!!!!!!!!  

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

5-10-2014,வள்ளலார் அவதார தினம் !




5-10-2014,வள்ளலார் அவதார தினம் ! 

திருஅருட்பிரகாச வள்ளலார் !

அகத்தே கருத்துப் புறத்தே வெளுத்திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்கச் சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ,அகம் கருத்து, புறம் வெளுத்து,வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் .உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசி அழிந்து கொண்டும் உள்ளார்கள். மெய்ப்பொருளான இறைவன் யார் ? என்னும் உண்மைத் தெரியாமல் வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளார்கள் .

உலக மக்கள் அனைவரையும் திருத்தி. இகத்தே இந்த பிறவியிலே அருளைப் பெற்று அழியாமல் வாழ்ந்து மரணத்தை வெல்ல வேண்டும் என்பதற்காகவே இறைவனால் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேன் என்கிறார்.

இகம்,பரம்,என்ற இரண்டு வழிகள் உண்டு பரம் யாருக்கும் தெரியாது.யாரும் பார்த்தது இல்லை .அந்த பரத்தை இந்த பிறவியிலே இங்கேயே பார்த்து அனுபவித்து ,அருளைப் பெற்று, பரத்தில் உள்ள இறைவனிடம் இருந்து ''பேரின்ப பெருவாழ்வு ,என்னும் சாகாக் கல்வியை கற்று ''அதன்படி வாழ வைக்க வேண்டும் என்பதற்காக இறைவன் என்னை இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்தார் என்று வள்ளல்பெருமான அவர்கள் தன்னுடைய வருகையைப் பற்றி திருஅருட்பா என்னும் அருள் நூலில் தெளிவாகத் தெரியப் படுத்தியுள்ளார்கள்.

வள்ளலார் பிறப்பு  

தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் .சிதம்பரத்திற்கு வடமேற்கே இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில், கிராமக் கணக்கராக இருந்தவர் இராமய்யா என்பவர் .அவருக்கு ஐந்து மனைவியரும் மகப்பேறு இன்றி ஒருவர் பின் ஒருவராக இறக்கவே ,இராமய்யா அவர்கள் ஆறாவது மனைவியாக,சென்னையை அடுத்த சின்னக்காவணத்தில் பிறந்து வளர்ந்த சின்னம்மையை மணம் புரிந்தார் .அவர்களுக்கு சபாபதி,பரசுராமன் ,என்னும் இரு ஆண் மக்களும் உண்ணாமுலை,சுந்தராம்பாள் என்னும் இரு பெண் மக்களும் பிறந்தனர்.

ஒரு நாள் இராமய்யா இல்லாத நேரம் ,அவர் வீட்டிற்கு சிவனடியார் உருவத்தில் இறைவன் சென்றார்.அம்மா ! பசிக்கிறது உணவு தாருங்கள் !என்று சிவனடியார் கேட்க !,அக்குரல் கேட்டு வெளியே வந்த சின்னம்மை நமஸ்காரம் செய்து ,உள்ளே வாருங்கள் என்று அன்புடன் அழைத்து அமரவைத்து இலைப்போட்டு உணவு பரிமாறினார் .''பசி நீங்கிய சிவனடியார்'' என்னுடைய பசியை போக்கிய உனக்கு,உலகம் எல்லாம் உள்ள அனைத்து ஜீவன் களுடைய பசியைப் போக்கும் ஒரு ஞானக் குழந்தை பிறக்கும் என்று ஆசீர்வாதம் செய்துவிட்டு வெளியே சென்றார் .சின்னம்மை பின் தொடர்ந்து வெளியே வந்து பார்த்தார் சிவனடியாரை காணாவில்லை மாயமாக மறைந்து போய் விட்டார் .

இராமய்யா வந்தவுடன் நடந்த விபரங்களை சின்னம்மைச் சொல்ல இருவரும் இறைவனிடம் சென்று, இது என்ன சோதனை ! என்று முறையிட்டார்கள் .சிவனடியார் சொல்லிய வண்ணமே பத்தாவது மாதத்தில், 5--10--1823-,ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் நாள்,சுபானு ஆண்டு புரட்டாசித் திங்கள் இருபத்தோராம் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலை, 5--30, மணியளிவில் ஐந்தாவது மகவாக அவதரித்தார், அக் குழந்தைக்கு இராமலிங்கம் என்னும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

சிதம்பர வழிபாடு !

பிறந்த குழந்தையை முதன் முதலில், ஐந்தாவது மாதத்தில் மனைவி மக்களுடன் சிதம்பரம் சென்று வழிபட சென்றார்கள்.சிற்சபையில் நடராஜப் பெருமானை வழிபட்டபின்,சிதம்பர ரகசியத்திற்காக அனைவரும் அதன்முன் வந்து நின்றனர்.திரையை நீக்கி அப்பைய தீஷிதர், தீப ஆராதனை காட்டினார் .சின்னம்மைக் கையிலிருந்த ''ஐந்து மாதக் குழந்தை இராமலிங்கம்,கலகல வென்று சிரித்தது'' .அந்த சிரிப்பொலி நடராஜ சன்னதியே அதிர வைத்தது. அதைக் கண்ட அப்பைய தீஷிதர் அக்குழ்ந்தையை வாங்கி நடராஜர் முன் படுக்க வைத்து காலில் விழுந்து வணங்கி ,இக்குழந்தை சாதாரணக் குழந்தை அல்ல ! இது ஒரு ஞானக் குழந்தை என்று போற்றி, புகழ்ந்து,வாழ்த்தி பிரசாதம் கொடுந்து வழியனுப்பி வைத்தார். ஐந்து மாதக் குழநதையாக இருக்கும்போதே ,உலக ரகசியத்தை சிதம்பர ரகசியத்தின் வாயிலாக இறைவன் காட்டிவிட்டார் என்பதை அவர் எழுதிய திருஅருட்பாவில்,பதிவு செய்துள்ளார் .

குடும்பம் சென்னை செல்லுதல் !

இராமலிங்கத்தின் எட்டாவது திங்களில் தந்தை இராமய்யா காலமானார். சின்னம்மை தம் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாம் பிறந்த ஊரான பொன்னேரிக்குச் சென்றார் .சிலமாதங்கள் கழித்து தம் மக்களுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.மூத்த பிள்ளையாகிய சபாபதி அவர்கள்,  காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி ஆசிரியரிடம் கல்வி பயின்று புராணச் சொற்பொழிவு செய்வதில் வல்லவராகிக் குடும்பத்தை நடத்தி வந்தார் .

இராமலிங்கத்தையும் தாம் பயின்ற ஆசிரியர் இடமே, கல்வி கற்க அனுப்பி வைத்தார் .இராமலிங்கத்தின் அறிவுத் தரத்தையும் ,பக்குவ நிலையையும் கண்ணுற்ற மகாவித்துவான் இவருக்கு கல்வி போதிக்கும் தகுதி நமக்கு இல்லை என்பதை உணர்ந்தார் .இராமாலிங்கம் சென்னையில் உள்ள கந்தக் கோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்று தோத்திரம் செய்வதும் ,கவிபாடுவதும் பழக்கமாகக் கொண்டார் .அதைக் கண்ட மக்கள் அவர் பின்னாடி, கூட்டம் கூட்டமாக தொடர ஆரம்பித்தார்கள்.

கல்லாமல் உணரவும்,...சொல்லாது உணர்த்தவும் வல்லவர் என்று உணர்ந்த அம்மா ,அண்ணார்,அண்ணியார், அக்காள் அனைவரும் அவர்மேல் மிகுந்த பாசங் கொண்டு இருந்தனர்..இராமலிங்கம் எப் பள்ளியிலும் பயின்றதில்லை,...எந்த ஆசிரியர் இடமும் கற்றதில்லை....எந்த குருவிடம் உபதேசம் பெறவில்லை,...எந்த நூல்களும் படித்ததில்லை .கற்க வேண்டியதை இறைவனிடமே கற்றார் .கேட்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார். கல்வியும் கேள்வியும் இறைவனிடமே பெற்றதே அன்றி வேறு எவரிடத்தும் பெறவில்லை என்பது அவர் எழுதிய திருஅருட்பா வாயிலாக அறியமுடிகின்றது .

வீதியிலே விளையாடித் திரியும் சிறு பிள்ளைப் பருவத்தே,
அருட்பாடல்களைப் பாடும் வல்லமைப் பெற்று இருந்தார்.''உருவத்திலே சிறியேனாகி ஊகத்தில் ஒன்றுமின்றித் தெருவத்திலே சிறுகால் வீசி ஆடிடச் சென்ற அப்பருவத்திலே நல் அறிவளித்தே உனைப் பாடச் செய்தாய் '' என்றும் ''பாடும் வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய பருவத்தே அணிந்தணிந்து பாடு வகைப் புரிந்தாய்'' என்றும் ''ஐயறிவிற் சிறிதும் அறிந்து அனுபவிக்கத் தெரியாது அழுது களித்து ஆடுகின்ற அப்பருவத்து எளியேன் மெய்யறிவிற் சிறந்த எவரும் களிக்க உனைப்பாடி விரும்பி அருள்நெறி நடக்க விடுத்தனை ''என்று திரு அருட்பாடல்களில் பதிவு செய்துள்ளார் .இதுபோல் அகச்சான்றுகள் ஏராளமாக உள்ளன.

கன்னிச் சொற்பொழிவு !

சென்னையில் உள்ள சோமு செட்டியார் என்பவர், ஒவ்வொரு வருடமும் புராணச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்து வைத்து இராமலிங்கத்தின் அண்ணார் சபாபதி அவர்களை சொற்பொழிவு செய்ய அழைப்பார்,..அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லை ,தம்பி இராமலிங்கத்தை அழைத்து நீ போய் ஒன்று இரண்டு பக்தி பாடல்களை பாடிவிட்டு வா ,நாளை நான் வருவதாக சோமு செட்டியார் இடம் சொல்லிவிட்டு வா என்று அனுப்பி வைத்தார் .

இராமலிங்கம் அன்று நிகழ்த்திய கன்னிச் சொற்பொழிவு.... ''புயல் மழைப்போல் அருள் மழை அருவிப்போல் கொட்டியது ''  அவையோர் அனைவரையும் மெய்மறக்க செய்தது .அனைவரும் அதிசயித்துப் போகும் அளவிற்கு, ''உலகு எல்லாம் அறிந்து ஓதற்கு அறிபவன் '' என்னும் ஒரு வார்த்தைக்கு மட்டும்,இரவு நெடுநேரமாகியும் அவரே நிறுத்தும் அளவிற்கு சொற்பொழிவு ஆற்றினார் .அன்று முதல் அவரையே தொடர்ந்து சொற்பொழிவு ஆற்றுமாறு அனைவரும் வேண்ட, அதற்கு இசைந்து சொற்பொழிவு ஆற்றினார் .அந்த சொற்பொழுவு சென்னை நகரம் முழுவதும் பரவியது .அன்றுமுதல் சென்னையில் உள்ள படித்த பண்டிதர்கள், சான்றோர்கள்,படித்தவர் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் அணிதிரண்டு அவர் பின்னாடி செல்ல ஆரம்பித்தார்கள்.அவருக்கு அப்போது ஒன்பது வயதாகும்.

மாணாக்கர்கள் !

சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த பன்மொழிப் புலவர் வேலாயுதம் என்பவர் ,இராமலிங்கம் புலமையில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாமல் கடிய நடையில் தாமே நூறு செய்யுள்களை இயற்றிக் கொண்டுவந்து ,இவை சங்ககாலச் செய்யுள்களில் உள்ள பழைய ஏடுகளில் காணப்பட்டன என்று இராமலிங்கத்திடம் காட்டினார்.அவற்றைக் கண்ணுற்று இவை சங்கக் காலப் பாடல்கள் அல்ல ,சங்கப் பாடல்களில் இவ்வளவு குற்றம் இருக்காது .இவைப் பொருள் இலக்கணம் தெரியாத கற்றுக் குட்டி பாடியவை எனக் கூறினார் .அதனைக் கேட்டதும் வேலாயுதனார் தம் செய்கைக்கு நாணி தலைகுனிந்து உண்மையைக் கூறி சரணடைந்தார் .அன்றிலிருந்து தன்னுடைய் பணியை விட்டுவிட்டு ,இறுதி வரை இராமலிங்கத்தின் தலைமைத் தொண்டராக, சீடராக இருந்தார் அவருடன் ஆயிரககணக்கான தொண்டர்கள் பின் தொடர்ந்தனர்.

சங்கராச்சாரியார் சந்தேகம் தெளிதல் !

சமஸ்கிருத மொழியில் உள்ள வேத தோத்திரப் பாடல்களில் சிலவற்றிற்கு சங்கராச்சாரியார் அவர்களுக்கு பொருள் விளக்கம் தெரியவில்லை.அவற்றை யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது என்று பலமுறை சிந்தித்துக் கொண்டே இருந்தார்.அவருடைய சீடரில் ஒருவர்...சுவாமி ! சென்னையில் உள்ள கந்த கோட்டத்தில் இராமலிங்கசுவாமி என்பவர் ஒருவர் வந்து இறைவனைப் பற்றி பாடிக் கொண்டே இருப்பார் .அவர்களைக் கேட்டால் சந்தேகம் தெளிவடையும் என்று கூறினார் .அதற்கு அவர் ! எனக்கே தெரியாத விளக்கத்தை, ..பள்ளிகூடம் செல்லாது படிக்கத்தெரியாத அவருக்கு என்னத் தெரியப்போகுது என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு ,...இருந்தாலும் உன்னுடைய விருப்பம் போல் ஏற்பாடு செய் ! பார்க்கலாம் என்று சொல்ல ! இருவரையும் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கினார்கள் .

இருவரும் பலமணிநேரம் உரையாடிவிட்டு, இராமலிங்கம் அவர்கள் சமஸ்கிருத மொழியில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை தெளிவாக விளக்கினார் அதைக் கேட்ட சங்கராச்சாரியார் மெய் சிலிர்த்து ஆச்சரியப்பட்டுப்  போனார்.சம்ஸ்கிருத மொழியில் இவ்வளவு பெரிய உண்மைகள் இருக்கிறதா என்பதை அறிந்த அவர் ''உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும்  சமஸ்கிருத மொழி தாய் மொழிதானே ?'' என்று இராமலிங்க பெருமானிடம் கேட்டார்.அதற்கு அவர் ஆம் ! ..சமஸ்கிருதம் தாய் மொழிதான் ! அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் .ஆனால்..தாய் என்று ஒன்று இருந்தால் ,தந்தை என்று ஒன்று இருக்கவேண்டும் அல்லவா ?

சமஸ்கிருதம் தாய் மொழி என்றால் ! ''தமிழ் தந்தை மொழி "' என்று தமிழுக்கு முதலிடம் கொடுத்தார்.அதைக்கேட்ட சங்கராச்சாரியார் வாய் அடைத்து மவுனமானார்.இந்த சந்திப்பின் உண்மைகள் சென்னை நகரம் முழுவதும் பரவியது..இராமலிங்கத்தின் மீது அளவில்லா பக்தியும் பாசமும் கொண்டு மக்கள் அதிகமாக அவர் பின் தொடர்ந்தனர் .

சென்னையை விட்டு செல்லுதல் !        

இராமலிங்கத்தின் எண்ணம் சிந்தனை,சொல், செயல் அனைத்தும் இறைவன் பால் அதிகமாக சென்றதாலும் மக்கள் அதிகமாக அவருடன் இருப்பதை ஏற்றுக் கொள்ளாமலும்,சென்னையில் இருந்தால் தன்னுடைய இறை அருளுக்கு பாதிப்பு உண்டாகும் என்பதாலும், தன்னுடைய முப்பத்தைந்தாம் வயதில் சென்னையை விட்டு தல யாத்திரையாக ஒவ்வொரு ஆலயங்களுக்கும் சென்று கவிபாடும் செயலில் ஈடுபட்டு சிதம்பரம் தில்லையம்பதியில் சில நாட்கள் தங்கினார் .

அங்கு இருப்பதற்கும் மனம் செல்லாமல் வடலூருக்கு அடுத்த கருங்குழி என்னும் கிராமத்தில், மணியக்காரர் வேங்கட ரெட்டியாரின் அன்பிற்கு பாத்திரமாகி அவர் இல்லத்திலே தங்கி அருட்பாடல்களை எழுதிக் கொண்டு இருந்தார்.

தண்ணீரால் விளக்கு எரித்தது !

கருங்குழி வீட்டின் அறையில் ஒருநாள் இரவு ,இராமலிங்கப் பெருமான் அவர்கள் ''திருஅருட்பா ''எழுதிக் கொண்டு இருக்கும் போது விளக்கு மங்கவே எண்ணெய்ச் சொம்பு என எண்ணித் தண்ணீர்ச் சொம்புவை எடுத்து விளக்கில் வார்த்தார் விளக்கும் நன்றாக இரவு முழுவதும் எரிந்தது.தண்ணிரில் விளக்கு எரிந்த அவ் அற்புதத்தை சென்னை நகரில் உள்ள தன்னுடைய அன்பர்களுக்கு பாடல் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார் .இவைப் போல் மேலும் பலப் பல அறிய அற்புதங்களை இறைவனுடைய அருளால் கிடைத்தது என்பது அவருக்கு தெரியவருகிறது .எதையும் அவர் வெளியே சொல்லாமல்.காட்டாமல் அருட்பா பாடல்கள் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார்.

அவர் எழுதிய அருட் பாடல்களை முழுவதும் முதல் ஐந்து திருமுறைகளாக தொகுத்து ''திருஅருட்பா''என்னும் தலைப்பில் பேராசிரியர் வேலாயுதம்,மற்றும் அவர்களுடைய அணுக்கத் தொண்டர்கள் சேர்ந்து 1867.ஆம் ஆண்டில் வெளியிட்டார்கள் .அவை மக்கள் மத்தியிலே பெரும் வரவேற்பைப் பெற்றது.இராமலிங்கம் என்னும் பெயரை திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் பெயராக வேலாயுதம் அவர்கள் முன்மொழிய அன்பர்கள் எல்லாம் அவ்வாறே ஏற்றுக் கொண்டார்கள் .ஆனால் வள்ளலார் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை, அவை ஆராவாரத்திற்கு அடுத்த பெயர் என்பதால் ஏற்றுக் கொள்ளவில்லை.அவர் சித்திபெறும் வரை ,சிதம்பரம் இராமலிங்கம் என்றே தமது பெயரை எழுதி கொண்டு வந்தார் .மக்கள் உள்ளங்களில் ''திரு அருட்பிரகாச வள்ளலார்'' எனற பெயர் நிலைத்து விட்டது.

நீதி மன்றம் செல்லுதல்.!

வள்ளலார் எழுதியது திருஅருட்பா அல்ல ,அவை மருட்பா என்று ,சமயவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ,யாழ்பாணத்தில் உள்ள ஆறுமுக நாவலரை அழைத்து வந்து மஞ்சகுப்பம் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.வள்ளலாருக்கு சம்மன் வந்தது ,சம்மனை வாங்க மறுத்து வேலாயுதம் அன்பிற்கு கட்டுப்பட்டு கோர்ட்டு சம்மனை கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொண்டார்.நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது இராமலிங்கம் இராமலிங்கம் என்று குரல வந்தது ..திடீர் என்று இராமலிங்கம்
( வந்து நின்றார் )பிரசன்னமானார் .நீதிபதி முதற்கொண்டு அனைவரும் எழுந்து கை கூப்பி வணக்கம் செய்தனர்...நீதிபதியும் தன்னையறியாமல் எழுந்ததை உணர்ந்து சமாளித்துக் கொண்டு,ஆறுமுக நாவலரைப் பார்த்து .நீங்கள் தானே வழக்குத் தொடர்ந்தவர் என்று கேட்க ஆமாம் என்று அவர் பதில் சொல்ல ,இராமலிங்கம் வந்தவுடன் அவரைப் பார்த்து எழுந்து வணக்கம் சொன்னீரே, ஏன் ? என்று கேட்க ,அதற்கு அவர் பெரியவர்,உயர்ந்தவர்,அனைவராலும் மதிக்கத்தக்கவர் ஆதலால் வணக்கம் சொன்னேன் என்று சொல்ல ..நீங்களே பெரியவர், உயர்ந்தவர் என்று ஒப்புக் கொண்டதால் ,அவர் எழுதியது ''திருஅருட்பா'' தான்,மருட்பா அல்ல என்று தீர்ப்பு வழங்கினார்.இந்த செய்தி தமிழகமெங்கும் தீப்போல் பரவியது .அவர் புகழ் மேலும் அதிகமாக மக்கள் மத்தியில் பரவலாயிற்று .

ஆனால் வள்ளலார் நீதி மன்றம் செல்லவில்லை, வடலூரில் உள்ள தருமச்சாலையில் தன்னுடைய அன்பர்களிடம் உரையாடிக்கொண்டு இருந்தார் என்ற செய்தி நீதிமனறத்தில் இருந்த வந்த அன்பர்கள் அறிய, வள்ளலார் இதை வெளியில் சொல்லவேண்டாம் என்று அடக்கிவிட்டார்.நீதி மன்றத்திற்கு சென்றது வள்ளலார் உருவில் இறைவனே சென்றார் என்பது உண்மையாகும் .

தருமச்சாலை அமைத்தல் !

பல தெய்வங்களை வணங்கி அத்தெய்வங்களைப் பற்றி ஆயிரக்கணக்கான பக்தி பாடல்கள் இயற்றி வந்த வள்ளல்பெருமான் இறுதியிலே, அவைகள் எல்லாம் தத்துவங்களே ஒழிய உண்மையான கடவுளகள் அல்ல என்பதை உணர்ந்த வள்ளலார் ....உண்மையானக் கடவுள் ஒருவரே !அவரே அருட்பெரும் ஜோதியாகஉள்ளார் என்பதை மக்களுக்கு போதித்து வந்தார்,அந்த அருட்பெருஞ் ஜோதிதான எல்லா ஆன்மாக்கள் உள்ளும் உயிர் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளது .அதுவே அருட்பெருஞ் ஜோதியாகும் .அதனால் எந்த உயிர்களையும் அழிக்கக் கூடாது !.உயிர்க்கொலை செய்யக் கூடாது ! புலால் உண்ணக்கூடாது.என்று தன்னுடைய அன்பர்களுக்கு கட்டளை இட்டார்.''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்''என்ற அவர் வார்த்தை மக்கள் மத்தியிலே நிலைப் பெற்றுவிட்டது.

இறைவனுடைய அருளைப்பெற வேண்டுமானால் ,உயிர்கள் மேல் அன்பு,தயவு,கருணைக் காட்டவேண்டும் என்றார்.,ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மக்கள் பசி பட்டினி ,வறுமை போன்ற கொடுமைகளில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தார்கள். இந்த உலகத்தில் பசி ,பட்டினி,வறுமை என்னும் கொடுமையால் மக்கள் அழிந்து விடக் கூடாது என்பதை உணர்ந்து ,வடலூர் மக்களிடம் எண்பது காணி இடம் இலவசமாகப் பெற்று 23--5--1867 ,ஆம் ஆண்டு தருமச்சாலையைத் தொடங்கிவைத்தார் அன்றிலிருந்து இன்றுவரை பசி என்று வந்தவர்களுக்கு மூன்று வேளையும் உணவு கொடுக்கப்பட்டு வருகின்றன.

''அறிவு விளங்கிய ஜீவர்களுக்கெல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு'' என்றார்.''...''உயிர் இரக்கமே இறை வழிபாடு'' என்றார்....''கருணை ஒன்றே இறை அருளைப் பெறும் துவாரமாகும்'' என்றார் .

வள்ளலாரின் கொள்கைகளில் முதன்மையானது முக்கியமானது ஜீவகாருண்யம் என்பதாகும்.ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவு கோல் என்றார்.இறைவனுடைய கோட்டையின் உள்ளே இருக்கும் அருளைப் பெற வேண்டுமானால் ஜீவ காருண்யத்தால் மட்டுமே பெறமுடியும் .வேறு பக்தி வழிபாடு, தியானம் ,தவம்,யோகம்,போன்ற எந்த செயல்களாலும் இறைவனுடைய அருளைப் பெறமுடியாது என்பதை மக்களுக்குப் போதிக்க தருமச்சாலையைத் தோற்றுவித்தார் .ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய தருமச்சாலையில் அவரவர்களால் முடிந்த பொருள் என்னும் கருணையை செய்து அதனால் வரும் ஆன்ம லாபத்தை பாகம் செய்து கொள்ளுங்கள் என்பதை எழுதிவைத்துள்ளார்.அவற்றை ஏற்றுக் கொண்ட மக்கள் தங்குதடை இல்லாமல் உணவுப்பொருள்கள் வழங்கிக் கொண்டு வருகிறார்கள் .அவர் ஏற்றிவைத்த அடுப்பு அணையாமல் இன்றுவரை எரிந்து கொண்டு ஏழைகளின் பசிக் கொடுமையைப் போக்கிக் கொண்டு வருகிறது.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் !

வள்ளல்பெருமான் அவர்கள் தன்னுடைய கொள்கைகளை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக,சாதி ,சமயம்,மதம்,அற்ற ஒரு புதிய பொது மார்க்கத்தை தோற்றுவித்தார் அதற்கு பெயர் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்று பெயர் வைத்துள்ளார் .அச் சங்கத்தின் கொள்கைகள் ;--.

கடவுள் ஒருவரே ! அவரை உண்மை அன்பால் ஒளி (ஜோதி )வடிவில் வழிபட வேண்டும் என்றும் ,சிறு தெய்வ வழிபாடுகள் கூடாது ! அத்தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக்கூடாது ! புலால் உண்ணலாகாது !சாதி,சமயம்,மதம்,முதலிய வேறுபாடுகள் கூடாது ! எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கைக்கொள்ளவேண்டும் ! ஏழைகளின் பசி தவிர்ததலாகிய ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் ! புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டாது ! சிறு தெய்வ வழிபாடுகள் வேண்டாம்.! இறந்தவரைப் புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது !கருமாதி திதி முதலிய சடங்குகள் வேண்டாம் ! மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக்கூடாது ! கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் கூடாது ! எதிலும் பொது நோக்கம் வேண்டும் ! நம்வீட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அன்று ஏழைகளை அழைத்து அன்னவிரயம் செய்யவேண்டும் .இதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கக் கொள்கைகளாகும் அக் கொள்கைகளைப் பின்பற்றவும் பரப்பவும் 1865 ,ஆம் ஆண்டில் வடலூரில் சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.சன்மார்க்க அன்பர்கள் வள்ளலார் சொல்லிய வண்ணம் வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறார்கள்.

மனிதன் ஒழுக்கமுடன் வாழ வேண்டுமானால் .இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம்,என்னும் நான்கு ஒழுக்கங்களை கடைபிடித்தால் மனிதன் மனிதனாக வாழ்ந்து இறை நிலையை அடையமுடியும் என்பதால் ஜீவ காருண்யம் என்னும் உரைநடை நூலை முதன்முதலில் எழுதி வைத்துள்ளார் .அவை மக்கள் மத்தியிலே இன்றுவரை பாராட்டப்பட்டு வருகிறது

''மனிதனின் மரணம் இயற்கை அல்ல செயற்கையால்தான் மரணம் வருகின்றது .மரணத்தை வெல்லும் வழி உண்டு என்பதை கண்டுபிடித்து தானும் வாழ்ந்து காட்டி, மற்றவர்களும் வாழமுடியும் என்பதை உலகுக்கு பறைசாற்றி உள்ளார் ''.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !

உண்மையானக் கடவுளை ஒளிவடிவமாக கண்ட வள்ளலார் ,அதற்கு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ! என்னும் பெயர் வைக்கிறார் ,அப்பெயரை இறைவனே எடுத்துக் கொடுத்தார் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தவே ,சாதி சமயம்,மதம்,போன்ற வேறுபாடுகள் இல்லாத உலகப்  பொது வழிபாட்டு முறையை மக்களுக்கு காட்டவே ;--வடலூரில் எட்டு திக்கு மக்களும் வந்து வழிபட வேண்டி ,எண்கோண வடிவில் 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை'' 25 --1--1872 ,ஆம் ஆண்டு அமைத்து இன்று வரை ஜோதி தரிசனம் காண்பித்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.உலகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து வழிப்பட்டு தம் குறைகளை நீக்கி அருள் பெற்று ,மனம் நிறைவு பெற்று சென்று கொண்டுள்ளார்கள் .

மரணம் இல்லாப் பெருவாழ்வு !

சன்மார்க்க சங்கத்தின் முக்கிய கொள்கை --உயர்ந்த அறிவுள்ள மனிதன் இறை அருளைப்பெற்று ஊன உடம்பு, ஒளிதேகமாக மாற்றிக் கொண்டு சாகாமல் இருக்கமுடியும்,சாகாமல் வாழமுடியும்  என்னும் பேருண்மையை கண்டு பிடித்து அதன்படி வாழ்ந்து காட்டினார் ....''சன்மார்க்க மரபு,அதன் முடிவு சாகாதிருப்பதே'', ,''சாகாதவனே சன்மார்க்கி'' என்பது வள்ளல் பெருமானின் உபதேசமாகும்.---''என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்''என்பது அவரது முடிந்த முடிவான கொள்கையாகும்./''முழுமையான பரிபூரண இறை அருளைப் பெற்றால் மரணம் இல்லாமல் மனிதன் வாழமுடியும்'' எனற உயர்ந்த கொள்கையை விஞ்ஞானம் ,அறிவியல் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு விளக்கி வைத்துள்ளார் .

அழியும் பொருளான மல உடம்பை,அழியாத அருள் உடம்பாக மாற்ற முடியும் என்ற உண்மையைக் கண்டு பிடித்து வாழ்ந்து காட்டியவர் . மனித உடம்பின் அணுத் துகள்களை அருள் துகள்களாக மாற்றும் வேதியல் மாற்றத்தைக் கண்டு பிடித்தவர் வள்ளல்பெருமான் .

அழியும் பொருளை விட்டு அழியாத அருளை பெற வேண்டும் என்பதே வள்ளலார் காட்டிய வழிபாட்டு முறைகளாகும். 

மனித பிறப்பு என்பது உயர்ந்த அறிவுள்ள பிறப்பாகும்.மனிதன் தன்னுடைய உடம்பை இறை அருளால் ,சுத்த தேகம்,பிரணவதேகம் ,ஞான தேகம் என்னும் முத்தேக சித்தியைப் பெற்று கொண்டால் இறைவனுடைய தேகமான ஒளிதேகமாக மாற்றிக் கொண்டு இறப்பு ,பிறப்பு இல்லாமல் கடவுளுடன் சேர்ந்து ஐந்தொழில் வல்லபம் பெற்று ''நித்திய சுத்த சத்திய வாழ்வு ''என்னும் ''கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு'' வாழ்வதே மனித பிறப்பின் முக்கிய கொள்கைகளாகும் என்பதை வலியுறித்திக் கொண்டே இருந்தார் .

சித்திப் பெற்ற இடம் !

வள்ளல்பெருமான் சொல்லியதோடு இல்லாமல்,சொல்லிய வண்ணம் வாழ்ந்து காட்டினார் .வடலூருக்கு தெற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்திற்கு  சென்று அங்கேயே  உறையத் தொடங்கினார் அவர் தங்கி இருந்த இடத்திற்கு ''சித்திவளாகத் திருமாளிகை'' என்று பெயர் .அவர் அங்கே ஆயிரகணக்கான மக்கள் மத்தியில் நான் இப்போது இந்த அறையில் சென்று இறைவனோடு இரண்டற கலக்கப்போகிறேன் ,பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள் ''இந்தக்கதவை சாத்திக் கொள்ளுங்கள் ,அப்படி யாராவது  பார்க்க வேண்டும் என்று பார்க்க நேர்ந்தால் ஆண்டவர் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் ,வெறு வீடாகத்தான் இருக்கும் ''என்றும் ,நீங்கள் அனைவரும் நான் சொல்லிய வண்ணம் உங்கள் வாழ்க்கையில் ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடைபிடியுங்கள் நீங்களும் என்னைப் போன்ற பெரிய பேரின்ப ஆன்ம லாபத்தை அடைவீர்கள் இது சத்தியம் ,இது சத்தியம் .என்று சொல்லி உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்,சித்தி பெற்ற ஆண்டு
30--1--1874,--ஸ்ரீமுக வருடம் தைமாதம் பத்தொன்பதாம் நாள் வெள்ளிக்கிழமை ,அப்போது அவருக்கு வயது ஐம்பத்து ஒன்றாகும் .

வள்ளலாரின் செய்தியை அறிந்த கடலூர் மாவட்ட ஆங்கிலேய ஆட்சியாளர் மற்றும் தாசில்தார் போன்ற அதிகாரிகள் வந்து மக்கள் முன்னிலையில் கதவை திறந்து பார்த்தார்கள் வெறுவீடாகத்தான் இருந்தது .வள்ளலார் இறைவனோடு கலந்து பேரின்ப சித்தி என்னும் பெருவாழ்வு பெற்றுவிட்டார் ,என்பதை அரசு பதிவேட்டில் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.இவை யாவும் உண்மை செய்திகளாகும்..

வள்ளலார் அவர்கள்.சித்திப் பெற்றபின் அவர் எழுதிய ஆறாம் திருமுறை என்னும் திருஅருட்பா வெளியிடப்பட்டது..அதில் அனைத்து உண்மைகளும் தெள்ளத்தெளிவாக உள்ளன.''உலக ரகசியங்களையும்,.உயிர்களின் பிறப்பு இறப்பு ரகசியங்களையும்,கடவுள் யார் என்ற உண்மைகளையும்.,உலகம் முழுவதும் சாதி,சமயம்,மதம்,அற்ற சகோதர உரிமையுடன் வாழ வேண்டும்.உலகம் முழுவதும் அமைதி நிலவவேண்டும்''..''ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை ''அனைவரும் கடைபிடிக்க வேண்டும் .''ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு....உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு'' என்பதை மிகவும் வலியுறுத்தி எழுதி வைத்துள்ளார்.

மேலும் ;--உரைநடை நூல்கள் அதிகம் இல்லாத காலத்தில் மனுமுறை கண்ட வாசகம்,...ஜீவகாருண்ய ஒழுக்கம் ,...ஒழிவியல் ஒடுக்கம்,...தொண்டமண்டல சதகத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் உரைநடை,...சின்மயதீபிகை...போன்ற உரைநடை நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.

தமிழ் நாட்டின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வள்ளல்பெருமான் ஒருவரே .மேலும்,தமிழ் நாட்டில் முதன்முதலாக திருக்குறள் வகுப்பு நடத்தியவரும் அவரே ! நூல் ஆசிரியராக ,உரை ஆசிரியராக ,பதிப்பாசிரியராக ,போதக ஆசிரியராக,,ஞான ஆசிரியராக ,வியாக்கியான கர்த்தராக ,சித்த மருத்தவராக ,அதற்கும் மேலே கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர் .எனப் பன்முகங் கொண்ட அருளாளர் வள்ளல்பெருமான் அவர்கள்.சுமார் ஆறாயிரம் அருட்பாடல்களை எழுதி வைத்துள்ளார்.

நமது இந்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வள்ளலாரின் வாழ்க்கை வரலாறுகளையும்.கொள்கைகளையும் ,பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் பாடப்புத்தமாக கொண்டு வந்தால் எதிர்கால மாணவர்கள்.ஒழுக்க நெறியோடு வாழ்வதற்கு வழிகாட்டுதலாக இருக்கும் என்பது சன்மார்க்க சான்றோர்களின் விருப்பமும் வேண்டுதலுமாகும்.

நமது தமிழக அரசு வள்ளலார் வருவிக்க உற்ற நாளை ஆன்மநேய ஒருமைப்பாட்டுத் தினமாக கொண்டாடி மகிழ்கின்றது ,ஒவ்வொரு வருடமும் அக்டோபர் ஐந்தாம் நாளன்று மதுக்கடைகளும், மாமிசக்கடைகளும் சட்டப்படி அடைக்கப்பெற்று வள்ளலார் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியதாகும் .இதுவே வள்ளலாரின் வாழ்க்கையின் சிறிய சுருக்கமாகும்.மேலும் அருட்பாவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் --தேவா நின்
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யாருளர் நீ சற்றே அறை ! ;---வள்ளலார்

அருட்பெருஞ் ஜோதி !

என்றும் உங்கள் ஆன்மநேயன்;--
ஈரோடு --செ, கதிர்வேலு.
''திருஅருட்பா ஆராய்ச்சி மையம்''
108,C, நந்தா இல்லம்
வையாபுரி நகர்
வள்ளலார் வீதி.
46, புதூர் அஞ்சல்
ஈரோடு ..638002 ,
CELL;---9865939896.  

5--10--2014 ,வள்ளலார் வருவிக்க உற்ற நாள் !




5--10--2014 ,வள்ளலார் வருவிக்க உற்ற நாள் !


உலக வரலாற்றில் அருளாளர்கள் அதிகம் தோன்றிய ஆன்மீக நாடு நமது இந்திய நாடாகும்.இந்திய தேசத்தின் ஆன்மீக வளர்ச்சிக்குக் கலங்கரை விளக்கமாக திகழ்வது தமிழ்நாடாகும்.

சித்தர்கள் யோகிகள்,ஞானிகள் போன்ற முதிர்ந்த அறிவுள்ள அருளாளர்கள் நமது தமிழ் நாட்டில் தான் அதிகம் தோன்றியுள்ளார்கள்.

அதிலே முக்கியமானவர்கள் முதன்மையானவர்கள் திருவள்ளுவர் ,திருவருட் பிரகாச வள்ளலார் ,போன்ற பொய்யா மொழி மெய் அருளாளர்கள் தமிழ் நாட்டில் தோன்றியது, இறைவன் நமக்கு கொடுத்த அருட்கொடையாகும்.

வள்ளலாரின் வருகை !

திருத்தில்லை சிதம்பரத்திற்கு மேற்கே 16, கி,மீ தொலைவில் உள்ள மருதூர் என்னும் சிறிய கிராமத்தில் கிராமக் கணக்கராக இருந்த இராமய்யா அவரது மனைவி சின்னம்மைக்கும் ஐந்தாவது குழந்தையாக, 5--10--1823,ஆம் ஆண்டு அவதரித்தவர் இராமலிங்கம் என்னும் பெயர் கொண்ட வள்ளலார் அவர்கள் .குழந்தை பிறந்த ஐந்தாவது மாதத்தில் இறை வழி பாட்டிற்காக இராமய்யா தன் மனைவி மக்களுடன் சிதம்பரத்திற்கு எடுத்து செனறார்கள்.

சிதம்பரத்தில் சிற்சபையில் நடராசப் பெருமானை வழிபட்டபின் சிதம்பர இரகசிய தரிசனத்திற்காக அனைவரும் அதன்முன் வந்து நின்றனர்.இராமலிங்கம் தாயின் கையில் இருந்தார் அப்பைய தீஷ்தர் என்பவர் திரையை தூக்கச் சிதம்பர இரகசியம் காட்டப்பட்டது .கைக்குழ்ந்தையாகிய இராமலிங்கம் கலகல என சிரித்தது.அந்த சிரிப்பு ஒலியை கேட்ட  தீஷ்தர் இது சாதாரண குழ்நதை அல்ல இறைவனால் வருவிக்கப்பட்ட ஞானக் குழந்தை என்று போற்றி குழநதையின் முகத்தைப் பார்த்து வணங்கிப் புகழ்ந்தார்

அனைவருக்கும் ரகசியமாக இருந்த சிதம்பர ரகசியம் ஐந்து மாதக் குழந்தையாக இருந்த இராமலிங்கத்திற்கு வெட்ட வெளியாகப் புலப்பட்டது.அந்த நிகழ்ச்சியை தன்னுடைய நாற்பத்தி ஒன்பதாவது வயதில் திருவருட்பா அருள் விளக்க மாலையில் எழுதி வைத்துள்ளார் .

எட்டாவது மாதத்தில் தந்தை இராமய்யா காலமானார் .சின்னம்மையார் தன்னுடைய பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாம் பிறந்த பொன்னேரிக்கு சென்றார் .சிலகாலம் கழித்து தம் மக்களுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.மூத்த பிள்ளையாகிய சபாபதி என்பவர் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி ஆசிரியர் இடம்  கல்வி பயின்று புராணச் சொற்பொழிவில் வல்லவராகி அதில் வரும் வருவாயை வைத்து குடுமபத்தை நடத்தி வந்தார்கள்.

அண்ணன் சபாபதி அவர்கள் தான் பயின்ற மகாவித்துவான் சாபாபதி ஆசிரியர் இடத்தில் இராமலிங்கத்தை கல்வி கற்க அனுப்பினார்.இராமலிங்கத்தின் அறிவுத் தரத்தையும் பக்குவ நிலையையும் உணர்ந்து இவருக்கு கல்வி போதிக்கும் தகுதி தமக்கு இல்லை என்பதை உணர்ந்தார் .அண்ணன் என்ன சொல்லியும் கல்வி பயிலுவதற்கு இராமலிங்கத்தின் மனம் செல்லவில்லை .பின்னர் தம்பியின் அறிவுத்  திறத்தையும் அருள் ஆற்றலையும் அறிந்து கொண்டார் .

இமாலிங்கம் இளம் வயதிலே சென்னையில் உள்ள கந்தக் கோட்டம் சென்று கவிபாடும் திறமும் இறைவனைப் பற்றிய பாடல்கள் எழுதும் திறமையும் அறிந்து கொண்ட சென்னை வாழ் மக்கள் அனைவரும் அதிசயத்து அவர்மேல் தீராத அன்பு கொண்டார்கள்.இராமலிங்கம் எந்த கல்விக் கூடங்களுக்கும் செல்லவில்லை எந்த ஆசிரியர் இடத்திலும் பயிலவில்லை,எந்த குருவிடத்தும் உபதேசம் பெறவில்லை ,கற்க வேண்டுவனவற்றை அனைத்தும் இறைவனிடமே கற்றார் .

கேட்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார் ,கல்வியும் கேள்வியும் இறைவன் இடமே பெற்றதே யொழியே வேறு எவரிடத்தும் பெறவில்லை என்பது அவர் எழுதிய அருட்பாவின் வாயிலாக உணர்த்தப்படுகிறது.வீதியிலே விளையாடித் திரியும் சிறு பிள்ளைப் பருவத்தில் இறைவனைப் பற்றிய அருட்பாடல்கள் பாடும் வல்லமை பெற்று இருந்தார் .

தமிழ் மொழியின் பெருமை !

இடம்பத்தையும் ,ஆராவாரத்தையும் ,பிரயாசத்தையும் பெருமறைப்பையும் ,போதுபோக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய உலக
பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது ,பயிலுதற்கும் ,அறிதற்கும் மிகவும் லேசுடையதாய் ,பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடைதாய்,சாகாக் கல்வியை இலேசிலே அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழியாகிய தமிழ் மொழியில் மனம் பற்றச் செய்து அத் தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களை பாடுவித்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உம்மை எப்படிப் போற்றி புகழ்வேன்.அதற்கு வார்த்தைகளே இல்லை .என்று இறைவனை போற்றி புகழ்கிறார் .

மேலும் தமிழ்மொழி இறைவனால் தோற்றுவிக்கப் பட்ட மொழியாகும் .மற்ற மொழிகள் எல்லாம் மனிதர்களால் தோற்றுவிக்கப் பட்டதாகும் .தமிழ்மொழியை எக்காலத்தும் எவராலும் அழிக்க முடியாது.உலகம் உள்ளவரை,உயிர்கள் உள்ளவரை நிலைத்து நிற்கும் மொழி தமிழ் மொழி என்று போற்றி புகழ்கின்றார்.    

கன்னி சொற்பொழிவு !

சென்னையில் உள்ள சோமு செட்டியார் என்பவர், ஒவ்வொரு வருடமும் புராணச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்து வைத்து இராமலிங்கத்தின் அண்ணார் சபாபதி அவர்களை சொற்பொழிவு செய்ய அழைப்பார்,அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லை ,தம்பி இராமலிங்கத்தை அழைத்து நீ போய் ஒன்று இரண்டு பக்தி பாடல்களை பாடிவிட்டு வா ,நாளை நான் வருவதாக சோமு செட்டியார் இடம் சொல்லிவிட்டு வா என்று அனுப்பி வைத்தார் .

இராமலிங்கம் அன்று நிகழ்த்திய கன்னிச் சொற்பொழிவு அவையோர் அனைவரையும் மெய்மறக்க செய்தது .அனைவரும் அதிசயித்துப் போகும் அளவிற்கு, திருஞான சம்பந்தர் புராணத்தை இரவு நெடுநேரமாகியும் அவரே நிறுத்தும் அளவிற்கு சொற்பொழிவு ஆற்றினார் .அன்று முதல் அவரையே தொடர்ந்து சொற்பொழிவு ஆற்றுமாறு அனைவரும் வேண்ட அதற்கு இசைந்து சொற்பொழிவு ஆற்றினார் .அந்த சொற்பொழுவு சென்னை நகரம் முழுவதும் பரவியது .அன்றுமுதல் சென்னையில் உள்ள படித்த பண்டிதர்கள்,அறிஞர்கள், சான்றோர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் அணிதிரண்டு அவர் பின்னாடி செல்ல ஆரம்பித்தார்கள்.அவருக்கு அப்போது ஒன்பது வயதாகும்.

அவருடைய சொற்பொழிவு அழியும் பொருளை,அழியாத அருளாக மாற்றும் வல்லமை படைத்ததாகும் .

மாணாக்கர்கள் !

சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த பன்மொழிப் புலவர் வேலாயுதம் என்பவர் ,இராமலிங்கம் புலமையில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாமல் கடிய நடையில் தாமே நூறு செய்யுள்களை இயற்றிக் கொண்டுவந்து ,இவை சங்ககாலச் செய்யுள்களில் உள்ள பழைய ஏடுகளில் காணப்பட்டன என்று இராமலிங்கத்திடம் காட்டினார்.அவற்றைக் கண்ணுற்று இவை சங்கக்காலப் பாடல்கள் அல்ல ,சங்கப்பாடல்களில் இவ்வளவு குற்றம் இருக்காது .இவைப் பொருள் இலக்கணம் தெரியாத கற்றுக் குட்டி பாடியவை எனக் கூறினார் .அதனைக் கேட்டதும் வேலாயுதனார் தம் செய்கைக்கு நாணி தலைகுனிந்து உண்மையைக் கூறி சரணடைந்தார் .அன்றிலிருந்து தன்னுடைய் பணியை விட்டுவிட்டு ,இறுதி வரை இராமலிங்கத்தின் தலைமைத் தொண்டராக சீடராக இருந்தார் அவருடன் ஆயிரககணக்கான தொண்டர்கள் பின் தொடர்ந்தனர்.

இராமலிங்கத்தின் எண்ணம் சிந்தனை,சொல், செயல் அனைத்தும் இறைவன் பால் அதிகமாக சென்றதாலும் மக்கள் அதிகமாக அவருடன் இருப்பதை ஏற்றுக் கொள்ளாமலும்,சென்னையில் இருந்தால் தன்னுடைய இறை அருளுக்கு பாதிப்பு உண்டாகும் என்பதாலும்  தன்னுடைய முப்பத்தைந்தாம் வயதில் சென்னையை விட்டு தலயாத்திரையாக ஒவ்வொரு ஆலயங்களுக்கும் சென்று கவிபாடும் செயலில் ஈடுபட்டு சிதம்பரம் தில்லையம்பதியில் சில நாட்கள் தங்கினார் .

அங்கு இருப்பதற்கும்  மனம் செல்லாமல் வடலூருக்கு அடுத்த கருங்குழி என்னும் கிராமத்தில், மணியக்காரர் வேங்கட ரெட்டியாரின் அன்பிற்கு பாத்திரமாகி அவர் இல்லத்திலே தங்கி அருட்பாடல்களை எழுதிக் கொண்டு இருந்தார்.

தண்ணீரால் விளக்கு எரித்தது !

கருங்குழி வீட்டின் அறையில் ஒருநாள் இரவு இராமலிங்கப் பெருமான் அவர்கள் எழுதிக் கொண்டு இருக்கும் போது விளக்கு மங்கவே எண்ணெய்ச் சொம்பு என எண்ணித் தண்ணீர்ச் சொம்புவை எடுத்து விளக்கில் வார்த்தார் விளக்கும் நன்றாக இரவு முழுவதும் எரிந்தது.தண்ணிரில் விளக்கு எரிந்த அவ் அற்புதத்தை சென்னை நகரில் உள்ள தன்னுடைய அன்பர்களுக்கு பாடல் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார் .இவைப் போல் மேலும் பலப்  பல அறிய அற்புதங்களை இறைவனுடைய அருளால் கிடைத்தது என்பது அவருக்கு தெரியவருகிறது .எதையும் அவர் வெளியே சொல்லாமல் அருட்பா பாடல்கள் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார்.

அவர் எழுதிய அருட் பாடல்களை முழுவதும் முதல் ஐந்து திருமுறைகளாக தொகுத்து ''திருஅருட்பா''என்னும் தலைப்பில் பேராசிரியர் வேலாயுதம்,மற்றும் அவர்களுடைய அணுக்கத் தொண்டர்கள் சேர்ந்து 1867.ஆம் ஆண்டில் வெளியிட்டார்கள் .அவை மக்கள் மத்தியிலே பெரும் வரவேற்பைப் பெற்றது.இராமலிங்கம் என்னும் பெயரை திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் பெயராக வேலாயுதம் அவர்கள் முன்மொழிய அன்பர்கள் எல்லாம் அவ்வாறே ஏற்றுக் கொண்டார்கள் .ஆனால் வள்ளலார் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை .அவை ஆராவாரத்திற்கு அடுத்த பெயர் என்பதால் ஏற்றுக் கொள்ளவில்லை.அவர் சித்திபெறும் வரை ,சிதம்பரம் இராமலிங்கம் என்றே தமது பெயரை எழுதி கொண்டு வந்தார் .மக்கள் உள்ளங்களில் வள்ளலார் எனற பெயர் நிலைத்து விட்டது.

நீதி மன்றம் செல்லுதல்.!

வள்ளலார் எழுதியது திருஅருட்பா அல்ல ,அவை மருட்பா என்று ,சமயவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ,யாழ்பாணத்தில் உள்ள ஆறுமுகநாவலரை அழைத்து வந்து மஞ்சகுப்பம் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.வள்ளலாருக்கு சம்மன் வந்தது ,சம்மனை வாங்க மறுத்து வேலாயுதம் அன்பிற்கு கட்டுப்பட்டு கோர்ட்டு சம்மனை கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொண்டார்.நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது இராமலிங்கம் இராமலிங்கம் என்று குரல வந்தது ..திடீர் என்று இராமலிங்கம் பிரசன்னமானார் .நீதிபதி முதற்கொண்டு அனைவரும் எழுந்து கை கூப்பி வணக்கம் செய்தனர்...நீதிபதி தன்னையறியாமல் எழுந்ததை உணர்ந்து ,ஆறுமுக நாவலரைப் பார்த்து .நீங்கள் தானே வழக்குத் தொடர்ந்தவர் என்று கேட்க ஆமாம் என்று அவர் பதில் சொல்ல ,இராமலிங்கம் வந்தவுடன் அவரைப் பார்த்து எழுந்து வணக்கம் சொன்னீரே, ஏன் ? என்று கேட்க ,அவர் பெரியவர்,உயர்ந்தவர்,அனைவராலும் மதிக்கத்தக்கவர் ஆதலால் வணக்கம் சொன்னேன் என்று சொல்ல ..நீங்களே பெரியவர், உயர்ந்தவர் என்று ஒப்புக் கொண்டதால் ,அவர் எழுதியது திருஅருட்பாதான்,மருட்பா அல்ல என்று தீர்ப்பு வழங்கினார்.இந்த செய்தி தமிழகமெங்கும் தீப்போல் பரவியது .அவர் புகழ் மேலும் அதிகமாக மக்கள் மத்தியில் பரவலாயிற்று .

வள்ளலார் நீதி மன்றம் செல்லவில்லை, வடலூரில் உள்ள தருமச்சாலையில் தன்னுடைய அன்பர்களிடம் உரையாடிக்கொண்டு இருந்தார் என்ற செய்தி நீதிமனறத்தில் இருந்த வந்த அன்பர்கள் அறிய, வள்ளலார் இதை வெளியில் சொல்லவேண்டாம் என்று அடக்கிவிட்டார்.நீதி மன்றத்திற்கு சென்றது வள்ளலார் உருவில் இறைவனே சென்றார் என்பது உண்மையாகும் .

தருமச்சாலை தோற்றுவித்தல் !

பல தெய்வங்களை வணங்கி அத்தெய்வங்களைப் பற்றி ஆயிரக்கணக்கான பக்தி பாடல்கள் இயற்றி வந்த வள்ளல்பெருமான் இறுதியிலே, அவைகள் எல்லாம் தத்துவங்களே ஒழிய உண்மையான கடவுளகள் அல்ல என்பதை உணர்ந்த வள்ளலார் ....உண்மையானக் கடவுள் ஒருவரே !அவரே அருட்பெரும் ஜோதியாகஉள்ளார் என்பதை மக்களுக்கு போதித்து வந்தார்,அந்த அருட்பெருஞ் ஜோதிதான எல்லா ஆன்மாக்கள் உள்ளும் உயிர் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளது .அதுவே அருட்பெருஞ் ஜோதியாகும் .அதனால் எந்த உயிர்களையும் அழிக்கக் கூடாது !.உயிர்க்கொலை செய்யக் கூடாது ! புலால் உண்ணக்கூடாது.என்று தன்னுடைய அன்பர்களுக்கு கட்டளை இட்டார்.''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்''என்ற அவர் வார்த்தை மக்கள் மத்தியிலே நிலைப் பெற்றுவிட்டது.

இறைவனுடைய அருளைப்பெற வேண்டுமானால் ,உயிர்கள் மேல் அன்பு,தயவு,கருணைக் காட்டவேண்டும் என்றார்.,ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மக்கள் பசி பட்டினி ,வறுமை போன்ற கொடுமைகளில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தார்கள். இந்த உலகத்தில் பசி ,பட்டினி,வறுமை என்னும் கொடுமையால் மக்கள் அழிந்து விடக் கூடாது என்பதை உணர்ந்து ,வடலூர் மக்களிடம் எண்பது காணி இடம் இலவசமாகப் பெற்று 23--5--1867 ,ஆம் ஆண்டு தருமச்சாலையைத் தொடங்கிவைத்தார் அன்றிலிருந்து இன்றுவரை பசி என்று வந்தவர்களுக்கு மூன்று வேளையும் உணவு கொடுக்கப்பட்டு வருகின்றன.இப்போது மக்களின் பசியைப் போக்க தமிழக அரசு குறைந்த விலை உணவுகள் மக்களுக்கு வழங்கிக் கொண்டு வருகிறது.மிகவும் பாராட்டுகிரியது.

அறிவு விளங்கிய ஜீவர் களுக்கெல்லாம் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !என்றும்.உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு ! என்பதும் ,வள்ளலாரின் அழுத்துமான வழிப்பாட்டு முறைகளாகும்.

வள்ளலாரின் கொள்கைகளில் முதன்மையானது முக்கியமானது ஜீவகாருண்யம் என்பதாகும்.ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவு கோல் என்றார்.இறைவனுடைய கோட்டையின் உள்ளே இருக்கும் அருளைப் பெற வேண்டுமானால் ஜீவ காருண்யத்தால் மட்டுமே பெறமுடியும் .வேறு பக்தி வழிபாடு, தியானம் ,தவம்,யோகம்,போன்ற எந்த செயல்களாலும் இறைவனுடைய அருளைப் பெறமுடியாது என்பதை மக்களுக்குப்  போதிக்க தருமச்சாலையைத்  தோற்றுவித்தார் .ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய தருமச்சாலையில் அவரவர்களால் முடிந்த பொருள் என்னும் கருணையை செய்து அதனால் வரும் ஆன்ம லாபத்தை பாகம் செய்து கொள்ளுங்கள் என்பதை எழுதிவைத்துள்ளார்.அவற்றை ஏற்றுக் கொண்ட மக்கள் தங்குதடை இல்லாமல் உணவுப்பொருள்கள் வழங்கிக் கொண்டு வருகிறார்கள் .அவர் ஏற்றிவைத்த அடுப்பு அணையாமல் இன்றுவரை எரிந்து கொண்டு ஏழைகளின் பசிக் கொடுமையைப்  போக்கிக் கொண்டு வருகிறது.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் !

வள்ளல்பெருமான் அவர்கள் தன்னுடைய கொள்கைகளை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக,சாதி ,சமயம்,மதம்,அற்ற  ஒரு புதிய பொது மார்க்கத்தை தோற்றுவித்தார் அதற்கு பெயர் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்று பெயர் வைத்துள்ளார் .அச் சங்கத்தின் கொள்கைகள் ;--.

கடவுள் ஒருவரே ! அவரை உண்மை அன்பால் ஒளி (ஜோதி )வடிவில் வழிபட வேண்டும் என்றும் ,சிறு தெய்வ வழிபாடுகள் கூடாது ! அத்தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக்கூடாது ! புலால் உண்ணலாகாது !சாதி,சமயம்,மதம்,முதலிய வேறுபாடுகள் கூடாது ! எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கைக்கொள்ளவேண்டும் ! ஏழைகளின் பசி தவிர்ததலாகிய ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் ! புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத்  தெரிவிக்க மாட்டாது ! சிறு தெய்வ வழிபாடுகள் வேண்டாம்.! இறந்தவரைப் புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது !கருமாதி திதி முதலிய சடங்குகள் வேண்டாம் ! மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக்கூடாது ! கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் கூடாது ! எதிலும் பொது நோக்கம் வேண்டும் ! நம்வீட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அன்று ஏழைகளை அழைத்து அன்னவிரயம் செய்யவேண்டும் .இதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கக் கொள்கைகளாகும் அக் கொள்கைகளைப் பின்பற்றவும் பரப்பவும் 1865 ,ஆம் ஆண்டில் வடலூரில் சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.சன்மார்க்க அன்பர்கள் வள்ளலார் சொல்லிய வண்ணம் வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறார்கள்.

மனிதன் ஒழுக்கமுடன் வாழ வேண்டுமானால் .இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம்,என்னும் நான்கு ஒழுக்கங்களை கடைபிடித்தால் மனிதன் மனிதனாக வாழ்ந்து இறை நிலையை அடையமுடியும் என்பதால் ஜீவ காருண்யம் என்னும் உரைநடை நூலை முதன்முதலில் எழுதி வைத்துள்ளார் .அவை மக்கள் மத்தியிலே இன்றுவரை பாராட்டப்பட்டு வருகிறது.மனிதனின் மரணம் இயற்கை அல்ல செயற்கையால்தான் மரணம் வருகின்றது .மரணத்தை வெல்லும் வழி உண்டு என்பதை கண்டுபிடித்து தானும் வாழ்ந்து காட்டி, மற்றவர்களும் வாழமுடியும் என்பதை உலகுக்கு பறைசாற்றி உள்ளார்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !

உண்மையானக் கடவுளை ஒளிவடிவமாக கண்ட வள்ளலார் ,அதற்கு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ! என்னும் பெயர் வைக்கிறார் ,அப்பெயரை இறைவனே எடுத்துக் கொடுத்தார் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தவே ,சாதி சமயம்,மதம்,போன்ற வேறுபாடுகள் இல்லாத உலகப்  பொது வழிபாட்டு முறையை மக்களுக்கு காட்டவே ;--வடலூரில் எட்டு திக்கு மக்களும் வந்து வழிபட வேண்டி ,எண்கோண வடிவில் 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை'' 25 --1--1872 ,ஆம் ஆண்டு அமைத்து இன்று வரை ஜோதி தரிசனம் காண்பித்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.உலகம் முழுவதிலும்  இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து வழிப்பட்டு தம் குறைகளை நீக்கி அருள் பெற்று ,மனம் நிறைவு பெற்று சென்று கொண்டுள்ளார்கள் .

மரணம் இல்லாப் பெருவாழ்வு !

சன்மார்க்க சங்கத்தின் முக்கிய கொள்கை --உயர்ந்த அறிவுள்ள மனிதன் இறை அருளைப்பெற்று ஊன உடம்பு, ஒளிதேகமாக மாற்றிக் கொண்டு சாகாமல் இருக்கமுடியும்,சாகாமல் வாழமுடியும்  என்னும் பேருண்மையை கண்டு பிடித்து அதன்படி வாழ்ந்து காட்டினார் ....சன்மார்க்க முடிபு சாகாதிருப்பதே, ,''சாகாதவனே சன்மார்க்கி'' என்பது வள்ளல் பெருமானின் உபதேசமாகும்.---''என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்''என்பது அவரது முடிந்த முடிவான கொள்கையாகும்./முழுமையான பரிபூரண இறை அருளைப் பெற்றால் மரணம் இல்லாமல் மனிதன் வாழமுடியும் எனற உயர்ந்த கொள்கையை விஞ்ஞானம் ,அறிவியல் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு விளக்கி வைத்துள்ளார் .

மனித பிறப்பு என்பது உயர்ந்த அறிவுள்ள பிறப்பாகும்.மனிதன் தன்னுடைய உடம்பை இறை அருளால் ,சுத்த தேகம்,பிரணவதேகம் ,ஞான தேகம் என்னும் முத்தேக சித்தியைப் பெற்று கொண்டால் இறைவனுடைய தேகமான ஒளிதேகமாக மாற்றிக் கொண்டு இறப்பு ,பிறப்பு இல்லாமல் கடவுளுடன் சேர்ந்து ஐந்தொழில் வல்லபம் பெற்று ''நித்திய சுத்த சத்திய வாழ்வு ''என்னும் ''கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு'' வாழ்வதே மனித பிறப்பின் முக்கிய கொள்கைகளாகும் என்பதை வலியுறித்திக் கொண்டே இருந்தார் .

வள்ளல்பெருமான் சொல்லியதோடு இல்லாமல்,சொல்லிய வண்ணம் வாழ்ந்து காட்டினார் .வடலூருக்கு தெற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்திற்கு  சென்று அங்கேயே  உறையத் தொடங்கினார் அவர் தங்கி இருந்த இடத்திற்கு சித்திவளாகத் திருமாளிகை என்று பெயர் .அவர் அங்கே ஆயிரகணக்கான மக்கள் மத்தியில் நான் இப்போது இந்த அறையில் சென்று இறைவனோடு இரண்டற கலக்கப்போகிறேன் ,பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள் இந்தக்கதவை சாத்திக் கொள்ளுங்கள் ,அப்படி யாராவது  பார்க்க வேண்டும் என்று பார்க்க நேர்ந்தால் ஆண்டவர் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் ,வெறு வீடாகத்தான் இருக்கும் என்றும் ,நீங்கள் அனைவரும் நான் சொல்லிய வண்ணம் உங்கள் வாழ்க்கையில் ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடைபிடியுங்கள் நீங்களும் என்னைப் போன்ற பெரிய பேரின்ப ஆன்ம லாபத்தை அடைவீர்கள் இது சத்தியம் ,இது சத்தியம் .என்று சொல்லி உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்,அப்போது அவருக்கு வயது ஐம்பத்து ஒன்றாகும் சித்திப் பெற்றது...30--1--1874,..ஸ்ரீமுக ஆண்டு தைமாதம் வெள்ளிகிழமை

வள்ளலாரின் செய்தியை அறிந்த கடலூர் மாவட்ட ஆங்கிலேய ஆட்சியாளர் மற்றும் தாசில்தார் போன்ற அதிகாரிகள் வந்து மக்கள் முன்னிலையில் கதவை திறந்து பார்த்தார்கள் வெறுவீடாகத்தான் இருந்தது .வள்ளலார் இறைவனோடு கலந்து பேரின்ப சித்தி என்னும் பெருவாழ்வு பெற்றுவிட்டார் ,என்பதை அரசு பதிவேட்டில் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.இவை யாவும் உண்மை செய்திகளாகும்..

வள்ளலார் அவர்கள்.சித்திப் பெற்றபின் அவர் எழுதிய ஆறாம் திருமுறை என்னும் அருட்பா வெளியிடப்பட்டது..அதில் அனைத்து உண்மைகளும் தெள்ளத்தெளிவாக உள்ளன.உலக ரகசியங்களையும்,.உயிர்களின் பிறப்பு இறப்பு ரகசியங்களையும்,கடவுள் யார் என்ற உண்மைகளையும்.,உலகம் முழுவதும் சாதி,சமயம்,மதம்,அற்ற சகோதர உரிமையுடன் வாழ வேண்டும்.உலகம் முழுவதும் அமைதி நிலவவேண்டும்..''ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை ''அனைவரும் கடைபிடிக்க வேண்டும் .''ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு.'' உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்பதை மிகவும் வலியுறுத்தி எழுதி வைத்துள்ளார்.

மேலும் ;--உரைநடை நூல்கள் அதிகம் இல்லாத காலத்தில் மனுமுறை கண்ட வாசகம்,...ஜீவகாருண்ய ஒழுக்கம் ,...ஒழிவியல் ஒடுக்கம்,...தொண்டமண்டல சதகத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் உரைநடை,...சின்மயதீபிகை...போன்ற உரைநடை நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.

தமிழ் நாட்டின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வள்ளல்பெருமான் ஒருவரே .மேலும்,தமிழ் நாட்டில் முதன்முதலாக திருக்குறள் வகுப்பு நடத்தியவரும் அவரே ! நூல் ஆசிரியராக ,உரை ஆசிரியராக ,பதிப்பாசிரியராக ,போதக ஆசிரியராக,,ஞான ஆசிரியராக ,வியாக்கியான கர்த்தராக ,சித்த மருத்தவராக ,அதற்கும் மேலே கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர் .எனப் பன்முகங் கொண்ட அருளாளர் வள்ளல்பெருமான் அவர்கள்.சுமார் ஆறாயிரம் அருட்பாடல்களை எழுதி வைத்துள்ளார்.

நமது இந்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வள்ளலாரின் வாழ்க்கை வரலாறுகளையும்.கொள்கைகளையும் ,பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் பாடப்புத்தமாக கொண்டு வந்தால் எதிர்கால மாணவர்கள்.ஒழுக்க நெறியோடு வாழ்வதற்கு வழிகாட்டுதலாக இருக்கும் என்பது சன்மார்க்க சான்றோர்களின் விருப்பமும் வேண்டுதலுமாகும்.

நமது தமிழக அரசு வள்ளலார் வருவிக்க உற்ற நாளை ஆன்மநேய ஒருமைப்பாட்டுத் தினமாக கொண்டாடி மகிழ்கின்றது ,அக்டோபர் ஐந்தாம் நாளன்று மதுக்கடைகளும், மாமிசக்கடைகளும் சட்டப்படி அடைக்கப்பெற்று வள்ளலார் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியதாகும் .இதுவே வள்ளலாரின் வாழ்க்கையின் சிறிய சுருக்கமாகும்.மேலும் அருட்பாவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

என்றும் உங்கள் ஆன்மநேயன்;--
ஈரோடு --செ, கதிர்வேல்.  
அருட்பா ஆராய்ச்சி மையம்
108,C, நந்தா இல்லம்
வையாபுரி நகர்
வள்ளலார் வீதி.
46, புதூர் அஞ்சல்
ஈரோடு ..638002 ,
 cell ;--9865939896.      

திங்கள், 22 செப்டம்பர், 2014

பொருளை அருளாக மாற்றுவதே சாதனம் !


மாநிலம் தழுவிய சுத்த சன்மார்க்க ஆறாவது மாநில மாநாடு,விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகையில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக... மாநில அமைப்பாளர் மாநாட்டு வித்தகர் ..சுத்த சன்மார்க்கி ஆன்மநேயர் ஜெய அண்ணாமலை பரதேசி அவர்களின் அயராத உழைப்பால் பிபரவரி மாதம்.01,,02..03..04,( தை மாதம் 17..18.19..20.) ஆகிய நாட்களில் நடைபெறுகின்றது .அவர்களுக்கு என்னுடைய உளமார்ந்த அன்பையும் பாராட்டுகளையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இக்கட்டுரையை அன்புடன் சமர்ப்பிக்கின்றேன்

பொருளை அருளாக மாற்றுவதே சாதனம் !

நாம் வாழும் இந்த மாயை உலகம் பொருள் நிறைந்தது...பொருளகள் அனைத்தும் ஐந்து பஞ்ச பூத அணுக்களால் பின்னப்பட்டதாகும்.பொருட்கள் அனைத்தும் அசுத்த பூத அணுக்களால் உண்டானதாகும் .

நம்முடைய உடம்பும் பஞ்ச பூத அணுக்களால் பின்னப்பட்டதாகும். கடவுளால் அனுப்பி வைக்கப் பட்ட ஆன்மா என்னும் ஒளி, உயிர் எடுத்து,உடம்பு எடுத்து  வாழ்வதற்கு, சுத்த பூத அணுக்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட வாடகை வீடுதான் உடம்பாகும் .அந்த வாடகை வீட்டிற்கு தினமும் உணவு என்னும்  வாடகை கொடுக்க வேண்டும்.வாடகை கொடுக்க வில்லை என்றால் பசி,கொலை,பிணி,தாகம்,இச்சை எளிமை,பயம்,என்ற தொல்லைகளைக் கொடுத்து உடம்பை அழித்து விடும் அதற்கு மரணம் என்று பெயர்.

மரணம் அடைந்தால் மறுபடியும் வேறு ஒரு உடம்பைக் கொடுத்து உணவு என்னும் வாடகை வசூலித்துக் கொண்டே இருக்கும் அதனால் பிறப்பு .இறப்பு இடைவிடாமல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

இறப்பையும் பிறப்பையும் நீக்க வேண்டும் !

பிறப்பையும் இறப்பையும் நீக்க வேண்டுமானால்,மனிதன் கடைபிடிக்க வேண்டிய  சாதனம் இரண்டு வகைப்படும் ஒன்று பரோபகாரம் ஒன்று சத்விசாரம்.இந்த இரண்டு சாதனங்களால் பிறப்பையும் இறப்பையும் நீக்கி மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் முத்தேக சித்திப் பெற வேண்டும்.

அந்த முத்தேக சித்தி என்பது,ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றுவதாகும்.அதாவது அசுத்த பூத காரிய உடம்பை சுத்த பூத காரிய உடம்பாக மாற்றுவதாகும்  ஆன்ம தேகம் என்னும் ஒளி உடம்பை பெறுவதாகும் .

அழியும் பொருள் உடம்பை அழியா அருள் உடம்பாக மாற்ற வேண்டும்.அதுவே பொருளை அருளாக மாற்றுவதாகும்.

சன்மார்க்க அன்பர்களின் சாதனம் எது வென்றால் ...பஞ்ச பூதப் அணுப் பொருள்களால் பின்னப்பட்ட உயிர் உள்ள பூத ஊன உடம்பை ...அருள் உடம்பாக மாற்ற வேண்டும்

அந்த அணுக்களை எப்படி மாற்றுவது என்பதை வள்ளல் பெருமான், தான் மாற்றிக் கொண்டு நமக்கு வழி காட்டுகின்றார்

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் .இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது !

எல்லா வற்றையும் என்பது ...நம் ஆன்மாவைப் பற்றிக் கொண்டு உள்ள அறியாமை என்னும் பொய்யான மாயா திரைகளாகிய சாதி,சமயம்,மதம் போன்ற கற்பனைக் கதைகளில்உள்ள தெயவங்களின் பற்றுகளான,வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரங்கள் போன்ற, எதிலும் பற்று இல்லாமல் ஒழித்து அழித்து விட்டு விட  வேண்டும்.அடுத்து நம்மை அழித்துக் கொண்டுள்ள நம்மிடம் உள்ள பொருள்களை ஜீவ காருண்யம் என்னும் இயற்கை கருணையால் மற்றவர்களுக்கு கொடுத்து,அதனை அருளாக மாற்ற வேண்டும் .

வள்ளல்பெருமான் எல்லா பற்றுகளையும் விட்டு விட்டார் .அதனால் அவரை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் ஏறா நிலைமிசை ஏற்றி வைத்துள்ளார் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் .

ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்கள் ஆனால் என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள் ,இது வரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? என்றால் பெற்றுக் கொள்ளவில்லை .

நான் அந்த சாதி ,சமயம்,மதத்தில் வைத்து இருந்த லஷியம் என்னை இந்த நிலையில் தூக்கி விட்டது என்றாலோ ,அந்த லஷியம் தூக்கி விடவில்லை என்னை இந்த இடத்திற்கு தூக்கி விட்டது யாதெனில் ...

அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தார் என்று சத்தியப் பெரு விண்ணப்பத்திலும் ''எத் தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததே அன்றித் தலைவா வேறு எண்ணியது உண்டோ ''எனவும்

தேடியது உண்டு நின் திரு உரு உண்மை என்னும் தொடக்கம் உடைய பதிகத்திலும் விண்ணப்பித்து இருக்கின்றேன் என்று தெளிவு படுத்தி உள்ளார் .

வள்ளலாருக்கு தெரிவித்த உண்மை யாதெனில் ? உண்மைப் பெரு நெறி ஒழுக்கம் யாதெனில் ....

கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக!என்றது தான்

என்னை ஏறா நிலைமிசை ஏற்றி விட்டது ,அது யாதெனில் தயவு ,தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும்.அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும் .தயவு வந்தால் தான் பெரிய நிலைமேல் ஏறலாம் .இப்போது என்னுடைய அறிவு அண்டம் அண்டங்களுக்கு அப்பாலும் கடந்து இருக்கின்றது .அது அந்த ஒருமையினால் தான் வந்தது.

நீங்களும் என்னைப்போல் ஒருமையுடன் இருங்கள் என்று ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை பற்றி தெளிவுப் படுத்துகின்றார் .

அந்த ஒருமை யாதெனில் .

எத்துணையும் பேதம் உறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்து உருவாய் எம் பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த தாலோ !

என்று வள்ளல்பெருமான் தெளிவு படுத்தி உள்ளார்கள் .

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒரே தன்மை உடையது ஆதலால் அவைகள் யாவும் நம்முடைய உயிர்கள் போன்றது என்பதை எண்ணி உணர்ந்து அந்த உயிர்களிடம் அன்பு,தயவு,கருணை.வைத்து வாழும் உள்ளமே கருணை உள்ள கடவுள் வாழும் இடம் என்று நான் அறிந்தேன்

அந்த உண்மை தெரிந்தவன் எவனோ அவனே உண்மை தெரிந்த வித்தகன். அவனே கடவுள் என்பதை அறிந்தேன்...அவனை நான் தினமும் கடவுளாக நினைந்து வணங்குகிறேன் ,என்பதை அனைத்து உலக மக்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு ''கருணை '' என்னும் கருவியால் மட்டுமே இறைவன் இடம் இருந்து அருளைப் பெற்று, ஆன்மாவை மறைத்துக்  கொண்டுள்ள அறியாமை என்னும் மாயா திரைகளை நீக்கி,பொருள் உடம்பை அருள் உடம்பாக மாற்ற முடியும் என்பதை தெளிவுப் படுத்துகின்றார்.

ஆதலால் நமக்கு கருணைத்தான் சாதனம் என்பதை புரிந்து கொண்டு ,ஜீவ காருண்யம் என்னும் கருணையும் .சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாடு என்னும் உரிமை,எங்களுக்குள் , எக்காலத்தும்,எவ்விடத்தும் எவ்விதத்தும் ,எவ்வளவும் ,விலகாமல் நிறைந்து விளங்கச செய்வித்தல் வேண்டும் .

என்னும்  சத் விசாரம் என்னும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையே சாதனமாகும் .என்பதை அறிந்து இடைவிடாமல் கடைபிடிக்க வேண்டும் .

கருணை ஒன்று தான்  பொருளை அருளாக மாற்றும் ஆற்றல் பெற்றதாகும் .அன்பு, தயவு,கருணை என்பது ஒரேப் பொருளாக கொண்டு இருந்தாலும் அன்பை விட தயவு உயர்ந்தது ,தயவை விட கருணை உயர்ந்தது ,கருணையை விட அருள் உயர்ந்தது ,அருளைக் கொண்டு உயர்ந்த பேரறிவைப் பெற்று கடவுளின் இயற்கை உண்மையை அறிந்து ,கடவுள் மயமாக வேண்டும்.

அதுவே கடவுள் நிலை அறிந்து அம் மயமாதல் என்பதாகும்.அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.அதுவே சுத்த பிரணவ ஞான தேகம் என்பதாகும் அதுவே முத்தேக சித்தி என்பதாகும்.அதுவே பேரின்ப லாபமாகும் ,அதுவே பேரின்ப வாழ்வாகும் .

பொருளை அருளாக மாற்றத் தெரிந்தவர்கள் மரணத்தை வென்று ,பிறப்பு இறப்பு இல்லாமல் கடவுளின் இல்லத்திற்கு சென்று பெரு மகிழ்ச்சியுடனும் பேர் ஆனந்தமாகவும் நிலைத்து வாழலாம் .

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

அன்பான சன்மார்க்க அன்பர்களின் சாதனம் !....


அன்பான சன்மார்க்க அன்பர்களின் சாதனம் !..

எல்லோரும் அறிந்திருக்கிற விஷயங்களில் ஒன்று சன்மார்க்கத்தை கடைபிடிப்பவர்கள் சாதனை ஒன்றும் செய்யவேண்டாம் என்பதே, அப்படியல்லவா?..ஆனால் சன்மார்க்கத்தில் சன்மர்க்கிகள் செய்வதற்க்கு “சாதனை உண்டு”...அதை சன்மார்க்கிகள் செய்யத்தான் வள்ளலார் பணிந்துள்ளார்.
பேருபதேசம் பகுதியில் வள்ளலாரால் கடைசியாக வழங்கப்பட்ட பேரருள்...அதை சற்று பார்ப்போம்.
“”””இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை - தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை - எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டு உரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணை ஆனதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக
”அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி”
என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.””””
மேற்சொன்னது பேருபதேச பகுதி என்பதை கவனிக்கவும்.... இங்கு தான் சாதனை விளக்கம் சொல்லப் பட்டுள்ளது.அதாவது ”அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி” என்பதற்க்கு பெருமானார் விளக்கம் கூறுகிறார் பாருங்கள்...நாம் பொதுவாக “ஜொதி, ஜோதி” என்றால் ஏதோ விளக்கு அல்லது வெளிச்சம் என பொருள் கொள்வோம்...ஆனால் பெருமானார் தரும் விளக்கம் என்பது வேறானது ..அதை சற்று ஆழமாக புரிந்தால் அல்லது புரிதல் வராது.
அவர் மஹா மந்திரத்திற்க்கு தரும் விளக்கம் என்பது””””” “பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம்””””””. இது தான் மஹா மந்திரத்திற்க்கு வள்ளலார் தரும் விளக்கம். கூர்ந்து கவனித்தால் இந்த விளக்கத்தில் எங்குமே “ஜோதி” என்பது வராது,“ வெளிச்சம்” என்ற பொருளும் வராது, பெருமானார் சொல்லவில்லை.வாச்சியார்த்தம் என சொல்லி விளக்கபட்டு இருப்பது “ஜோதி” என்றால் “ அறிவு’ என பொருள்...பெரும் ஜோதி என்றால் பேரறிவு என பொருள்.இதை சற்று ஆழமாக சன்மார்க்க அன்பர்கள் புரிந்து பயனடையவேண்டுகிறேன்.
அடுத்து பெருமானார் விளக்குவது என்னவென்றால் “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் முடிவான இன்ப அனுபவம் பெற்று கொள்வதில் தடை இல்லை”...இது ஏன் சொல்லுகிறார் என்றால் இங்கு ஒரு சாதனை மறைவாக சொல்லபட்டிருக்கிறது...அதனையே ‘இவ்வண்னம் சாதனம் முதிர்ந்தால்” என அடி கோடிட்டு பெருமானார் சொல்லுகிறார் என்பதை கருத்தில் கொள்ளவேண்டுகிறேன்.
மேலும் அந்த சாதனை என்பது எவ்வண்னம் இருக்க வேண்டும் என்பதற்க்கு சான்றாக பெருமானார் காட்டித் தருவது "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.””””என்பதுவாகும். இதை அரிந்து கொள்ளுதல் சன்மார்க்க அன்பர்களுக்கு முடிவான இன்ப அனுபவத்தை பெற்று கொள்வதில் “ பெருந்தோணியாக” இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளவேண்டாம்.




அந்த சாதனம் என்ன என்றால் கருணை ஒன்றுதான் சாதனம் ,கருணை வருகின்ற போது அறிவு விளக்கம் தானாகவே விளங்கும் .அறிவு விளங்கும் போது ,அருள் விளக்கம் தோன்றும் அருள் தோன்றும் போது ,கடவுள் யார் என்பது தெரியும்.கடவுள் யார் என்பது தெரியும் போது,கடவுளின் குழந்தைகள் ஆன்மா என்பது தெரியும்.ஆன்மா என்ன என்று தெரியும் போது ,அதன் உரிமையான ஆன்ம நேயம் உண்டாகும் .அந்த ஆன்ம நேய ஒருமைப்பாடு உரிமை வந்தால்தான் .கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும்.அதுவே பேரின்ப பெருவாழ்வாகும்.அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வாகும்.

சன்மார்க்க அன்பர்களின் சாதனை கருணைதான் என்பதை ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் .கருணை வருவதற்கு ஜீவகாருண்யம் அவசியம் தேவை .ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோளாகும் .

ஜீவகாருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் தானாக விளங்கும்.ஜீவகாருண்யம் மறையும் போது அன்பும் அறிவும் தானாக மறையும் .

சன்மார்க்க சாதனம் .ஜீவகாருண்யம் என்னும் பரோபகாரம் .அடுத்து அறிவு விளக்கமான சத் விசாரம் அவசியம் வேண்டும் .இதுவே சாதனமாகும்.

ஆண்மநேயன் ஈரோடு கதிர்வேல் .