புதன், 30 ஜூன், 2010

தமிழ் மொழி ;--பாகம் 4 .

 தமிழ் மொழி, இயற்கை மெய்ப்பொருளாம் அருட்பெரும்ஜோதி 

பேரொளியால் தோற்றுவிக்கப்பட்ட அருள் மொழியாகும் .

தமிழ் மொழிமேல் அன்பும் ,ஆசையும்,ஆர்வமும் ,பற்றுதலும்,

பாசமும் ,நேசமும் ,விருப்பமும் கொண்டு பல அறிஞர் 

பெரு மக்கள் தமிழை வளர்த்துள்ளார்கள் .தமிழ் காவியங்களை 

படைத்துள்ளார்கள் .பல்லாயிரம் ஆண்டுகளாக சங்கம் வைத்து 

தமிழ் வளர்த்துள்ளார்கள் .சங்கம் வளர்த்த தமிழ் தாய்க்குலத்தை 

ஆண்ட தமிழ் என்றெல்லாம் , போற்றி புகழ்ந்துள்ளார்கள்.

தொல்காப்பியர் ,திருவள்ளுவர் முதல் இன்று வரை 

ஆயிரக்கணக்கான தமிழ் அருலாளர்களும்,அறிஞர்களும் 

லஷ்ச கணக்கான தமிழ் நூல்களும் ,தமிழ் இலக்கண,

இலக்கியங்களும் ,படைத்து, வடித்து தந்துள்ளார்கள்.

இன்னும் தமிழை வளர்த்து கொண்டே இருக்கிறார்கள் .

தமிழ் வளர்ந்து கொண்டு இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் 

இல்லை.

எந்தகாலத்தில் இருந்து யாரால் தமிழ்,உலகமெங்கும் 

பேசப்படுகிறது,விஞஞானம்,அறிவியல் ,ஆராயச்சி

பொது உடைமைக்கொள்கைகள் ,மனித நேயம் ,ஆன்மநேயம் ,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் .,சுதந்திரம் ,எல்லோரும் 

இந்நாட்டு மன்னர்கள்,தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால்

சகத்தை அழித்திடுவோம்,சாதி ,மதம், சமயம எல்லாம் பொய்

கடவுளை கற்பித்தவன் முட்டாள் ,முடநம்பிக்கைகள் 

முட்டாள் தனமானது ,தனிமனித சுதந்திரம் தேவை ,

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் ,அடக்குமுறை 

ஆட்சி கூடாது ,அன்னியனே வெளியேறு ,என்ற சுதந்திர வேட்கை, 


யாதும் ஊரே யாவரும் கேளீர் ,பிறப்பொக்கும் எல்லா 


உயிக்கும் ,

போன்ற அத்தனை மாற்றங்களும் எந்த காலக்கட்டத்தில் 

இருந்து மக்கள் மனதில் வேர் ஊன்ற ஆரம்பிக்க ஆரம்பித்தது .

என்பதை உணர்ந்தால் ,தமிழ்மேல் இன்னும் அதிக ஆர்வம் 

ஏற்படும்.


உலகம்;--


இவ்வுலகம் எப்பொழுது தோன்றியது என்பது,யாருக்கும் 


தெரியாது .உயிர்கள் தோன்றிய விதம் தெரியாது ,உயிகளுக்கு 


உடம்பு வந்த விதம் தெரியாது ,ஆனால் உடல் பருக்க


உண்ணுதற்கும்


உறங்குதற்கும் பின்மரணம்


அடைவதற்கும் ,

உணர்ந்துள்ளோம். மனம் 


என்னும் மடம் புகும் பேய்

மனத்தாலே மயங்கி வாழ்ந்து 


அழிந்து கொண்டு இருககிறோம்,


வீண்போய்க்கொண்டு,இருக்கிறோம் .


இன்னும் வீன்போகாதே இருக்க 


வேண்டும் என்பதற்காகவும்,புதிய 


மாற்றங்கள் தேவைஎன்பதற்காகவும் ,


இவுலகைப்படைத்த,


'அருட்பெரும்ஜோதி 'என்னும் 


பேரொளி,பக்குவம் என்னும் ஓர் 


ஆன்மாவை,[ உயிரொளியை ]


இவ்வுலகிற்கு ,


அனுப்பி வைக்கப்பட்டது .


அந்த பக்குவமானஆன்மாதான் ,


நம் தமிழ்நாட்டில் தோன்றிய,


ராமலிங்கம் என்ற பெயரில்உதித்த   


அருட்பிரகாச வள்ளலார்


[அருளொளி ]என்பவராகும் ,


வள்ளலார் தான் எதற்காக் வந்தேன் என்பதை தெளிவு 


படுத்தும் பாடல்;----


பேருற்ற உலகிலுறு சமய மத நெறிகள் எல்லாம் 


பேய் பிடிப்புற்ற பிச்சுப் 


பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிகள் பல

பேதமுற்று அங்கும் இங்கும் 


போர்ருற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண் 


போகாத படி விரைந்தே


புனிதமுறு சுத்த சன்மாக்க நெறிகாட்டி மெய்ப் 


பொருளினை உணர்த்தி எல்லாம் 


ஏருற்ற சுகநிலை யடைந்திடப் பிரிதி நீ  


என் பிள்ளை யாதலாலே 


இவ்வேலை புரிகவென்றிட்டணன் மனதில் வேறு 


எண்ணற்க என்ற குருவே 


நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள் 


நிறைந்து இருள் அகற்றும் ஒளியே 


நிர்ககுணானந்த பர நாதாந்த வரையோங்கும் 


நீதி நட ராஜபதியே .


என்று வள்ளலார் தான் இவ்வுலகிற்கு வந்த நோக்கத்தைப் 


பற்றி மேலும் ஒருபாடலில் பதிவுசெய்துள்ளார்;------ .


அகத்தே கருத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் 


அனைவரையும் 


சகத்தே திருத்திச சன்மார்க்க சங்கத்து 


அடைவித்திடஅவரும் 


இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு


என்றே எனை இந்த 


உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் 


அருளைப் பெற்றேன்.


என்பதை வள்ளலார் தெளிவாக  தெரியப்படுத்தியுள்ளார்.


ஆனால் நம் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் அறிஞர்களும்,


தமிழ் சான்றோர்களும்,தமிழ் ஆராய்ச்சி யாளர்களும் ,


தமிழ் வல்லுனர்களும் ,தமிழ் சிந்தனையாளர்களும் ,


முத்தமிழ் காவலர்களும்.தமிழகமுதல்வரும்,தமிழக  


அரசும் ஏன் கவனிக்கவில்லை என்பது பெரும் கவலையும் ,


வேதனையும் தருகிறது ,


தமிழ் செம்மொழி மாநாடு கோவை மாநகரில் வெகு 


சிறப்பாக நடைப் பெற்றது .உலகிலுள்ள தமிழ் அறிஞர்


களும் ,தமிழ் சான்றோர்களும் கலந்து கொண்டு மிகச் 


சிறப்பாக சொற்ப்பொழிவு படைத்தார்கள் ,


மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரும் நன்கு 


புசித்தார்கள் ,


ஆனால் சன்மார்க்க அன்பர்களாகிய நாங்கள் 


புசிக்கவில்லை,ரசிக்கவில்லை, பொறாமை


கொள்ளவில்லை,வேதனைப்பட்டோம் .


வள்ளலாரை புரிந்து கொள்ளும் தகுதி ஒருவருக்கும்


இல்லையே என்பதை நினைத்து வேதனைப்பட்டோம் .


வாழ்க தமிழ் ,


வளர்க உயிர் இனங்கள் .


1874  ம் ஆண்டுக்குப் பிறகு;-- 
நன்றி;---மீண்டும் பூக்கும் 


    

செவ்வாய், 29 ஜூன், 2010

தமிழ் மொழி பாகம் ;--3

       வள்ளலார் புகழ் தமிழகமெங்கும் பேசப்பட்ட காலத்தில்

இந்தியாவில் உள்ள ஆன்மீக சிந்தனையாளர்கள் அனைவரும் 

வள்ளலாரிடம் வந்து தெளிவுபெற்று செல்வது வழக்கமாக

கொண்டு இருந்தார்கள் .

ஒருமுறை அப்போதைய வடநாட்டுப் பெரியோர்களும்,

அவர்களுடன் காஞ்சி பெரியார் சங்கராச்சாரியாரும் 

வந்து இருந்தார்கள் அப்போது வள்ளலாரை சந்திக்க 

அனைவரும் விரும்பினார்கள்.

தங்களுக்கு தெரிந்த அன்பர் ஒருவர் மூலம் அவரிடம் 

இதுபற்றிய செய்தியைக் கூறினார்கள்.அவர் வள்ளலாரின் 

தலைமைச்சீடர் தொழுவூர் வேலாயுதம் அவர்களிடம் 
விபரத்தைக்கூறினார்.

செய்தியைக் கேள்விப்பட்டதும், வள்ளலாரும்,சங்கராச்சாரியாரும் 

சந்திக்க ஒப்புக்கொண்டார்கள்.உடனே வேலாயுதம் 
சந்திக்க ஏற்பாடு செய்தார்.

சங்கராச்சாரியார் வள்ளலாரை வரவேற்று அமரச்செய்தார் ,

பின்பு சமஸ்கிருத மொழிகளில் சில வினாக்கள் எழுப்பி 

விளக்கங்கள் கேட்டார்.வள்ளலார் அதற்குத் தகுந்த 

விளக்கங்களை தந்தார்.

தொடர்ந்து வள்ளலாரும் சங்கராச்சாரியாரும் ,நீண்ட நேரம் 

பல,பல உலக விஷயங்களைப்பற்றி விவாதம் செய்து 

வந்தார்கள்.அப்போது சங்கராச்சாரியார் சமஸ்கிருத மொழியின் 

உயர்வைப்போற்றி கூறியதோடு ,அனைத்து மொழிகளுக்கும் 

தாயாக விளங்குவது சமஸ்கிருத மொழிதான் என்றார் .

உடனே சற்றும் தாமதிக்காமல்,சமஸ்கிருதம் தாய் மொழி 

என்றால்,தமிழ் தந்தை மொழி என்றார் .அத்துடன் தமிழின் 

சிறப்பையும் ,தமிழ் எனற சொல்லின் மெய்ப்பொருளையும்

விளக்கமாக எடுத்து உரைத்தார் .

;தமிழ் ;என்பது ,த் --அ-- ம்--இ-- ழ்,என்னும் ஐந்து 

அலகுநிலையுடையது.த் --ம் --ழ் ,என்பது ஜடசித்கலை.

அ.இ ,என்பது சித்கலை.

தமிழ்மொழி, கற்பதற்கு எளிமை யானது ,ஒலிலேசானது,

மென்மையானது ,கவிதை எழுதவும் ,பாடம் செய்யவும், 

இனிமையானதும் ஓசை அருமையிலும், அருமையாயும் ,

உள்ளது தமிழ்மொழியாகும் என்றார் வள்ளலார் ,

மற்றும் மற்ற மொழிகள் போல் எந்தவிதமான,ஆராவாரமோ 

சொல் ஆடம்பரமோ இல்லாதது, 

எந்தமொழியின் சந்தத்தையும் தன்னுள் அடக்கிவிடும் ,

ஆளுமைத் தன்மையுடைய மொழியாகும் .


இறைத்தன்மையோடு இணையும் தகுதியும் தன்மையும் உடையமொழியாகும்.

இறை அருளை எளிதில் பெற வாய்ப்பு உடைய மொழி

தமிழ் மொழியாகும் .எல்லா மொழிகளைவிட கூடுதல்
ஆற்றல் பெற்ற மொழி தமிழ் மொழியாகும்.

என்று பல நிலைகளில் சங்கராச்சாரியாருக்கு 
தமிழ் மொழியின் 

சிறப்பை அனைவரும் புரியும்படிவிளங்கக கூறினார்.

வள்ளலாரின் அடக்கம் பொறுமை எளிமை இவற்றுடன்,

அவரது தனிப்பெரும் ஆற்றலைக் கண்டு சங்கராச்சாரியார் ,

மற்றுமுள்ள அனைவரும் அவரை வெகுவாக பாராட்டிப் 

புகழ்ந்தனர்.என்பது வரலாற்று செய்திகளாகும் .

வள்ளலார் தமிழில் ஒருபாடல் ;--

தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டிச 

சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே 

தனித்த நறுந்தேன் பெய்து பசும்பாலும் தெங்கின் 

தனிப்பாலுஞ் சேர்த்துதொரு தீம் பருப்பிடியும் விரவி 

இனித்த நறு நெய்யனைந்தே இலஞ் சூட்டின்இறக்கி 

எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள்ளமுதே

அநித்த மறத் திருப்பொதுவில் விளங்கு நடத்தரசே 

அடிமலர்க்கென் சொல்லணியா அலங்கல் அணிந்தருளே 

என்று தமிழின் சுவையைப் பாடியுள்ளார் வள்ளலார் .

வள்ளலார் காட்டிய உலக பொது நெறியாகிய ,

சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியை கடைப்பிடித்து, 

உலக உயிர்கள் அனைத்தும், நளமுடன் வாழ எல்லாம் வல்ல 

அருட்பெரும்ஜோதி ஆண்டவரை வேண்டி விரும்பிக் 

கேட்டுக் கொள்கிறேன் .


வாழ்க தமிழ் ,


வளர்க உயிர் இனங்கள் .

நன்றி ;--மீண்டும் பூக்கும். 

  

தமிழ் மொழி;----பாகம்,2

         இவவுலகம் தோன்றியது எப்பொழுது .தமிழ் மொழி யாரால் எப்பொழுது தோற்று விக்கப்பட்டது,என்பது
 இதுவரையில் புரியாத புதிராகவே இருந்தது .    தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் மொழியில் சுமார் ஆறு ஆயிரம் அருட் பாடல்களைப்பாடி
 அருட் தமிழால் பதிவு செய்துள்ளவர் 
திருஅருட்பிரகாச வள்ளலார்

என்னும் ராமலிங்கம் என்பவராகும் .

அவருடைய பெருமையும் ,புகழையும் ,அவர் உலகுக்கு உரைத்த

உண்மைகளையும்,உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே

இந்த வலைபூவை உருவாக்கி ,வள்ளலாரின்  உண்மைக் கருத்துகளைப்

பதிவு செய்து வருகிறோம் .என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .

தமிழ் எப்பொழுது தோன்றியது ;--

தமிழ் தாய் மொழி அல்ல, தந்தை மொழி என்பது வள்ளலாரின்

கருத்துக்களாகும் .

விந்து ,நாதத்தால் தோற்றுவிக்கப்பட்டது தமிழ் ,

விந்து என்றால் ஒளி ,--நாதம் என்றால் சத்தம் ,

ஒளியும்,சத்தமும் சேர்ந்தது வரிவடிவாகும் ,வரிவடிவமும் ,ஒளிவடிவமும்

சேரும் போது ஓலிவடிவம் ,வரிவடிவம் பெறுகிறது ,

எப்படி என்பதை ,வள்ளலார் தெரியப்படுத்தியுள்ளார் .


  1. விந்து ;--------------------பெரிய வெளிச்சம் ,சூரிய வெளிச்சம் 
  2. நாதம் ;--------------------பெரிய நாதம் ;
  3. பரவிந்து ;----------------அதில் பாதி வெளிச்சம் ,சந்திர வெளிச்சம் 
  4. பரநாதம் ;----------------நாதம் ,
  5. அபரவிந்து ;------------வெளிச்சம் ,நஷ்த்தர ஓளி
  6. அபரநாதம் ;------------நாதம் ,
  7. திக்கிராந்தம்;---------அருகிய வெளிச்சம் ,மின்னல் ஓளி ,
  8. அதிக்கிராந்தம் ;-----சப்தம் ,
  9. வாமசக்தி ,
  10. ஜேஷ்ட சத்தி ,
  11. ரெளத்திரி சத்தி ,
  12. காளிசத்தி
அகரத்தைப் பற்றிய வினாக்கள் ,;--

புலவர்கள் பலர் ,அகங்காரத்தால் தம்மை மதியாது இயல் அறியாது 

எழுதிய வாறே ;---

புலமையிற் பெரியோர் என்னும் செருக்கின்றி ,அறிவறிந்து அடங்கியாரிர்

சிலர் ,எழுதியவற்றில் சில சில இடங்களில் வழுவினர் ,இவ்வழுக்கள் 

செருக்கால் வழுவியதன்று ;--விசாரத்தாலும் சிவானுபவ மேலீட்டாலும்

வழுவியது .

இவற்றைத் ---தேவார திருவாசக முதலிய உண்மை முறைகளில் 

.காண்கின்றோம்.

இக்காலத்து எமது ஆசிரியரை வணங்கி ;--[என்பது அருட்பெரும்ஜோதி]

ஐயரே /தேவரீர் எழுதிய சில வாசகத்தினும் ,செய்யுளிலும் கருத்துக்கு 

விளங்கப் புலப்படாமையால் மயங்குகின்ற சொற் சொடற்கள் சில 

உள்ளது ,எமது மாட்டாமையால் தோன்றுகிறது ;இதற்க்கு யாது 

செய்வோம் /என்று விண்ணப்பம் செய்ய அவர் ;---

[வள்ளலார் அருட்பெரும் ஜோதியிடம் விண்ணப்பம் செய்ய ]

;ஐய/ நீர் அஞ்சற்க ,யாம் எழுதிய வாசகத்தினும் செய்யுளினும்

அளவிறந்த குற்றங்கள் இருக்கின்றன ,என் செய்வோம் விசாரத்தால் 

ஆங்காங்கு தவறினோம் ,அதனைப் பெருங்கருனையுள்ள கடவுள் 

மன்னிப்பார் ,மற்றையோரும் மன்னித்தல் வேண்டும் ,யாம் யார் /

எமக்கு யாது தெரியும் /புழுவினும் கடைய புலையறிர்சிறியோம் ,

இதனால் நாணுதளுடையோம் என்றனர்,

ஐயர் புகன்ற மாற்றம் எவ்வாறு என்று எண்ணி நிற்கும் தருணத்து 

எம்மை ஆண்டு இருக்கப் பணித்து மீட்டுஞ் சொல்லுவர் ;--

மேலும் வள்ளலார் விளக்குகிறார்;--

தமிழைப்பற்றி ;-

  1. வரி வரலாற்றின் இலக்கணம் என்னை /
  2. ஓலி வரலாற்றின் இலக்கணம் என்னை /
  3. தன்மை வரலாற்றின் இலக்கணம் என்னை /
  4. உணர்ச்சி வரலாற்றின் இலக்கணம் என்னை/அதன் ,
  5. உண்மை அனுபவ இலக்கணம் என்னை /
  6. வரி உரு இலக்கணம் என்னை / 
  7. ஒரு யுறு இலக்கணம் என்னை /
  8. தன்மை யுருவி இலக்கணம் என்னை /
  9. உணர்ச்சி யுருவி இலக்கணம் என்னை /
  10. உண்மை யனுபவ வுருவி இலக்கணம் என்னை/  [அகர வுயிரின்]
  11. வரிச சொருப இலக்கணம் என்னை /
  12. ஒலிசசொறுபம் இலக்கணம் என்னை /
  13. தன்மை சொறுபம் என்னை /
  14. உணர்ச்சி சொறுபம் இலக்கணம் என்னை /
  15. உண்மை யனுபவ சொறுப இலக்கணம் என்னை /[அகர வுயிர்க்கு ]
  16. வரிச சுபாவ இலக்கணம் என்னை /
  17. ஓலி சுபாவ இலக்கணம் என்னை /
  18. தன்மை சுபாவ இலக்கணம் என்னை /
  19. உணர்ச்சி சுபாவ இலக்கணம் என்னை /
  20. உண்மை யனுபவ சுபாவ இலக்கணம் என்னை / [அகர வுயிரின்]
  21. வரிச செயற்கை இலக்கணம் என்னை /
  22. ஓலி செயற்கை இலக்கணம் என்னை /
  23. தன்மை செயற்கை இலக்கணம் என்னை /
  24. உணர்ச்சி செயற்கை இலக்கணம் என்னை /
  25. உண்மை செயற்கை இலக்கணம் என்னை /[அகர வுயிரின் ]
  26. வரி அதிகார இலக்கணம் என்னை /
  27. ஓலி யதிகார இலக்கணம் என்னை /
  28. தன்மை யதிகார இலக்கணம் என்னை /
  29. உணர்ச்சி யதிகார இலக்கணம் என்னை /
  30. உண்மை யதிகார இலக்கணம் என்னை /[அகர வுயிரின் ]
  31. வரிப் பொது இலக்கணம்என்னை /
  32. ஒலிப் பொது இலக்கணம் என்னை /
  33. தன்மைப் பொது இலக்கணம் என்னை /
  34. உணர்ச்சிப் பொது இலக்கணம் என்னை /
  35. உண்மைப் பொது இலக்கணம் என்னை /[அகர வுயிரின் ]
  36. வரிச சிறப்பிலக்கணம் என்னை /
  37. ஓலி சிறப்புபிலக்கணம் என்னை /
  38. தன்மை சிறப்பிலக்கணம் என்னை /
  39. உணர்ச்சிச சிறப்பிலக்கணம் என்னை /
  40. உண்மை சிறப்பிலக்கணம் என்னை /[அகரவுயிரின் ]
  41. வரிக் குண இலக்கணம் மென்னை /
  42. ஒலிக் குண இலக்கணம் மென்னை /
  43. தன்மைக் குணஇலக்கணம் மென்னை/
  44. உணர்ச்சிக் குண இலக்கணம் மென்னை /
    45 ,உண்மைக் குண இலக்கணம் மென்னை /

என்பன முதலாக இவ்வகர உயிர் ஒன்றிற்கே இன்னும் பற்பல 

இலக்கண நியாய விசார வினாக்கள் உளவாயின .

எம்போல்வார் உணர்ச்சிக்கண் அவ்வினாக்களுக்கு விடை 

எங்கனம் தோன்றும் ஓர் எழுத்திற்கே இங்கனமானால் ,பற்பல் 

எழுத்துக்களுக்கும்,அவ்வெழுத்துக களாலாகிய சொற்களுக்குஞ்,

சொற் பொருள்களுக்கும்,விடை கொடுப்பது எங்கனம் /

ஆதலால் கற்றோம் என்னும் செருக்கை முழுதும் விடுத்து விசார 

வசத்தராகி சிவபெருமான் [அருட்பெரும் ஜோதி] திருவருளை 

சிந்தித்து இருத்தல் வேண்டும் /

என்று எம்மை யோர் பொருளாகக கருதி இரக்கத்தால் இசைந்தனர் .

ஆகலின் கல்வியிற் செருக்கடைதல் எவ்வாற்றானும் பொருந்தாது ;   

                                        
அடுத்து வள்ளலார்;---

அகரத்தின் லஷ்ணம் பற்றிவிளக்கம் தருகிறார்;--

மூலாங்கக் பிரணவமாகிய அகர லஷ்னம் ஒருவாறு ;---


  1. ஊன்றல் ;----------------------------------------வாமை ,
  2. சுழித்தல் ;----------------------------------------ஜேஷ்டை,
  3. விசிரிம்பித்தல் ;-------------------------------ரெவ்த்ரி;
  4. மடித்து மேலேறல் ;--------------------------காளி,
  5. அங்கிருந்து கீழ்வரல் ;-----------------------கலவி கரணி,
  6. மேல் புடைபெயர்த்தல் ;--------------------பலவி கரணி ,
  7. கீழ்த்தாழல்;-------------------------------------பலப்பிரமதனி,
  8. கீழ் ஊன்றி நிற்றல் ;-------------------------சர்வ பூத  தமனி;
  9. வரிவடிவாதல் ;-------------------------------மனேன்மணி ,
இதில் விந்து நாதம் முதலிய நவ நிலைகளும் முள.நம் முன்னோர்கள் எழுதிய தமிழின்

இலக்கண,இலக்கியங்களில் ,சில .சில இடங்களில் குற்றம் நேர்ந்து இருக்கிறது

 என்கிறார்,நமது அருளாலார் வள்ளலார் அவர்கள்.சமயநூல்களிலும் ,பிழை

இருக்கிறது.சமய மத சாத்திரங்களில் அநேக இடத்தில் பிழைகள் இருக்கின்ற்ன.அதற்குக்

காரண்ம,அவற்றை இயற்றியவர்கள்,மாயையின் சம்பந்தத்தை

அடைந்திருந்தவர்கள்.ஆகையால் முன்னுக்குப் பின் மறைப்புண்டு தப்புகள்

நேரிட்டிருக்கின்றன்.மாயையை வென்ற சுத்த ஞானிகளுக்கல்லாது மற்றவர்களுக்குப்

பிழைய்ற இயற்றமுடியாது.அந்த பிழைகள் சுத்த சன்மார்க்கம் விளங்குகிற காலத்தில்

வெளிப்படும் என்கிறார் நமது அருள்லாளர் வள்ளார் அவர்கள்.அதேபோல புராண

இதிகாசங்களிலும்,நிறைய இடங்களில் பிழைக்காண்ப்படுகின்றன்.ஆதலால் தமிழ்

மனிதர்களால் ,தோன்றியமொழி அல்ல,இயற்கை உணமையான மெய்ப்பொருலாம்

அருட்பேரொளியால் தோற்றுவிக்கப்பட்ட தந்தை மொழி தமிழ்மொழியாகும்.

அருட் பெரும் ஜோதியைப் பற்றி வள்ளலார் '---

விதிப்பவர்கள் பலகோடி துதிப்பவர்கள் பல்கோடி

மேலவர்கள் ஒரு கோடி விரைந்து விரைந்து உனையே

மதிப்பவர்களாகி யவர் மதியாலே பல்கால்

மதித்து மதித்து அவர் மதிப்பெண் மதியாகி யலந்தே

துதிப்பதுவே நலமெனகக்கொண்டு இற்றைவரை ஏற்ற

சொற்பொருள்கள் காணாதே சுழ்லகின்றார் என்றால்

குதிப்பொழியா மன்சசிறிய குரஙகொடு உழல் கின்றேன்

குறித்துரைப்பது என்னவும் உளங் கூசுகின்றதரசே .

 இயற்க்கை உண்மையான்  அருட்பெரும்ஜோதி பேரொளி  இருக்கும்

 இடத்தை இதுவரையில் யாரும் காணவில்லை என்பது தெளிவாகிறது .

அதேபோல் தமிழ் மொழி தோன்றிய வரலாறு ,யாருக்கும் தெரியாமல்

இருந்தது .

வள்ளலார் தெளிவாக தமிழ் மொழி தோன்றிய வரலாற்றை தெளிவுப்

படுத்தியுள்ளார் .

தமிழ் மொழி ஆராய்ச்சி யாளர்களும் ,சிந்தனையாளர்களும் ,

பகுத்தறிவாளர்களும்,தமிழ் வல்லுனர்களும் ,முத்தமிழ் காவலர்

தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்களும் ,

வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை தமிழ் ஆராய்சிக்கு பயன் படுத்திக்

கொள்ளுங்கள் ,பயன் உள்ளதாக இருக்கும் .

உலகமே தமிழ் நாட்டுப் பக்கம் திரும்பிவிடும் .

வள்ளலார் எழுதிய திரு அருட்பா என்னும் அருள் நூல் இந்த உலகுக்கு கிடைத்த மாபெரும்

ஆராயச்சி அறிவு பெட்டகமாகும் .

தமிழ் வளர்க வாழ்க .

நன்றி ;---மீண்டும் பூக்கும்.                     

வெள்ளி, 25 ஜூன், 2010

தமிழ் மொழி ,பாகம்;---1

      தமிழ் மொழியின் வரலாறு என்ன / தமிழ் மொழி எப்பொழுது

தோன்றிற்று / யாரால்தோற்றுவிக்கப்பட்டது , /தோன்றியகாலம்

எப்பொழுது , /என்று கேட்டால் ,பலபேர் பலவிதமான ,கருத்துக்களை

சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் .கல தோன்றி, மண்தோன்றா,

காலத்தே முன தோன்றிய மூத்த தமிழ் என்றும் ,யாம் அறிந்த

மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் ,

என்றும் ,பெருமை பட சொல்லி இருக்கிறார்கள் .

தமிழ் ;---

தமிழ் மொழி யாருக்கும் சொந்தமான மொழியல்ல ,மதம் சார்ந்த

மொழியா /சமயம் சார்ந்த மொழியா / இனம் சார்ந்த மொழியா /

ஒருநாட்டிற்கு மட்டும் சொந்தமான மொழியா /தமிழ் நாட்டிற்கு

மட்டும் சொந்தமான மொழியா /தமிழ் பேசும் தமிழர் களுக்குமட்டும்

சொந்தமொழியா/திராவிடர் இனத்துக்கு மட்டும் சொந்த மொழியா /

இல்லவே இல்லை ,

தமிழ் வளர்க்கிறேன் என்று கூறும்தமிழ் அறிஞ்சர்களுக்கோ ,

சான்றோர்களுக்கோ,இலக்கியம் ,இலக்கணம்,வகுத்து தந்த ,

இலக்கியவாதிகளுக்கோ ,முத்தமிழ் காவலருக்கோ ,சொந்தமான

மான மொழியா ,

இல்லவே இல்லை;--

பின் யாருக்குசசொந்தம் தமிழ்,

உலக உயிர்கள் அனைத்திற்கும் சொந்தம் 

உலக நாடுகள் அத்தனைக்கும் சொந்தமானது தமிழ் மொழியாகும் .

வள்ளலார் தமிழுக்கு வைத்தப்பெயர் ,

தமிழ் மொழிக்கு உண்மையான் பெயர் மெய்மொழி ,

என்பதாகும் .இன்னும் சரியாக சொல்லவேண்டுமானால் ,

இயற்கை உண்மை மொழி ,காலபோக்கில் மெய்மொழி யானது ,

பின் தமிழ் மொழியாயிற்று,

தமிழ் எப்பொழுது தோன்றிற்று ;--

உலகம் தோன்றிய பிறகு உயிர்கள் தோன்றிற்று ,உயிர்கள் 

தோன்றிய பிறகு ,உயிர்கள் ஒன்றை ஒன்று,தெரிந்து கொள்வதற்கும் ,

அறிந்துகொள்வதற்கும் ,புரிந்து கொள்வதற்கும் ,ஒளியும் ,ஒலியும்,

தேவை என்பதை உணர்ந்த இயற்க்கை உண்மை என்னும்

அருட் பேரொளி

,வரி ,உரு ,ஒளி,ஒலி என்னும்,அகரம் ,உகரம் ,மகரம் என்னும்

சப்தத்தை இவ்வுலகிற்கு உருவாக்கி தந்தது ,

ஆதலால் தமிழ் மொழி உலகம் தோன்றிய காலத்தே ,

இயற்க்கை உண்மை என்னும் அருட்பெரும்ஜோதியால,

தோற்றுவிக்கப்பட்ட அருள் மொழி தமிழ் மொழியாகும் .

மற்ற உலக மொழிகள் யாவும்

மனிதன் தோன்றியபிறகு, மற்ற உலக மொழிகள் ,

 மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட மொழிகளாகும்

ஆதலால் தமிழ் மொழி முதன்மை மொழியாகும் .த்மிழ் மொழிக்குள்

எல்லா மொழிகளும் அடக்கம் ,மற்ற மொழிகளில் தமிழ் அடக்கம்

கொள்ளாது, .தமிழ் அருளால் உருவாக்கப்பட்டது ,மற்ற மொழிகள் யாவும் ,

மாயை யினால் உருவாக்கிய மனிதனால் உருவாக்கப்பட்ட

மொழிகளாகும் .

தமிழ் தாய் மொழியில்லை ,தந்தை மொழி என்று வள்ளலார்

கூறியுள்ளார்.

தந்தை என்பது அருட்பெரும்ஜோதி ,

தாய் என்பது மாயை ,

அருட்பெரும் ஜோதி என்னும் இயற்க்கையால் எழுதப்பட்டது,தமிழ் .

மாயை என்னும் மனிதனால் எழுதப்பட்டது,மற்ற மொழிகள்யாவும்.

இயற்கை என்னும் அருட்பெரும்ஜோதி என்றும் அழியாதது, அதுபோல் ,

தமிழ் என்றும் அழியாது .

மாயையால,உருவாக்கப்பட்ட மனிதனுக்கு மரணம் உண்டு அதுபோல் ,

மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் ஒரு காலத்தில்

அழிந்துவிடும் அதுபோலவே மற்ற மொழிகளும் ஒருகாலத்தில்

அழிந்துவிடும் .

ஆனால் தமிழ் மொழி என்றும் அழியாது ,.யாராலும் அழிக்கமுடியாது.

இன்னும் பல நூறு ஆண்டுகளில் தம்ழ மொழி உலகம் அனைத்தும் ,

பறந்து விரிந்து ஆட்சி செய்யும் ஆட்சி மொழியாகப்போகிறது.

இதில் எந்தசந்தேகமும் இல்லை .

எதோ நான் தமிழ் மொழி மேல் பற்று உள்ளதால் இதைசசொல்கிறேன் ,

என்று நினைத்து விடாதீர்கள் . இது வள்ளலார் உரைத்த உண்மையாகும் .

தமிழ் எல்லா உலகத்திற்கும் சொந்தமானது ,உலகில் உள்ள அனைத்து

உயிகளுக்கும் சொந்தமானது .ஆதலால் அனைத்துலக மக்களும்

ஆர்வமும், ஆவலும் ,ஆசையும் கொண்டு விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்

தமிழ் மொழிக்கு அருள் என்னும் ஆற்றல் உள்ளது ,அருளை அனைவரும்

விரும்புவார்கள் .

அருள் ;---
அருள் என்ன என்பது யாருக்கும் தெரியாது .அருளை அனுபவித்தால் 

மட்டும் தான் தெரியும்.அருள் என்பது ஆன்மாவில் சுரக்கும் ஒருசுரப்பியாகும் .

அருளை அனுபவித்த ஞானிகள்.நம் தமிழ் நாட்டில் நிறைய பேர்,

வாழ்ந்து இருக்கிறார்கள் .,தொல்காப்பியர் ,இளங்கோஅடிகள் ,மற்றும் ,

திருவள்ளுவர் ,திருமூலர்,மாணிக்கவாசகர் ,சம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,

சுந்தரர் ,போன்ற நாயன் மார்கள் ,சேக்கிழார் .மற்றும் அவ்வையார்,

பாரதியார் ,பாரதிதாசன் ,போன்ற சிந்தனையாளர்களும்,தமிழைப்

புசித்து பல அருந்தமிழ் காவியங்களை படைத்துள்ளார்கள் சமய ,

மதத்திற்கு அப்பார்ப்பட்டவர்கள் ,

வள்ளலார் ;--

அதற்குப் பிறகு பதினெட்டாம் நூறறாம்ஆண்டில் இறைவனால் 

வருவிக்கப்பட்டவர் வள்ளலார் .

வள்ளலார் தமிழின் அருளையும் ,அருட்பெரும்ஜோதியின் அருளையும் ,

முழுமையாக அனுபவித்தவர் .பலஉயிர் ஓம்பவாழ்ந்தவர்,உலகத்திற்கு

உண்மையை உணர்த்த வந்த உத்தமர் ,மரணத்தை வென்ற மகான் ,

பிறப்பு, இறப்பு அற்றவர் ,

கொல்லாநெறியே குவலயம் ஓங்குக ,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழக் .

என்று எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்தியவர் .

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவர் வள்ளலார் .

அருள் மொழி தமிழ் ;---

வள்ளலார் தமிழைப்பற்றி தெளிவுப்படுத்துகிறார்.


அருளை அனுபவித்தவர்கள் மட்டும் தான் மெய்ப்பொருளை 

காணமுடியும் மெய் மொழியை தெரிந்துகொள்ளமுடியும்.என்கிறார் .

தமிழ் மொழியில் மட்டும்தான் உயிர் ,மெய் ,ஆயுத எழுத்துக்கள் அடங்கி

உள்ளது .

அதாவது ;--

உயிர் ,உடம்பு ,ஆன்மா ஆகிய மூன்றையும் பற்றி தெரிந்து கொள்ள

தமிழ் இறைவனால் படைக்கப்பட்டது .

தமிழ் என்ற மூன்று எழுத்துக்குள் ,எல்லா எழுத்துக்களும் அடங்கி

இருக்கிறது .தமிழ் என்ற எழுத்தின் விரிவுதான் மற்றைய

எழுத்துக்கள்யாவும் .

உலக உயிர்களை ;--படைத்தல் ,காத்தல்,பக்குவம் வருவித்தல் ,

மறைத்தல் ,தெளிவுசெயதல்,என்பன போன்ற தொழில்களை ,

செயல்படுத்திக் கொண்டு இருக்கும் அருட்பெரும்ஜோதியை ,

தெரிந்துகொள்ள தமிழால் ,தமிழ்மொழியால் மட்டும்தான் தான்

முடியும் என்கிறார் வள்ளலார் .

தமிழில் ;---தன்மை ---முன்னிலை ----படர்க்கை .

என்பவை யாவை /அவற்றின் கருத்து என்ன ,என்று கேட்பவர்களுக்கு ,

தன்மை ;---தன்னைப்பற்றி தெரிந்துகொள்வது .

முன்னிலை ;---தன் கண்களுக்கு தெரிந்தவற்றை தெரிந்து கொள்வது ,

படர்க்கை ;---தன் கண்களுக்கு தெரியாமல் இயங்கிக் கொண்டு

                       இருக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்வது

 [இதை விரிக்கில் பெருகும் பின்பார்ப்போம் .]

தமிழை வள்ளலார் ;--இயற்க்கை உண்மை ,இயற்க்கை விளக்கம் ,
  
                                       இயற்க்கை இன்பம் ,

என்றும் அழியாமல் விளங்கி உலக உயிர்களுக்கு இன்பம்

தரும் மொழிதான் தமிழ் மொழி என்கிறார் வள்ளலார் .

தமிழ் என்னும் அருள் மொழியால்தான் இவ்வுலகம் இயங்கிக்

கொண்டு இருக்கிறது .அணு ககூட்டங்கள்,நீக்கமற நிறைந்து ,

ஒலியும், ஒளியும வழங்கி தமிழுக்குஎன்றும் அழியாத ஆற்றல்

கொடுத்துக் கொண்டு இருக்கிறது .

தமிழ் நிலை ;--

தமிழ் ஐந்தலகு நிலையும்,உபய நிலையும் ,மூன்றுமெய் நிலையும் ,


அமைந்துள்ளதும் ,சம்பு பசசத்தாரால் அனாதியாய் கடவுள் அருள் 


ஆணையால் கற்பபிக்கபட்டதும் ,---எப்பாஷைகளுக்கும் பிதுர் 

பாஷை என்று ஆன்றோர்களால் கொண்டாடப் பட்டதும் ;--

இனிமை என்று நிறுத்தம் சித்திக்கப் பெற்றுள்ளதுமான்,தமிழ் என்னும்

இயற்க்கை உண்மைச சிறப்பு இயல் மொழியாகும் .என்று தமிழ்

மொழிக்கு விளக்கம் தந்துள்ளார் வள்ளலார் .

தமிழ் என்னும் சிறப்பு இயல்பு என்ன என்றால் பதினெண் மெய்களில் ,

பஷ்சமுடிபின் எண் குறிப்பில் நின்று சிவலோக பூமியாகிய ;----

பரத கண்டத்தில் பவுராணிக் தத்த்துவத்தால் குறிக்கப்பட்ட ஐம்பத்தாறு

தேசங்களுள் சுதேசம் தவிர மற்ற ஐம்பத்தைந்து தேச பாஷை களிலும் ,

இல்லாததாயும்,பதி எண் இலக்கமாக குறிக்கப் பட்ட ,

செந்தமிழ்,கொடுந்தமிழ் என்னும் இருமைக்கும் ஒற்றுமை

உரிமையும் .முத்துரைத் தமிழுக்குள் முதன்மைத் துறையானதும் ,

இருக்கு ,யஜிர்,சாம ,என்னும் சமஸ்கிருத வேதத்தில் பொருள்

அனுபவத்தை எளிதில் கற்று உணர்ந்து தெளிந்து அனுபவிக்க

இறைவன் திரு அருளையும் முத்தொழில் காரியமான கடவுளையும்

வேண்ட வேண்டியுள்ளது ,அப்படி வேண்டி உழைப்பெடுத்து

ஓதினாலும் பாடம் ஆவதற்கு அருமையாயும்,பாடமானாலும்

பாஷியம்செய்ய, டீக்கா,டூக்கா டிப்பனி,முதலிய உறைகோல்,கருவிகளை

பொருள் கொள்ளத் தேட வேண்டி உள்ளது,அவைகள் தேடிக் கைவரினும் ,

அக்கருவிகளால் போதிக்கவேண்டியதற்க்கு பாஷியக்காரர்கள்,

வியாக்கியான கர்த்தர்கள் ,டீக்கா வல்லுனர்கள் ,டூக்கா வல்லபர்கள் ,

மற்றும் ஸூசர்கள்,முதலிய போதக ,உப போதக ஆசிரியர்கள் கிடைப்பது

அருமையிலும் அருமையாயும் ,இருக்கிற ஆரியம் ,ம்காராட்டியம் ,

ஆந்திரம் என்ற பற்பல பாஷைகளைப் போலாகாமல்----

பெரும்பாலும் கற்பதற்கு ---எண்ணளவு---சுருக்கமாயும் --ஒளியில்

லேசாயும் ----கூ ட்டு என்னும் சந்தி அதி சுலபமாயும் --எழுதவும்

கவிசெய்யவும் மிக நேர்மையாயும் ---அஷ்ர ஆராவாரம் இன்றி

எப்பாஷையின் சந்தசுகங்களையும்,தன் பாஷைக்குள்அடக்கி

ஆளுகையால் ஆண்மைத் தன்மைப்பொருந்தியதுமான

தற்பாஷைக்கேஅமைவுற்ற ,

ழ் --ற்--ன்----என்னும் முடி --நடு --அடி சிறப்பிய லக்கரங்களில் முடிநிலை

இன்ப அனுபவ சுத்த மோனாதீதத்தைச சுட்டரச்சுட்டும் ,இயற்க்கை

உண்மைத் தலைமைப் பெருமைச் சிறப்பு இயல் ஒலியாம்.

மருள்இயற்க்கை மல இருளைப் பரிபாக சக்தியால் அருள் ஒளியாக்கி

அதற்க்கு உள்ளீடான சிதாத்ம சிற்கலாசத்தி என்னும் சுத்த ஆன்மாவை

தகர --ககன--நடன அருட்பெரும்ஜோதி என்னும் 

சுத்த சிவானந்த பூரணத்தை சுத்த மோனாதீத இயலால்

அனுபவிக்கும் இயற்க்கை உண்மையே தமிழ் என்னும் 

சொற்பொருளாகும்.

தமிழ் பாஷையே அதிசுலபமாகச் சுத்த சிவாநுபூதியைக்

கொடுக்கும் என்பதாகும் .

சிவம் என்பது ஒளியாகும்.[அருட் பேரொளி ]

இவ்வாறு தமிழின் பெருமையை வள்ளலார் திரு அருட்பாவில்

பதிவு செய்துள்ளார் .

மேலும் வள்ளலார் அவர்கள் ;----

[தென் மொழி தமிழ் ]

இடம்பத்தையும் ,பிரயாசத்தையும் ,பெரு மறைப்பையும்,

போதுபோக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய

பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது பயிலுதற்கும்

அறிதற்கும் மிகவும் இலேசு உடையதாய் ,சாகாக்கல்வியை

இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தால் கிடைத்த

தேன்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச செய்து

அத்தென்மொழிகளால் பல வகைத் தோத்திரப் பாட்டுகளை

பாடுவித்து அருளினீர் .

என்று தமிழ் மொழியின் உண்மைத் தன்மையை தெளிவுப்

படுத்துகின்றார் வள்ளலார் .

மேலும் தமிழின் பெருமையை நிறைய எடுத்து உரைத்துள்ளார்

நமது தமிழக அரசு தமிழ்மொழிக்காக ,தமிழ் வளர்ச்சிக்காக,

தமிழ் மொழியின் பெருமைக்காக ,தமிழ் மொழியின் சிறப்புக்காக்

தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டு வருகிறது

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் கலைஞர் ,கருணாநிதி

அவர்கள் அதிக சிரத்தை எடுத்து  செயலாற்றிக்கொண்டு

வருகிறார்.

சென்னைப்பட்டினம் என்பதை மாற்றி ,தமிழ்நாடு ,தமிழ் மாநிலம் ,

தமிழகஅரசு என்பன போன்ற பல மாற்றங்கள் செய்துள்ளது .

இந்திய அளவில் மத்திய அரசுமூலமாக சட்டப்படி தமிழ் மொழிக்கு

செம்மொழிஅங்கிகாரம் பெற்றுள்ளது பெருமைப் படவேண்டியதாகும் .

கோவையில் செம்மொழி மாநாடு;---

உலகம் முழுவதும் உள்ளத்தமிழர்கள் மற்றும் உலகில் உள்ள

அனைத்து தரப்பு மக்களும்

தமிழ் மொழியின் பெருமையை ,உயர்வை ,

வளமையை, தோற்றத்தை ,ருசியை ,சுவையைப்பருக, சுவைக்க

கோவை மாநகரில் செம்மொழி மாநாடு நடை பெறுவதுக்குறித்து

பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் .
        
செம்மொழி மாநாடு சீரும் சிறப்புமாக நடை பெற என் மனமார்ந்த

வாழ்த்தையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

குறிப்பாக தமிழக முதல்வர் ;---

மாண்புமிகு முதல்வர் கலைஞ்ர் அவர்களுக்கு நன்றியும் ,

வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துககொள்வதோடு

அருட்பெரும்ஜோதியர்  அவருக்கு நீண்டஆயுள் தந்து தமிழ்நாட்டு

மக்களுக்கும்,தமிழ் நாட்டிற்கும் தொண்டு ஆற்றவேண்டும்.என்று

எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதியை வேண்டி விரும்பி

கேட்டுக்கொள்கிறேன்

வாழக தமிழ்
வளர்க உலக உயிர்கள்

நன்றி ;--மீண்டும் .பூக்கும்
    



,  ..        

.

செவ்வாய், 22 ஜூன், 2010

அருட் பெரும் ஜோதி;--பாகம் ,10


      அருட்பெரும்ஜோதி என்னும் அருள் அணு இல்லாத 

இடமே இல்லை ,ஆனால் நாம் நமது கண்ணாலும் 

மனோகருவி கரணங்களாலும்,எங்கும் காண்பது என்ன /

பரமான்மாவா ,கடவுளா/ அப்படிக் காண்கின்ற எதுவும் 

கடவுள் அல்ல என்பது சிறுகுழந்தைகளுக்கும் தெரியும் .

இபபிரபஞ்சத்தில் காணப்படும் எல்லாப் பொருட்களும்,

எல்லாஉயிர்களும் நித்தியமானவை அல்ல என்பதும் ,

தோன்றி சிறிதுகாலம் இருந்து மறைகின்றவையே 

என்றும் எவரும் அறிவர் .

ஆனால் நம் அருட்பெரும்ஜோதியார் நித்தியமானவர்,

அந்த நித்தியமானவர் யாவற்றிலும் அகம் மறைந்து நின்று 

அநித்தியமான வடிவங்களை ஆக்கிக்கொள்வதும் நீக்கிக் 

கொள்வதுமாய் இருக்கிறார் .மண் முதலான் ஐம்பூத

அணுக்களில் இருந்து கொண்டு அது அதுவாகித் தனித்திருந்தும் ,

ஒன்றுபட்டும் எல்லா பிரபஞ்ச வடிவங்களிலும் தன்னுள் 

வைத்துக்கொள்ளுகின்றன,ஆகவே காணும் பொருட்களிலும் 

அவற்றிற்கு ஆதாரமாய் இருக்கின்றது நமது கண்காணாப் 

அருட்பெரும்ஜோதியாகிய கடவுளாகும் .

எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி சமூகத்தில் நிறைந்து

விளங்கிக்கொண்டு இருப்பது ஆன்மாஎன்னும் சிறிய அணுக 

கூட்டங்களாகும் .அதற்க்கு ஆன்மா என்று பெயர் 

பொதுவாகக கடவுளைப் பற்றி பலர் பலவாகக் கற்பனை 

செய்து கொண்டு உண்மையை உள்ளவாறு காணாது ,

உளறி இருக்கிறார்கள், 


நன்றி ;--மீண்டும் பூக்கும். 

         

அருட் பெரும் ஜோதி ;--பாகம் ,9




       நம்முடைய தலைவராகிய அருட்பெரும் ஜோதிக கடவுளை 

நாம் அடைவதற்கு அவர் எழுந்தருளியிருக்கும் கோட்டையின் 
சாவியாகிய அருள் வேண்டும்.

இவ்வருள் அன்பினால் அல்லது வேறு வகையால் அடைவது அரிது ,

இவ்வன்பு ஜீவகாருண்யத்தால் அல்லது வேறுவகையால்வராது ,

ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு .

இந்த ஜீவகாருண்யம் உண்டாவதற்கு ஏது,அல்லது துவாரம் 

யாதெனில் ;--

அருட்பெரும்ஜோதியின் பெருமையையும் தரத்தையும்---நம்முடைய 

சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே யாகும் .

அனனிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே 

ஜீவகாருண்யமாகும்.இதுதான் அருளை அடைந்து 

முத்தியடைவதற்கு முதல்படியாயிருக்கிறது,ஆதலால் 

இதைபாதுகாத்தல் வேண்டும் .

ஜீவகாருண்யத்தால் சுத்ததேகம்,பிரணவதேகம்,முதலியவைகளை 

பெற்றுக்கொள்ளலாம்,பின்பு ஞான தேகத்தை கடவுள் அருளால்

கொடுக்கப்படும்.

எப்படி என்னில் ;--

அருட்பெரும்ஜோதிக் கடவுள் ,சர்வஜீவ தயாபரன் சர்வவல்லமை 

உடையவன்.ஆகையால் நம்மையும் சர்வஜீவதயவு உடையவர்களாய் 

சர்வ வல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி மனிததேகத்தில் 

வருவித்தார் .

ஞானிக்குத் தயவு அதிகப்பட்டு இருக்கிறபடியால் கேளாத கேள்வி 

முதலிய மகா அற்புதங்களான்;--இறந்தார் எழுதல் முதலிய அற்ப்புத 

வல்லமைப் பெற்றிருப்பார்கள்.எந்த சீவர்களிடத்தில் 

தயாவிருததியாகிய அருள் விசேடம் விளங்குகிறதோ அந்த 

சீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேடமாயிருக்கும்.

மற்றவர்களிடத்தில் காரியப்படாது .ஆதலால் மலஜலசங்கல்ப 

காலங்கள் தவிர மற்ற காலங்களில், கடவுள் இடத்தில் 

பக்தியும்,சீவர்களிடத்தில் அன்பும் செலுத்த வேண்டும் 

கடவுள் தயவும் ஜீவதயவும்;---

தயவென்பது இரண்டு வகைப்படும்;--

யாவையெனில் ;---கடவுள் தயை ---ஜீவ தயை ஆகிய இரண்டு ,

கடவுள் தயை என்பது ;--

  1. இறந்த உயிரை எழுப்புதல் 
  2. தாவரங்களுக்கு மழை பெய்வித்தல் 
  3. மிருக ,பட்சி ஊர்வனவாதிகளுக்கு ஆகாரம் நியதியின்படி அருட்சத்தியால்,ஊட்டி வைத்தல் 
  4. சோம சூரிய அக்கினி பிரகாசங்களை,கால தேச வண்ணம் பிரகாசம் செய்வித்தல் ,
  5. பக்குவிகளுக்கு அனுக்கிரகித்தல் ,
  6. அபக்குவிகளைச செய்யவேண்டிய அருள் நியதியின்படி தண்டனைசெய்வித்துப் பக்குவம் வருவித்தல்.
 ஜீவ தயை என்பது ;--
  1. தன் சத்தியின் அளவு உயிர்களுக்கு உபகரித்தல் .
  2. எவ்வுயிரையும் தன் உயிர் போல் பாவித்தல் 
  3. ஆன்மநேயத்துடன் தொடர்பு கொள்ளுதல் 
  4. எந்நேரமும் தயவு வடிவமாய் இருத்தல் 
மேலும் இவைகளபடிப்பால் அறியக்கூடாது,அறிவது எப்படி 

என்னில்;--ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாய் நிற்கும் 

விசார சங்கல்ப்பம் உண்டானால் நாம் தாழும் குணம் வரும் ,

அததருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும் 

ஆதலால் இடைவிடாது நன் முயற்ச்சியில் பழகல

வேண்டும் .

உலகத்தில் உள்ள அன்பர்கள் அனைவரும் உண்மைக்டவுள் 

அருட்பெரும்ஜோதி என்னும் ஆற்றல் மிக்க அணுதான்தான் 
  
என்பதை உணர்ந்து ,தொடர்புகொள்வோம் .

நன்றி ;--மீண்டும் பூக்கும்.