வெள்ளி, 30 டிசம்பர், 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள் !

புத்தாண்டு வாழ்த்துக்கள் !

உலகில் உள்ள அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

உலகில் உள்ள அனைவரும் நீண்டஆயுள் , நிறைந்த செல்வம்,அழியாப்புகழ் பெற்று ஆனந்தமும் மகிழ்ச்சியும் பெற்று நலமுடன் வாழ அருட்ப்ரும்ஜோதி ஆண்டவர் அருள் புரிவார் .

சாதி சமயம் மதம் ,என்ற பேதம் இல்லாமல் ஆன்ம நேயத்துடன் வாழ்வோம் .ஒன்றே கடவுள் !அதுவே அருட்பெரும்ஜோதி! !நாம் அனைவரும் அந்த ஜோதியின் குழந்தைகள் என்ற உண்மையை உணர்ந்து ஒற்றுமையுடன் வாழ்வோம் .

எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு இறைவன் படைத்த உயிர்களை அழிக்காமல் பாது காப்போம் .எல்லா உயிர்களின் உணவுக்காக தாவரங்களை இறைவன் படைத்துள்ளார் அதிக சத்துள்ள தாவர உணவை உண்டு நோயும் ,துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் .மலரட்டும் வாழ்க்கை .

தன் உயிரைக் காக்க பிற உயிர்களை அழிப்பதால் துன்பம் சேருமோ தவிர இன்பம் வராது என்பதை உணர்ந்து உயிர்களை நேசிப்போம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்,மனம் போன போக்கில் போகாமல், அறிவினால் அறிவை அறிந்து அமைதியுடன் வாழ்வோம் .

வருகிற புத்தாண்டை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் .அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .


கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

அன்புடன் உங்களின் தோழன் ஆன்மநேயன்
கதிர்வேலு .

சனி, 24 டிசம்பர், 2011

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறப்பபடும்


கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறப்பபடும் !
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறப்பபடும் !

ஏசு பிரான் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைத்துலக மக்களுக்கும் எங்களுடைய அன்பான மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்

கொல்லா நெறியே  குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

நமது ஏசுபிரான் கேளுங்கள் தரப்படும் ,தட்டுங்கள் திறக்கப்படும் என்ற அருமையான  வாசகத்தை தந்துள்ளார் .அதன் விளக்கத்தை நாம் அனைவரும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நல்ல நாளில் தெரியப் படுத்திக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் /


கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றால என்ன ? எதைக் கேட்க வேண்டும் ?எதைத் தட்ட வேண்டும் என்பதை அறிந்து கொண்டால்தானே கேட்கவும் முடியும் தட்டவும் முடியும் .

இதற்கு வள்ளலார் கொடுக்கும் உண்மையான பதில்

மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் மரணம் இல்லாமல் வாழ்ந்து மேல் நிலைக்கு செல்லும் தகுதி படைத்தவர்கள் ,மேல் நிலை என்றால் என்ன ?நாம் எங்கு இருந்து வந்தோமோ அந்த இடம்தான் மேல் நிலை என்பதாகும் .மேல் நிலைக்கு செல்வதற்கு,என்றும் அழியாத அழிக்க முடியாத அருள் என்னும் பொருள் வேண்டும் .அதைப் பெற்றால் தான் மேல் நிலைக்கு செல்லமுடியும் அதை எப்படி பெற முடியும் ?

நம்முடைய தந்தையாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடம் அருள் நிறைந்த மாபெரும் கோட்டையாகும் அந்த கோட்டையின் கதவு பூட்டப்பட்டு இருக்கிறது .அதை தட்டினால் திறக்காது .சாவிப்போட்டு திறந்தால்தான் திறக்கும் அந்த திறவு கோல் சாதரணமாக கிடைக்காது .அருள் கோட்டைக்குள் நுழைய அருள் என்னும் திறவு கோல அதாவது சாவி வேண்டும் அப்பொழுதுதான் நாம் கதவை திறந்து உள்ளே செல்ல முடியும் .

அந்த சாவியை எப்படிப் பெறுவது ?

எல்லா உயிர்கள் இடத்தும் அன்பு செலுத்த வேண்டும் .அந்த அன்பு உயிர் இரக்கத்தாலும்.ஜீவ காருண்யத்தாலும் மட்டுமே கிடைக்கும் வேறு எந்த வழியாலும் கிடைக்காது எனபதை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும் .

உயிர் இரக்கமும் ஜீவ காருண்யமும் எப்படி உண்டாகும் .நம்முடைய தந்தையாகிய அருட்பெரும் ஜோதிக் கடவுளின் பெருமையும் தரத்தையும்--நம்முடைய சிறுமையும் தரத்தையும் ஊன்றி விசாரிக்க வேண்டும் .அப்படி விசாரிக்கும் போது எல்லா உயிர்களும் நம்முடைய சகோதர உயிர்கள் என்பது விளங்கும் .அந்த உண்மை விளங்கினால் எந்த உயிர்களுக்கும் இம்சை என்னும் துன்பம் துயரம் அச்சம் பயம் உண்டாகாமல் நடந்து கொள்வோம் .இதுவே உயிர் இர்க்கம் ஜீவ காருண்யம் என்பதாகும்.

தயவு என்பது இரண்டு வகைப்படும் --அவை யாதெனில் கடவுள் தயவு --ஜீவர்கள் தயவு என்பதாகும் அதே போல் அருள் என்பது இரண்டு வகைப்படும் .கடவுள் அருள் ஜீவர்கள் அருள் .அதனால் ஜீவ தயவால் ஜீவ அருளைப் பெற்று .க்டவுள் தயவால் கடவுள் அருளைப் பெறமுடியும் .அந்த அருள் எங்கு இருக்கும் என்றால் ,கடவுளின்  கோட்டையாகிய பரலோகமாகும் அதாவது பரமாகாசமாகும்

அந்த கடவுளின் கோட்டைக் கதவு சாத்தப் பட்டு இருக்கும் அந்தக் கதவை திறப்பதற்கு அருள்  என்னும் திறவு கோல் வேண்டும்.அந்த அருள் எதனால் பெறமுடியும் என்றால் .எல்லா உயிர்களிடத்தும் அன்பு ,தயவு.கருணை என்னும் உயிர் இரக்கம் வேண்டும் அந்த இரக்கத்தின் வாயிலாக நம்முடைய ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும் அந்த அருள் உடம்பு முழுவதும் பரவி ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறும் அந்த ஒளி உடம்பைக் கொண்டு ஆண்டவர் இருக்கும் கோட்டையின் கதவை திறந்து தட்ட வேண்டும் அப்பொழுதுதான் கதவு   திறக்கும்.அந்த அருள்தான்  சாவியாகிய திறவு கோலாகும் .

ஆதாலால் நாம் கேட்க வேண்டியது அருள் என்னும் திறவு கோலாகும்.அதுவே கேளுங்கள் தரப்படும் என்பதாகும் .

தட்டினால் கதவு திறக்காது அருள் என்னும் திறவு கோல கொண்டுதான் மேல் வீட்டுக் கதவை திறக்க முடியும்

கடவுள் இருக்கும் இடம் என்பது நமது உடம்பில் உள்ள தலை பாகத்தில் உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்க்கும் மேலே புருவ மத்தியில்அசையாது ஒரு தீபம் அதாவது ஒளி இயங்கிக் கொண்டு உள்ளது .அதை சுற்றிலும் அசைக்க முடியாத மாயை என்னும் திரைகளால் மறைக்கப் பட்டுள்ளது அதுதான் கோட்டையின் கதவு என்பதாகும் அந்தக் கதவை தட்டினால் திறக்காது ஜீவ காருண்யத்தால் பெற்ற அருள் என்னும் திறவு கோலைக் கொண்டு திறந்தால்தான் திறந்து உள்ளே போக முடியும் .

இதுவே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்பதாகும் .

அன்புடன் ஆன்மநேயன் .கதிர்வேலு .

மீண்டும் பூக்கும் .

வியாழன், 22 டிசம்பர், 2011

உண்மையை அறிந்து கொள்ளுங்கள் !


உண்மையை அறிந்து கொள்ளுங்கள் !
உண்மையை அறிந்து கொள்ளுங்கள் !

நாம் வாழும் வாழ்க்கை முழுவதும் சமய மதம் சாதி,சாத்திரங்கள் மற்றும் பொய்யான தெய்வங்களின் பின்னணியில் தான் பின்பற்றி அவைகளின் வழிகாட்டுதலின் படி தான் வாழ்ந்து வருகிறோம் அதனால் அனைத்திலும் தோல்வியே அடைந்து வருகிறோம் அன்பு காதல் நட்பு அப்பா அம்மா சுற்றம் மக்கள்அரசியல் ஆன்மீகம் அணைத்தும் துன்பம் துயரம் அச்சம் பயம் நிறைந்ததாகவே உள்ளது இதற்கு என்ன காரணம் .

உண்மைக்கு புறம்பான பேசாத தெய்வங்களும் ,அதனை மக்களுக்கு அறிமுகப் படுத்திய,, வழிகாட்டிய, பொய்யான கற்பனை கதைகளானஆன்மீக நூல்க்களும்தான் என்பதை நாம் அறியாமல் இருந்தாலும்,இந்த உலகத்தை உண்டாக்கிய,உருவாக்கிய அருட்பெரும்ஜோதி என்னும் இயற்கை உண்மையான கடவுள் ஒரு மாபெரும் மாற்றத்தை 1874 ,ஆம் ஆண்டு ,திரு அருட் பிரகாச வள்ளலார் மூலமாகஅறிவித்து உள்ளார்

அந்த அறிவிப்பை அறிவின் மூலமாக சிந்தியுங்கள்!

இனிமேல் எல்லா உலகத்தும் சமரச சுத்த சன்மார்க்கம் ஒன்றே வழங்கும் .இதற்கு எவ்விதப் பட்ட தடைகளும் இல்லை .தடையற்ற உண்மை நெறியான சமரச சுத்த சன்மார்க்க உண்மை நெறியான பெருநெறி விரைவில் வழங்கும் அதன் மென்மேலும் வழங்கும்

பலவகைப் பட்ட மத பேதங்களும் .சமய பேதங்களும் சாத்திரப் பேதங்களும் ,சாதி பேதங்களும்,ஆசார பேதங்களும் .போய் சமரச சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கம் ஒன்றே விளங்கும் இது கடவுள் சம்மதம் .

இப்போது வருகிற நமது கடவுள் ,இதற்கு முன் சமய மத சாத்திரங்களில் வந்த்தாகச சொல்லுகின்ற பல வகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள் மூர்த்திகள் கடவுள்,தேவர்,அடியார்,யோகி ,ஞானி,முதலானவர்களில் ஒருவரும் அல்ல !

இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்,எல்லா தேவர்களும் ,எல்லா கடவுள்களும் .எல்லாத் தலைவர்களும் ,எல்லா யோகிகளும் ,எல்லா ஞானிகளும் எல்லா ஜோதிட வல்லுனர்களும் .எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் இருந்து  ஒரு சிறிய அருளைப் பெற்று வாழ்ந்தவர்களாகும்.அவர்களை உண்மையான கடவுள்கள் என்று நம்பிக்கை வைத்து உலக மக்கள் அழிந்து கொண்டு இருக்கிறார்கள் இனிமேலும் உங்களை அழிய விட மாட்டேன் என்று எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வெளியிட்டு உள்ளார் .

மேலே கண்ட அறிவிப்பை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி வள்ளலார் வெளியிட்டு உள்ளார் .இப்போது நாம் வழிபட வேண்டிய உண்மைக கடவுள் அருட்பெரும்ஜோதி ஆண்டவராகும் .அவர்தான் நேரடியாக உலகத்தை ஆண்டு கொண்டு உள்ளார் என்பதை அறிந்து தெரிந்து கொண்டு உண்மை ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் நாம் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் நேரடியாக கிடைக்கும் .

1874 ,ஆம் ஆண்டுக்கு பிறகு உலகம் எந்த எந்த மாற்றங்கள் அடைந்து வருகிறது என்பதை சிந்தித்து பாருங்கள் உண்மை விளங்கும்

ஜோதிடம் !

மாயா காலண்டர் மற்றும் ஜோதிடங்களில் ௨௦௧௨ ,ஆம் ஆண்டில் உலகம் அழிந்து விடுவதாக மக்களை குழப்பி வருகிறார்கள் ,அந்த பொய்யான தகவல்களை உண்மை என்று நம்பி யாரும் கவலையோ ,குழப்போமோ அடைய வேண்டாம் .உலகத்தை அழிக்க எந்த சக்தியாலும் முடியாது .

மனிதனாக பிறந்த நாம் உண்மையை நம்ப வேண்டும் எந்த பொய்யான தகவல்களையும் நம்பக் கூடாது.

ஆதலால் பொய்யான சாத்திரங்களையும் .  பேசாத பொய்யான உருவம் உள்ள பொம்மைக் கடவுள்களை வழிபடாமல் ,எல்லா உயிர்களிலும் ஒளியாக இயங்கிக் கொண்டு இருக்கும் உண்மை தெய்வமான அருட்பெரும்ஜோதியை வழிபாடு செய்யுங்கள் அதுவே மனித வாழ்க்கையின் முக்கிய கடமையும் கட்டாயமுமாகும் .

உண்மைக கடவுள் பற்றி ஒருபாடல் !

அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட் சாறும் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்த்த் தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி யீந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம்
தெருட் பாடல் உவந்து எனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்கு கின்ற தெய்வம் அதே தேயுய்வம் !

உண்மையை அறிந்து கொள்வோம் உண்மையுடன் வாழ்வோம் .

அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு.