புதன், 31 ஆகஸ்ட், 2011

தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு உண்டு !


தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு உண்டு !

31 ஆகஸ்டு 2011, 23:25 க்கு Kathir Kathirveluஆல்
இந்திய ஜ்னாதிபதியின் பதிவி மிகவும் உயர்ந்த பதவி ஆனால் அவர்கள் அந்த அதிகாரத்தை பயன் படுத்துவதில்லை ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருக்கிறார்கள் .ஒரு கருணை மனு போனால் அதை ஆதரிக்கவோ நிகாரிக்கவோ அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது அதுவும் தூக்கு தண்டனை என்று வந்தால் நிச்சயம் மனிதாபமான முறையில் தடுக்கலாம் .அதற்கு சட்டம் தேவை இல்லை ஆயுள் தண்டனை வழங்கலாம் .குற்றவாளி ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பதே பெரிய தண்டனை ஆகும் .தூக்குதண்டனையை விட அதுவும் கொடுமையான தண்டனைதான் .இருந்தாலும் அவர்களை பெற்று வளர்த்த தாய் தந்தையர்கள் என்மகன் உயிரோடு இருக்கிறான் என்ற மகிழ்ச்சியோடு இருப்பார்கள் .இந்த உலகத்திற்கு அவர்கள் வருவதற்கு காரண காரிய மாக இருந்த அவர்களுக்கு இந்த நாட்டில் துன்பமும் துக்கமும் இல்லாமல் வாழ்வதற்கு வழி காட்டுவதுதான் ஒரு அரசாங்கத்தின் மனிதாபிமான நீதியாகும் .அதை இந்த அரசாங்கம் ஏன் செயல்படக் கூடாது.இந்திய குடிமகன் என்ற பொறுப்பில் உள்ள குடியரசு தலைவர் அவர்கள் ஆண்மநேயத்தொடு இந்த மூவருக்கும் துக்கு தண்டனையை தவிர்த்து ஆயுள் தண்டனை தருவதில் எந்த சிக்கலும் இல்லை .இவை மனிதாபமான செயல் என்று உலகமே போற்றுமே தவிர தூற்றாது .இந்தியாவுக்கே பெருமையாகும் இந்திய அரசாங்கம் இதை நினைவில் கொள்ள வேண்டும்
 ·  · பகிர்தல் · நீக்க

அன்னா ஹசாரேவும் லோக்பால் மசோதா!


அன்னா ஹசாரேவும் லோக்பால் மசோதாவும்
அரசாங்கத்தின் சாதாரண சேவைகளை பெறுவதற்குக்கூடஏழை, எளிய குடிமக்கள் லஞ்சம் தர வேண்டிஉள்ளது. அந்த அளவிற்கு இந்தியாவில் ஊழல் மலிந்துள்ளது.

அத்தகைய ஊழலை ஒழிக்க, வலுவான லோக்பால்மசோதா வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் அன்னா ஹஸாரே(சுதந்திர போராட்ட தியாகி)உண்ணாவிரதம் இருந்தார்.அரசுடன் நடத்தியபேச்சுவார்த்தையை அடுத்து,போராட்டத்தை விலக்கிக் கொண்டார்.

அரசு மற்றும், அன்னா ஹஸாரே தலைமையிலான தரப்பிலும்பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு தரப்பும்,வரைவு லோக்பால்மசோதாக்களை தயாரித்தன.

லோக்பால் விசாரணை வரம்புக்குள், பிரதமர், நீதித்துறைமற்றும் உயர் அதிகாரிகளையும் கொண்டுவர வேண்டும்என்றதுஅன்னா ஹஸாரே தலைமையிலான தரப்பு லோக்பால் விசாரணைவரம்புக்குள், பிரதமர், நீதித்துறை மற்றும் உயர் அதிகாரிகளையும்கொண்டுவரவேண்டும் என்ற மசோதாவை ஏற்க அரசு மறுத்துவிட்டது

அரசுத் தரப்பு மசோதா தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஓயப்போவதில்லைஎன அன்னா ஹஸாரேஆர்வலர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

ஊழலை ஒழிப்பதற்கு வழி செய்யும் வலுவான லோக்பால்மசோதாவைக் கொண்டுவரக் கோரி,செவ்வாயன்று ஆகஸ்ட் 16 –ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடமுயன்ற சமூக சேவகர் அன்னா ஹஸாரே போலீசாரால்கைது செய்து திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
.
போலீஸ் காவலில் உள்ள போதிலும்அன்னா ஹஸாரேதனது உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக
அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

உண்ணாவிரத போராட்டத்திற்கு முதலில், டில்லி போலீசார்21 நாட்கள் அனுமதிக்க முன்வந்தனர். பின்னர் பேச்சுவார்த்தையில்
இருதரப்பிலும் 15 நாட்கள் என, முடிவானது.

15 நாட்கள் வரை மட்டுமே உண்ணாவிரதம் இருப்பதற்கு,ஹசாரேவுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் போலீசார் அளித்த காரில் ஏறி, ராம்லீலா மைதானத்திற்குசென்றார். அதற்கு முன்பாக,ராஜ்காட் சென்று காந்தி சமாதியில்
அஞ்சலி செலுத்தினார்.

ராம்லீலா மைதானத்தில் அவர் துவக்கியுள்ள உண்ணாவிரதத்தில்லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். ""நான் உயிரோடு இல்லாமல்
போனாலும் கூட, போராட்டத்தை இளைஞர்கள் தொடர வேண்டும்,''என அன்னா ஹசாரே தெரிவித்தார்.

"வலுவான லோக்பால் மசோதா விரைவாக நிறைவேறமத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால்,
உண்ணாவிரத போராட்டத்தின் காலம் மாற்றி அமைக்கப்படும்'என, ஹசாரேவின் குழுவினர்தெரிவித்தனர்.

அன்னா ஹசாரே நடத்தும் உண்ணாவிரதப்போராட்டம்8வது நாளை எட்டியுள்ளது.அன்னா ஹசாராவின் உடல் நிலை
நன்றாக உள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் ஹசாரேவிற்கு ஆதரவு பெருகி வரும்நிலையில் அன்னா ஹசாரே விவகாரம் தொடர்பாக,
மூத்த அமைச்சர்கள் சரத்பவார், விலாஸ் ராவ் தேஷ்முக்போன்றோர் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன்
ஆலோசனை நடத்தினர்.

லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய அரசுடன்பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அன்னா ஹசாரே
ஆதரவாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்

இந்நிலையில்அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன்லோக்பால்மசோதா குறித்து விவாதிக்கஅனைத்து கட்சிக்கூட்டத்திற்கு
மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டம் (ஆகஸ்ட். 24)மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியோ ஊழல் ஒழிந்தால் சரி!

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

முருகன் .பேரறிவாளன் ,சாந்தன் அவர்களின் தூக்குதண்டனையை தவிர்த்து ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் !


முருகன் .பேரறிவாளன் ,சாந்தன் அவர்களின் தூக்குதண்டனையை தவிர்த்து ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் !

இந்திய ஜ்னாதிபதியின் பதிவி மிகவும் உயர்ந்த பதவி ஆனால் அவர்கள் அந்த அதிகாரத்தை பயன் படுத்துவதில்லை ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருக்கிறார்கள் .ஒரு கருணை மனு போனால் அதை ஆதரிக்கவோ நிகாரிக்கவோ அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது அதுவும் தூக்கு தண்டனை என்று வந்தால் நிச்சயம் மனிதாபமான முறையில் தடுக்கலாம் .அதற்கு சட்டம் தேவை இல்லை ஆயுள் தண்டனை வழங்கலாம் .குற்றவாளி ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பதே பெரிய தண்டனை ஆகும் .தூக்குதண்டனையை விட அதுவும் கொடுமையான தண்டனைதான் .இருந்தாலும் அவர்களை பெற்று வளர்த்த தாய் தந்தையர்கள் என்மகன் உயிரோடு இருக்கிறான் என்ற மகிழ்ச்சியோடு இருப்பார்கள் .இந்த உலகத்திற்கு அவர்கள் வருவதற்கு காரண காரிய மாக இருந்த அவர்களுக்கு இந்த நாட்டில் துன்பமும் துக்கமும் இல்லாமல் வாழ்வதற்கு வழி காட்டுவதுதான் ஒரு அரசாங்கத்தின் மனிதாபிமான நீதியாகும் .அதை இந்த அரசாங்கம் ஏன் செயல்படக் கூடாது.இந்திய குடிமகன் என்ற பொறுப்பில் உள்ள குடியரசு தலைவர் அவர்கள் ஆண்மநேயத்தொடு இந்த மூவருக்கும் துக்கு தண்டனையை தவிர்த்து ஆயுள் தண்டனை தருவதில் எந்த சிக்கலும் இல்லை .இவை மனிதாபமான செயல் என்று உலகமே போற்றுமே தவிர தூற்றாது .இந்தியாவுக்கே பெருமையாகும் இந்திய அரசாங்கம் இதை நினைவில் கொள்ள வேண்டும்

ஒரே கடவுள் !நண்பருக்கு கேள்வி பதில் !


ஒரே கடவுள் !

கடவுள் ஒன்று என்று மக்கள் என்று உறுதியாக உணர்கிரார்களோ அன்று மனிதன் தெளிவடைந்து விட்டான் என்பது பொருளாகும் .உண்மைக்கு புறம்பான கடவுள் கொள்கைகளை சுய நலத்திற்காக நம் முன்னோர்கள் படைத்து விட்டார்கள்.பாமர மக்கள் அதை உண்மை என்று நம்பி விட்டார்கள்.அதனால் ஏற்பட்ட குழப்பம்தான் இத்தனைக்கும் காரண காரியங்களாகும் .


நம் உடம்பிற்குள் ஒரு உயிர்தான் இருப்பது எப்படி உண்மையோ அதே போல் இந்த உலக்த்திற்கு ஒருகடவுள்தான் உண்மையான கடவுள் என்பதை உணரவேண்டும் .அப்படி உணர்ந்தால் நம்மிடம் உள்ள வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையாக வாழலாம்.
28 ஆகஸ்டு 2011, 11:13 க்கு Kathir Kathirveluஆல்
இதைத்தான் வள்ளலார் ஒருமையில் உலகெலாம் ஓங்குக என்றார் .
அன்புடன் ஆன்மநேயன் ;-கதிர்வேலு .
 ·  · பகிர்தல் · நீக்க
  • Saravanan St இதை விரும்புகிறார்.
    • விஜயக் குமார் கடவுள் ஒன்று என்று தாங்கள் அனுபவ பூர்வமாக உணர்ந்து சொல்கிறிர்களா அல்லது , நூல்களில் படித்ததை சொல்கிறிர்களா ?.
      ஞாயிறு, 11:29 க்கு ·  ·  ஒருவர்
    • Kathir Kathirvelu அனைத்தும் அனுபவம்தான் .அறிவை தெளிவுபடுத்தினால் அனுபவம் தானே வரும் .இதற்கு நூல்கள் தூண்டுதல் தானே ஒழிய அனுபவம் தானே வர வேண்டும் .அனுபவித்தால்தான் உண்மையை உணர முடியும்.படிப்பால் அறிவது உண்மையல்ல அனுபவத்தால்அறிவதுதான் உண்மையாகும் .
      ஞாயிறு, 12:31 க்கு ·  ·  ஒருவர்
    • விஜயக் குமார் 
      கடவுள் ஒருவர் உள்ளார் என்றும் , அவர் ஒருவர் தான் , என்பதும் தாங்கள் படித்த நுல்களின் வாயில்லாக தங்கள் கொண்டிருக்கும் '' நம்பிகையே '' தவிர உண்மை அல்ல ..அதையும் தாங்கள் அனுபவமாக உணர்ந்ததாக சொல்லவது நகைப்பிற்கு உரியதே . தங்கள் அறிவின் வழியே கடவுளை அறிந்திருதால் , அதுவும் ''அனுபவமாக '' உணர்திருந்தால் , தாங்களே இவ் வுலகின் மாமனிதர் .இவ்வுலகில் எளியோரகிய எம்போன்றவற்கு கடவுளை அறிந்த , அதிலும் அவர் ஒருவரே என அறிவு , அனுபவம் மூலம் தெளிவாக தெரிந்த தாங்கள்,பிறரும் பயனுற அவ்வழிதனை விளக்கிட வேண்டுகிறேன் ..
      ஞாயிறு, 15:10 க்கு ·  ·  ஒருவர்
    • Kathir Kathirvelu 
      அனுபவம் என்பது அவரவர்கள் அறிவில் விளங்குவது அதை மற்றவர்கள் சொல்லி உணரமுடியாது .அப்படி சொன்னாலும் அவர்களால் உணரமுடியாது அதை அனுபவித்தால்தான் தெரியும் .ஒரு பழம் ருசியாக இருக்கிறது என்று சொன்னால் அதை ருசிக்காமல்அறியமுடியாது .ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன் .நம் உடம்பில் உயிர் இருக்கிறது அதை பார்க்க முடிகிறதா பார்க்கமுடியவில்லை என்பதால் உயிர் இல்லை என்பதாகாது .நான் என்னுடைய உயிரைப் பார்க்கிறேன் என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஆனால் நான் என்னுடைய உயிரைப் பார்க்கிறேன் .அந்த உயிரைப் போல்தான் அனைத்து உயிர்களிலும் கடவுள் ஒளியாக உள்ளார் அவரே அருட்பெரும்ஜோதியாக உள்ளார் .அவர் மனித உருவம் அல்ல,இந்த அண்டங்களை இயக்கம் மாபெரும் ஆற்றல் உடைய ஒளியாகும் .அதை எப்படி நான் உங்களுக்கு காட்ட முடியும் .அதை நாம் எந்த பற்றும் இல்லாமல் ஒழுக்கமுடன் வாழ்ந்தால் அறியலாம் .நம்மிடம் எந்த பொருளும் இல்லாமல்,எல்லாம் கடவுள் உடையது அதை நாம் சொந்தம் கொண்டுவாழ்வது தவறானது என்பதை உணர்ந்து நம்முடைய உயிர்தான் நம்மை இயக்குகிறது அதுவே கடவுளாகும் என்பதை அறிவு மூலமாகஉணரவேண்டும் .அதுவே அனுபவமாகும் .
      ஞாயிறு, 23:11 க்கு · 
    • விஜயக் குமார் தங்களின் கூற்றை படிக்கும் பொது , தாங்கள் எத்தனை குழம்பி போயுள்ளிர்கள் என தெரிகிறது .
      முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் ..
      நேற்று 15:03 மணிக்கு · 
    • விஜயக் குமார் 
      தங்களுக்கு உயிர் உள்ளது , நம்புகிறேன் ,அதுப்பற்றி எமக்கு சந்தேகமில்லை .
      எம் கேள்வி மிக எளிமையானது , கடவுள் ஒருவர் தான் என்று சொல்கிறிர்களே அது நூலறிவா ,அல்லது அனுபவமா என்றேன் , அதற்கு தாங்கள் அனுபவமே என்று சொன்னிர்கள் .
      அவ்வாறெனில் கடவுள் உள்ளார் என்பதை அறிந்த ஒருவரால் மட்டுமே கடவுள் ஒருவரா/ பலரா என கூறமுடியும் . தாங்கள் கடவுள் ஒருவர் தான் என்றும் , அதுவும் அறிவின் துணைகொண்டு அனுபவமாக உணர்ந்ததாக சொல்கிறிர்கள் .எனவே ,
      தங்களால் இவ்வுலகு பயனுற தாங்கள் கடவுளை அறிந்த வழிதனை கேட்கிறேன் .ஆனால் வழிதனை சொல்ல மறுக்கிறிர்கள்.
      இவ்வுலக மாந்தர் அனைவர்க்கும் அனுபவம் பொதுவாகவே அமையும் , உதாரணம் : அனைவரிடமும் சர்க்கரையை கொடுத்து சுவைக்க சொன்னால் , அனைவரும் இனிப்பாக உள்ளதாக சொல்வர் . நான் தங்களிடம் கேட்பது சர்க்கரையை ( வழி தனை ) தானே ஒழிய , அதன் சுவையை அல்ல .
      ஒழுக்கமும் , பற்றற்று இருந்தால் கடவுளை அறியலாம் (இதுவே முரண் ,முதலில் அனுபவம் என்று சொல்லிவிட்டு பின்னர் அறியலாம் ? என சொல்வது ) என சொன்னால் , இவ்வுலகில் உள்ள ஒழுக்கமான பற்றற்ற அனைவர்க்கும் ,கடவுள் உள்ளார் என்றும் , அவர் ஒருவர் தான் என்னும் அனுபவம் ஏற்பட்டிருக்க வேண்டுமே .?
      அல்லது உலகில் தாங்கள் மட்டும் தான் பற்றற்ற , ஒழுக்கமுடைவரா ?
      அப்ப நாங்களெல்லாம் ?எங்களுக்கு என் கடவுள் அனுபவம் ஏற்படவில்லை ?
      கடைசில ஒன்ன சொன்னிங்க பாருங்க" உயிர் தான் கடவுளுன்னு " அட இராமா.....
      16 மணி நேரம் முன்பு · 
    • Kathir Kathirvelu 
      அட ராமா என்பது படித்துவிட்டு பழக்கத்தில்வந்தது .பழக்கம் என்பது வேறு உண்மை அறிவது வேறு உயிர்தான் கடவுள் என்பதை கிண்டல் செய்கிறீர்கள் உயிர் இல்லாமல் நீங்கள் இயங்க முடியுமா உயிர் இல்லாமல் எதுவும் இயங்க முடியாது .அந்த உயிர் என்பது என்ன அதன் தன்மை என்ன அதன் ஆற்றல் என்ன என்பதை உணர்ந்தால்தான் கடவுள் நிலையை உணர முடியும் .உன்னிடம் உன்னை இயக்கிக் கொண்டு இருக்கும் உயிர் நிலையை உணர முடியாத நீங்கள் கண்ணுக்குத் தெரியாத கடவுள் நிலையை எப்படி உணரமுடியும் .உங்கள் உயிர் உங்களிடம் இல்லாவிட்டால் நீங்கள் பிணம /அந்த பிணத்திற்கு என்ன தெரியும் அதுபோல் இன்று உயிர் இருந்தும் பிணமாக திரிந்து கொண்டு உள்ளார்கள் .கடவுள் அருள் என்னும் ஒளியாக உள்ளார் அதன் துளிகளாக உயிர் ஒளியாக அனைத்து உடம்பிறகுள்ளும் இயக்கமாக இயங்கிக் கொண்டு உள்ளது .இத அறிய வேண்டுமானால் ஒழுக்கம் வேண்டும் .அறிவை மறைக்கும் உணவை உண்ணக கூடாது.இவைபோல் நிறைய கடைபிடிக்க வேண்டும் இதற்கு மனம் பக்குவப் படவேண்டும் .உழைக்காமல் எதுவும் கிடைக்காது .முயற்ச்சி செய்து பார்த்து விட்டு பிறகு பேசுங்கள் .வெருமென பேசுவதும் கேள்வி கேட்பதும் புத்திசாலித்தனம் என்பதை மறந்து விடுங்கள் .உண்மையை உணர உண்மையுடன் வாழவேண்டும் .போளியே உண்மையென்று நம்பிக் கொண்டு இருப்பதால் உண்மை தெரிவதில்லை .உன்னைதேடுங்கள் உன்னுள் இருக்கும் உண்மையைத் தேடுங்கள் .பின் அனைத்து உண்மைகளும் வெட்ட வெளிச்சமாக தெரியும் .;--அன்புடன் கதிர்வேலு.
      8 மணி நேரம் முன்பு · 
    • Kathir Kathirvelu 
      அட ராமா என்பது படித்துவிட்டு பழக்கத்தில்வந்தது .பழக்கம் என்பது வேறு உண்மை
      அறிவது வேறு உயிர்தான் கடவுள் என்பதை கிண்டல் செய்கிறீர்கள் உயிர் இல்லாமல்
      நீங்கள் இயங்க முடியுமா உயிர் இல்லாமல் எதுவும் இயங்க முடியாது .அந்த உயிர்
      என்பது என்ன அதன் தன்மை என்ன அதன் ஆற்றல் என்ன என்பதை உணர்ந்தால்தான் கடவுள்
      நிலையை உணர முடியும் .உன்னிடம் உன்னை இயக்கிக் கொண்டு இருக்கும் உயிர் நிலையை
      உணர முடியாத நீங்கள் கண்ணுக்குத் தெரியாத கடவுள் நிலையை எப்படி உணரமுடியும்
      .உங்கள் உயிர் உங்களிடம் இல்லாவிட்டால் நீங்கள் பிணம /அந்த பிணத்திற்கு என்ன
      தெரியும் அதுபோல் இன்று உயிர் இருந்தும் பிணமாக திரிந்து கொண்டு உள்ளார்கள்
      .கடவுள் அருள் என்னும் ஒளியாக உள்ளார் அதன் துளிகளாக உயிர் ஒளியாக அனைத்து
      உடம்பிறகுள்ளும் இயக்கமாக இயங்கிக் கொண்டு உள்ளது .இத அறிய வேண்டுமானால்
      ஒழுக்கம் வேண்டும் .அறிவை மறைக்கும் உணவை உண்ணக கூடாது.இவைபோல் நிறைய
      கடைபிடிக்க வேண்டும் இதற்கு மனம் பக்குவப் படவேண்டும் .உழைக்காமல் எதுவும்
      கிடைக்காது .முயற்ச்சி செய்து பார்த்து விட்டு பிறகு பேசுங்கள் .வெருமென
      பேசுவதும் கேள்வி கேட்பதும் புத்திசாலித்தனம் என்பதை மறந்து விடுங்கள் .உண்மையை
      உணர உண்மையுடன் வாழவேண்டும் .போளியே உண்மையென்று நம்பிக் கொண்டு இருப்பதால்
      உண்மை தெரிவதில்லை .உன்னைதேடுங்கள் உன்னுள் இருக்கும் உண்மையைத் தேடுங்கள்
      .பின் அனைத்து உண்மைகளும் வெட்ட வெளிச்சமாக தெரியும் .;--அன்புடன் கதிர்வேலு.

      30 ஆகஸ்ட், 2011 12:39 am அன்று, Facebook <
      8 மணி நேரம் முன்பு via  · 
    • விஜயக் குமார் 
      ஒழுக்கம்

      பற்றற்ற நிலை

      உணவு ( சைவம் ?)

      உழைப்பு

      பக்குவபட்ட மனம்

      அறிவு

      உயிர்

      இவையெல்லாம் உங்களிடம் தான் உள்ளனவா, ? , இவைகளை கொண்ட பிறருக்கு ஏன் கடவுள் அனுபவம் ஏற்படுவதில்லை ?
      கடவுள் அனுபவம் கொண்டதாக கூறிகொள்ளும் தாங்களும் அதுபற்றி விளக்கமுடியாது என்கிறிர்கள் .
      தாங்கள் சொல்வது உண்மை என்பதற்கு என்ன அத்தாட்சி ?
      .
      சுமார் ஒரு மணி நேரம் முன்பு · 
    • விஜயக் குமார் 
      தங்கள் கூற்று :
      // உன்னிடம் உன்னை இயக்கிக் கொண்டு இருக்கும் உயிர் நிலையை
      உணர முடியாத நீங்கள் கண்ணுக்குத் தெரியாத கடவுள் நிலையை எப்படி உணரமுடியும்
      .உங்கள் உயிர் உங்களிடம் இல்லாவிட்டால் நீங்கள் பிணம /அந்த பிணத்திற்கு என்ன
      தெரியும் அதுபோல் இன்று உயிர் இருந்தும் பிணமாக திரிந்து கொண்டு உள்ளார்கள் //

      சொந்த அனுபவத்தையே விளக்கிட முடியாத நீங்கள் , ஏன் உயிர் நிலை பற்றி எப்படி அறிவீர்கள் ?

      நான் உயிர் நிலையை உணர்ந்தேனா இல்லையா என்பது உங்களுக்கு எப்படி தெரியும்

      கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் , வானம் ஏறி வைகுண்டம் போனானாம் .

      நான் எல்லோரையும் போல் , பிணமாகவே போவேன் ,

      தாங்கள் ஒளிதேகம் பெற்று உய்விர்களா?

      1874 ஆண்டுக்கு பின்னர் ஒளிதேகம் பெற்றவர்களின் வரலாற்றை உலகம் அறியும் ...
      சுமார் ஒரு மணி நேரம் முன்பு · 
    • Kathir Kathirvelu 
      மேலே தெரிவித்த அனைத்தும் சராசரி மனிதன் உண்மையை அறிந்து கொள்ள தடையாக இருப்பதாகும் .அதை கடைபிடிப்பது உபகார ,உபாய மார்க்கமாகும் .உண்மை அறிந்து கொண்ட பின் அதை யாவையும் விட்டுவிட வேண்டும் சாதாரண அறிவு பேரறிவாகமாறும் .அதன் பின் அருள் அறிவாக மாறும்.அதன் பிறகுதான் அனைத்து உண்மைகளும் தெளிவாகும் .அதற்கு எவை எவை தடையாக இருக்கிறதோ அவை யாவையும் விட்டு விலக வேண்டும் .அதில் ஏதாவது ஒன்றை பற்றிக் கொண்டு இருந்தாலும் உண்மை விளங்காது பெரிய பெரிய அறிவாளிகள் என்பதெல்லாம் இதில் ஏற்றுக் கொள்ள முடியாது .படிப்பு அறிவு என்பது வேறு ,அருள் அறிவு என்பது வேறு .மனதை அடக்குவேன் என்று யோகம,தியானம்,தவம என்பதெல்லாம் வெறும் வெத்து வேட்டுகளா கும்,வெறும் மாயா ஜாலங்களாகும்.அதை வைத்தது வியாபாரம் செய்து பணம் பறித்துக் கொண்டு உள்ளார்கள்.அவனும் வளமுடன் வாழவில்லை மற்றவர்களையும் வளமுடன் வாழ வைக்கவில்லை .வளமுடன் வாழ்க என்றால் என்ன?பொருள் சேர்த்து பணக்காரனாக வாழ்வதா? அருள் பெற்று வாழ வேண்டும் .பொருள் அழித்து விடும் அருள் அழியாமல் பாது காக்கும் .பொருள் தேடும் உலகம்தான் உள்ளது அருள் தேடும் உலகம் மிக மிகக் குறைவு.பொருள் சேர்ந்தால் துன்பமும் துயரமும் அச்சமும் பயமும் மரணமும் உங்களை கேட்காமலே வரும் . .
      51 நிமிடங்களுக்கு முன்பு · 
    • Kathir Kathirvelu 
      ‎1874,ஆம் ஆண்டுக்கு பின் யாரும் வரவில்லை என்பது உண்மைதான் .யார் வள்ளலார்
      வாழ்ந்த வழியில் வள்ளலார் போல் வாழ்ந்தார்கள் எவரும் வாழவில்லை .அவர்போல்
      வாழ்ந்தால்தான் அருள் கிடைக்கும் மரணத்தை வெல்ல முடியும் .அவர் எப்படி
      வாழ்ந்தார் என்பது அவரது வாழ்க்கை வரலாறுகளும் அவர் எழுதிய திரு அருட்பாவும்
      சான்று இருக்கிறது .அதை அறிந்து தெரிந்து கொண்டு அவர் போல் வாழாமல் வேறு எந்த
      வழியில் சென்றாலும் வேலை யாகாது .தேவர்கள் ,மூவர்கள்,சித்தர்கள்
      ,யோளிகள்,ஞானிகள் ,போன்றவரே பெற முடியவில்லை என்றால் அதன் உண்மை என்னவென்று
      தெரிந்து கொள்ள வேண்டும் .அவர்களை விட நமக்கு நல்ல வாய்ப்பும் வழியும்
      தெரிந்துள்ளது .அவர்கள் எல்லாம் சாதி,மதம் ,சமயம் ,போன்ற புதையளுக்குள்
      சிக்கிக் கொண்டவர்கள் .சன்மார்க்கம் என்பது அனைத்து உலகத்திற்கும்
      பொதுவானதாகும் அதனால்தான் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை வேண்டும் .என்றார்
      வள்ளலார்.

      எத்துணையும் பேதம் இல்லாமல் எல்லா உயிர்களையும் ஒன்றாக நினைக்கும் பக்குவம்
      என்று வருகிறதோ அன்றுதான் சன்மார்க்க அறிவு விளங்கியதாகும் .அதை விட்டு வேறு
      எதை செய்தாலும் வாதம் செயதாலும்.வேலைக்கு ஆகாது .நீங்கள் கேள்வி கேட்பதை விட
      முயற்ச்சி செய்து அனைவருக்கும் வழிகாட்டுங்கள் அதுவே புத்தி
      சாலித்தனமாகும்.மற்றவர்களை குறை சொல்வதை விட்டு நீங்கள் நன் முயற்ச்சியில்
      ஈடுபடுங்கள் அதுவே அறிவு சார்ந்ததாகும் .அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு. .

      30 ஆகஸ்ட், 2011 3:59 pm அன்று, Facebook <

முருகன் ,சாந்தன் ,பேரறிவாளன் தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது


முருகன் ,சாந்தன் ,பேரறிவாளன் தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது !
தமிழக முதல்வருக்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் வள்ளலார் கொலையை,. எந்த வித தந்திரத்திலாவது நிறுத்த வேண்டும் என்கிறார் .அவருடைய கொள்கையின் வழிகாட்டுதலின் படி எந்த உயிருக்கும் மனிதனால் அழிவு ஏற்படக் கூடாது என்ற வகையில் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தேன் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் முதல்வர் அறிவில் வேலை செய்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை .அதேபோல் தமிழக மக்களின் ஏகோபித்த குரல் ஒளியை கேட்டு முதல்வர் சட்ட சபையில் தீர்மானம் கொண்டுவந்தது அனைத்து தமிழ் மக்களின் உள்ளத்தில் முதல்வர் நிலையாக நின்று விட்டார்கள் .அவர்களுக்கு என்னுடைய அறிவார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .தமிழகம் மூன்று உயிர்களை காப்பாற்றி உள்ளது பெரும் மகிழ்ச்சியை தருகிறது . அன்புடன் ;-ஆன்மநேயன் கதிர்வேலு.

புதன், 24 ஆகஸ்ட், 2011

!!இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் !!


                !!இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் !!


நாள் ;--24--08--2011,மாலை 4-00 மணிக்கு தொடக்கம்

இடம் ;---பெருந்துறை பஸ்நிலையம் அருகில்

ஈரோடு மாவட்டம் ,தமிழ்நாடு .

இந்திய ஊழல் தடுப்பு இயக்கத்தின் சார்பில் ஈரோடு கொங்கு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் .

இந்திய இன்றைய காந்தி அன்னா அசாரே அவர்களின் ஜன லோக்பால் சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் சட்டமாக்க மத்திய அரசை கேட்டுக் கொள்ளப்படுகிறது .அந்த சட்டத்தால் ஊழலை ஒழிக்கவும் பதுக்கல் பணத்தை வெளிக் கொண்டு வரவும் முடியும் .

குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள் .இந்திய நாட்டைகாப்பாற்ற அனைவரும் போராடுவோம் வருக வருக என அழைக்கிறோம் .
 இப்படிக்கு ;-ஒருங்கிணைப்பாளர் அன்புடன் .
செ ,கதிர்வேலு.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

''ஊழல் அரக்கனால் உண்டாகும் தீமைகள்


             ''ஊழல் அரக்கனால் உண்டாகும் தீமைகள்


விலைவாசி மலைபோல் உயர்வு !

பொருளாதார சீர் கேடு !

பஞ்சம் பட்டினி வறுமை !

உணவுப் பொருள்களின் விலை உயர்வு !

மருத்துவச செலவு அதிகரிப்பு !

மின்சாரக் கட்டண உயர்வு !

அதிக வரி விதிப்பு !

சாலை போக்கு வரத்து பாதிப்பு !

கல்விக் கட்டண உயர்வு !

அதிகார வரம்பு மீறல் !

கடமை கண்ணியம் நீதி தவறுதல் !

குற்றவாளிகள் குற்றங்களில் இருந்தது தப்பித்தல் !

தரமற்ற பொது நோக்கமற்ற நிர்வாகம் !

தரமற்ற அரசியல் !

கிராம முன்னேற்றம் தடைபடுதல் !

நேர்மையான அதிகாரிகளை இடம் மாற்றம் செய்தல் !

விவசாயம் மேம்படுத்த இயலாமை !

தனி மனித உரிமை பறித்தல் !

சட்டம் ஒழுங்கு சீர் குறைவு !

பதவிக்காக மக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்குதல் !

பொது உரிமை இல்லாமல் போகுதல் !

கொலை,கொள்ளை, கற்பழிப்பு நடத்துதல் !

நாட்டை அந்நியருக்கு காட்டிக் கொடுத்தல் !

உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரிப்பு !

மருத்துவ சீர் கேடுகள் !

சாதி,மத,இன வேறுபாடு ஒற்றுமை இல்லாமை !

உயர்வு, தாழ்வு ,உண்டாக்குதல் !

நதி நீர்திட்டம் பாதிப்பு !

சமூக நலம் பாதிப்பு !

பொதுவான கல்வி இல்லாமை !

வேலை இல்லா திண்டாட்டம் !

நில அபகரிப்பு !


ஊழலால் இவ்வளவு பாதிப்புகளும் நடைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றன.இந்திய குடிமக்களே சிந்தியுங்கள் .

இவற்றை சமபடுத்தவே அன்னா அசாரேவின் ''ஜன லோக்பால் மசோதாவின் சட்ட திருத்தங்களாகும்.

இவற்றை சமபடுத்தவே அன்னா அசாரேவின் உண்ணா விரத போராட்டமாகும் .

இந்திய குடி மக்கள் அனைவரும் இந்த போராட்டத்திற்கு துணையாக இருந்து நமது இந்திய நாட்டை காப்பாற்றுவோம் .

அனைவரும் நலமுடன் வாழ்வதற்கு,உழலையும் லஞ்சத்தையும் நாட்டை விட்டு விரட்டுவோம் .

அன்புடன் உங்கள் ஆன்மநேயன் .கதிர்வேலு .

தொடர்புக்கு --போன நெம்பர் ;--9865939896,--0424-2401402